Jump to content

காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார் அசாத் சாலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார் அசாத் சாலி

(ஆர்.யசி )

சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும்   இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார். 

asadsali.jpg

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும்   இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹித் ஜமா அத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டும் அல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபாய்கள் பணமாக தருவதாக பேரம்பேசினர் எனவும் விசேட தெரிவுக்குழு முன்னிலையில் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார். 

21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு சாட்சியமளிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மத் அசாத் சாலி இவ்வாறு வாக்குமூலம் வழங்கினார். அவரது சாட்சியம்,

நான் அசாத் சாலி, இன்று நாட்டில் ஆட்சி ஒன்று இருக்கிறதா இல்லையா என தெரிந்துகொள்ள முடியாத காலகட்டத்தில் என்னை சாட்சியத்துக்கு அழைத்துள்ளீர்கள். எது எவ்வாறு இருந்தாலும் நான் எனது நன்றிகளை தெரிவித்துகொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு அடிப்படைவாதி என்ற ரீதியில் எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் பல தடவைகள் நான் இது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளேன். கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இது குறித்த பல தடவைகள் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். அவரது நகரமாகவே அது இருந்தது. பொலிசார் கூட செல்ல முடியாத சூழ்நிலையே காத்தான்குடியில் காணப்பட்டது.  அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன. அவர் தேர்தலுக்கு உதவினார். இதற்குக் காரணமும் காத்தான்குடியில் சஹ்ரானின் பலமே . சில உடன்படிக்கைகளை செய்துகொண்டு தேர்தலுக்காக சஹ்ரான் ஹிஸ்புல்லாஹ்விற்கு உதவினார், 

மேலும் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகம் ஷரியா பல்கலைக்கழகம் அல்ல. ஷரியாவை தவறாக விளங்கிக்கொள்ள வேண்டாம். ஷரியா என்பது எமது வாழ்க்கை. இது குறித்து ஏன் நீங்கள் அனைவரும் தவறான கருத்தினை கொண்டுசெல்ல முயற்சித்து வருகின்றீர்கள். கிழக்கு பல்கலைக்கழகதில் சரியா பிரிவு உள்ளது. அது தவறில்லை. அதேபோல் சரியா எமக்கு கண்டிப்பாக வேண்டும். இது உங்களுக்கு அவசியம் இல்லை ஆனால் எமக்கு ஷரியா கண்டிப்பாக வேண்டும். எமது வாழ்க்கையுடன் ஷரியா கலந்துள்ளது. அதனை விடுவித்து வாழ முடியாது. ஏன் நீங்கள்  21ஆம் திகதி தாகுதளுக்கும் முஸ்லிம் கலாசாரத்துக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள் என புரியவில்லை. 21ஆம் திகதி தகுதளுக்கும் முஸ்லிம் திருமணத்திற்கும்  இடையில் என்ன தொடர்புகள் உள்ளது? இலங்கையில் நீண்ட காலமாக முஸ்லிம் சட்டம் உள்ளது. அவை இன்று நேற்று உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அதனை இப்போது ஏன் நீக்க வேண்டும். முஸ்லிம் சட்டம் எமக்கு அவசியம். 

மேலும் அப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் வெளியில் சுதந்திரமாக உள்ளார். இவர் பொலிசாரின் பாதுகாப்பில் தான் உள்ளார்.கொழும்பில் தான் வாழ்கின்றார். இவர்  ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இவர் நேரடியாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடாவிட்டாலும் கூட பயங்கரவாதி ஒருவரை ஆதரிப்பதும் பயங்கரவாதம் தான். இவர் வெளியில் இருக்கும் வரையில் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றே நான் கருதுகின்றேன். 

உண்மையில் இவர்கள் குறித்து நான் பல தடவைகைகள் அரச தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். தாக்குதல் நடத்த ஒரு வாரத்திற்கு முன்னரும் நான் ஏனைய எமது சமூகத்தினர், சிவில் அமைபினரை அழைத்துக்கொண்டு பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து உரிய காரணிகளை தெரிவித்தேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. பொலிஸ்மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் கூட நான் கிழக்கில் ஒரு நிகழ்வில் வைத்து தெரிவித்தேன். ஆனால் குற்றவாளிகள் என எம்மை கருதினரே தவிர உண்மையான குற்றவாளிகளை கண்டறிய எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக முழு முஸ்லிம்களும் இன்று விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது . எனினும்  இந்த சப்மவம் இடம்பெற  கடந்த  1995ஆம் ஆண்டு   தொடக்கம் இன்றுவரை உள்ள அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இந்த அடிப்படிவாதம் என்பது கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து தெரிவிதுள்ளேன்.அப்போதில் இருந்து  ஐந்து பாதுகாப்பு  செயலாளர்கள் இருந்தனர். 

