Jump to content

பகற்கொள்ளை அடிக்கும் இங்கிலாந்து GP களுக்கு வருகிறது ஆப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் பொதுமருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள் (GPs)  ஒரு பதிவுசெய்யப்பட்ட நோயாளிக்கு என்று வருடத்துக்கு 150 பவுன்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். 

இவர்களின் பதிவுப்பட்டியலில் உள்ள பெயர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவை போலிப் பதிவுகளாக இருக்க இனங்காணப்பட்டுள்ளன.

சுமார் 3.6 மில்லியன் ghost patients இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஜிபிக்கு சராசரி 1700 போலி நோயாளிகள் பட்டியல் உள்ளது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் என்பது 1700 x 150 பவுண்டுகள். அதாவது சேவை வழங்காமலே கால் மேல கால் போட்டு கள்ளப் பட்டியலில் பெறும் சும்மா காசு. இதனை வரிமூலம் இவர்களுக்கு வாரி வழங்குவது.. கடின உழைப்பாளிகள். 

இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு மறுசீரமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் பல தமிழர்கள் இந்த ஜிபி தொழிலை விரும்பிச் செய்து வருகின்றனர். இவர்களுக்கு வைத்தியசாலைகளில் வேலை செய்ய விருப்பமில்லை. காரணம்... வேலைப் பளுவுடன் கூடிய வருமானம் என்றால்.. இப்போது இவர்களுக்கு ரெம்பக் கசப்பது தான். 

ஜி பி தொழில் என்று இவர்கள் ஓடுவதன் சூட்சுமம்...???! 

Stethoscope

GP 'ghost patients' to be investigated by NHS fraud squad

https://www.bbc.co.uk/news/health-48600923

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து GP கள் பனடோல் ம‌ட்டுமே தருவார்கள். ஆன்டி பயடிக் கூட தர மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு காலத்தில் இருந்தது. இப்ப 'வாய்ப்பில்லை ராஜா'.

முன்பு prescription charges கட்ட காசில்லை எண்டால், வீட்டில, அரச மானியத்தில் இருக்கும் நண்பர் பெயரில், டாகுத்தார் அய்யா மருந்து எழுதி தருவார். இப்ப 'வாய்ப்பில்லை ராஜா'.

சிலபேர், மானியத்தில் இருக்கிறதா சொல்லி, பார்மஸில இலவசமா பிறகு ஆதாரம் காட்டுறோம் எண்டு  மருந்து வாங்கிக் கொண்டு வருவினம். மனிதாபிமானம், மருந்து என்பதால் கொடுத்து விடுவார்கள்.

பிறகு, NHS செக் பண்ணி  பார்த்து, அவரது பெயர் மானியம் பெறுபவர்களின் இல்லை என்றால், £108.40 (Presciption  charges   + £100 fine ) கட்டுமாறு கடிதம் போடுகிறார்கள்.

அதேபோல, டாக்டர்களின் patients records செக் பண்ணி கொண்டு தான் 
இருக்கிறார்கள்.

பம்மாத்து விடடால் அவர்களது அனுமதி ரத்தாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

இங்கிலாந்து GP கள் பனடோல் ம‌ட்டுமே தருவார்கள். ஆன்டி பயடிக் கூட தர மாட்டார்கள்.

இது காரணமாய்தான் கொழும்பான். அண்டிபயாடிக் என்ற நுண்ணுயிர் கொல்லியை எவ்வளவுக்கு அதிகமாக பயன்படுதுகிறோமோ அந்தளவுக்கு வேகமாக நுணுயிரும் மருந்தை எதிர்க்கும் சக்தியை பெற்றுவிடும். அதுதான் கூர்ப்பின் அழகு.

இப்படி கண்டமேனிக்கு அண்டிபயோடிக் பாவித்தால் - மிக விரைவில் எந்த அண்டிபயோடிக்கும் வேலை செய்யாமல் விட்டிவிடும் ஒரு உலக அபாயம் ஏற்பட்டுவிடும்.

இதனால்தான் அண்டிபயோடிக் கொடுப்பதை வளர்ந்த நாடுகளில் கட்டுப்படுத்துகிறார்கள்.

இலங்கை போன்ற வளரும்நாடுகளில், சின்ன பக்டீரியா தொற்றுக்கே மிக கடுமையான அண்டிபயோடிக்கை கொடுப்பார்கள். நோயாளி உடனே சுகமாகிவிடுவார், ஆனால் இன்னும் கொஞ்ச வருடத்தில் முழு உலகுக்கும் இது ஆப்பாய் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் மருந்து எல்லாம் வலு மலிவாம். உண்மையா ?

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

கனடாவில் மருந்து எல்லாம் வலு மலிவாம். உண்மையா ?

அப்படி ஒன்றும் மலிவு இல்லை, ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மலிவு.

இங்கு Generic மருந்துகள் மலிவானதாகவும் Brand மருந்துகள் இரண்டு மடங்கானது விலை அதிகமாகவும் இருக்கும். (இரண்டுக்கும் தரத்தில், குணத்தில் வேறுபாடுகள் இல்லை)

11 hours ago, colomban said:

இங்கிலாந்து GP கள் பனடோல் ம‌ட்டுமே தருவார்கள். ஆன்டி பயடிக் கூட தர மாட்டார்கள்.

இங்கும் Antibiotic கொடுக்க மாட்டார்கள். கோசான் சொன்னது மாதிரி Antibiotic எம் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி தொற்று நோய்களுக்கு இலக்காவதை அதிகப்படுத்தும். அத்துடன் நாளடைவில் எந்த Antibiotic உம் எமக்கு வேலை செய்யாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி / கோசன்.

இது நான் அனுபவத்தில் கண்டது. பல காலம் எனக்கு இந்த விடயம் தெரியவில்லை. இங்கு கொழும்பில் என்றால் தெருவுக்கு தெரு நிறைய டிஸ்பென்சரிகள் உண்டு. சாதரண காய்ச்சலுக்கு பெனடோலுடன் கடும் ஆன்டி பயேடிக் தருவார்கள் மேலும் இருமலுக்கு இனிப்பு பாணி ம‌ருந்தும் தருவார்கள் 2, 3 நாட்களில் காச்சல் உடல் வலி எல்லாம் போய்விடும். ஆனல் வளர்ந்த நாடுகளில் இப்படியல்ல. ஒருமுறை ஒரு வெள்ளையின வைத்தியரிடம் கேட்டேன் தரவேயில்லை. ஆனால் இனிப்பு பாணி மருந்து தருவார்கள்.

மேலும் இலங்கையில் அரசாங்க டிஸ்பென்ஸரியில் காச்சலுக்கு ஒருவித கசயாம் போன்ற சிரப் தருவார்கள் அதுவிம் நல்ல பலன தரும்.

70 / 80 களில் பேயவ எனும் ஒர் பானம் இருந்தது, இதனுடன் அலுப்பு மருந்து பக்கட்டில் வாங்கி கலந்து காச்சல் / தடுமலுக்கு குடிப்பார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நன்றி நிழலி / கோசன்.

இது நான் அனுபவத்தில் கண்டது. பல காலம் எனக்கு இந்த விடயம் தெரியவில்லை. இங்கு கொழும்பில் என்றால் தெருவுக்கு தெரு நிறைய டிஸ்பென்சரிகள் உண்டு. சாதரண காய்ச்சலுக்கு பெனடோலுடன் கடும் ஆன்டி பயேடிக் தருவார்கள் மேலும் இருமலுக்கு இனிப்பு பாணி ம‌ருந்தும் தருவார்கள் 2, 3 நாட்களில் காச்சல் உடல் வலி எல்லாம் போய்விடும். ஆனல் வளர்ந்த நாடுகளில் இப்படியல்ல. ஒருமுறை ஒரு வெள்ளையின வைத்தியரிடம் கேட்டேன் தரவேயில்லை. ஆனால் இனிப்பு பாணி மருந்து தருவார்கள்.

மேலும் இலங்கையில் அரசாங்க டிஸ்பென்ஸரியில் காச்சலுக்கு ஒருவித கசயாம் போன்ற சிரப் தருவார்கள் அதுவிம் நல்ல பலன தரும்.

70 / 80 களில் பேயவ எனும் ஒர் பானம் இருந்தது, இதனுடன் அலுப்பு மருந்து பக்கட்டில் வாங்கி கலந்து காச்சல் / தடுமலுக்கு குடிப்பார்கள்.
 

உண்மைதான் முன்பு எனக்கு தெரிந்த ஒரு அங்கிள் டாக்டர். அவரிடம் சின்ன சின்ன விசயங்களுக்கு நாங்கல் எல்லாம் இலவசமாய் மருத்துவம் பாப்பது வழமை.

அவரும் பெரிய நிபுணர் எல்லாம் இல்லை. கொஞ்சம் லேசான காச்சல் எண்டால், பனடோல், அதிகமெண்டால் எரித்திரோ மைச்சீன். இதுதான் அவரின் தாரக மந்திர மருந்துகள்.

ஒரு முறை அவரின் வீட்டுக்கு காச்சலோடு போறேன், முன் வீட்டு அன்ரி கேட்டா “ என்ன தம்பி, எங்க இந்த பக்கம் போறாய்?” காச்சலுக்கு மருந்து எடுக்க போறேன் எண்டு சொல்ல, அன்ரி சொன்ன பதில் “அதுக்கேன் உவரிட்ட போறாய், டிஸ்பன்சரில போய் ஒரு கோர்ஸ் எரித்திரோ மைசீன் எடு” 😂.

