Jump to content

ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார்.

சாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.

குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம், நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான் என ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.

‘சமூக பங்களிப்பு’

ராசுகுமார், "ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ, அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள். அதனை நாம் மறுத்துவிட முடியாது. எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது" என்கிறார் மே.து.ராசுக்குமார்.

ராஜராஜன் சோழன் காலம் இருண்டகாலமா? - வரலாற்றாசிரியர் பேட்டிபடத்தின் காப்புரிமை Facebook

"வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது. இதன் மூலமாக உற்பத்தி பெருகியது. உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது. உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது. ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின், இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.

மே.து.ராசுகுமார் பிறகாலச் சோழர் கால வாழ்வியல், சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், தமிழகத்தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.

'தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள்'

மே.து. ராசு குமார் Image caption மே.து. ராசுக்குமார்

பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார், "தீண்டதகாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பறையர்கள் தீண்டத் தகாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்? பறையர்கள் அந்த காலத்தில் தீண்டதகாதவர்களாக இல்லை. அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம். அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்திருக்கலாம். விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டத்தகாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு" என்கிறார்.

'கற்பிதங்கள்'

"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன. பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார். அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது. அதில், "சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்" என்கிறார். பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை. பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் " என்று ராசுக்குமார் குறிப்பிடுகிறார்.

ராஜராஜன் சோழன் காலம் இருண்டகாலமா? - வரலாற்றாசிரியர் பேட்டிபடத்தின் காப்புரிமை M Niyas Ahmed

"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை. பங்குதான் தரப்பட்டது. அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது. இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல். மற்றொன்று 'குடிநீங்கா பிரமதேயம்'. ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.

சரி. இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும். 'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல. வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது, யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'. அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள். இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள். உழுகுடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள். ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை" என்று ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை விவரிக்கிறார் மே.து.ராசுக்குமார்.

'உயர்நிலை'

"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள். மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை. அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்." என்கிறார் ராசுக்குமார்.

https://www.bbc.com/tamil/india-48587731

Link to comment
Share on other sites

எம் கண் முன்னே நடந்த போராட்டத்தினை பற்றியே  எத்தனை எழுந்தவிதமான கதைகள் கட்டுவோரை பார்த்து கொண்டிருக்கிறோம் 
இது 1000 ஆண்டுகளிற்கு முந்திய வரலாறு தானே எப்படி வேணும்னாலும் உளறிகொட்டிட்டு போய்டலாம் 

" 2000ஆண்டு காலம் என் சமூகம் அடிமையாக இருந்து வருகிறது"- கடந்த மாதம் 
" 1000 ஆண்டுகளிற்கு முன்னர்  ராஜராஜ சோழன் காலத்தில் தான் எங்கள் நிலங்கள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டன" - நேற்று 
அடுத்த மாதம் ???? 

எல்லாற்றுக்கும் முட்டுக்கொடுக்கவும் ஒருகூட்டம் சுற்றி இருக்கும் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, அபராஜிதன் said:

எம் கண் முன்னே நடந்த போராட்டத்தினை பற்றியே  எத்தனை எழுந்தவிதமான கதைகள் கட்டுவோரை பார்த்து கொண்டிருக்கிறோம் 
இது 1000 ஆண்டுகளிற்கு முந்திய வரலாறு தானே எப்படி வேணும்னாலும் உளறிகொட்டிட்டு போய்டலாம் 

" 2000ஆண்டு காலம் என் சமூகம் அடிமையாக இருந்து வருகிறது"- கடந்த மாதம் 
" 1000 ஆண்டுகளிற்கு முன்னர்  ராஜராஜ சோழன் காலத்தில் தான் எங்கள் நிலங்கள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டன" - நேற்று 
அடுத்த மாதம் ???? 

