Jump to content

யாழில் பாடசாலை சமூகத்தினரால் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி:கல்வி அமைச்சில் முறைப்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனின் கல்வியை பாடசாலை நிர்வாகத்தினர் இடைநிறுத்தியிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாது வழமையாக பயன்படுத்தும் சாதாரண பையை கொண்டு சென்றுள்ளார்.

பாடசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் மாணவனின் பாடசாலை பை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மாணவனிடம், எத்தனை தடவை சொல்வது கண்ணாடி பாக் கொண்டு வர தெரியாதா என பாடசாலை சமூகம் வினவியுள்ளதுடன், மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை கழற்றி வீசியுள்ளனர்.

மாணவனின் தந்தை நடக்க முடியாதவர் என்பதினால், இச்சம்பவம் குறித்து தந்தை சாரணர் இயக்கத்திற்குப் பொறுப்பானவருடன் கதைத்துள்ளார்.

மாணவனின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பாடசாலை நிர்வாகம் மாணவனின் தந்தையிடம் அநாகரீகமான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளது.

மேலும், மாணவனின் தாயார் பாடசாலைக்குச் சென்று அதிபருடன் இது குறித்து கதைத்துள்ளார்.

இதன்போது தாயார், கண்ணாடி பை கொண்டு வர வேண்டும் என்றால் மாணவனின் விலகல் பத்திரத்தை தருமாறு வேதனையின் நிமித்தம் கேட்டுள்ளார்.

இதனடிப்படையில் அதிபர் ஆசிரியர் ஒருவரின் மூலம் மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை வழங்கியுள்ளார்.

பாடசாலை நிர்வாகத்தினால் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்தை விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளதோடு, பாடசாலைஅதிபர் மாணவனின் பாடசாலை அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/217362?ref=home-top-trending

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.