இது அந்த டொக்டர் அங்கிளை நக்கல் பண்ண சொன்னதேயாயினும், வளர்முக நாடுகளில் எப்படி துஸ்பிரயோகமாகிறது என்பதை சுட்டி நிக்கிறது.

பேயாவ மாரி இப்ப சமஹன் நிவாரண் வருகிறேல்லயே?

கீழே உள்ள சுட்டியில் மேலதிக தகவல்

https://www.who.int/news-room/fact-sheets/detail/antibiotic-resistance 

————

Antibiotics தவறான பாவனை கொண்டுவரும் பேராபத்து

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் (Antibiotics) தொடர்பாக விழிப்புணர்வூட்டும் உலக வாரம் நவம்பர் 14 – 20 வரை அனுஷ்டிக்கப்பட்டது. 

அதன் நிமித்தம் 29.11.2016 அன்று சுகாதர கல்வி பணியகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கருத்தரங்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொகடர் பாலித மஹீபால, இலங்கை மருத்துவர்கள் சங்கத் தலைவி டொக்டர் இயந்தி அபேவிக்கிரம, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் மருத்துவ நிபுணர் குஷானி குணத்திலக்க, பேராசியர் கீதா பெர்னாண்டோ, பொது மருத்துவ நிபுணர் பிரியங்கர ஜயவர்தன ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

antibiotic

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் மருத்துவ அறிவியலில் அபரிமித வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டன. அதனால் பல்வேறுபட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு அவை பயன்பாட்டுக்கும் வந்தன.

இதன் பயனாக மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் இருந்து வந்த பல நோய்களை இம்மருந்துகளைக் கொண்டு ஒன்றில் குணப்படுத்தவோ அல்லது தவிர்த்துக் கொள்ளவோ அல்லாவிட்டால் கட்டுப்படுத்திக் கொள்ளவோ முடிந்துள்ளது. இதனுடாக மனிதன் நீண்ட காலம் முகம் கொடுத்த வந்த ஆரோக்கிய ரீதியிலான பாரிய சவால் பெரிதும் நீங்கியது. அதேநேரம் இம்மருந்துப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டமை மருத்துவ உலகின் பாரிய வெற்றியாகவும் அமைந்தது.

அறிமுகம்
1920 களில் கண்டு பிடிக்கப்பட்ட இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் (Antibiotics) மருத்துவ அறிவியலின் ஒரு மைல்கல்லாகும். இம்மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முன்னர், குறிப்பாக முதலாம் உலகப் போரிலும் அதற்கு முற்பட்ட பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் அதிக மரணங்களுக்கு கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிர்களான பக்றீரியா, வைரஸ், பங்கசு என்பனவே அதிகம் பங்களிப்பு செய்து வந்தன. அதற்கு இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் சிறந்த தீர்வாக அமைந்தன. அந்தவகையில் சல்பர் அடங்கிய மருந்தே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி மருந்தாக விளங்குகின்றது.

‘பென்சிலின்’ என்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்து 1920 களில் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் அது இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1940 களில் தான் பாவனைக்கு வந்தது.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்ததன் பயனாகப் பல நோய்களை விரைவாகவம், துரிதமாகவும், குணப்படுத்தவும், தவிர்த்துக் கொள்ளவும் முடிந்தது. அதனால் 1960 கள் வரையும் பல நுண்ணுயிர்க் கொல்லி மருநதுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டன. ஆனால் 1960 முதல் 2000 வரையான காலப் பகுதியில் எந்தவொரு நுண்ணுயிர்க் கொல்லி மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை. 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு நுண்ணயிர்க் கொல்லி மருந்துகள் தான் கண்டுபிடிக்கப்பட்டு பாவனைக்கு வந்தன. அவ்வளவு தான்.

அச்சுறுத்தல்
ஏனெனில் இவ்வகை மருந்துகள் தொடர்பில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலோ அவற்றை உற்பத்தி செய்வதிலோ பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அண்மைக்காலமாக ஆர்வம் காட்டாதுள்ளன. இதற்கான அடிப்படைக் காரணம் இம்மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்படும் அதிக செலவவே காரணமாகும். இருப்பினும் அவ்வாறு முதலீடு செய்து மருந்தொன்றைக் கண்டு பிடித்தாலும் அதற்காக முதலிட்ட பணத்தை அதன் மூலம் திரும்ப ஈட்டிக் கொள்ள முடியுமா என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.

ஏனென்றால் ஒரு நோய்க்கு உள்ளானவருக்கு ஒரு தடவைக்கு சில தினங்களுக்குத் தான் இம்மருந்துகள் வழங்கப்படும். அத்தோடு நோய் குணமடைந்துவிடும். இதன் மூலம் எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்ட முடியாது.

ஆனால் நீரிழிவு, கொலஸ்ரோல், இருதய நோய்கள் போன்றவாறான பல நோய்களுக்கு தொடர்ந்து நீண்ட காலத்திற்கு மருந்தைப் பாவிக்க வேண்டும். அவ்வகை மருந்துகளுக்கு அதிக கேள்வியும் சந்தை வாய்ப்பும் உள்ளது. இது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்குக் கிடையாது. அதனால் தான் பெரும்பாலான மருந்துப்பொருள் உற்பத்திக் கம்பனிகள் இவ்வகை மருந்து பொருட்கள் தொடர்பில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் ஆர்வம் காட்டாதுள்ளன. ஆனால் இது பெரும் ஆபத்து மிக்க நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றது

ஒழுங்குமுறையற்ற பாவனை
அதேநேரம் இம்மருந்துகள் நோய்களைத் துரிதமாகவும் வேகமாகவும் குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கூடியதாக இருந்ததால் அதனை எல்லா நோய்களுக்கும் பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலர் டொக்டர்களின் சிபாரிசுகளின்றி இம்மருந்துகளைப் பாவிக்கின்றனர்.

சில டொக்டர்கள் எல்லா நோய்களுக்கும் இம்மருந்துகளைச் சிபாரிசு செய்கின்றனர். இன்னும் சிலர் ஒரு முறை டொக்டர் சிபாரிசு செய்த இவ்வகை மருந்தை ஒவ்வொரு முறையும் பாவிக்கின்றனர்.

images-2

ஆனால் இவ்வகை மருந்துகள் பக்றீரியா தொற்றுக்கு மாத்திரம் சிகிச்சையாக வழங்கப்படக் கூடியதாகும். அதாவது பக்றீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும், அவற்றை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் மருந்துகளே இவை. ஆனால் இம்ருந்துகளை வைரஸ் தொற்றுக்கு வழங்குவதால் பயன் கிடைக்காது. தடிமன், இன்புலுவென்ஸா, டெங்கு போன்றன வைரஸ் மூலம் தோற்றுவிக்கப்படும் நோய்கள். இந்நுண்ணுயிர் நோய்கள் தான் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் இரண்டொரு தினங்களில் குணமடையும். அவற்றுக்கு இந்நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை பாவிப்பதால் பயன் கிடைக்காது.

ஆனால் சில மருத்துவர்கள் சிறிய உடல் உபாதைக்கும் கூட அதிகளவில் நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளை சிபாரிசு செய்கின்றனர். இன்னும் சில மருத்துவர்கள் நுண்ணயிர்க் கொல்லி மருந்து வழங்கப்படத் தேவையற்றவர்களுக்கும் அவற்றை வழங்குகின்றனர். சிலர் ஏற்கனவே மருத்துவர் சிபாரிசு செய்த மருந்துகளை வேறு நோய்கள் ஏற்படும் போதும் பாவிக்கின்றனர். இவை அனைத்தும் பிழையானதும் தவறானதுமான செயற்பாடு’ என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இம்மருந்துகளைக் கண்டபடி பாவிக்கும் போது சிலருக்கு நோய் குணமடைந்தாலும் அதற்கு இம்மருந்துகள் காரணமாக அமைவதில்லை. மாறாக உடலில் காணப்படும் நோயெதிர்ப்புசக்தியே காரணம். இம்மருந்துகளை எல்லா நோய்களுக்கும் பாவிப்பதால் பின்விளைவுகளும் ஏற்படலாம். அதனால் சில நாட்களுக்கு நோய் நீடிக்கவும் முடியும். சில நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவித்தால் உணவு உட்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்படும். ஆதன் விளைவாக உடல் சக்தியை ஈடுசெய்யவும் தாமதம் ஏற்படலாம்.

அதனால் டொக்டரின் சிபாரிசின்றி நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவிக்கக் கூடாது. ஆனால் சிபாரிசு செய்யும் நாட்களுக்கு இம்மருந்துகளைப் பாவிக்க வேண்டும். இம்மருந்தைப் பாவித்து இரண்டொரு நாட்களில் நோய் குணமடைந்து விட்டால் மருந்தை இடைநடுவில் கைவிடக் கூடாது. அதனால் சில சமயம் நோய் மீண்டும் தீவிர நிலையை அடையவும் கூடும். அச்சந்தர்ப்பத்தில் இம்மருந்தை மீண்டும் பாவித்தால் அவை பயனளிக்காது போகலாம். ஏனெனில் பக்றீரியாக்களை அழிக்கவே இவ்வகை மருந்துகள் வழங்கப்படுகின்றது என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

மருந்தின் முக்கியத்துவம்
ஆனால் சில சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் மிக அத்தியாவசியமானது. அவை இல்லாவிட்டால் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது. இம்மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் பக்றீரியாத் தொற்றைத் தவிர்க்கலாம். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது கட்டாயம் இந்நுண்ணுயிரக் கொல்லி மருந்துகளைப் பாவிக்க வேண்டும். அப்போது தான் வயிற்றில் காணப்படும் பக்றீரியாக்கள் மூலம் ஏற்படும் தொற்றைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

சில புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும். அவ்வாறான நோயாளர்களை ஏனைய நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பதற்காக நுண்ணுயிரக் கொல்லி மருந்துகளை வழங்குவது மிகவும் அவசியமானது. சிறுநீரகம் உள்ளிட்ட அவயவ மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இம்மருந்துகளைப் பாவிக்க வேண்டும்.

