Jump to content

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுகள் அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுகள் அறிவிப்பு!

June 10, 2019
 

canada-literary.png?resize=464%2C206

 

கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருது பெற்றவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கனடாவில் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான இயல் விருது தமிழக எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

அத்துடன் நேற்றைய இயல் விருது விழாவில்  2018 ஆம் ஆண்டு விருது பெரும் படைப்பாளிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில்  சிறந்த புனைகதைக்கான விருதை நடுகல் நாவலுக்காக தீபச்செல்வனுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் புனைவுக்கான விருது காகம் கொத்திய காயம் என்ற கட்டுரை நூலுக்காக உமாஜிற்கும் சிறந்த கவிதைக்கான விருது சிறிய எண்கள் தூங்கும் அறை என்ற கவிதை நூலுக்காக தமிழகக் கவிஞர் போகன் சங்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது மலையாளத்திலிருந்து தமிழுக்கு பீரங்கி பாடல்கள் என்ற நூலை மொழி பெயர்த்த இரா முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலக்கிய சாதனைக்கான விருதுகளை கல்யாணி ராதாகிருஷ்ணன் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ம.நவீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

#கனடா  #இலக்கியத் தோட்டத்தின்  #இயல் விருதுகள் #நடுகல்

 

http://globaltamilnews.net/2019/123979/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தீபச்செல்வன்,மென் மேலும் வளர வேண்டும்.

நடுகல் நான் இன்னும் வாசிக்கவில்லை...கிருபன் வாசித்து விட்டீர்களா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நடுகல் நான் இன்னும் வாசிக்கவில்லை...கிருபன் வாசித்து விட்டீர்களா  

கிழக்கு இலண்டனில் நடைபெற்ற நடுகல் நூல் வெளியீட்டு விழாவுக்குப் போயிருந்தேன். ஆனால் அதில் விமர்சன உரையாற்றிய யமுனா ராஜேந்திரன் இது ஒரு நாவலே அல்ல என்று காட்டமாக விமர்சித்தார். வெறும் பிரச்சாரமாக இருக்கும் என்று  நடுகல் நூலை வாங்காமல் வந்துவிட்டேன் ( ஆனால் வேறு ஏழெட்டு நூல்களை வாங்கினேன்). பெளசரிடம் இருக்கும்தானே. ஒன்று வாங்கிப் படித்துவிட்டு சொல்கின்றேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.