Jump to content

வாசிப்பின் வலிமை: -வேர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பின் வலிமை: -வேர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு

June 12, 2019

என். செல்வராஜா – நூலகவியலாளர், இலண்டன்

அமெரிக்காவின் வடக்கு வெர்ஜீனியா (Northern Verginia) மாநிலத்தில் ஒரு அமைதியான கிராமம் ஆஷ்பேர்ண். இங்குள்ள கறுப்பினத்தவர்களுக்கான சிறிய பள்ளியொன்றின் சுவர்களில் செப்டெம்பர் 2016இல், சில விஷமிகளால் இனவாத சுலோகங்கள் இரவோடிரவாக எழுதப்பட்டிருந்தன. இச்செயலானது அங்கு தலைதூக்கியிருந்த கறுப்பினத்தவருக்கு எதிரான KKK இனவாத இயக்கத்தின் கைவரிசையெனவே ஆரம்பத்தில் அம்மக்கள் நம்பினர். ஆனால் அந்தக் கிறுக்கல்களுக்கிடையே டைனோசர்களினதும் வேறு சில்லறைத்தனமான அடையாளங்களையும் கூர்ந்து அவதானித்த பாதுகாப்புத்துறையினர், இலகுவில் உண்மைக் குற்றவாளிகளை இனம்கண்டுகொண்டனர்.

library1.png?resize=800%2C530

பாடசாலை நிர்வாகத்தினரால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஐந்து ‘குளப்படிகாரச் சிறுவர்களே” அவர்கள். பாடசாலை நிர்வாகத்துடன் கொண்ட காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக இந்த கிராமத்துப் பாடசாலைக் கட்டிடத்தில் தங்கள் கைவரிசையைக் காட்டியிருந்தார்கள்.

அவர்கள் 16-17 வயதுடைய ஐந்து வெள்ளையினச் சிறுவர்கள் என்று கண்டறிந்ததும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தவர் அலெஜான்ட்ரா ரூடா (Alejandra Rueda) என்ற பெண் நீதிபதியாவார். அக்குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருந்த சில சிறுவர்களுக்கு தாம் சுவரில் தீட்டிய சுவஸ்திகா இலச்சினையின் அர்த்தம் கூடப் புரிந்திருக்கவில்லை. சிறுவர்களின் வயதையூம், குற்றச்செயலின் இனவாதத் தீவிரத்தையூம் மனதிற்கொண்ட நீதிபதி, விசாரணையின் இறுதியில் அந்த ஐவருக்கும் வித்தியாசமானதொரு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

அதாவது, குற்றவாளிகள் ஐவருக்கும் முப்பத்தைந்து ஆங்கில நூல்களின் தலைப்பை வழங்கி ஒரு வருட காலத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் அந்த முப்பத்தைந்து நூல்களில் ஏதாவது பன்னிரண்டு நூல்களை மாதத்திற்கொன்று என்ற ரீதியில் தெரிவு செய்து, அவற்றினை ஆழமாக வாசித்து, தாம் வாசித்த ஒவ்வொரு புத்தகத்தின் சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அந்த நூல்கள் பற்றிய பன்னிரண்டு ஆய்வுகளை ஒவ்வொருவரும் நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கவேண்டும். இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் தீவிர தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுவே அவரது தீர்ப்பு. இத்தகைய தண்டனைகள் இளையோர் குற்றவியல் கோவையில் ‘இயற்பண்பு சார்ந்தவை” (Disposition) என்று குறிப்பிடப்படுகின்றன.

library2.png?resize=800%2C557

நீதியரசர் கொடுத்த முப்பத்தைந்து புத்தகங்களின் பட்டியலில் அலிஸ் வோக்கரின் ஊதா நிறம் (The Color Purple) சாயிம் பொட்டொக்கின் எனது பெயர் ஆஷர் லெவ் (My Name is Asher Lev), மாயா அஞ்ஜெலாவின் கூண்டுப்பறவை ஏன் பாடுகின்றது என்று நானறிவேன் (I know why the Caged Bird sings) அலன் பட்டொன் எழுதிய என்னுயிர் நாடே நீ அழு (Cry The Beloved Country), காலிட் ஹுசெய்னி எழுதிய கைட் ரண்ணர் ) (Kite Runner)ஆகிய நூல்களும் அடங்கியிருந்தன.

