Jump to content

தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம்

In இலங்கை     June 12, 2019 8:18 am GMT     0 Comments     1443     by : Dhackshala

Rauffe-Hakeem-720x450.jpg

தெரிவுக்குழு விவகாரம் குறித்து ஜனாதிபதியும் சபாநாயகரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியலமைப்புக்கு இணங்க சுமூகமான தீர்வொன்றுக்கு வரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தெரிவுக்குழு விசாரணைகள் தொடர வேண்டும் என்பதே தனது எதிர்ப்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ள முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஒருங்கிணைந்த எதிரணியினரும் இணங்கியிருந்தார்கள். அதற்கிணங்கவே தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர வேறு எந்த எதிர்க்கட்சியும் இதற்கு ஒத்துழைப்பினை வழங்கவில்லை.

இதனால், இதன் மீதான நம்பிக்கை தொடர்பில் நாம் எவ்வாறான உத்தரவாதத்தை வழங்கினாலும் விமர்சனங்கள் வரும் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அத்தோடு, தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு விமர்சனங்கள் உள்ளன.

எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

இதற்கு முன்னரும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்க அதிகாரத்துக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இந்த முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். ஜனாதிபதியும், சபாநாயகரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேலும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக தீர்வினை இந்த விடயத்தில் முன்வைக்க வேண்டும் என்பதை நாம் இங்குக் கூறிக்கொள்கிறோம்.

தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் எடுத்த தீர்மானத்தை உடனடியாக நாம் மாற்றிக்கொண்டாலும் சமூகத்தில் பல்வேறு கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக வேண்டியிருக்கும்.

எனவே, இந்தப் பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/தெரிவுக்குழு-குறித்து-ஜன/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.