Jump to content

மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.!

Last updated Jun 11, 2019

“இங்கு வணக்க உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.”

வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும்.

Thurairaja-04-copy-copy.jpg

பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து அன்புகாட்டிய முறைமைக்கு இந்த முதியவரின் வார்த்தைகள் நல்ல உதாரணம். இது தனியொருவரின் கருத்தல்ல; தமிழினத்தின் ஒட்டுமொத்தக் குரலும் – உணர்வும் இதுதான். இந்த உணர்வை பேராசிரியரின் பிரிவுபசார நிகழ்ச்சிகளின்போதும், பின்னர் அவரது மரணச்சடங்குகளின் போது மொதுமக்களும், மாணவர்களும், சக கல்விமான்களும் அவருக்குச் செலுத்திய இறுதி மரியாதையிலும் கண்டுகொள்ள முடியும். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் சூடுவதுபோல, தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டையும் கெளரவ விருதையும் பேராசிரியர் பெற்றுக்கொண்டார். பிரிவுபசாரத்தின்போது பேராசிரியரின் பணியைப் பாராட்டி ஒரு செய்தியையும், பேராசிரியர் மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செய்த ஒரு இரங்கல் செய்தியையும் வெளியிட்டு, பேராசிரியருக்கு ஒரு அதி உச்சக் கௌரவத்தைத் தலைவர் கொடுத்திருந்தார்.

ஈழத்தமிழினம் கல்விப் பாரம்பரியம் மிக்க ஒரு மக்கள் இனம் என்பதைப் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்வர். உலகம் போற்றும் கல்விமான்கள் பலரை தமிழீழ அன்னை பெற்றேடுத்துள்ளாள் என்பதும் மறுக்கப்படமுடியாத உண்மை. ஆனால் இவர்களுள் எத்தனைபேர் பிறந்த மண்ணுக்குச் சேவை செய்தார்கள்? எத்தனைபேர் தனது இனத்தின் ஒட்டுமொத்த வாழ்வை உயர்த்திவிட தன்னலம் பாராது பாடுபட்டார்கள்? அறிவின் உச்சத்தில் பணிவைக் கடைப்பிடித்து மக்கள் சேவகனாக, மக்களில் ஒருவனாக வாழ்ந்த மண்பற்றுள்ள பேராசான்கள் எத்தனைபேர்?

Thurairaja-02-copy-copy.jpg

இந்த வினாக்களுக்கு விடையாக “பேராசியர் துரைராசா!” என்று எல்லோரும் ஒருமித்துக் கூறுவார். அந்தளவுக்கு பேராசிரியரின் அறிவும், பண்பும், பணிவும், தனிப்பட்ட வாழ்வும், மேன்மையுடையதாக அமைந்திருந்தன.

தமிழ் மக்களின் சொத்துக்களின் ஒன்றாகிய கல்விக்குப் பேராபத்து நேர்ந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொண்ட அவர், தமிழரின் உயர் கல்விக்கு புத்துயிர் ஊட்டி, புது இரத்தம் பாய்ச்சியிருந்தார் என்பது வரலாற்று உண்மை.

அவர் வகித்த பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியங்களும் சிங்கள அரசின் கைகளில் இருந்தபோதும், தமிழீழ தேசத்திற்கு, தமிழ் மக்களுக்கு சேவை புரிவதற்கு அவற்றை ஒரு தடையாகச் சொல்லி இவர் தப்பிக்க முயன்றதில்லை. அவர் கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும், எல்லாக் கலந்துரையாடல்களிலும், எல்லா நிகழ்வுகளிலும், தமிழினத்துக்கு எதிரான ஒடுக்குமுறைபற்றியும் தமிழீழ தேசியம் பலம்பெறவேண்டிய அவசியம் பற்றியும், தெளிவாகவும் வெளிப்படையாகவும் தனது கருத்தை எடுத்துக்கூறுவார்.