எல்லாற்றுக்கும் முட்டுக்கொடுக்கவும் ஒருகூட்டம் சுற்றி இருக்கும் தானே

 

Link to comment
Share on other sites

12 minutes ago, விசுகு said:

எம் கண் முன்னே நடந்த போராட்டத்தினை பற்றியே  எத்தனை எழுந்தவிதமான கதைகள் கட்டுவோரை பார்த்து கொண்டிருக்கிறோம் 
இது 1000 ஆண்டுகளிற்கு முந்திய வரலாறு தானே எப்படி வேணும்னாலும் உளறிகொட்டிட்டு போய்டலாம் 

நியாசு அகமது என்ற வரலாற்று ஆய்வாளருக்கு ராச ராச சோழனை இழிவுபடுத்தினால் அது தமிழனையும் இழிவுபடுத்துவது போலாகும் என்ற எண்ணம் தோன்றி பிபிசி தமிழுக்கு இந்தப் பேட்டியைக் கொடுத்திருக்கலாம்.  

ஆரியர் வருகைபற்றிப் பார்த்தபோது கிடைத்தவை. வர்ணாச்சிரமம் முறையைக் கொண்டுவந்து மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி தங்களை உயர்நிலையில் வைத்துப் பாதுகாத்து வருபவர்கள் ஆரியர்களே என்பதையே சரித்திர வரலாறுகளும், புராணக் கதைகளும் இன்றும் இயம்பிநிற்கின்றன.

ஆரியர் வருகையாலும், ஆரிய வல்லாண்மையாலும், வடமொழித் தாக்கத்தாலும் தமிழ்மொழி பெரிதும் தாக்கமுற்றது. ஆரியர்கள் தம்வேதக் கருத்துகளைத் தமிழ் மக்களிடம் வலிந்து புகுத்தலாயினர். தமிழ் மன்னர்களைப் பல்வேறு வகைகளில் திசைத்திருப்பி தங்களுடைய இருப்புகளையும், ஏந்துகளையும் இந்நாட்டில் தக்கவைத்துக் கொண்டனர். மெல்ல மெல்ல இந்நாட்டில் நிலவிய நானிலத் தெய்வ வழிபாடுகளைப் புறக்கணிக்குமாறு செய்தனர். தமிழர் மதங்களான (சிவனிய, மாலிய) மதங்களில் தங்கள் வேதக் கருத்துகளைப் புகுத்தலாயினர். முத்தெய்வ வழிபாட்டை நுழைத்தனர். சமற்கிருதச் சொலவங்களையும் புரியாத மந்திரங்களையும் பாடல்களையும் மக்களிடைப் பழக்கப்படுத்தினர்.

இறை நம்பிக்கை என்ற பெயரில் தங்கள் மொழி, பண்பாடு, நாகரிகத்தை இந்த மக்களிடை, மண்ணிடையில் நுழைத்து அதன்வழி தங்கள் வாழ்வு அடிப்படையை வலுவாக அமைத்து கொண்டனர்.

முதலில் ஆரிய எதிர்ப்பைத் தொடங்கியவர்கள், சிவனிய சமயக் குரவர்களான நால்வரே. ஆரிய மந்திரங்களை எதிர்த்து அருமையான இன்னிசைப் பாடல்களான தேவாரம், திருவாசகத்தை இந்நாடு முழுவதும் வலம்வந்து பரப்பினர். அண்மைக் காலத்தில் இந்தித் திரைப்பாடல்களே தமிழ்நாட்டில் முணுமுணுத்துக் கொண்டிருந்த போது, தமிழ் இசையமைப்பாளர் ஒருவரின் திரையிசைத் தாக்கத்தால் தமிழ்ப் பாடல்களுக்குத் தமிழ்மக்கள் திசைமாறி வந்தனரே அதுபோல்தான் தமிழ்நாடு முழுவதும் வலம்வந்த அவர்கள், தமிழ்நாட்டின் ஒவ்வொரு திருத்தளங்களுக்கும் சென்று அவற்றின் சிறப்பைப் பற்றி பாடி, தமிழர்களுக்குத் தங்கள் இடத்தின்மீதான பற்றை உருவாக்கினர்.

