Jump to content

இந்தியாவிடம் இருந்து கொள்ளை அடித்த சொத்துக்களை திருப்பி தர வேண்டும் ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் இருந்து கொள்ளை அடித்த சொத்துக்களை திருப்பித் தர வேண்டும் ! இங்கிலாந்து , ஃபிரான்சுக்கு ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. வேண்டுகோள் !!

rajeev-2-jpg_1200x630xt.jpg

இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் இங்கிருந்து அள்ளிச் சென்ற சொத்துக்களை அந்நாடுகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கிந்திய கம்பெனி மூலம் வியாபாரம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்த இங்கிலாந்து கொஞ்சம், கொஞ்சமாக தனது ஆக்டோபஸ் கரங்களால் நாடு முழுவதையும் வளைத்துப் பிடித்தது.

வியாபாரம் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இங்கிலாந்து , ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் கொள்ளையடித்துச் சென்றன. உதாரணமாக கோகினூர் வைரம் போன்ற அற்புதமான சொத்துக்களை இங்கிலாந்து  நாட்டுக்கு அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.ஆனால் அவர்கள் எடுத்துச் சென்ற சொத்துக்களை திரும்ப கொண்டு வர இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தற்போது பாஜக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து மத்திய பாஜக அரசு அந்த சொத்துக்களை திரும்பவும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து திருடிச் சென்ற சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்க இதுவே சரியான தருணம் என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஹாலந்து, போர்ச்சுக்கல், ஃபிரான்ஸ்  போன்ற நாடுகள் இந்திய மக்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற சொத்துக்களை திரும்ப இந்தியாவிடமே ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Rajeev Chandrasekhar
🇮🇳
@rajeev_mp
I think a discussion must start abt how n when #GreatBritain can start repaying its debts to #India !

Great Britain Holland Portugal France - its time that they start returning back the wealth they took from “colonies” n the people who it belongs to
How Britain stole $45 trillion from India
aljazeera.com

https://tamil.asianetnews.com/politics/rajeev-chandrasekhar-mp-s-tweet-to-britain-psx2z6

டிஸ்கி :

நியாயமாக இவையள் அவையளுக்குதான் கோயில் கட்டி கும்பிடவேணும் .. 👌 பல்வேறு தேசிய இனங்களை அடிமைப்படுத்தி, ஒன்றாக்கி கிந்தியா என்ற பெயரில் கூட்டு கொள்ளை , ஊழல் செய்ய வழிவகை செய்தமைக்கு..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு....இங்கிலாந்து போட்ட....இரும்புத் தண்டவாளங்களையும்....புகையிரத நிலையங்களையும்....டெல்லி செங்கோட்டை போன்ற கட்டிடங்களின்...பெறுமதிகளையும்....அவர்களுக்குக் கொடுத்தால்....இந்தியாவின் கோரிக்கை நியாயமானது என்று ஏற்றுக்கொள்ளலாம்!

Link to comment
Share on other sites

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவிடம் இருந்து கொள்ளை அடித்த சொத்துக்களை திருப்பித் தர வேண்டும் ! இங்கிலாந்து , ஃபிரான்சுக்கு ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. வேண்டுகோள் !!

 

1 hour ago, புங்கையூரன் said:

பதிலுக்கு....இங்கிலாந்து போட்ட....இரும்புத் தண்டவாளங்களையும்....புகையிரத நிலையங்களையும்....டெல்லி செங்கோட்டை போன்ற கட்டிடங்களின்...பெறுமதிகளையும்....அவர்களுக்குக் கொடுத்தால்....இந்தியாவின் கோரிக்கை நியாயமானது என்று ஏற்றுக்கொள்ளலாம்!

புங்கையூரன் அவர்களே! நீங்கள் சந்திரசேகர் எம்.பி. ஐ சாதரணமாக எடைபோடவேண்டாம். அதற்குள் தமிழர் நலனும் அடங்கியிருப்பதை கவனிக்கவேண்டும். இங்கிலாந்தும், பிரான்சும் அனைத்தையும் திரும்பக் கொடுக்க முன்வந்தால்...... தமிழர்களின் அரசும் அவர்கள் நிலங்களும் தமிழர்களிடம் திரும்ப வந்துசேரும் என்பதையும் நினைவில் கொள்ளவும். அவரை ஆதரிப்போம். 🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களது வாய்ச்சவடாலுக்கு எல்லையே கிடையாது.

டெல்லி மொகலாய இசுலாமியர்கள் ஏகாதிபத்திய வாதிகள், இன்றையபங்களாதேஷ் வரை மேற்கே பரவி இசுலாமிய மார்க்கத்தை தழுவ வைத்த அவர்கள்.... பர்மா, தாய்லாந்து என்று, போய், இசுலாமிய மார்கத்தைக் தழுவிய மலேசியா, இந்தோனேசியாவினை இணைத்திருப்பார்கள்.

தெற்கே ஆந்திராவின் ஹதராபாத், தமிழகம் மதுரை வரை, வந்து இருந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் வந்திராவிடில், முழு இந்தியாவும், இலங்கையும், பர்மாவும், தாய்லாந்தும் இஸ்லாமிய நாடாக மாறி இருக்கும்.

குஜராத்தின் சோமநாதர் கோவிலை 7 தடவை படை எடுத்து வந்து கஜனி முகமது கொள்ளை அடித்தான்.

காசி விசுவநாதர் கோவில், அயோத்தி ராமர் கோவில் தரைமட்டமாகி பள்ளிகள் அமைத்துக் கொண்டார்கள். பின்னர் அதன் அண்மையிலேயே இன்றய ஆலயங்கள் பல ஆண்டுகள் பின்னர் அமைந்தன.

ஆங்கிலேயர்கள், அவைகளில் கை வைக்கவில்லை. இஸ்லாமியர்களிடம் அடித்த காசை கேட்கலாமே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.