ஆனால் ‘இம்மருந்துகள் கண்டபடி பாவிக்கப்படுவதால் பல பக்றீரியாக்கள் அவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் வீரியமடைந்துள்ளன. குறிப்பாக பென்சிலின் என்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் சில பக்றீரியாக்கள் 80 வீதம் வீரியமடைந்துள்ளன’ என்று நுண்ணுயிரியல் மருத்துவ நிபுணர் குஷானி ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இம்மருந்துகள் கண்டபடி பாவிக்கப்பட்டதன் விளைவாகப் பல நுண்ணுயிர்கள் அம்மருந்துகளுக்கு இசைவாக்கம் அடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது எவ்வாறு ஏற்படுகின்றன என சிலர் வினவலாம். அதாவது இவ்வகை மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் சில பக்றீரியாக்கள் என்சைம் வகைகளை உற்பத்தி செய்கின்றன. இன்னும் சில பக்றீரியாக்கள் கலக்கூறுகளை மாற்றிக் கொள்ளுகின்றன. மேலும் சில மரபணுவை மாற்றிக் கொள்கின்றன. அத்தோடு சில பக்றீரியாக்கள் மரபணுவை பரிமாற்றிக் கொள்ளவும் செய்கின்றன. இதன் விளைவாக இம்மருந்துகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளன. அதனால் தான் இம்மருந்துகள் வழங்கப்பட்ட போதிலும் பக்றீரியா உடலில் காணப்படுவதோடு அவை வளர்ச்சி அடையவும் செய்கின்றன.

இதன் விளைவாக நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (antibiotic resistant) தாக்கம் தோற்றம் பெற்றுள்ளது. இது உலகில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.

உயிரினங்களுக்கு வழங்கப்படுதல்
இதேநேரம் இவ்வகை மருந்துகள் மனிதர்களுக்கு மாத்திரமன்றி உணவாகக் கொள்ளப்படும் பிராணிகளுக்கும் பாவிக்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றுக்கும் பக்றீரியா தொற்றுக்கள் ஏற்படுகின்றன. அதனால் இவை தவிர்க்க முடியாதவை.

அத்தோடு இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் போன்ற உயிரினங்களில் அதிக இறைச்சியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் இம்மருந்துகள் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கு கோழி உணவின் ஊடாகவே இம்மருந்துகள் வழங்கப்படுகிறது. இது இலங்கை உட்பட உலகில் பல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன. என்றாலும் இம்மருந்துகளில் சில இந்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் தெளிவில்லாத நிலைமை காணப்படுகின்றது. ஆனால் டென்மார்க் போன்ற நாடுகளில் இறைச்சிக் கோழிப் பண்ணைகளுக்கு இவ்வகை மருந்துகளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியா தொற்றும் குறைவடைந்துள்ளது.

ஆனால் இலங்கையின் சில பிரதேசங்களிலுள்ள கோழிப் பண்ணைகளில் பெற்ற இறைச்சிக் கோழிகளின் மலத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவற்றில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியாக்களை அவதானிக்க முடிந்துள்ளது. அந்தவகையில் நீர்கொழும்பு களப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வில் அங்கு குளோரைட் செறிவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில மீன்களிலும் நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளின் செறிவும் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. அத்தோடு இக்களப்பில் வளர்க்கப்படும் இறால்களிலும் இம்மருந்துகளின் செறிவு அவதானிக்கப்பட்டுள்ளன.

அதனால் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் பிராணிகளில் காணப்படும் இப்பக்றீரியாக்கள் அவற்றை உணவாகக் கொள்ளும் போதோ அல்லது அவற்றைச் சமைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காகக் கையாளும் போதோ மனிதனுக்குத் தொற்ற முடியும். அதேநேரம் இம்மருந்துகளை இப்பிராணிகளுக்கு வழங்குவதால் அவற்றின் மலம் நீரில் கலக்குமாயின் அதிலுள்ள பக்றீரியா சுற்றுச் சூழலில் கலந்து தாவர உணவின் ஊடாகக் கூட மனிதனை அடையலாம். இவ்வகை பக்றீரியாக்கள் மனிதனுக்கும் நோய்களை தோற்றுவிக்கலாம். அவை மனிதனின் இறைப்பையிலும் கூட காணப்படுகின்றன

உலகை எதிர்நோக்கியுள்ள பேராபத்து
என்றாலும் தற்போது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (Antibiotic resistant) தாக்கம் அதிகரித்துள்ளன. அவற்றுக்கு உள்ளாகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென மில்லியன் கணக்கான டொலர்கள் தற்போது செலவிடப்படுகின்றன. இதனை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வகைத் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கவும் செய்கின்றனர.

இந்நிலைமை தொடருமாயின் 2050 ஆம் ஆண்டாகும் போது இம்மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (Antibiotic resistant) தாக்கம் காரணமாக 10 மில்லியன் பேர் உயிரிழக்க முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் புற்று நோய்களால் உயிரிழப்பவர்களை விடவும் அதிகமாக இருக்கும் எனவும், இந்த அச்சுறுத்தல் தென்னாசியப் பிராந்திய மக்களுக்கு மிக அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் சில நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியா தொற்றுக்கள் பிரித்தானியாவை விடவும் இலங்கையில் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இதனை இந்நாட்டுத் தரவுகளும் வெளிப்படுத்துகின்றன. இது மிகப் பயங்கர நிலைமையாகும்.

அதேநேரம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் புதிதாகக் கண்டுபிடிக்கபடுவதும் பெரிதும் குறைவடைந்துள்ளது. மறுபுறம் புழக்கத்திலுள்ள நுண்ணுயிரக் கொல்லி மருந்துகள் கண்டபடி பாவிக்கபடுவதால் அவற்றுக்கு பக்றீரியாக்கள் இசைவாக்கம் அடைந்துள்ளன, அதனால் இம்மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் அப்பக்றீரியாக்கள் வீரியமடைந்துள்ளன. இவற்றின் விளைவாக எதிர்காலத்தில் உலகம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை இழந்து விடக்கூடிய பேராபத்து தோற்றம் பெற்றுள்ளது.

அதனால் 1920களுக்கு முற்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் அற்ற யுகத்தைப் போன்ற ஒரு யுகத்தில் மீண்டும் உலகம் பிரவேசிக்க நேரிடுமா? என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது. முதலாம் உலகப் போரிலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் பெருந்தொகையானோரின் மரணங்களுக்கு நோய்த் தொற்றுக்களே முக்கிய காரணமாக அமைந்தன. அக்காலப் பகுதியில் இவ்வகை மருந்துகள் இருக்கவில்லை.ஆனால் இன்று இவ்வகை மருந்துகள் இருந்தும் அவை கண்டபடி பயன்படுத்தப்படுவதால் அவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் பக்றீரியாக்கள் வீரியம் அடைந்திருப்பதே இந்த அச்சத்திற்கு பிரதான காரணமாக உள்ளன. அதனால் தான் இவ்வச்சுறுத்தல் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் மருத்தவ அறிவியல் உலகமும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

தவிர்ப்பு நடவடிக்கைகள்
இதேவேளை வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன. அதனால் இம்மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியாக்கள் வைத்தியசாலை சுற்றுச் சூழலில் இருக்க கூடும். அதன் காரணத்தினால் வைத்தியசாலைக்கு சென்று திரும்பியதும் கைகளை நன்கு சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும். உடுதுணிகளையும் உடனடியாகக் கழுவுவது நல்லது. அத்தோடு மலசலகூடம் சென்று வந்த பின்னரும், பயணிகள் பஸ் வண்டிகளில் பயணித்து வந்த பின்னரும் சாப்பாட்டுக்கு முன்னரும், பின்னரும் கைகளை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் பெரும்பாலான நோய்க்கிருமிகள் கைகள் ஊடாகவே தொற்றுகின்றன.

அவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும் அவை ஏனையவர்களுக்குத் தொற்றுவதைத் தவிர்க்கவும் இவை பெரிதும் உதவும். நுண்ணுயிர்த் தொற்று குறைந்தால் இம்மருந்துகளின் தேவையும் குறைவடைந்துவிடும். அதனால் நோய்க் கிருமிகள் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் தவிர்த்துக் கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே ஒருவருக்கு ஏற்பட்டிருப்பது பக்றீரியா நோயா அல்லது வைரஸ் நோயா என்பதை இனம் கண்டு சிகிச்சை அளிப்பதே சிறந்தது. இது சில சமயம் சிரமான காரியமானாலும் அதுவே சிறந்தது. பக்றீரியா நோய்களுக்கு மாத்திரமே இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் வழங்கப்பட வேண்டும். காய்ச்சல் என்பது பக்றீரியா தொற்று அல்ல. அதனால் காய்ச்சல் காணப்படும் எல்லோருக்கும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்து வழங்கப்பட வேண்டியதல்ல. நோயை உரிய முறையில் பகுப்பாய்வு செய்து தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் இம்மருந்துகளை உரிய அளவில் வழங்க வேண்டும். டொக்டர்களின் சிபாரிசு இன்றி நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவிக்கக் கூடாது.

