Jump to content

தீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 12:35 Comments - 0

நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது.  

‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி வந்தவர்கள், சில வருடங்களுக்குள்ளேயே அரசாங்கம் என்கிற கட்டமைப்பின் அனைத்துப் பாகங்களையும் தீவைத்து எரித்துவிட்டு, அந்தச் சூட்டில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

வழக்கமாக, ஆட்சிக்கு எதிரான சூழ்ச்சிகளை எதிர்க்கட்சிகளும் மாற்று அணியினரும் மேற்கொள்வது வழமை. ஆனால், ஆட்சியின் பங்காளிகளாக இருப்பவர்களே, ஆட்சியை அழிப்பதற்குத் தலைமை ஏற்பது என்பது, அபத்தங்களின் உச்சம். அதுவும், ஆட்சித் தலைவனே அரசாங்கத்துக்கு எதிரான சதியில் ஈடுபடுவது என்பது, வரலாற்றின் கரும்புள்ளி. அதனை மைத்திரியின் ஒக்டோபர் 26, சதிப்புரட்சியின் மூலம் இலங்கை மக்கள் எதிர்கொண்டார்கள். அதனால், 50 நாள்களுக்கும் மேலாக அரசாங்கமற்ற நிலையில் நாடு தள்ளாடியது. 

நீதித்துறையின் ஆணையின்படி, அரசமைப்பு காப்பாற்றப்பட்டு, அரசாங்கம் மீள நிறுவப்பட்டாலும், அந்த அரசாங்கம் உடைந்த துண்டுகளால் ஒட்டப்பட்ட குடுவை போன்றிருந்தது. அந்தக் குடுவையைக் கொண்டு, மீதமுள்ள ஆட்சிக் காலத்தை எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்று ரணில் நினைத்தார். அதனால், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில், பாராமுகமாக அவர் இருந்திருக்கிறார்.  

தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில், பிரதம அமைச்சர் என்கிற அடிப்படைகளோடு ரணில் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், தன்னை ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு, ஜனாதிபதி அழைக்கவில்லை என்பதை, மக்களிடம் வெளிப்படுத்துவதற்கு அவருக்கு, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தேவைப்பட்டிருக்கின்றன.   

image_8fdf7c5173.jpgமைத்திரியின் அசட்டுத் தனங்களை, தனிப்பட்ட ரீதியில் ரணில் பொறுத்துக் கொள்வதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவரது விருப்பம். ஆனால், நாட்டின் இறைமையின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கின்ற பொறுப்புகளை வகிக்கும் போது, அரசமைப்புக்கும், நிர்வாக நடைமுறைகளுக்கும் அப்பாலான சகிப்புத்தன்மை என்பது அவசியமற்ற ஒன்று. அதனை, ரணில் எந்தக் காரணத்துக்காகவும் கடைப்பிடிக்க முடியாது.  

சதிப்புரட்சிக்குப் பின்னராக நிறுவப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், தன்னுடைய பொறுப்புகள் சார்ந்து சரியாகச் செயற்பட்டிருக்கவில்லை. அரசமைப்பின் பிரகாரம், சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி வைத்துக் கொள்ள முடியாது என்கிற விடயம் இருக்கும் போது, மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும்.  ஆனால், ஆட்சியை மீளப்பெறுவதற்காக எடுத்த நடவடிக்கைகளின் எந்தவொரு கட்டத்தையும் சட்டம், ஒழுங்கு அமைச்சினை மீளப்பெறும் விடயத்திலோ, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் தனக்குள்ள பொறுப்பை நிறைவேற்றும் கட்டங்களிலோ ரணில் நிறைவேற்றவில்லை. 

எப்போதுமே ஆட்சிக்குள்ளேயோ, நிர்வாகக் கட்டமைப்புக்குள்ளேயோ இரட்டைத் தலைமை என்பது பிரச்சினைக்குரிய விடயமாகவே இருந்திருக்கின்றன. எவ்வளவு இணக்கமாகச் செயற்பட்டாலும், ஏதாவது ஒரு விடயத்திலாவது முட்டல், மோதல் வரலாம். ஆனால், மைத்திரியும், ரணிலும் தங்களுக்கு அரசமைப்பு வழங்கியிருக்கின்ற அதிகாரங்களின் போக்கில் செயற்பட்டிருந்தாலே சிக்கல்களின் அளவைக் குறைத்திருக்கலாம். 

எப்போதுமே, தங்களை முட்டாள்களாக வெளிப்படுத்தும் நபர்கள் தவறிழைக்கும் போது, அது கவனம் பெறுவதைக் காட்டிலும், தங்களைப் புத்திசாலிகளாகப் காட்டும் நபர்கள் தவறிழைக்கும் போது, அது மக்களிடம் அதிக கவனம் பெறும்; விமர்சிக்கப்படும். மைத்திரியும், ரணிலும் தங்களை எப்படி மக்கள் முன், கடந்த சில காலமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதன் பிரகாரம், அதன் எதிர்வினைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்; மக்களின் கோபத்தைச் சந்திக்கிறார்கள்.  

ராஜபக்‌ஷக்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, அந்த ஆட்சிக்குள் இருந்து வெளியேறி வந்த போது, மைத்திரியைச் சாமானிய மக்களின் நம்பிக்கையாக நாடு பார்த்தது. அதுதான், அவ்வளவு அடக்கு முறைகளுக்கு அப்பால் நின்று, அவரை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது.   