நீதிபதியின் தீர்ப்பை பெரும்பான்மையான கறுப்பினத்தவர்கள் ஏற்க மறுத்தனர். அந்த ஐவரும் வெள்ளையினத்தவராக இருந்ததால் தான் இத்தகைய அர்த்தமற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர்கள் கறுப்பினப் பிள்ளைகளாக இருந்திருந்தால் தீர்ப்பு வேறுவிதமாக மாற்றி எழுதப்பட்டிருக்கும் என்று முணுமுணுத்தனர்.

நீதிபதி அலெஜான்ட்ரா ரூடா தனது தீர்ப்பை மாற்றிக்கொள்ளத் தயாராகவில்லை. இவர்கள் ஐவரும் இளம் குற்றவாளிகள். இவர்களை வளர்ந்தோருக்கான சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்க சட்டத்தில் இடமில்லை. ஆகக்கூடிய தண்டனையாக இளையோர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அங்குசென்று இவர்கள் அங்குள்ள குற்றவாளிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு, மேலும் தீவிரமான இனவாதிகளாகத் திரும்பிவரவவும் கூடும். குறைந்த பட்ச தண்டனையாக மாதமொரு முறை பொலிஸ் நிலையத்துக்கு வந்து கையெழுத்து இட்டுச் செல்லப் பணிக்கலாம். இவை எதுவும் இப்பிள்ளைகளின் சமூக ஒருமைப்பாடு, சகிப்புத்தன்மை தொடர்பான அறியாமையைப் போக்காது. புத்தகங்கள் மட்டுமே அதனைச் செய்யக்கூடும். அதனால் ஓராண்டின் பின்பு இவர்களை மீண்டும் பார்ப்போம். பொறுத்திருங்கள். அவர்களுக்கு வேண்டிய புத்தக வசதிகளை பெற்றௌரும், கிராம நூலகமும் செய்து தரவேண்டும் என்று தனது முடிவில் தீர்க்கமாக இருந்தவிட்டார்.

இது நடந்து ஓராண்டு முடிவில் இந்த ஐவரையூம் மீண்டும் நீதிமன்றுக்கு அழைத்து அவர்களது வாசிப்பின் பின்னர் தயாரித்திருந்த ஆய்வேடுகளை பரிசீலனை செய்யும் பணியை நீதித்துறை ஏற்பாடு செய்திருந்தது.

அண்மையில் இந்த ஐவரையூம் பற்றிய ஒரு கள ஆய்வினை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சியை, பீ.பீ.சீ. தொலைக்காட்சிக்காக, ஊடகவியலாளர் எம்மா ஜேன் கெர்பி மேற்கொண்டிருந்தார். அதில் மேற்படி ஐந்து இளையோரையும் உரையாட வைத்திருந்தார். அந்நிகழ்வின் வாயிலாகக் கண்டறிந்த உண்மை பார்வையாளர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. புத்தகத்தின் சக்தியை நவீன உலகம் மீண்டும் அறிய வைத்திருக்கிறது.

செப்டெம்பர் 2016 இல் அவர்கள் மேற்கொண்ட குற்றச்செயலுக்குப் பின்னர் அவர்கள் இரண்டாண்டுகளாக எவ்விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை. அவர்களது தண்டனைக்கால வாசிப்பு, அவர்களது அறிவூக்கண்களை அகலத் திறந்துவிட்டிருக்கிறது. அண்மையில் அவர்கள் தொலைக்காட்சியில் மேற்கொண்ட சுயபரிசீலனை வெளிப்படைத் தன்மையுடையதாக எவ்வித மேடை நடிப்புக்கும் ஆட்படாதவகையில் அறிவூபூர்வமாக அமைந்திருந்தது.