நன்றி : தினகரன் (மகுடம்)
10, 17.12.2016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎12‎/‎2019 at 8:08 PM, நிழலி said:

அப்படி ஒன்றும் மலிவு இல்லை, ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மலிவு.

இங்கு Generic மருந்துகள் மலிவானதாகவும் Brand மருந்துகள் இரண்டு மடங்கானது விலை அதிகமாகவும் இருக்கும். (இரண்டுக்கும் தரத்தில், குணத்தில் வேறுபாடுகள் இல்லை)

இங்கும் Antibiotic கொடுக்க மாட்டார்கள். கோசான் சொன்னது மாதிரி Antibiotic எம் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி தொற்று நோய்களுக்கு இலக்காவதை அதிகப்படுத்தும். அத்துடன் நாளடைவில் எந்த Antibiotic உம் எமக்கு வேலை செய்யாமல் போய்விடும்.

தகவலுக்கு நன்றி...எனக்கு உந்த மருந்துகள் பற்றி தெரியாது...இங்கேயிருந்து கனடாவுக்கு ஹொலிடே  போன சிலர் அங்கிருந்து கணக்க அன்டி பயடிக் குளிசைகள் வேண்டி வந்து பாவிச்சவையல்...என்னோ பெயர் சொல்லிச்சினம் எனக்கு மறந்து போயிட்டுது..அங்க டொக்டரின் பிரிப்கிரிசன் இல்லாமல் வேண்டலாம் என்று சொல்லிச்சினம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

உண்மைதான் முன்பு எனக்கு தெரிந்த ஒரு அங்கிள் டாக்டர். அவரிடம் சின்ன சின்ன விசயங்களுக்கு நாங்கல் எல்லாம் இலவசமாய் மருத்துவம் பாப்பது வழமை.

அவரும் பெரிய நிபுணர் எல்லாம் இல்லை. கொஞ்சம் லேசான காச்சல் எண்டால், பனடோல், அதிகமெண்டால் எரித்திரோ மைச்சீன். இதுதான் அவரின் தாரக மந்திர மருந்துகள்.

ஒரு முறை அவரின் வீட்டுக்கு காச்சலோடு போறேன், முன் வீட்டு அன்ரி கேட்டா “ என்ன தம்பி, எங்க இந்த பக்கம் போறாய்?” காச்சலுக்கு மருந்து எடுக்க போறேன் எண்டு சொல்ல, அன்ரி சொன்ன பதில் “அதுக்கேன் உவரிட்ட போறாய், டிஸ்பன்சரில போய் ஒரு கோர்ஸ் எரித்திரோ மைசீன் எடு” 😂.

இது அந்த டொக்டர் அங்கிளை நக்கல் பண்ண சொன்னதேயாயினும், வளர்முக நாடுகளில் எப்படி துஸ்பிரயோகமாகிறது என்பதை சுட்டி நிக்கிறது.

பேயாவ மாரி இப்ப சமஹன் நிவாரண் வருகிறேல்லயே?

கீழே உள்ள சுட்டியில் மேலதிக தகவல்

https://www.who.int/news-room/fact-sheets/detail/antibiotic-resistance 

————

Antibiotics தவறான பாவனை கொண்டுவரும் பேராபத்து

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் (Antibiotics) தொடர்பாக விழிப்புணர்வூட்டும் உலக வாரம் நவம்பர் 14 – 20 வரை அனுஷ்டிக்கப்பட்டது. 

அதன் நிமித்தம் 29.11.2016 அன்று சுகாதர கல்வி பணியகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கருத்தரங்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொகடர் பாலித மஹீபால, இலங்கை மருத்துவர்கள் சங்கத் தலைவி டொக்டர் இயந்தி அபேவிக்கிரம, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் மருத்துவ நிபுணர் குஷானி குணத்திலக்க, பேராசியர் கீதா பெர்னாண்டோ, பொது மருத்துவ நிபுணர் பிரியங்கர ஜயவர்தன ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

antibiotic

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் மருத்துவ அறிவியலில் அபரிமித வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டன. அதனால் பல்வேறுபட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு அவை பயன்பாட்டுக்கும் வந்தன.

இதன் பயனாக மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் இருந்து வந்த பல நோய்களை இம்மருந்துகளைக் கொண்டு ஒன்றில் குணப்படுத்தவோ அல்லது தவிர்த்துக் கொள்ளவோ அல்லாவிட்டால் கட்டுப்படுத்திக் கொள்ளவோ முடிந்துள்ளது. இதனுடாக மனிதன் நீண்ட காலம் முகம் கொடுத்த வந்த ஆரோக்கிய ரீதியிலான பாரிய சவால் பெரிதும் நீங்கியது. அதேநேரம் இம்மருந்துப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டமை மருத்துவ உலகின் பாரிய வெற்றியாகவும் அமைந்தது.

அறிமுகம்
1920 களில் கண்டு பிடிக்கப்பட்ட இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் (Antibiotics) மருத்துவ அறிவியலின் ஒரு மைல்கல்லாகும். இம்மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முன்னர், குறிப்பாக முதலாம் உலகப் போரிலும் அதற்கு முற்பட்ட பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் அதிக மரணங்களுக்கு கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிர்களான பக்றீரியா, வைரஸ், பங்கசு என்பனவே அதிகம் பங்களிப்பு செய்து வந்தன. அதற்கு இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் சிறந்த தீர்வாக அமைந்தன. அந்தவகையில் சல்பர் அடங்கிய மருந்தே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி மருந்தாக விளங்குகின்றது.

‘பென்சிலின்’ என்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்து 1920 களில் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் அது இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1940 களில் தான் பாவனைக்கு வந்தது.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்ததன் பயனாகப் பல நோய்களை விரைவாகவம், துரிதமாகவும், குணப்படுத்தவும், தவிர்த்துக் கொள்ளவும் முடிந்தது. அதனால் 1960 கள் வரையும் பல நுண்ணுயிர்க் கொல்லி மருநதுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டன. ஆனால் 1960 முதல் 2000 வரையான காலப் பகுதியில் எந்தவொரு நுண்ணுயிர்க் கொல்லி மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை. 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு நுண்ணயிர்க் கொல்லி மருந்துகள் தான் கண்டுபிடிக்கப்பட்டு பாவனைக்கு வந்தன. அவ்வளவு தான்.

அச்சுறுத்தல்
ஏனெனில் இவ்வகை மருந்துகள் தொடர்பில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலோ அவற்றை உற்பத்தி செய்வதிலோ பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அண்மைக்காலமாக ஆர்வம் காட்டாதுள்ளன. இதற்கான அடிப்படைக் காரணம் இம்மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்படும் அதிக செலவவே காரணமாகும். இருப்பினும் அவ்வாறு முதலீடு செய்து மருந்தொன்றைக் கண்டு பிடித்தாலும் அதற்காக முதலிட்ட பணத்தை அதன் மூலம் திரும்ப ஈட்டிக் கொள்ள முடியுமா என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.

ஏனென்றால் ஒரு நோய்க்கு உள்ளானவருக்கு ஒரு தடவைக்கு சில தினங்களுக்குத் தான் இம்மருந்துகள் வழங்கப்படும். அத்தோடு நோய் குணமடைந்துவிடும். இதன் மூலம் எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்ட முடியாது.

ஆனால் நீரிழிவு, கொலஸ்ரோல், இருதய நோய்கள் போன்றவாறான பல நோய்களுக்கு தொடர்ந்து நீண்ட காலத்திற்கு மருந்தைப் பாவிக்க வேண்டும். அவ்வகை மருந்துகளுக்கு அதிக கேள்வியும் சந்தை வாய்ப்பும் உள்ளது. இது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்குக் கிடையாது. அதனால் தான் பெரும்பாலான மருந்துப்பொருள் உற்பத்திக் கம்பனிகள் இவ்வகை மருந்து பொருட்கள் தொடர்பில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் ஆர்வம் காட்டாதுள்ளன. ஆனால் இது பெரும் ஆபத்து மிக்க நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றது

ஒழுங்குமுறையற்ற பாவனை
அதேநேரம் இம்மருந்துகள் நோய்களைத் துரிதமாகவும் வேகமாகவும் குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கூடியதாக இருந்ததால் அதனை எல்லா நோய்களுக்கும் பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலர் டொக்டர்களின் சிபாரிசுகளின்றி இம்மருந்துகளைப் பாவிக்கின்றனர்.