தில்லையம்பதியைப் பற்றியும் தோடுடையுடைய செவியன்எனத் தொடங்கும் பாடல்வழி சீர்காழி பற்றியும், இதேபோல் இம்மண் தளங்களைப் பாடினமாத்திரத்தில் அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் உள்ள மக்கள் அப்பாடலில் ஈடுபாடு கொள்வதும் அதன்வழி இம்மண்ணின்மீது பற்று உண்டாவதும், மொழிபுரியாத பாடல்களில் அயன்மையும் உருவானது. இவ்வாறு தமிழினத்தை இம்மண்ணிற்குரிய தமிழ்ச்சமயங்களின்மீது பற்று ஏற்படச் செய்தனர்.

வந்தேறி ஆரியர்களுக்கு இவர்கள்தாம் பெருமளவில் முதன்மை எதிரியாயினர். பன்னிரு திருமுறைதான் எதிர்க்கும் மூலப்பொருள் ஆனது. அவற்றைக் கோவில்களிலேயே வைத்து பூட்டி, மக்களிடம் பரவாது தடுத்தனர்.

பிற்காலச் சோழனான இராசராசன் ஆரியர்களுக்கு நல் அடிமையாகக் கிடைத்தான். சமற்கிருதத்திற்கு ஆக்கங்கள் செய்து கொடுத்தான். அவர்களுக்காக அறச்சாலைகள் கட்டுவித்தான். நிலங்களை ஒதுக்கினான். பிற்காலத்தில் அவனுக்கு ஏதோ ஒரு விழிப்புணர்வு தோன்றி பன்னிரு திருமுறைகளை அவர்களிடமிருந்து மீட்டெடுத்துக் கொடுத்தான். தேவாரம், திருவாசகம் ஓதுவதற்கு முனைப்பாக ஏற்பாடு செய்தான். அவன் அன்றைக்கு அவற்றை மீட்கவில்லையானால் அன்றைக்கே அவை அழிக்கப்பட்டிருக்கும். அவனின் அச்செயற்பாடும் ஆரிய எதிர்ப்புக்கு பெருமளவில் உதவியது.

அவனுக்குப் பிறகு இராசேந்திரன் தம் தந்தை வழியிலேயே கங்கை கடாரம்வரை சென்று அங்காங்கு சிவனியக் கோவில்களைக் கட்டித் தேவாரம் திருவாசகம் வழி இறை வழிபாடு நடக்குமாறு நிறுவினான். இன்றைக்கும் கீழ்நாடுகளில் பலவற்றிலும் தமிழில் தேவார வழிபாடு நடப்பதற்கு அதுவே அடிப்படையாகும். எனினும் அதன்பிறகு சோழ ஆட்சி வீழ்ந்தது

தெலுங்கர், மராட்டியர் இன்னும் யார்யாரோ தமிழ்நாட்டை ஆண்டு மேய்ந்துத் தள்ளினர். ஆங்கிலேயன் கைப்பற்றினபோதும், ஆங்கிலர்க்கு நேரடியாகத் தமிழர் அடிமைப்பட வில்லை. நம்மை ஏற்கனவே அடிமைப்படுத்திக் கொண்டிருந்த அண்டை ஆண்டையர்கள் விசயநகரப்பேரரசு போன்றவர்களிடம் கப்பம் கட்டுவதை மாற்றி ஆங்கிலேயரிடம் கப்பம் கட்டினர். கப்பம் கட்டுமிடம் மட்டுமே இடம் மட்டுமே மாறியது. நாம் எங்கு யாரிடம் அடிமைப் பட்டிருந்தோமோ அதுவே தொடர்ந்தது. ஆங்கிலேயர் சென்றபின்னும்கூட மாற்றம் ஏதும் பெரிதாக நடந்துவிடவில்லை