Thurairaja-01-copy-copy.jpg

நூல் வெளியீட்டு விழாவிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.

கல்வி மற்றும் அபிவிருத்தி சம்மந்தப்பட்ட கூட்டங்களிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.

பேராசானுக்கு விருது சூட்டி மகிழும் பெருந்தலைவன்

“தேசப்பற்றோடும், மக்கள் நேயத்தோடும் மண்ணுக்கு அவர் மகத்தான சேவை ஆற்றினார்.”

சக கல்விமான்கள் மற்றும் வேற்று இன நண்பர்களுடன் கலந்துரையாடும்போதும் தமிழீழ தேசியத்தை வலியுறுத்திப் பேசுவார்.

ஏன்! அவருக்கு நடந்த பிரிவுபசாரக் கூட்டத்திலும் அதையேதான் பேசினார்.

தமிழீழத்தில் நடந்த கூட்டங்களில் மட்டுமல்ல, சிங்கள தேசத்தில், கல்விமான்கள் மத்தியில் நடைபெற்ற கலந்துரையாடல்களிலும் அதையேதான் பேசினார்; வெளிநாடுகளில் நடந்த சந்திப்புக்களிலும் அதையேதான் வற்புறுத்தினார்.

Thurairaja-04-copy-copy.jpg

தமிழரின் சுயநிர்ணய உரிமைபற்றியும், தமிழீழ தேசியத்தைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் பேசுவதற்கு ஒர்போழுதும் அவர் அஞ்சியதுமில்லை; பின் வாங்கியதுமில்லை.

அதேவேளை. உலகளாவியரீதியில் தத்தமது வாழ்க்கைச் சக்கரங்களைச் சுழற்றுவதற்குத் திண்டாடும் ஏழை மக்களையும் அவர் அடிக்கடி நினைவூட்டிப் பேசி, அந்த மக்களின்பால் தான் வைத்திருக்கும் கரிசனையையும் எடுத்துரைப்பார். 500 கோடி உலக சனத்தொகையில் 1/5 பகுதியினர் பட்டினிக்கு முகங்கொடுத்து வாழப்போராடுகின்றனர் என்று எடுத்துக்கூறி, அந்தத் துர்ப்பாக்கியநிலை எமது மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறுவார்.

“அரசு திட்டமிட்டு தமிழரின் கல்வியை அழிக்க முநிகின்றது. ஆனால் தமிழினத்தின் கல்வியை அழியவிடாது பாதுகாப்பது எங்களின் கடமை” என்று, வதிரியில் நடந்த பிரிவுபசார விழாவில் பேசிய பேராசிரியர் அவர்கள்…………….

“எமது இயற்கை வளத்தையும் கல்வியால் பெறப்படும் மூளைவளத்தையும் கொண்டு எமது மனத வளத்தையும் சரியாக வளர்த்தெடுத்து, பயன்படுத்தி, எமது தேசத்தின் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்” என்று தேசியப் பிரக்ஞையுடன் பேசினார். அத்துடன் நின்று விட்டாரா…………..?
இல்லை.

“கிராமங்கள் வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளரும்” என்றார்.

“ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர்ந்தால்தான் கிராமம் வளரும்” என்றார்.

“இந்த ஏழை எளிய மக்களின் வாழ்வை வளப்படுத்த சனசமூக நிலையங்கள் பாடுபடவேண்டும்” என்றும் அறிவுரை கூறினார்.

Thurairaja-03-copy-copy.jpg

தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயம்பற்றி சிங்கள தேசத்தில், சிங்களப் புத்திஜீவிகள் மத்தியில் விவாதிக்கும்போது, எதிராளிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டோ அல்லது தன்னலத்தை அடிப்படையாகக்கொண்ட காரணங்களுக்காகவோ விட்டுக் கொடுத்தோ அல்லது ‘சளாப்பிக்’ கதைத்தோ இல்லை. இந்த நேர்மையை தெளிவான அவரது அரசியல் நிலைப்பாட்டை, பேரினவாத உணர்வுடன் உள்ள சிங்கள இனத்தின் புத்திஜீவிகள் கூட மதித்தனர்.

பிரிவுபசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது பேராசிரியர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

ஒருநாள் கத்தோலிக்கச் சிங்களவரான ஒரு கல்விமான் பேராசிரியரிடம் சொன்னாராம்.

“சிங்களவர் மத்தியில் கத்தோலிக்கரான நாங்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கின்றோம். அதனால் பௌத்த சிங்களவர்களுக்கு விட்டுக்கொடுத்து, சகிப்புத் ஹன்மையுடன் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக, அமைதியாக வாழக் கற்றுக்கொண்டுள்ளோம். அதுபோல நீங்களும் (தமிழினம்) விட்டுக்கொடுத்து அமைதியாக வாழலாம்தானே” என்று.

இதற்குப் பதில்கூரும்போது, சிங்களப் பேரினவாத அரசுகளின் தமிழின விரோத நடவடிக்கைகளை பேராசிரியர் விளக்கிவிட்டு,

“…………தமிழர் ஒரு தேசிய இனம் (Nation); அவர்களுக்கு என்றொரு தனித்துவமான நிலமுண்டு, அதேபோல மொழி உண்டு, பண்பாடுண்டு, பொருளாதார வாழ்வுண்டு, ஆகவே அவர்கள் தம்மைத் தாமே ஆட்சிசெய்யக்கூடிய சுயநிர்ணய உரிமையையும் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் தம்மைத்தாமே ஆட்சிசெய்ய விரும்புகின்றார்கள்” என்று பதிலளித்தாராம்.

இந்த விடயங்களை ஒரு கூட்டத்தில் வைத்து பேராசிரியர் அவர்களே தெரிவித்தார்.

தமிழீழத் தேசிய உணர்வுடன் பேசியது மட்டும்தானா பேராசிரியர் செய்த பணி? இல்லை; பேசியபடி வாழ்ந்தும் காட்டியதுதான் அந்தப் பேராசானின் பெருமைக்குக் காரணம்!

“சலுகை ஏறக்கூடிய உரிமை இருந்தும் ஏன் நீங்கள் கப்பல் பயணத்தைத் தவிர்த்து, கொலைக்கடலான கிளாலியூடாக கொழும்புக்குப் பயணம் செய்கிண்றீர்கள்?” என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கேட்டபோது, அந்தப் பெருமகன் பெருமைபொங்கக் கூறிய பதில், தமிழீழப் போராற்ற வரலாற்றில் பொறிக்கப்பட்டுவிட்டது.

“எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன், கிளாலி ஊடாக பயணம் செய்யக்கூடாது என அரசு சட்டம் போட்டது. ஆனால் மக்கள் அதை மீறிப் பயணம்போய் அரசின் சட்டத்தை உடைத்தனர். இதுவும் அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம் ஆகும். நானும் மக்களுடன் சேர்ந்து எனது பங்களிப்பையும் செய்கின்றேன். இதன்மூலம் மக்கள்படும் வேதனையில் நானும் பங்குகொண்டு மனநினைவடைகின்றேன்” என்று மனமகிழ்ச்சியுடன் பேராசிரியர் கூறியிருந்தார்.

இன்னுமொரு தடவை, கொழும்பிலிருந்து கப்பல்மூலம் தீவகத்தை அடைந்த பேராசிரியர், ஒருநாள் இரவை அகதிமுகாமில் எமது மக்களுடன் கழித்தார். அவருக்குத் தனி வசதி செய்துகொடுக்க அங்கிருந்த சிலர் முயன்றபோதும் மறுத்துவிட்டார். துன்பபட்ட தனது தேசத்தின் குடிமக்களுடன் சேர்ந்து வாழ்வைப் பகிர்ந்துகொள்வதில் அவர் இன்பமடைந்திருந்தார்.

