Jump to content

சமஸ்டி கேட்டவர்கள் இப்பொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள்!


Recommended Posts

Image

சமஸ்டி கேட்டவர்கள் இப்பொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மூன்று முப்பது மணியளவில் இடம்பெற்ற வாராந்தப் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்னும் நான்கு மாதத்தில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். நாம் ஜனாதிபதி பிரதமர் எமக்கு அரசியல் தீர்விற்கு உதவுவார்கள் என்று நம்பி இருந்தோம் ஆனால் நான்கு ஆண்டுகளை கடந்துவிட்ட போதும் எதுவும் நடக்கவில்லை.

ஜனதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்க இருக்கின்றோம். அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்தப் படுகின்ற சமுர்த்தி கம்பரேலிய போன்ற திட்டங்களை சிலர் காவித் திரிகின்றார்கள் சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகின்றார்கள். அதன விட முன்னைய அரசாங்கத்தோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்லஸ் தேவானதா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

இவ் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் பிரத விருந்தினராக மாவை சேனாதிராஜா சிறப்பு விருந்தினராக சி.சிறிதரன் தவிசாளர்களான வேழமாலிதன்,சுரேன் , வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா தவநாதன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

https://www.ibctamil.com/srilanka/80/121895

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலை போராட்டத்தை அழிக்க எதையும் பெற யாருடனும் எந்த உறவிற்கு தயார் என்ற கொள்கையில் செயல்பட்டது சிங்களம்.  இன்று அதன் ஒரு விளைவான பொருளாதார தாக்கத்தை அனுபவித்துவருகின்றது. இந்த பொருளாதார உதவி என்ற பெயரில் புகுந்த நாடுகளில் இஸ்லாமிய நாடுகளும் அடங்கும். அந்த திறந்த கொள்கையை பயன்டுத்தி தம்மை வளர்த்தவர்களில் சில முஸ்லீம் தலைவர்க்ளும் அடங்குவார்கள்.  

இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டமுஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. 

  • பதுளை -  செங்கலடி நெடுஞ்சாலைக்கு 2,000 கோடி ரூபாய் வழங்கும் நாடு சவூதி
  • கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு 200 கோடி ரூபாய் பண உதவி செய்வது குவைத் அரசாங்கம். 
  • ஈரான் இலங்கைக்கு ஆறு மாத கால கடனுக்குக் கோடான கோடி எரிபொருளைக் கொடுக்கிறது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கான நெருக்கடி தொடர்ந்தால், எரிபொருள் வழங்கலை 23 சதவீதமாகக் குறைக்க வேண்டி ஏற்படும் என்கிறது ஈரான். அவ்வாறு நிகழ்ந்தால் ஒரு லீற்றர் பெற்றோல், இலங்கையில் 450 ரூபாயாகும். நாட்டின் விலைவாசி என்னவாகும்? மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள் வீதிகளில் இறங்கிவிடுவார்கள்.  

இலங்கையின் பொருளாதார இராணுவ அரசியல் எங்கு செல்லும் என எதிர்வு கூறுவது கடினம், ஆனால், இன்றும் தமிழ்  அரசியல்வாதிகளுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.... 

Link to comment
Share on other sites

49 minutes ago, ampanai said:

இலங்கையில் முஸ்லிம்களுக்கான நெருக்கடி தொடர்ந்தால், எரிபொருள் வழங்கலை 23 சதவீதமாகக் குறைக்க வேண்டி ஏற்படும் என்கிறது ஈரான். அவ்வாறு நிகழ்ந்தால் ஒரு லீற்றர் பெற்றோல், இலங்கையில் 450 ரூபாயாகும். நாட்டின் விலைவாசி என்னவாகும்? மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள் வீதிகளில் இறங்கிவிடுவார்கள்.  

இப்படி நடக்கும் என நம்பமுடியாது! நடந்தால்....!! அமெரிக்கா, ஐரோப்பா, அவைகளின் நேசநாடுகளோடு இந்தியாவும், இவற்றிற்குப் போட்டியாக சீனாவும் வழங்கும் எண்ணையில் சிறீலங்கா மூழ்கிக் குளித்து நீச்சலடிக்கும் காட்சிகளையும் எதிர்பார்க்கலாம். 😆

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 6/13/2019 at 6:58 AM, போல் said:

அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்தப் படுகின்ற சமுர்த்தி கம்பரேலிய போன்ற திட்டங்களை சிலர் காவித் திரிகின்றார்கள் சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகின்றார்கள். அதன விட முன்னைய அரசாங்கத்தோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்லஸ் தேவானதா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

இப்பிடி தமிழ் கூத்தமைப்பின்ட தோலை உரித்துக்காட்டினால் அவங்க எப்பிடி அடுத்த தேர்தல்ல மக்களை ஏமாத்தி வெல்லுறது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.