அவர்கள் வாசித்த நூல்கள் அவர்களை அடிப்படைவாதம், இனவாதம், என்றால் என்ன என்பதையயும், நாஜிகள் ஜேர்மனியில் யூதர்களுக்கெதிராக மேற்கொண்ட மனிதநேயமற்ற இனப்படுகொலையின் தார்ப்பரியம் என்பவற்றையூம் தெளிவாகப் புரியவைத்திருக்கிறது. அங்கு பேசிய ஐவருள் ஒருவன், “தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவாதம் பற்றிய எதுவுமே அறிந்திராத எனக்கு அலன் பட்டனின் நூல்களே அறியாமை இருளை அகற்றி வைத்த அகல் விளக்காக அமைந்துவிட்டன. கறுப்பினம் – வெள்ளையினம் என்பவற்றுக்கும் மேலாக மனித இனம் என்றொன்று உள்ளதை எனக்கு அவரது நூல் புரியவைத்தது” என்றான். “அதுவரை நாம் கற்ற பாடசாலைக் கல்வியில் இவையெதுவும் எமக்கு உறைக்கவேயில்லை. சக மாணவர்களை நிறத்தையும், இனத்தையும் அடிப்படையாக வைத்து இவ்வளவுகாலமும் எம்மால் ஒதுக்கிவைக்க எம்மால் எப்படி முடிந்துள்ளது?” என்று வருத்தப்பட்டான் மற்றொரு சிறுவன். மற்றொரு சிறுவன், தான் லியோன் ஊரிஸ் எழுதிய ‘எக்சோடஸ்” என்ற நூலை வாசிக்கும் வரை ‘இஸ்ரவேல்” என்ற நாடு பற்றி எதுவுமே அறியமுற்படவில்லை என்றான்.

ஈழத்தில் வாசிப்பை நேசிப்பவர்களுக்கு இந்த வழக்கும் அதன் தீர்ப்பும் நிச்சயமாக எட்டவேண்டும் என்பதே எனது இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

மேற்படி ஐந்து மாணவர்களினதும் கூற்றுக்களை பீ.பீ.சீ. நிகழ்ச்சியில் செவிமடுத்து முடித்ததும் எனக்கு சமூக உணர்வுள்ள ஒரு நூலகவியலாளன் என்ற வகையில் சில கேள்விகள் கிளர்ந்தெழுந்தன.

இலங்கையில் நூலகர்களாகப் பயின்ற எமக்கு இன ஒருமைப்பாடு பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தத் தக்க சில நல்ல நூல்களை பரிந்துரை செய்யத் தயாராக இருக்கிறோமா?

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இனவாத சிந்தனைகளால் சிதைவுறாமல் சிங்கள மக்கள் பற்றியும் இஸ்லாமியர்கள் பற்றியும் தமிழர் பற்றியும் மற்றவர்கள் அறிந்துகொள்ளக்கூடிய  பொதுத்தளம் ஒன்றினை ஏற்படுத்திவைத்திருக்கிறோமா?

மேலாதிக்க உணர்வுடன் தமிழ், முஸ்லீம் மக்களை எதிர்கொள்வதில் குறியாக இருக்கும் சிங்கள-ஆங்கில பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஏற்படுத்திவைத்துள்ள தளத்தை மறுதலித்து. ஒரு நாட்டின் சம அந்தஸ்துள்ள மூவின மக்கள் என்ற கருத்தை கட்டியெழுப்ப தமிழ் சிங்கள இலக்கியகர்த்தாக்கள் இதுவரைகாலமும் இணைந்து முயற்சிசெய்ததாக வரலாற்றில் பதிவகள் ஏதும் உள்ளனவா?

இன ஒருமைப்பாடு தொடர்பாக இதுவரை எழுதப்பட்டுள்ள மும்மொழிகளிலுமான நூல்கள் சிலவற்றை இலங்கையின் அறிவஜீவிகள் பட்டியலிட்டு ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் ஏன் வழங்கமுடியாதுள்ளது?

இதனை கல்வித் திணைக்களம் பாடசாலை நூலகங்களில் கட்டாய இருப்பில் வைத்திருக்க அதிபர்களுக்கு ஏன் பணிக்கக்கூடாது?