சில டொக்டர்கள் எல்லா நோய்களுக்கும் இம்மருந்துகளைச் சிபாரிசு செய்கின்றனர். இன்னும் சிலர் ஒரு முறை டொக்டர் சிபாரிசு செய்த இவ்வகை மருந்தை ஒவ்வொரு முறையும் பாவிக்கின்றனர்.

images-2

ஆனால் இவ்வகை மருந்துகள் பக்றீரியா தொற்றுக்கு மாத்திரம் சிகிச்சையாக வழங்கப்படக் கூடியதாகும். அதாவது பக்றீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும், அவற்றை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் மருந்துகளே இவை. ஆனால் இம்ருந்துகளை வைரஸ் தொற்றுக்கு வழங்குவதால் பயன் கிடைக்காது. தடிமன், இன்புலுவென்ஸா, டெங்கு போன்றன வைரஸ் மூலம் தோற்றுவிக்கப்படும் நோய்கள். இந்நுண்ணுயிர் நோய்கள் தான் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் இரண்டொரு தினங்களில் குணமடையும். அவற்றுக்கு இந்நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை பாவிப்பதால் பயன் கிடைக்காது.

ஆனால் சில மருத்துவர்கள் சிறிய உடல் உபாதைக்கும் கூட அதிகளவில் நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளை சிபாரிசு செய்கின்றனர். இன்னும் சில மருத்துவர்கள் நுண்ணயிர்க் கொல்லி மருந்து வழங்கப்படத் தேவையற்றவர்களுக்கும் அவற்றை வழங்குகின்றனர். சிலர் ஏற்கனவே மருத்துவர் சிபாரிசு செய்த மருந்துகளை வேறு நோய்கள் ஏற்படும் போதும் பாவிக்கின்றனர். இவை அனைத்தும் பிழையானதும் தவறானதுமான செயற்பாடு’ என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இம்மருந்துகளைக் கண்டபடி பாவிக்கும் போது சிலருக்கு நோய் குணமடைந்தாலும் அதற்கு இம்மருந்துகள் காரணமாக அமைவதில்லை. மாறாக உடலில் காணப்படும் நோயெதிர்ப்புசக்தியே காரணம். இம்மருந்துகளை எல்லா நோய்களுக்கும் பாவிப்பதால் பின்விளைவுகளும் ஏற்படலாம். அதனால் சில நாட்களுக்கு நோய் நீடிக்கவும் முடியும். சில நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவித்தால் உணவு உட்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்படும். ஆதன் விளைவாக உடல் சக்தியை ஈடுசெய்யவும் தாமதம் ஏற்படலாம்.

அதனால் டொக்டரின் சிபாரிசின்றி நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவிக்கக் கூடாது. ஆனால் சிபாரிசு செய்யும் நாட்களுக்கு இம்மருந்துகளைப் பாவிக்க வேண்டும். இம்மருந்தைப் பாவித்து இரண்டொரு நாட்களில் நோய் குணமடைந்து விட்டால் மருந்தை இடைநடுவில் கைவிடக் கூடாது. அதனால் சில சமயம் நோய் மீண்டும் தீவிர நிலையை அடையவும் கூடும். அச்சந்தர்ப்பத்தில் இம்மருந்தை மீண்டும் பாவித்தால் அவை பயனளிக்காது போகலாம். ஏனெனில் பக்றீரியாக்களை அழிக்கவே இவ்வகை மருந்துகள் வழங்கப்படுகின்றது என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

மருந்தின் முக்கியத்துவம்
ஆனால் சில சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் மிக அத்தியாவசியமானது. அவை இல்லாவிட்டால் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது. இம்மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் பக்றீரியாத் தொற்றைத் தவிர்க்கலாம். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது கட்டாயம் இந்நுண்ணுயிரக் கொல்லி மருந்துகளைப் பாவிக்க வேண்டும். அப்போது தான் வயிற்றில் காணப்படும் பக்றீரியாக்கள் மூலம் ஏற்படும் தொற்றைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

சில புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும். அவ்வாறான நோயாளர்களை ஏனைய நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பதற்காக நுண்ணுயிரக் கொல்லி மருந்துகளை வழங்குவது மிகவும் அவசியமானது. சிறுநீரகம் உள்ளிட்ட அவயவ மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இம்மருந்துகளைப் பாவிக்க வேண்டும்.

ஆனால் ‘இம்மருந்துகள் கண்டபடி பாவிக்கப்படுவதால் பல பக்றீரியாக்கள் அவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் வீரியமடைந்துள்ளன. குறிப்பாக பென்சிலின் என்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் சில பக்றீரியாக்கள் 80 வீதம் வீரியமடைந்துள்ளன’ என்று நுண்ணுயிரியல் மருத்துவ நிபுணர் குஷானி ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இம்மருந்துகள் கண்டபடி பாவிக்கப்பட்டதன் விளைவாகப் பல நுண்ணுயிர்கள் அம்மருந்துகளுக்கு இசைவாக்கம் அடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது எவ்வாறு ஏற்படுகின்றன என சிலர் வினவலாம். அதாவது இவ்வகை மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் சில பக்றீரியாக்கள் என்சைம் வகைகளை உற்பத்தி செய்கின்றன. இன்னும் சில பக்றீரியாக்கள் கலக்கூறுகளை மாற்றிக் கொள்ளுகின்றன. மேலும் சில மரபணுவை மாற்றிக் கொள்கின்றன. அத்தோடு சில பக்றீரியாக்கள் மரபணுவை பரிமாற்றிக் கொள்ளவும் செய்கின்றன. இதன் விளைவாக இம்மருந்துகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளன. அதனால் தான் இம்மருந்துகள் வழங்கப்பட்ட போதிலும் பக்றீரியா உடலில் காணப்படுவதோடு அவை வளர்ச்சி அடையவும் செய்கின்றன.

இதன் விளைவாக நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (antibiotic resistant) தாக்கம் தோற்றம் பெற்றுள்ளது. இது உலகில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.

உயிரினங்களுக்கு வழங்கப்படுதல்
இதேநேரம் இவ்வகை மருந்துகள் மனிதர்களுக்கு மாத்திரமன்றி உணவாகக் கொள்ளப்படும் பிராணிகளுக்கும் பாவிக்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றுக்கும் பக்றீரியா தொற்றுக்கள் ஏற்படுகின்றன. அதனால் இவை தவிர்க்க முடியாதவை.

அத்தோடு இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் போன்ற உயிரினங்களில் அதிக இறைச்சியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் இம்மருந்துகள் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கு கோழி உணவின் ஊடாகவே இம்மருந்துகள் வழங்கப்படுகிறது. இது இலங்கை உட்பட உலகில் பல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன. என்றாலும் இம்மருந்துகளில் சில இந்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் தெளிவில்லாத நிலைமை காணப்படுகின்றது. ஆனால் டென்மார்க் போன்ற நாடுகளில் இறைச்சிக் கோழிப் பண்ணைகளுக்கு இவ்வகை மருந்துகளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியா தொற்றும் குறைவடைந்துள்ளது.

ஆனால் இலங்கையின் சில பிரதேசங்களிலுள்ள கோழிப் பண்ணைகளில் பெற்ற இறைச்சிக் கோழிகளின் மலத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவற்றில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியாக்களை அவதானிக்க முடிந்துள்ளது. அந்தவகையில் நீர்கொழும்பு களப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வில் அங்கு குளோரைட் செறிவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில மீன்களிலும் நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளின் செறிவும் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. அத்தோடு இக்களப்பில் வளர்க்கப்படும் இறால்களிலும் இம்மருந்துகளின் செறிவு அவதானிக்கப்பட்டுள்ளன.

அதனால் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் பிராணிகளில் காணப்படும் இப்பக்றீரியாக்கள் அவற்றை உணவாகக் கொள்ளும் போதோ அல்லது அவற்றைச் சமைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காகக் கையாளும் போதோ மனிதனுக்குத் தொற்ற முடியும். அதேநேரம் இம்மருந்துகளை இப்பிராணிகளுக்கு வழங்குவதால் அவற்றின் மலம் நீரில் கலக்குமாயின் அதிலுள்ள பக்றீரியா சுற்றுச் சூழலில் கலந்து தாவர உணவின் ஊடாகக் கூட மனிதனை அடையலாம். இவ்வகை பக்றீரியாக்கள் மனிதனுக்கும் நோய்களை தோற்றுவிக்கலாம். அவை மனிதனின் இறைப்பையிலும் கூட காணப்படுகின்றன

உலகை எதிர்நோக்கியுள்ள பேராபத்து
என்றாலும் தற்போது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (Antibiotic resistant) தாக்கம் அதிகரித்துள்ளன. அவற்றுக்கு உள்ளாகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென மில்லியன் கணக்கான டொலர்கள் தற்போது செலவிடப்படுகின்றன. இதனை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வகைத் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கவும் செய்கின்றனர.

இந்நிலைமை தொடருமாயின் 2050 ஆம் ஆண்டாகும் போது இம்மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (Antibiotic resistant) தாக்கம் காரணமாக 10 மில்லியன் பேர் உயிரிழக்க முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் புற்று நோய்களால் உயிரிழப்பவர்களை விடவும் அதிகமாக இருக்கும் எனவும், இந்த அச்சுறுத்தல் தென்னாசியப் பிராந்திய மக்களுக்கு மிக அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் சில நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியா தொற்றுக்கள் பிரித்தானியாவை விடவும் இலங்கையில் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இதனை இந்நாட்டுத் தரவுகளும் வெளிப்படுத்துகின்றன. இது மிகப் பயங்கர நிலைமையாகும்.

