Jump to content

சிறிலங்காவில் இருந்து ஜனாதிபதியும் பறந்தார்.. பிரதமரும் பறந்தார்..


Recommended Posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று தஜிகிஸ்தான் செல்கின்றார்.

தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அந்நாட்டுக்கு விஜயம் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்நாட்டின் உயர் மட்ட அரசியல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் பலவற்றில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜமயொன்றை மேற்கொண்டு நேற்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 308 விமானத்தின் மூலம் நேற்று நண்பகல் 12.15 மணியளவில் பிரதமர் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் பிரதமர் சிங்கப்பூர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தில் பிரதமருடன் மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/121914

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.