அமெரிக்காவில் நடந்தது போன்று ஒரு அலெஜான்ட்ரா ரூடா  (Alejandra Rueda)எம்மிடையே எழுந்துவரும் வரையூம் காத்திராமல் அரசியல்வாதிகளால் சின்னாபின்னப்பட்டிருக்கும் இன ஐக்கியத்தினை ஏன் அறிவுஜீவிகள் கைகளில் ஏந்தக்கூடாது? இவை அனைத்தையூம் கல்விச் சமூகத்தினதும் நூலகர்களினதும் சிந்தனைக்கு விட்டுவைக்கிறேன்.

பின்குறிப்பு:

நீதிபதி அலெஜான்ட்ரா ரூடா வழங்கிய பட்டியலில் இருந்து இச்சிறுவர்கள் தேர்ந்தெடுத்திருந்த பன்னிரண்டு நூல்களும் பின்வருவனவாகும்:

Things Fall Apart/ Chinua Achebe
I know why the Caged Bird Sings/ Maya Angelou
The Tortilla Curtain/ T.C.Boyle
The Kite Runner/ Khaled Hosseini
To Kill a Mockingbird/ Harper Lee
Twelve Years a Slave/ Solomon Northup
The Crucible/ Arthur Miller
Cry the Beloved Country/ Alan Paton
My Name is Asher Lev/ Chaim Potok

10.Exodus/ Leon Uris

The Colour Purple/ Alice Walker
Night/ Elie Wiesel

என். செல்வராஜா – நூலகவியலாளர், இலண்டன்

 

 

http://globaltamilnews.net/2019/124178/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றைப் படிக்காதவர்கள் அந்த வரலாற்றின் இருண்ட பக்கங்கள் மீள அரங்கேற்றப் பட மூலகாரணமாக இருப்பார்கள் !

அதற்கேற்றாப் போல் அமைந்த நல்ல தீர்ப்பு. இது போலத்தான் அண்மையில் இங்கிலாந்து வந்த ட்ரம்புக்கு மகாராணி இரண்டாம் உலகப் போர் வரலாற்று நூலொன்றைப் பரிசாகக் கொடுத்து "உள் குத்துக்" கொடுத்திருக்கிறார்! யாழிலும் ஒரு சிலருக்கு இப்படியான assignments கொடுக்கப் பட்டால் இந்த ஹிற்லர்,நாசிகள், யூதர்கள், இனவழிப்பு போன்றவற்றில் தெளிவு ஏற்படலாம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2019 at 4:42 PM, கிருபன் said:

அமெரிக்காவில் நடந்தது போன்று ஒரு அலெஜான்ட்ரா ரூடா  (Alejandra Rueda)எம்மிடையே எழுந்துவரும் வரையூம் காத்திராமல் அரசியல்வாதிகளால் சின்னாபின்னப்பட்டிருக்கும் இன ஐக்கியத்தினை ஏன் அறிவுஜீவிகள் கைகளில் ஏந்தக்கூடாது? இவை அனைத்தையூம் கல்விச் சமூகத்தினதும் நூலகர்களினதும் சிந்தனைக்கு விட்டுவைக்கிறேன்.

இவரது எண்ணம் நிறைவேறுமா?

அரசியல்வாதிகளுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் செயற்படும் அறிவுஜீவிகளையே இன்று நாங்கள் அதிகம் பார்க்ககூடியதாக உள்ளது..

வரலாற்றை மறந்தவர்களும், தோல்விகளிலிருந்து பாடம் படிக்காதவர்களும், இழந்தும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கனவுகளை உடையவர்களையுமே இன்னமும் காண்கிறோம். 

அதுமட்டுமல்ல தமிழர் என்ற ஒரு குடைக்குள் வரவே தடுமாறும் நாங்கள் எப்படி ஐக்கியத்தை வரவழைக்க முடியும்? 

எனது அரசியல் அறிவு வரையறைக்குட்பட்டது ஆனாலும் இப்படி நடக்காதா என்ற ஆதங்கம் உண்டு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.