பல்கலைக்கழகத்திலிருந்து தனது கிராமமான வதிரிக்குச் செல்லும் வேளையில், வல்வை வெளியில் இரத்தப் புற்றுநோய் தாக்கிய அந்த உடம்பை வைத்து அந்த பேராசான் மிதிவண்டியுடன் போராடும்போது, வாகனத்தில் அவரை முந்திச் செல்ல முனையும் போராளிகள், கண்ணிவெடி வயலில் கடப்பதுபோல நெளிந்து மனங்குமைந்தபடி கடப்பர். மனம் வராது கீழிறங்குபவர்களைப் பார்த்து வெள்ளை மனதுடன் விடிகொடுக்கும் அந்தப் பண்பு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும்.

யாழ்.பல்கலைக்கழக கட்டடமொன்றில், ‘துணைவேந்தர்’ என்ற பெயர்பலகையுடன் அதியுயர் அதிகாரத்தையும் கொண்ட அந்த அறையினுள் பேராசிரியர் இருக்கும்போது, பாலர் வகுப்பறை போன்றே அது தென்படும். பல்கலைக்கழக மாணவர்கள் சிற்றூழியர்கள் சகஜமாக உள்ளே போவதும், சந்தோசமாக உரையாடுவதும், சிரித்த முகத்துடன் வெளியே வருவதும் வழமையான காட்சிகள்.

சாதாரணமாக இத்தகைய உயர் பதவியில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கவே சிரபப்படும் நிலையில், அன்றாடம் இவரை எல்லோரும் சிரமமின்றிப் பார்த்தனர்; அவருடன் பேசினார்.

அவரது சொந்தக் கிராமத்திலும் உயர எழுப்பிய மதில்சுவருக்குள் சிறையிலிருந்து, மக்களிடமிருந்து அன்னியப்பட்டு அவர் வாழவில்லை.

சனசமூக நிலையம் சென்று பத்திரிக்கை வாசித்தார்; குடும்பத்தாருடன் சேர்ந்து தோட்டம் செய்தார்; கிராமத்து வீதிகளில் நின்றபடி மக்களுடன் அன்றையப் புதினங்களைப்பற்றிக் கதைத்தார்; மக்களுடன் மக்களாகவே வாழ்ந்தார்.

யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு கொழும்பு திரும்ப ஒரு சில நாட்கள் முன்னர் பேராசிரியரை அழைத்த புலிகளின் அரசியல் துறையினர், அவரது சேவையைப் பாராட்டும் முகமாக ஒரு விருந்துபசாரம் நடாத்தி அவரைக் கௌரவித்தனர். தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்குகொண்ட அந்த நிகழ்வில் பேராசிரியர் துறைராசாவும் உரையாற்றினார்.

வழமைபோலவே போராட்டத்தின் தேவை பற்றியும், சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை பற்றியும், தன்னிறைவான பொருளாதாரத்தின் அவசியம்பற்றியும் பேசினார். அப்பேச்சின் ஒரு கட்டத்தில்…..,

“……..எமது இனத்தின் விடுதலைக்காக தங்களது உயிரைத் தியாகம்செய்ய ஆயத்தமாக இருக்கும் புலிகளுக்கு, நான் தலை சாய்த்து வணக்கம் செலுத்த விடும்புகின்றேன்” என்று, தனது தூய நாவால் போராளிகளை மதித்து உரையாற்றிய அந்தப் பெருந்தகை, எம்மைவிட்டு நிரந்தரமாகவே பிரிந்துவிட்டார்.

பேராசிரியர் துரைராசா அவர்கள், புலமையும் பரந்த பார்வையும் கொண்ட பேராசான் மட்டுமல்ல….,

தமிழ் மக்களின் இதயங்களைக் கவர்ந்தெடுத்த ஒரு மக்கள் சேவகன் மட்டுமல்ல……,

தமிழீழ அன்னைக்குத் தொண்டு செய்த அதன் தவப்புதல்வன்.