அதேநேரம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் புதிதாகக் கண்டுபிடிக்கபடுவதும் பெரிதும் குறைவடைந்துள்ளது. மறுபுறம் புழக்கத்திலுள்ள நுண்ணுயிரக் கொல்லி மருந்துகள் கண்டபடி பாவிக்கபடுவதால் அவற்றுக்கு பக்றீரியாக்கள் இசைவாக்கம் அடைந்துள்ளன, அதனால் இம்மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் அப்பக்றீரியாக்கள் வீரியமடைந்துள்ளன. இவற்றின் விளைவாக எதிர்காலத்தில் உலகம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை இழந்து விடக்கூடிய பேராபத்து தோற்றம் பெற்றுள்ளது.

அதனால் 1920களுக்கு முற்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் அற்ற யுகத்தைப் போன்ற ஒரு யுகத்தில் மீண்டும் உலகம் பிரவேசிக்க நேரிடுமா? என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது. முதலாம் உலகப் போரிலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் பெருந்தொகையானோரின் மரணங்களுக்கு நோய்த் தொற்றுக்களே முக்கிய காரணமாக அமைந்தன. அக்காலப் பகுதியில் இவ்வகை மருந்துகள் இருக்கவில்லை.ஆனால் இன்று இவ்வகை மருந்துகள் இருந்தும் அவை கண்டபடி பயன்படுத்தப்படுவதால் அவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் பக்றீரியாக்கள் வீரியம் அடைந்திருப்பதே இந்த அச்சத்திற்கு பிரதான காரணமாக உள்ளன. அதனால் தான் இவ்வச்சுறுத்தல் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் மருத்தவ அறிவியல் உலகமும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

தவிர்ப்பு நடவடிக்கைகள்
இதேவேளை வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன. அதனால் இம்மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியாக்கள் வைத்தியசாலை சுற்றுச் சூழலில் இருக்க கூடும். அதன் காரணத்தினால் வைத்தியசாலைக்கு சென்று திரும்பியதும் கைகளை நன்கு சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும். உடுதுணிகளையும் உடனடியாகக் கழுவுவது நல்லது. அத்தோடு மலசலகூடம் சென்று வந்த பின்னரும், பயணிகள் பஸ் வண்டிகளில் பயணித்து வந்த பின்னரும் சாப்பாட்டுக்கு முன்னரும், பின்னரும் கைகளை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் பெரும்பாலான நோய்க்கிருமிகள் கைகள் ஊடாகவே தொற்றுகின்றன.

அவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும் அவை ஏனையவர்களுக்குத் தொற்றுவதைத் தவிர்க்கவும் இவை பெரிதும் உதவும். நுண்ணுயிர்த் தொற்று குறைந்தால் இம்மருந்துகளின் தேவையும் குறைவடைந்துவிடும். அதனால் நோய்க் கிருமிகள் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் தவிர்த்துக் கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே ஒருவருக்கு ஏற்பட்டிருப்பது பக்றீரியா நோயா அல்லது வைரஸ் நோயா என்பதை இனம் கண்டு சிகிச்சை அளிப்பதே சிறந்தது. இது சில சமயம் சிரமான காரியமானாலும் அதுவே சிறந்தது. பக்றீரியா நோய்களுக்கு மாத்திரமே இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் வழங்கப்பட வேண்டும். காய்ச்சல் என்பது பக்றீரியா தொற்று அல்ல. அதனால் காய்ச்சல் காணப்படும் எல்லோருக்கும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்து வழங்கப்பட வேண்டியதல்ல. நோயை உரிய முறையில் பகுப்பாய்வு செய்து தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் இம்மருந்துகளை உரிய அளவில் வழங்க வேண்டும். டொக்டர்களின் சிபாரிசு இன்றி நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவிக்கக் கூடாது.

நன்றி : தினகரன் (மகுடம்)
10, 17.12.2016

 ஒரு விடயத்தை கவனித்தீர்களா? இந்த நுண்ணுயிர் எதிரிகள் பற்றிய மருத்துவக் கட்டுரையிலும் இடையில் வெங்காயம் போன்ற போலி மருந்துகளுக்கு விளம்பரத்தைச் சொருகியிருக்கிறார்கள்! பார்த்தேன் சிரித்தேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

தகவலுக்கு நன்றி...எனக்கு உந்த மருந்துகள் பற்றி தெரியாது...இங்கேயிருந்து கனடாவுக்கு ஹொலிடே  போன சிலர் அங்கிருந்து கணக்க அன்டி பயடிக் குளிசைகள் வேண்டி வந்து பாவிச்சவையல்...என்னோ பெயர் சொல்லிச்சினம் எனக்கு மறந்து போயிட்டுது..அங்க டொக்டரின் பிரிப்கிரிசன் இல்லாமல் வேண்டலாம் என்று சொல்லிச்சினம் 
 

தவறான செய்தி...
மருத்துவர் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் அன்டி-பையோட்டிக் மருந்து, மாத்திரைகள் கனடாவில்  இவற்றை எடுக்க முடியாது. 

amoxicillin
doxycycline
cephalexin
ciprofloxacin
clindamycin
metronidazole
azithromycin
sulfamethoxazole and trimethoprim
amoxicillin and clavulanate
levofloxacin

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

தகவலுக்கு நன்றி...எனக்கு உந்த மருந்துகள் பற்றி தெரியாது...இங்கேயிருந்து கனடாவுக்கு ஹொலிடே  போன சிலர் அங்கிருந்து கணக்க அன்டி பயடிக் குளிசைகள் வேண்டி வந்து பாவிச்சவையல்...என்னோ பெயர் சொல்லிச்சினம் எனக்கு மறந்து போயிட்டுது..அங்க டொக்டரின் பிரிப்கிரிசன் இல்லாமல் வேண்டலாம் என்று சொல்லிச்சினம் 
 

இங்கு antibiotic மருந்துகளை ஒரு போதும் Prescription இல்லாமல் வாங்க முடியாது. அப்படி எவராவது விற்றால் தண்டனைக்குரிய குற்றம். இங்கு OTC எனப்படும் Over the counter மருந்துகளை மாத்திரம் Prescription இல்லாமல் வாங்கமுடியும்.  பனடோல் போன்ற மருந்துகள், இருமலுக்கு அல்ககோல் இல்லாத பாணிகள், உடல் நோவுக்குரிய தைலங்கள் முதலுதவி பொருட்கள் போன்றனவும் குடும்பக் கட்டுப்பாட்டு மற்றும் பாலுறவுக்கு உதவும் பொருட்கள் / மருந்துகள் மட்டும் தான் OTC இல் அடங்கும்.

இங்கு மூன்று வருடங்கள் நான் பார்மசிகள் வைத்திருக்கும் ஒரு கம்பெனியில் மென்பொருளாளராக இருந்தமையால் பார்மசிக்குரிய பொதுவான சட்டங்களை நான் அறியக் கூடியதாக இருந்தது. ஒன்லைனில் மருந்துகள் வாங்குவதாக இருந்தால் கூட மருத்துவரின் கையொப்பத்தை கொண்ட Prescription இனை ஸ்கான் பண்ணி அனுப்ப வேண்டும். அத்துடன் அந்த வைத்தியரின் பெயர் சிஸ்டத்தில் இருக்கவும் வேண்டும்.  ஒரு பார்மசி ஆகக் குறைந்தது 7 வருடங்களுக்காகவது ஒவ்வொருவரினதும் Prescription களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும். ஒருவர் பார்மசிஸ்ட் ஆக வர கடுமையாக படித்தும் இருக்க வேண்டும் (டிகிரி எடுத்து இருத்தல் அவசியம்).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 ஒரு விடயத்தை கவனித்தீர்களா? இந்த நுண்ணுயிர் எதிரிகள் பற்றிய மருத்துவக் கட்டுரையிலும் இடையில் வெங்காயம் போன்ற போலி மருந்துகளுக்கு விளம்பரத்தைச் சொருகியிருக்கிறார்கள்! பார்த்தேன் சிரித்தேன்!

உண்மைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/12/2019 at 8:31 AM, nedukkalapoovan said:

சுமார் 3.6 மில்லியன் ghost patients இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஜிபிக்கு சராசரி 1700 போலி நோயாளிகள் பட்டியல் உள்ளது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் என்பது 1700 x 150 பவுண்டுகள். அதாவது சேவை வழங்காமலே கால் மேல கால் போட்டு கள்ளப் பட்டியலில் பெறும் சும்மா காசு. இதனை வரிமூலம் இவர்களுக்கு வாரி வழங்குவது.. கடின உழைப்பாளிகள்.

 

On 6/12/2019 at 8:31 AM, nedukkalapoovan said:

இங்கிலாந்தில் பல தமிழர்கள் இந்த ஜிபி தொழிலை விரும்பிச் செய்து வருகின்றனர். இவர்களுக்கு வைத்தியசாலைகளில் வேலை செய்ய விருப்பமில்லை. காரணம்... வேலைப் பளுவுடன் கூடிய வருமானம் என்றால்.. இப்போது இவர்களுக்கு ரெம்பக் கசப்பது தான். 

ஜி பி தொழில் என்று இவர்கள் ஓடுவதன் சூட்சுமம்...???! 

 

பிரித்தானிய திறைசேரியும், வருமான வரி துறையும்  எங்கிருந்து எதை வசூலிக்கலாம் என்று நடுநிசியில் மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்து சிந்திக்கின்றது.

ஏனெனில், சென்ற 2 மாதங்களுக்கு முதல், Civil Service இல் ஓய்வு பெற்றவர்கள், அவர்கள் அறியாமலே அவர்களின் பென்ஷன்க்கு மீதமான தொகை அரசாங்கத்தால்  செலுத்தப்பட்டது audit வழியாக தெரியவந்தது.