விசயநகரப் பேரரசின் ஆட்சியில் ஒரே வீச்சில் தமிழ்நாடே, தமிழினமே அலைக்கழிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சிறிய பெரிய நிலவுடைமையாளர்கள் அனைவரும் நிலமிழந்து போயினர். சிறு நிலவுரிமையாளர்கள் கூலிகளாக்கப்பட்டனர். பெரு நிலவுடைமையாளர்கள் கையிலெடுக்க முடிந்த சொத்துகளை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தமிழ்நாட்டிலிருந்து எங்கெங்கோ வெளியேறினர். இன்றைக்குத் தமிழீழத்திலிருந்து தமிழர்கள் உலகெங்கும் சிதறியோடுவதுபோல் முன்பொரு காலத்தில் உலகெங்கும் அவ்வாறு சிதறி ஓடிய இனந்தான் தமிழினம்

ஓடவும் முடியாது நலிந்துபோன எஞ்சிய தமிழினமே தமிழ்நாட்டில் மிஞ்சிய கூலிகளாகவும் பாழைகளாகவும் தங்கிப்போயினர். அன்று ஒடுங்கிப்போன தமிழினம் இன்றுவரை ஒடுக்கப்பட்டே உள்ளது

தமிழினம் நேரடியாக ஆங்கிலர்க்கு அடிமையாக இருந்ததில்லை.

அதேபோல் ஆரியர்களும் நம்மை என்றுமே ஆட்சி செய்ததில்லை. நம்மை ஆண்ட அரசர்களை வயப்படுத்திக்கொண்டு தங்களின் கருத்தைச் செயற்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கள் செயற்கை மொழியைத் தமிழுடன் கலந்து வாழவைத்துக் கொண்டிருந்தார்கள்.

மக்களை நான்கு குலமாகப் வேறுபடுத்திப் பிரித்துத் தங்களை உயர்குலமாகக் காட்டிக்கொண்டு உயர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதெல்லாம் அவர்கள் இந்த இனத்தை ஆளுவதற்கு மறைமுகமாகச் செய்த சூழ்வினைகள்.

ஆனால், தமிழினத்தை அடிமைப்படுத்தி, தமிழ்நாட்டை நேரடியாக ஆண்டவர்கள் தெலுங்கர்கள், மராட்டியர்கள், களப்பிரர்கள் இவர்கள் போன்றோரே

ஆங்கிலேயேர் வந்தபோதும் தமிழினத்தைப் பிழிந்து கப்பம் கட்டியவர்கள் அவர்களே. நேரடியாக நாம் பிழியப்படவே இல்லை. கட்டபொம்மு (வீரபாண்டியக் கட்டபொம்மன்) கப்பம் கட்ட மறுத்தான் என்றால் விசயநகரப் பேரரசுக்குக் கட்டவேண்டிய பணத்தை ஆங்கிலேயனுக்குக் கட்டமறுத்தான். அவன் தமிழ் அரசனுமல்லன். விசயநகரப் பேரரசு அமர்த்திய பாளையக்காரர்களில் ஒருவன். ஒரு தமிழனை வைத்து வீரபாண்டியன்என்ற தமிழ் மன்னனின் பெயரைச் சேர்த்து ஒரு கட்டபொம்முஎன்ற தெலுங்குப் பாளையக்காரன் கதையைத் திரைப்படமாக்கிப் புகழ் பரப்பிவிட்டவர் பந்தலு’. இதற்குக் கதையாக்கம் ம.பொ.சி. என்ற தமிழர். எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா?’ என்ற உரையாடலைக்கேட்டு உணர்வு வயப்பட்டு எழுச்சி பெற்றார்கள் எம் தமிழர் அனைவரும். எம்குலப்பெண்கள்என்றதும் தமிழ்க்குலம்என்று தவறாக எண்ணிக்கொண்டு, அவர்களாகவே புளகாங்கிதம் அடைந்துபோனால் அதற்கு அவர்கள் பொறுப்பல்லர்