அவர்களுக்கு நான் உரிய காரணிகளை வழங்கினேன். எவரும் கருத்தல் கொள்ளவில்லை. பொலிசில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம். முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ் அமைப்பு பலமாக செயற்படுகின்றது என நான் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். ஆனால் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமா அத் அமைபிட்கும்  இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. நான் தவ்ஹித் ஜமா அத் குறித்து பேசிய காரணத்தினால் தான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டும் அல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தினர். 500 மில்லியன் ரூபாய்கள் பணமாக தருவதாக பேரம்பேசினர்.  தேர்தலில் களமிறங்குவதாக இருந்தாலும் இதில் 200 மில்லியனை செலவழித்துக்கொள்ளவும் ஆலோசனை வழங்கினர். 

கடந்த காலங்களில் இருந்து காத்தான்குடியில் பல அசம்பாவிதங்கள் இடம்பெறாது. அவை அனைத்திற்கும் சஹாரான் காரணமாக இருந்தார், இது குறித்து எமது முஸ்லிம் மக்கள் பல முறைப்பாடுகளை  செய்தும் பொலிசார் சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹாரானை கைதுசெய்ய மக்கள் கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டம் செய்தனர். இவை எல்லாம் இரகசியமான விடயங்கள் அல்ல. அனைவருக்கும் இது நன்றாகவே தெரியும். அதேபோல் தேசிய தவ்ஹித் ஜமா அத் அமைப்பை தடை செய்ய வேண்டும் என கூறினோம். ஆனால் தேசிய தவ்ஹித் ஜமா அத் அமைப்பும் பொலிசாரும் ஒன்றாகவே செயற்பட்டனர். இதுதான் உண்மை என்றார்.

 

http://www.virakesari.lk/article/58043

Link to comment
Share on other sites

58 minutes ago, Dash said:

இது உண்மையானால் ரணில் தான் அடுத்த ஜனாதிபதி

ரணில் போன்ற கையாலாகாத மனிதர்கள் அதிகாரத்துல இருக்கிறதால காலம் தான் வீணடிக்கப்படும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தமிழக தலைவராக கோவை முகமது அசாருதீன் உருவானது எப்படி? பகீர் தகவல்கள் ..!

mohammad-azharuddin-coimbatore-isis34-15

கோவை: சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.ஸ். இயக்கத்தின் தமிழக தலைவராக செயல்பட்ட முகமது அசாருதீன் மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த முகமது அசாருதீன், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தது தொடர்பான பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை மட்டக்களப்பு காத்தாங்குடியை சேர்ந்த சஹ்ரான் ஹாஸிம், தேசிய தவ்ஹீத் ஜமா அத் என்ற அமைப்பை உருவாக்கினார். இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.இதற்காகவே காத்தாங்குடியில் தனி மசூதி ஒன்றை கட்டி அதில் பிரசாரம் செய்து வந்தார் சஹ்ரான்.

அத்துடன் தமது பிரசங்கங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வந்தார். மேலும் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்து தமது கொள்கைகளை பரப்பி வந்தார்.

சமூக வலைதளங்களில் வீடியோ உரைகள கேட்டு இலங்கையில் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள இளைஞர்களும் அவருடன் தொடர்பு கொண்டனர். இந்த நெட் ஒர்க் அடிப்படையில்தான் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை சஹ்ரான் உருவாக்கினார். இலங்கையில் தாக்குதல் பின்னர் ஈஸ்டர் நாளில் தாம் உட்பட 9 தற்கொலைப்படையினர் மூலம் கொடூர தாக்குதல்களை சஹ்ரான் நடத்தினார்.

இதனிடையே கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சஹ்ரானுடன் தொடர்பில் இருப்பதை இந்திய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. கண்டுபிடித்தது.

ஒப்புதல் வாக்குமூலம் தந்த கேரளா இளைஞர்

மேலும் கோவையைச் சேர்ந்த 13 இளைஞர்களையும் வளைத்தது என்.ஐ.ஏ.இந்த இளைஞர்களை மூளை சலவை செய்ததாக முதலில் கேரளாவை சேர்ந்த ரியாஸை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

சிக்கும் அசாருதீன்

ஆனால் ரியாஸிடம் நடத்திய விசாரணையில் தமக்கு தமிழ் தெரியாது; அதனால் சஹ்ரானின் வீடியோ உரைகளை முன்வைத்து கோவையை சேர்ந்த அசாருதீன் மூலமே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இதன்பின் இலங்கை தரப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆவணங்களிலும் சஹ்ரானுடன் முகமது அசாருதீன் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது. தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தின் தலைவராக அசாருதீன் செயல்பட்டு வந்துள்ளார். இதனடிப்படையில் அசாருதீன் மீது வழக்குப் பதிவு செய்து இன்று அதிரடி சோதனைகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகள் முடிவில் அசாருதீன் பிடிபடலாம் என கூறப்படுகிறது.

https://tamil.oneindia.com/news/coimbatore/how-mohammad-azharuddin-emerge-as-isis-recruit/articlecontent-pf382266-353858.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார் அசாத் சாலி

 

உங்கட பிரச்சினைகளை

உங்களுக்க  முடியுங்கோப்பா

டொட்.

 

Link to comment
Share on other sites

அசாத் சாலி தான் தப்ப எதுவும் செய்வாய். இந்த வாய்ப்பை ரனிலும் தவற விட மாட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.