பிரித்தானிய அரசாங்கம் மறு கேள்வி இன்றி, மீதமான தொகையை ஓய்வு பெற்றவர்கள் மீளளிக்குமாறு ஆணையிட்டுள்ளது.

இப்படி அரசாங்கத்திடம் இருந்து ghost patients பதிவின் மூலம் பணம் அறவிட்ட GP வைத்தியர்கள்,  நடுநிசியில் மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்து சிந்திக்கும் நேரமிது.

பிரித்தானிய அரசாங்கம், அறவிடும் அழுத்தத்தை அதிகரிப்பதற்க்கு வங்குரோத்தை கழுத்தில் வைக்க கூடிய தன்மையுள்ளது.

இது வெளியில் மூச்சாக கூட தெரிவதில்லை (வங்குரோத்தை பிரித்தானிய அரசாங்கம் கழுத்தில் வைப்பது), காதோடு காது வைத்தது போல நடக்க கூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை பின்னேரம் , அலுவலகத்தில் பீர் கிளாக்  ( Beer o’ Clock) நேரம் .. திண்ணையில் அலட்டியும் கன நாள் போல ஒரு பீலிங்  ….

நான் மூன்று   GP  practice இல் பதிவு செய்திருக்கிறேன்.  ஒன்று வீட்டுக்கு கிட்ட உள்ளது; மற்றது அலுவலகத்துக்கு கிட்ட உள்ளது,  ( இரண்டும் bulk  billing வசதி உடைய இடங்கள் )    மூன்றாவதும் அலுவலகத்துக்கு கிட்ட உள்ளது தான் ஆனால்  Pay for the visit  அடிப்படையில் - அவசரத்துக்கு எண்டு

மொத்தத்தில் நானே இரண்டு ஆவி நோயாளிகளை   சிஸ்டத்தில் உலாவ விட்டிருக்கிறேன்.  

 

ஆன்டி பையோட்டிக்ஸ் பற்றி எனது இரண்டு சதம்……

இலங்கைக்கு போகும் நேரமெல்லாம் ஏதாவதொரு பார்மசியில் வகை வகையான ஆன்டி பையோட்டிக்ஸ் உம் வேறு பல வகை  மருந்துகளும் வாங்கி வருவது எனது வாழ்வின் சோடிப்பில் ( Life style ?) அடங்கிய ஒன்று.

எனது செவிப்பறையில் துவாரம் இருப்பதால்  அடிக்கடி தொற்று ஏற்பட்டு பிரச்சனை கொடுக்கும். இருக்கவே இருக்கு இலங்கையில் வாங்கிய ஆன்டி பையோட்டிக் - பாவிக்க ஒரு   கிழமைக்கிடையில் ப்ரொப்லெம் solved    

பிரச்சனை என்னவென்றால்  முன்பெல்லாம் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு தரம் விசாரிக்க வரும் தொற்று , விருப்பம் கூடி  ஒரு வருடம் , ஆறு மாதம் என்று ஆகி அன்புத் தொல்லை கூடவே , ஸ்டாக் இல் இருந்த ஆன்டி பையோட்டிக் எல்லாம் காணாமல் போயிற்று .

பிறகென்ன லிஸ்டில கடைசியாக இருக்கும் GP இடம் அவசரமாக போய்  ஆண்டிபயாடிக் கேட்டால்அதிர்ச்சி!    தரமுடியாது என ஒரேயடியாக மறுத்து விட்டார்.  $75  தண்டம்.  

பிறகும் மாடு ஏறி மிதித்தித்த கதையாக ENT specialist இடம் போக வேண்டும் என்று வேறு சொல்லி விட்டார்। ($250 potential  lost  ) 

ENT Specialist இடம் அடுத்த இரண்டு கிழமைக்கு அப்பொய்ன்ட்மெண்ட் இல்லை. திரும்ப GP க்கு அடித்து விஷயத்தை சொல்லிஇரண்டு கிழமையில் தொற்று,  மூளைப்  பகுதிக்கு தாவினாலும் தாவி விடும் -ஏன் ரிஸ்க் எடுப்பான் ஆண்டிபயாடிக் தாருமன்”  என்றால் ஆள் அசையுதில்லை;     தலைக்குள்ள அப்படி எதும் வித்தியாசம் தெரிந்தால் உடனேயும் இங்கே வாரும்,  அப்ப பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.

பிறகென்ன Specialist  இடம் $250  அழுது விட்டு போனால் அவர் தனது வேலை வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்கில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்கிறார் ( $10,௦௦௦?).     நான் வழமையாக நோயாளிகள்  கேட்கும் அதே கேள்வியை கேட்டேன் , சிகிசசையில்    நிச்சயம் சரி வருமா என்று ।

சிங்கன் சொல்கிறார் , அது நிச்சயமாக சொல்ல முடியாது , ஆனால் உனது வாழ்க்கைச் சோடிப்பை ( இது இன்று இரண்டாம் தரம் )  பொறுத்து நீ  முடிவு செய்யலாம் ।

உதாரணமாக எனக்கு இந்த பிரச்சனை இருந்தால் நான் இதை கட்டாயம் செய்வேன் , ஏனென்றால் எனது இரண்டு மகன் மாரையும் நீச்சல் பயிற்சிக்கு ஒவ்வொரு கிழமையும் அழைத்துப் போய் அவர்களுடன் நீருக்கடியில் நிறைய நேரம் இருப்பேன் , துவாரம் இருந்தால் காதினுள் நீர்  போய்   தொற்று ஏற்படும் என்று.

எனக்கு பொறி தட்டிற்று.  அவருக்கு கொடுத்த $250  நூறு வீதமும் பிரயோசனமாகப்   போயிற்று  ( அவர் எனக்கு எந்த விதமான மருந்தும் தராத போதிலும் )

எனக்கு இப்ப இரண்டு வருடமாக காதில்  தொற்று வருவதில்லை.

நான் ஆன்டி  பையோட்டிக் ஒன்றும் இப்போது பாவிப்பதில்லை ।

குளிக்கும் பொது toilet Tissue ஒன்றை  எடுத்து இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை காதினுள் வைத்து அடைத்து விடுவேன் , பின்பு ஆனந்தமான  ஷவர் । 

காதினுள் நீர் போக சான்ஸே இல்லை , தொற்று இப்ப தொடுவதும் இல்லை.

$250 செலவில் ஒரு நிரந்தர தீர்வு ।    அந்த GP  க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரி எங்கேயோ தொடங்கி எதிலோ வந்து நிக்குது போல் உள்ளது .

இங்கு பல்லுக்கு காட்டபோனால் மேசையில் இருப்பவ  இங்கிலாந்து வெள்ளை , வைத்தியர் வெள்ளை ஆனால் அந்த கிளினிக்கை நடாத்தி லாபம் பார்ப்பது தென்ஆபிரிக்கா வில் இருந்து மூன்று தலைமுறைக்கு முன் இங்கிலாந்துக்கு  இடம்பெயர்ந்த குஜராத்தி இப்பவும் தாய் மொழியில் தான் வீட்டில் கதைப்பது .

விசா கார்ட்டுக்கு வேலை போனதால் காசு கட்டவில்லை என்றால் டெப்ட் ஏஜென்ட் ல் கதைப்பவர்கள் வெள்ளைகள் தான் உங்கள் வீட்டுக்கு காசை கட்டுங்கள் இல்லையென்றால்  உங்கள் உரிமையான பொருளை தூக்குவம் என்று வருபவர்களும் வெள்ளை ஆனால் அந்த டெப்ட் ஏஜெண்டை நடாத்துவது இந்த குஜராத்தி கள் தான் .உண்மையில் 60 மாதத்துக்கு மேல் உங்கள் டெப்ட் குற்றம் க்ரடிட் ஏஜென்ட் தன்னுடைய பதிவில் இருந்து எடுத்துவிடுவார்கள்  ஆனால் இவர்களோ தங்களுக்குள் பல கொம்பனிகளை பதிவில் வைத்து மாமன் மச்சான் க்குள் அப்பாவி மக்களின் டெப்ட் வித்து வாங்குவது போல் வாங்கி இன்னும் 60 மாதத்துக்கு நீட்டிப்பார்கள் இப்படி ஒரு கட்டத்தில் இவர்களின் தொந்தரவு தாங்கமுடியாமல் நம்மவர்களை விட வெள்ளைகள் பாதி காசு கட்டுவம் என்று உடன்படுங்கள் இதெல்லாம் இங்கிலாந்து சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வளைத்து பகல் கொள்ளை யடிக்கும் கூட்டம் .

கனக்க வேண்டாம் மருந்து வேண்ட மருந்து கடை போய் பாருங்கள் முன்னுக்கு நிற்பவர்களை விட உள்ளே குஜராத்தி இல்லாத மருந்து கடை பார்ப்பது அரிது பக்கத்தில் இருக்கும் ஜி பி  மாரிடம் டீல் போடுவதும் இவர்கள்தான் .