தமிழைப்போல் தமிழரும் ஆற்றல் பெற்றவர்கள். விழிக்கத்தான் இல்லை. தமிழர் என்ற பெருமையுணர்வு இல்லை. திராவிட முகமூடி போட்டுக்கொண்டு காற்றில் வாள் வீசுகிறோம். அனைத்துத் துறையிலும் திறன்பெற்று அயலவர்க்கு உழைக்கிறோம். திரும்பிப் பார்த்தால் சொந்த மண்ணுக்கு நம்மைப் பெற்ற சொந்தங்களுக்காக உழைத்தது ஒன்றுமேயில்லை

ஒன்றால் தன்னலம்; இல்லையேல் அயலார் நலம் என்று போய்விடுகிறோம். நமக்கு நாமே வளையங்களைப் போட்டுக் கொள்கிறோம். குடும்பம், ஊர், சாதி என்ற வரையறைக்கு அப்பால் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் சிறிது உழைத்தால் நம்மை யாரும் வெல்ல முடியாது. தற்சார்பு மேலோங்கும்

இறைக்கொள்கை, சமயம், சாதி இவற்றையெல்லாம் தனிப்பட்டச் செய்திக்குள் போட்டு அடக்கிக்கொண்டு தமிழால் வெளிப்படுவோம்

தமிழ்ப் பணி என்பது எளிதான பணியுமன்று. தமிழை, இன்றைய பின்தோன்றி முன்னேறிய மொழிகளுக்கு இணையாகக் கொண்டு போவது என்பது எளிய பணியுமன்று. முயல் தூங்கி ஆமைவெல்லும் கதைதான் இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Paanch said:

வந்தேறி ஆரியர்களுக்கு இவர்கள்தாம் பெருமளவில் முதன்மை எதிரியாயினர். பன்னிரு திருமுறைதான் எதிர்க்கும் மூலப்பொருள் ஆனது. அவற்றைக் கோவில்களிலேயே வைத்து பூட்டி, மக்களிடம் பரவாது தடுத்தனர்.

101 % உண்மை தோழர்..👍

https://tamil.oneindia.com/news/2008/07/08/tn-arumugasamy-othuvar-allegedly-attacked.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு முறைகளெல்லாம் உக்கி அழிந்து போகுமளவுக்குப் பூட்டி வைக்கப்பட்டப் பட்டமை திட்டமிடப்பட்ட, நிறுவனமயப்பட்ட சதிச்செயலாகவே தோன்றுகின்றது.  வடமொழியில் பூசை ழிபாடுகள் நடத்தப்பட வேண்டுமென்ற பிராமணீயக் கொள்கையின் அடிப்படையில் அக்கால மன்னர்களின் ஒத்துழைப்புடன் இந்தச் சதிச்செயல் நிறைவேற்றப்பட்டுள்ளது.  காலம் கடந்து விட்டதால்  இவையெல்லாம் எப்படி நடந்தன என்ற வரலாற்று உண்மைகள் மறைந்து போய்விட்டன.

இவையெல்லாவற்றையும்விட தமிழகத்திலிருந்த பௌத்த சமணப் பள்ளிகளும் குருமார்களும் ஈனஇரக்கமின்றிக் கொல்லப்பட்டது மிகவும் கவலலை தரும் விடயமாகும்.  இதற்குச் சைவர்களே பெரிதும் காரணர்களாயிருந்தனர்.

மொத்தத்தில் எமக்கு உள்ளும் புறமும் இருந்து எதிரிகள தமிழின் வளர்ச்சியைத் தடுத்தனர்.  தனிய ஆரியர்களே தமிழ் மொழியின் வீழ்ச்சிக்குக் காரணமெனக் கூறமுடியாது.

இருப்பினும் வள்ளுவர், கம்பர், இளஙகோ, திருத்தக்க தேவர், சமய குரவர்கள், சேக்கிழார், நம்பியண்டார் நம்பி  எனறு பலராலும் தமிழ் காப்பாற்றப்பட்டமை நமது பேரதிஸ்டமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

இணைப்பிற்கு நன்றி விசுகர்!
இப்படியான தகவல் நிறைந்த பேச்சுக்களை இன்றைய எமது இளம் சமுதாயத்திற்கு காண்பிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.