தமிழீழ அன்னைக்கு வலுச்சேர்க்கப் பாடுபட்ட ஒரு தேசப்பற்றாளன்.

ஒரு உண்மை மனிதன்.

தமிழினத்தின் கல்வியில் அவரது சேவை ஒரு கலங்கரை விளக்கு.

உலகக் கல்விமான்கள் மத்தியில் அவர் ஒரு அறிவுப் பழம்.

எமது மக்களின் உரிமைகள் பற்றிப் பேசும்போது அவர் ஒரு போராளி.

அவரது கிராமத்திலோ வேட்டி கட்டிய ஒரு விவசாயி.

இவ்விதம் மக்களின் அனைத்து மட்டங்களிலும் தனது பண்பான, நேர்மையான, பணிவான, சேவையால் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட பேராசிரியரின் திடீர் மறைவு, தமது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்துவிட்ட தவிப்பைத்தான் மக்கள் ஒவ்வொருவரிலும் ஏற்படுத்தியுள்ளது.

தனது உணர்வை வெளிப்படுத்த வதிரிக் கிராமத்தின் அந்த முதியவர் பயன்படுத்திய வார்த்தைகளில்தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது!

“பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும்!”

-நினைவுப்பகிர்வு:- எல்லாளன்.
வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் 

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

https://www.thaarakam.com/2019/06/11/மாமனிதர்-பேராசிரியர்-துர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் மாணாக்கனாக இருந்திருக்கிறேன் என்பதில் மற்றையோரை போல நானும் பெருமை கொள்கிறேன்.
அவர் மறைவதற்கு சில நாட்களின் முன் வைத்தியசாலையில் அவரை சென்று பார்த்திருந்தேன் । மிகவும் சாதாரணமாகவும் எப்போதும் போல இயல்பாகவும் இருந்தார்.
அவருடைய தவிபு உடனான தொடர்புகள் தெரிந்திருந்தும் , இற்றை வரைக்கும் பெரும்பான்மையினத்தை சேர்ந்த எமது சக மாணவர்களோ வேறு எவருமோ அவரை பற்றி எந்த விதமான எதிர்நோக்கு கருத்துக்களை வைத்து நான் அறிந்ததில்லை .

அவரிடம் மாணாக்கனாக இருந்திருக்கிறேன் என்பதில் மற்றையோரை போல நானும் பெருமை கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

அது 1993 இன் ஓர் நாள். வவுனியா நோக்கி செல்வதற்காக புலிகளின் ஓமந்தைச் சாவடியில் பாஸ் நடைமுறைகளை முடித்துவிட்டு, இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்காகக் காத்துநிற்கின்றோம். அப்போது அந்த வாகனமமும் எங்கள் பகுதியில் வந்துநின்றது. புலிகளது பொறுப்பாளர் ஒருவர் வாகனத்தின் கதவைத்திறந்துவிட, அதிலிருந்து அந்த உயர்ந்த மனிதர் தனது சிறிய கைப்பையுடன் இறங்கி எங்களோடு வந்துநின்றார்.

தொழில்நிமித்தம் இராணுவகட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நித்தமும் சென்றுவரும் வியாபாரிகளை புலிகள் முதலில் அனுப்புவார்கள். அவர்கள் அப்போது ஏறக்குறைய மூன்று மைல்களாக இருந்த சூனியப்பிரதேசம் என்றழைக்கப்பட்ட, இராணுவத்தினதோ இல்லை புலிகளதோ பிரசன்னம் இல்லாத, இரு பகுதி 'சென்றி'களுக்குமிடைப்பட்ட பகுதியைத் தாண்டி இராணுவ சென்றியை சென்றடைந்து, பிரைச்சினைகள் ஏதுமில்லை என்று உறுதிப்படுத்திய பின்னர் புலிகள் பொதுமக்களைச் செல்ல அனுமதிப்பார்கள்.