இந்த விடயங்கள் போல் யூதர் களின் விளையாட்டு சொல்லி மாளாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Sasi_varnam said:

தவறான செய்தி...
மருத்துவர் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் அன்டி-பையோட்டிக் மருந்து, மாத்திரைகள் கனடாவில்  இவற்றை எடுக்க முடியாது. 

amoxicillin
doxycycline
cephalexin
ciprofloxacin
clindamycin
metronidazole
azithromycin
sulfamethoxazole and trimethoprim
amoxicillin and clavulanate
levofloxacin

amoxicillin என்று தான் சொன்ன நினைவு  

22 hours ago, நிழலி said:

இங்கு antibiotic மருந்துகளை ஒரு போதும் Prescription இல்லாமல் வாங்க முடியாது. அப்படி எவராவது விற்றால் தண்டனைக்குரிய குற்றம். இங்கு OTC எனப்படும் Over the counter மருந்துகளை மாத்திரம் Prescription இல்லாமல் வாங்கமுடியும்.  பனடோல் போன்ற மருந்துகள், இருமலுக்கு அல்ககோல் இல்லாத பாணிகள், உடல் நோவுக்குரிய தைலங்கள் முதலுதவி பொருட்கள் போன்றனவும் குடும்பக் கட்டுப்பாட்டு மற்றும் பாலுறவுக்கு உதவும் பொருட்கள் / மருந்துகள் மட்டும் தான் OTC இல் அடங்கும்.

இங்கு மூன்று வருடங்கள் நான் பார்மசிகள் வைத்திருக்கும் ஒரு கம்பெனியில் மென்பொருளாளராக இருந்தமையால் பார்மசிக்குரிய பொதுவான சட்டங்களை நான் அறியக் கூடியதாக இருந்தது. ஒன்லைனில் மருந்துகள் வாங்குவதாக இருந்தால் கூட மருத்துவரின் கையொப்பத்தை கொண்ட Prescription இனை ஸ்கான் பண்ணி அனுப்ப வேண்டும். அத்துடன் அந்த வைத்தியரின் பெயர் சிஸ்டத்தில் இருக்கவும் வேண்டும்.  ஒரு பார்மசி ஆகக் குறைந்தது 7 வருடங்களுக்காகவது ஒவ்வொருவரினதும் Prescription களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும். ஒருவர் பார்மசிஸ்ட் ஆக வர கடுமையாக படித்தும் இருக்க வேண்டும் (டிகிரி எடுத்து இருத்தல் அவசியம்).

 

சசி,நிழலி மீண்டும் நன்றிகள் நான் கனடாவுக்கு வந்ததும் இல்லை...மருந்துகளை பற்றிய அறிவும் இல்லை...நீங்கள் அங்கு இருப்பதால் சொல்வது உண்மையாயிருக்கும்...அவ  கனடா போய் வந்த போது தான் நிறைய அன்டி பயரிக் மாத்திரை வாங்கி வந்தேன் என்று சொன்னா...எனக்கு எப்ப போய் வந்தவ என்று மறந்து போயிட்டுது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎14‎/‎2019 at 9:55 PM, பெருமாள் said:

திரி எங்கேயோ தொடங்கி எதிலோ வந்து நிக்குது போல் உள்ளது .

 

திரியின் தன்மையே அது தானே.   சாடையாக பக்கத்தில இருக்கும் பற்றக்கூடியதையும் தட்டிப் பார்க்கும் காய்ந்து இருந்தால் பிறகென்ன.
குஜராத்தி பற்றி சொன்னீர்கள் , பஞ்சாபியையும் அதுக்குள்ளே சேர்க்கலாமோ தெரியாது ।   
விசேஷம் என்னவென்றால் குஜராத்தி , பஞ்சாபி பெண்களுக்கு எங்கட  பொடியங்களில ஒரு பிடிப்பு. கெட்டித்தனமான நம்பிக்கையானவர்கள் என கருத்துகிறார்களோ. ।எனது நண்பர்கள் இருவரின் புதல்வர்கள் குஜராத்தி பஞ்சாபி பெண்களை மனம் புரிகின்றனர்.
நல்ல அம்சமான பெண்கள் மிகவும் வசதியானவர்கள்.
கல்யாணவீடு பொற்கோவில் பகுதியில்,   sangeet  Holiday  Inn  இல் . 

போய் பிந்தரன்வாலேயின் கோயிலையும் பார்த்து வரலாம் என எண்ணியிருக்கிறேன்  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/12/2019 at 8:29 PM, colomban said:

நன்றி நிழலி / கோசன்.

இது நான் அனுபவத்தில் கண்டது. பல காலம் எனக்கு இந்த விடயம் தெரியவில்லை. இங்கு கொழும்பில் என்றால் தெருவுக்கு தெரு நிறைய டிஸ்பென்சரிகள் உண்டு. சாதரண காய்ச்சலுக்கு பெனடோலுடன் கடும் ஆன்டி பயேடிக் தருவார்கள் மேலும் இருமலுக்கு இனிப்பு பாணி ம‌ருந்தும் தருவார்கள் 2, 3 நாட்களில் காச்சல் உடல் வலி எல்லாம் போய்விடும். ஆனல் வளர்ந்த நாடுகளில் இப்படியல்ல. ஒருமுறை ஒரு வெள்ளையின வைத்தியரிடம் கேட்டேன் தரவேயில்லை. ஆனால் இனிப்பு பாணி மருந்து தருவார்கள்.

மேலும் இலங்கையில் அரசாங்க டிஸ்பென்ஸரியில் காச்சலுக்கு ஒருவித கசயாம் போன்ற சிரப் தருவார்கள் அதுவிம் நல்ல பலன தரும்.

70 / 80 களில் பேயவ எனும் ஒர் பானம் இருந்தது, இதனுடன் அலுப்பு மருந்து பக்கட்டில் வாங்கி கலந்து காச்சல் / தடுமலுக்கு குடிப்பார்கள்.
 

அலுப்பு மருந்தா???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/16/2019 at 12:06 AM, சாமானியன் said:

திரியின் தன்மையே அது தானே.   சாடையாக பக்கத்தில இருக்கும் பற்றக்கூடியதையும் தட்டிப் பார்க்கும் காய்ந்து இருந்தால் பிறகென்ன.
குஜராத்தி பற்றி சொன்னீர்கள் , பஞ்சாபியையும் அதுக்குள்ளே சேர்க்கலாமோ தெரியாது ।   
விசேஷம் என்னவென்றால் குஜராத்தி , பஞ்சாபி பெண்களுக்கு எங்கட  பொடியங்களில ஒரு பிடிப்பு. கெட்டித்தனமான நம்பிக்கையானவர்கள் என கருத்துகிறார்களோ. ।எனது நண்பர்கள் இருவரின் புதல்வர்கள் குஜராத்தி பஞ்சாபி பெண்களை மனம் புரிகின்றனர்.
நல்ல அம்சமான பெண்கள் மிகவும் வசதியானவர்கள்.
கல்யாணவீடு பொற்கோவில் பகுதியில்,   sangeet  Holiday  Inn  இல் . 

போய் பிந்தரன்வாலேயின் கோயிலையும் பார்த்து வரலாம் என எண்ணியிருக்கிறேன்  

 

நீங்கள் கனடாவை வசிப்பிடாமாக கொண்டவர் என்பதை பரிபூரணமாக நம்புகின்றேன்.
இருப்பினும்....
ஈழத்து ஆண்பிள்ளைகள் தங்கள் மனைவியருக்கு என்றும் நேசமாக இருப்பவர்கள் என்ற நற்பெயர் உலகெங்கும் இருக்கின்றது.என்றும் பூ போல் வைத்து பாதுகாப்பார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நீங்கள் கனடாவை வசிப்பிடாமாக கொண்டவர் என்பதை பரிபூரணமாக நம்புகின்றேன்.
இருப்பினும்....
ஈழத்து ஆண்பிள்ளைகள் தங்கள் மனைவியருக்கு என்றும் நேசமாக இருப்பவர்கள் என்ற நற்பெயர் உலகெங்கும் இருக்கின்றது.என்றும் பூ போல் வைத்து பாதுகாப்பார்கள். :grin:

உங்களுக்கு ஏமாற்றத்தைத் தர நேர்ந்ததற்கு மன்னிக்க வேண்டும் , நான்  அவுஸ்திரேலியா.  ஊரை விட்டு வெளிக்கிட்டு ஒரு 26   வருஷம் ஆச்சு. கனடாவில் என் பகுதியாலும் துணைவியார் பகுதியாலும் நெருங்கிய உறவினர் பலர் இருந்தாலும் இன்னமும் கனடாவிற்கு வர சந்தர்ப்பம் அமையவில்லை. விடு முறை காலங்களில் எனது பயணங்களில் பெரும்பகுதி இலங்கை நோக்கியே ( தந்தையார் அப்போது உயிருடன் இருந்தார்) அமைந்தது.
நீங்கள் ஜேர்மனி / UK ?  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

உங்களுக்கு ஏமாற்றத்தைத் தர நேர்ந்ததற்கு மன்னிக்க வேண்டும் , நான்  அவுஸ்திரேலியா.  ஊரை விட்டு வெளிக்கிட்டு ஒரு 26   வருஷம் ஆச்சு. கனடாவில் என் பகுதியாலும் துணைவியார் பகுதியாலும் நெருங்கிய உறவினர் பலர் இருந்தாலும் இன்னமும் கனடாவிற்கு வர சந்தர்ப்பம் அமையவில்லை. விடு முறை காலங்களில் எனது பயணங்களில் பெரும்பகுதி இலங்கை நோக்கியே ( தந்தையார் அப்போது உயிருடன் இருந்தார்) அமைந்தது.
நீங்கள் ஜேர்மனி / UK ?  

 

Bildergebnis für deutsche fahne gif

:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.