ஆனால், இலங்கை என்றைக்குமே சுமூகமான கட்டங்களில் பயணிப்பதை விரும்புவதில்லை. தன்னுடைய இயல்பு என்பது, முரண்பாடுகள், குழப்பங்களின் வழியே என்பதை சிறிய காலத்துக்குள்ளேயே நிரூபித்துவிடும். மைத்திரி விடயத்திலும் அதுவே நிகழ்ந்தது. அது, ராஜபக்‌ஷக்களின் காலத்தில் நாடு சந்தித்த பேரழிக்கு ஒப்பான நிலையை நோக்கி, நாட்டைத் தள்ளிவிட்டிருக்கின்றது. 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான அனைத்து உண்மைகளையும் அறியும் உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. குறித்த தாக்குதல்கள் தொடர்பில் யார் யாரெல்லாம் பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் இருக்கின்றார்களோ, அவர்கள் எல்லோரும் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அதனைவிடுத்து, தங்களின் பொறுப்புகளை நிறைவேற்றாது, இன்னொருவர் மீது பொறுப்புகளைச் சுமத்திவிட்டுத் தப்பிக்க நினைப்பது என்பது, அயோக்கியத்தனமானது. அப்படியான கட்டத்திலேயே, மைத்திரி இன்றைக்கு இருக்கிறார். தன்னுடைய தவறுகளுக்காக மற்றவர்களைப் பகடைக்காய்களாக மாற்ற நினைக்கிறார். அவரின் நடவடிக்கைகளை வெளிப்படுத்த முயலும் மூலங்களை, எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்கிற ஒற்றைச் சிந்தனையோடு இன்றைக்கு செயற்படுகின்றார். அதன்போக்கிலேலேயே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து விசாரித்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைக் கலைத்துவிடுமாறு வலியுறுத்துகிறார். இன்றைக்கு அது, மீண்டும் அமைச்சரவையை ஸ்தம்பிக்கச் செய்து, அரசாங்கம் இல்லாத நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது.  

மைத்திரி தன்னுடைய தவறுகள் தொடர்பில் என்றைக்குமே பொறுப்பேற்பதிலிருந்து தவறிவிட்டு, அசட்டுத்தனத்தோடு மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதில் குறியாகவே இருந்து வந்திருக்கிறார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர் வெளிப்படும் தேசிய பாதுகாப்புச் சபையின் நடைமுறைகள் குறித்த விடயங்கள், மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன.   

தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கான எந்தவொரு நிர்வாகப் பொறிமுறையோ, வழக்கமோ கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும், அது மைத்திரியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் போக்கில், ஏனோதானோ என்று நடத்திருக்கின்ற என்பதும் அச்சமூட்டுகின்றன.   

மைத்திரி தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பை, அரசியல் நிகழ்ச்சி நிரலை, தேசிய பாதுகாப்பு என்கிற மிக உயரிய விடயத்திலும் பொறுப்புணர்வின்றி கடைப்பிடித்திருக்கிறார் என்பதை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஒவ்வொருநாள் அமர்வும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.  

தன்னுடைய தன்முனைப்பு (ஈகோ) மனநிலையால், நாட்டின் பாதுகாப்புக்கு உலை வைக்கப்பட்டிருக்கின்றது என்கிற விடயம் வெளிவர ஆரம்பித்ததும், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களில் மீண்டும் தலையிட மைத்திரி முயல்கிறார்.  தெரிவுக்குழுவைக் கலைத்துவிடுமாறு சபாநாயகருக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்துவதும், தெரிவுக்குழு தன்னுடைய செயற்பாடுகளை கைவிடும் வரையில், அமைச்சரவையையும் நாடாளுமன்றத்தையும் கூட்டுவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று மைத்திரி முரண்டுபிடித்துக் கொண்டிருப்பதும், ஒக்டோபர் சதிப்புரட்சிக்கு ஒப்பான ஒன்று.   

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், மற்றவர்களின் குற்றங்களை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவரும் குறியாகவே இருப்பார்கள். அப்படியான நிலையிலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயத்தில், தற்போதைக்கு ரணில் இறங்கி வரப்போவதில்லை. அது, அவரது அரசியல் நலன்கள் சார்ந்தது. ஆனால், நாடாளுமன்றத் தெரிவுக்குழு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் ஊடகங்களின் முன்னிலையில், ஆராய முற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. அது, இறுதிவரை காக்கப்பட வேண்டியதுமாகும். 

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை முன்வைத்துத் தற்போது மைத்திரிக்கும் ரணிலுக்கும் எழுந்துள்ள பிரச்சினைகள், அடிப்படையில் தனிப்பட்ட அரசியல் நலன்கள் சார்ந்தவை; தேர்தல்களை இலக்காகக் கொண்டவை. அடுத்தடுத்த நாள்களில் அது, அரசாங்கத்துக்குள் இன்னும் இன்னும் இழுபறிகளை ஏற்படுத்தும்.  

கடந்த ஆண்டு மகள் ஒருத்தி தன்னுடைய தந்தையைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதினாள். அதில், “...என்னுடைய அப்பாவை கோபப்படுத்திய அப்பப்பாவைப் பழிவாங்குவதற்காக, அப்பப்பாவின் வயலை, அப்பா தீ வைத்து எரித்தார். அப்பாவின் கோபம் பொல்லாதது.” என்று சிலாகித்திருந்தாள். அந்த மகளின் தந்தையிடம் அகப்பட்ட வயல் போல, எரிந்துகொண்டிருக்கின்றது நாடு. காக்க வேண்டியவர்களோ, எரிந்த வயலில் இருந்து தப்பிக்கும் எலிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தீ-வைத்த-மைத்திரியும்-எலியாகத்-தப்பிக்கும்-ரணிலும்/91-234081

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.