சிலவேளைகளில், இராணுவப்பகுதியில் இருந்து ஆட்கள்வரும்வரை காத்திருந்து, பொதுமக்கள் செல்லப் பிரைச்சினைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியபின் தங்கள் பகுதியிலிருந்து மக்களைச் செல்ல அனுமதிப்பார்கள்.ஏனெனில் இருபக்கத்திற்குமிடையில் பொது மக்கள் சென்றுவருவது பற்றிய தகவல்பரிமாற்றம் ஒன்றும் இருந்ததில்லை. சிலவேளைகளில் மக்கள் சென்றுகொண்டிருக்கும்போது ஆமி சுடத்தொடங்குவான். அவ்வாறான சூழ்நிலையில் சூட்டிற்கு மாட்டுப்பட்டு பல பொதுமக்கள் இப்பகுதிகளில் மரணித்திருக்கின்றார்கள்.

எங்களைச் செல்ல புலிகள் அனுமதித்ததும், வாகனங்கள் ஏதுமற்ற அந்த சூனியப்பிரதேசத்தை இயலுமானவர்களோ இயலாதவர்களோ , குழந்தைகளோ குட்டிகளோ என்றவேறுபாடு ஏதுமற்று, எல்லோரும் நடந்தே செல்லவேண்டும் என்றளவில் எல்லோரும் நடந்து சென்றுகொண்டிருக்கின்றோம். அப்போதுதான் கவனித்தேன், எங்களோடு புலிகளின் சென்றியில் புலிகளது பொறுப்பாளரால் கைலாகுகொடுத்து வழியனுப்பப்பட்ட அந்த உயர்ந்த மாநிற மனிதரும் வந்துகொண்டிருந்தார். படித்த மிகவும் பண்பாளராகத்தெரிந்தாலும் எங்களுக்குள் ஒரு கலக்கம், இவரைப் புலிகள் கொண்டுவந்து, மக்கள்முன்னே வெளிப்படையாக அதுவும் கைலாகு கொடுத்து இறக்கிவிட்டபடியால், எம்போன்ற மக்கள்வடிவில்வரும் படையினருக்கு தகவல் சொல்லுபவர்கள், ஏன் பொதுமக்களை ஆமி விசாரிக்கும்போதே அவர்களே சொல்லுவார்களே, சொன்னால் அந்த உயர்ந்த மனிதருக்கு சிங்கள இராணுவம் என்னசெய்யும் என்று எண்ணியவாறு எதற்கும் அவரிடமிருந்து கொஞ்சம் பின்தள்ளிச் செல்லுவோம் என்று யோசித்தவாறே சென்று கொண்டிருக்கின்றோம்.

ஆமியின் சென்றிக்கு கிட்டவாகச்சென்றதும், வயல்வரம்பினூடு ஒருவர்பின் ஒருவராகச்செல்லவேண்டும். தப்பித்தவறி வரம்பைவிட்டு கிழே இறங்கினால் மிதிவெடிவெடிக்கும் என்கின்றநிலை.

சென்றியில் நிற்கும் இராணுவமும் தலையாட்டிகளும் வரும் பொதுமக்கள் ஒவ்வொருவரையும் கண்காணித்தபடி இருப்பார்கள்.

நாங்கள் எதிர்பார்த்தவாறே, சென்றிக்கு அருகாமையாகச்செல்லும்போது, ஒருவித பதட்டம் இராணுவத்தினரின் மத்தியில் காணப்படுகின்றது. அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ மேயர் ஒருவர் நான்கைந்து படையினர் சூழ எங்களை நோக்கிவருகின்றனர். எங்களுக்கு முன்னே ஒரு ஏழெட்டுப்பேருக்கு முன்னே அந்த உயர்ந்தமனிதர் சென்றுகொண்டிருக்கின்றார்.

நாங்கள் ஏதோ பிசகிவிட்டது என்று யோசிப்பதற்கிடையில், அந்த சம்பவம் இடம்பெற்றுவிடுகின்றது.

முன்னே சென்ற அந்த உயர்ந்தமனிதர் இராணுவத்தின் சென்றியைத்தாண்டி உள்ளே செல்லவும், அந்த இராணுவ மேஜர் அவரை நோக்கிவரவும் சரியாக இருந்தது. முன்னரே எதிர்பார்த்ததுபோலவே, யாரோ போட்டுக்குடுத்து, அவரை இராணும் கைது செய்யப்போவதாகவே அக்கணத்தில் நினைத்தேன்.

ஆனால் நடந்ததோ வேறு. வந்த இராணுவ மேஜர், அந்த மனிதருக்கு சலூட் அடித்து கைலாகு கொடுத்ததுடன், கட்டிப்பிடித்து தனது அன்பையும் வெளிப்படுத்திக்கொண்டான்.

அந்த உயர்ந்தமனிதர் வேறுயாருமில்லை, அவரது மறைவின் முகமாக, சரிநிகர் பத்திரிகையில் நினைவுக்கட்டுரையொன்றில், புலிகளை கடுமையாக வமர்சிக்கும், பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் எழுதியதைப்போல, புலிகளையும் அவர்களது பக்க நியாயங்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களின் நிர்வாகப்பகுதியினுள் கடைமையாற்ற விரும்பிச்சென்ற, மண்ணியல் பொறியல்துறையில் தனதுபெயரை இன்றுவரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்,பேராசான் அழகையா துரைராஜாவேதான் அந்த உயர்ந்த மனிதர்.

அந்த இராணுவ மேஜர், அவரிம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற மாணவர்.

துரைராஜா அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின் தலைவராக (dean) இருந்தொவொரு காலப்பகுதியில், சிங்கள மாணவர்கள், துணேவேந்தரை அவரது அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாதவரை அவரை விடுதலை செய்யமாட்டோம் என்றுவிட்டார்கள். எத்தனையோ பேராசிரியர்கள் மாணவர்களோடு பேசமுயன்றும், மாணவர்கள் மறுத்துவிட்டு, அவர்கள் நிபந்தனை போட்டார்கள், நாங்கள் பேசுவதாக இருந்தால், அது பேராசிரியர் துரைராஜா அவர்களிடம் மட்டுமே என்று. தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது, மாணவர்களோடு சென்று பேசி, அப்பிரைச்சினை சுமூகமாக முடிய வழியேற்படுத்தினார்.

அதுபோல அவர்மறைந்த பின்னர், ஒரு நாள் அதே பேராதனையில் கல்விகற்றுக்கொண்டிருந்த அவரது மூத்தமகள் தங்கியிருந்தவீட்டில் சோதனையில், பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுவிடுகின்றார், அதை அறிந்ததும், பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் ஏகப்பட்ட வாகனங்களில் வந்து இறங்கினர், பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொலிசாரே மிரண்டுவிட்டனர், தாங்கள் யாரோ மினிஸ்ரரின் மகளைக் கைதுசெய்துவிட்டோமோ என்று.

அவரின் இறுதிவணக்க நிகழ்வுகள் அவரது சொந்த இடமான, இரும்புமதவடி என்னும், உடுப்பிட்டி மாலிசந்தி வீதியில் நவிண்டிலுக்கு அடுத்த ஊரில் நடைபெற்றன. புலிகளது சார்பில் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களும், திரு பொட்டு அம்மான் அவர்களும் பங்குகொண்டிருந்தனர்.

முழுத் தமிழ் உலகமுமே அவரது மறைவிற்காகக் கண்ணீர் விட்டது. ஏனெனில் அவர் ஒரு கல்விமான் என்பதற்காக அல்ல. சமூக மனிதனாக வாழ்ந்து தனது தேசத்திற்கு தன்னால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்கின்ற அந்த மனிதாபிமானத்திற்காக.

 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.