Jump to content

அம்மாவின் 2 து திருமணம்


Recommended Posts

❤️❤️
தன்னுடைய அம்மாவிற்கு ஒரு மகன் இரண்டாம் திருமணம் செய்து வைத்தது பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் நல்ல செய்தியே. ஆனால் இதெல்லாம் ஒரு செய்தினு பேசுற சமூகத்துலதான் நாமெல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம் இன்னும்ங்கிறது தான் கேவலமா இருக்கு.

என் அம்மாவிற்கு 15 வயதில் திருமணம். அப்பாவிற்கு 28. 16 ல் அண்ணன், 18 ல் நான் பிறந்தாகிவிட்டது. அம்மா மிகவும் அழகாக இருப்பார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்பா கோடீஸ்வரர். ஊருக்கெல்லாம் மிகவும் நல்லவர். ஆனால் அம்மாவைப் பொருத்தவரை மிகவும் சந்தேகம். அந்த சந்தேகத்தினால் அடி, உதை, வாயில் வந்த வார்த்தைகள் என மிகவும் ஒரு அடிமையான வாழ்க்கையே கிடைத்திருந்தது. எனக்கு 16 வயதிலும் அண்ணாவிற்கு 18 வயதிலும் இருவரும் பிரிந்துவிட்டனர்.  

அதற்குப் பிறகு அப்பாவின் சொந்தத்தில் ஒருவருக்கு அம்மாவின் மேல் பிரியம் இருப்பது தெரிந்து, நானே அவரிடம் பேசி, நானும், அண்ணனும் அம்மாவின் 40 ஆவது வயதில் இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்து, அவர் வெளிநாட்டில் வேலையில் இருந்ததால், எங்களை விட்டு போகத் தயங்கிய அம்மாவின் தயக்கத்தைப் போக்கி அனுப்பி வைத்தோம். அவர்கள் திருமணத்திற்கு நான், என் அண்ணன், அண்ணனின் இரண்டு நண்பர்கள், அம்மாவின் அம்மா (என் பாட்டி), அவரின் இரண்டு நண்பர் குடும்பம் என எல்லோரும் உடன் இருந்துதான் நடத்தினோம்.

இதோடு நிற்காமல், அம்மா கருவுற்றிருந்த போது, எங்கள் வீட்டிற்கு வரத் தயங்கினார் (240 குடும்பங்கள் கொண்ட மத்திய வகுப்பு மக்கள் வாழும் காலனி அது). நானும் அண்ணனும் நீங்க வாங்க, நாங்க இருக்கோமில்லனு சொல்லி வரவழைத்து,  நானும், அவரின் அம்மா (திருமணத்தின் போது இத்திருமணத்தை ஏற்காதவர்) இருவரும் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து, மகப்பேறு பார்த்து, மூன்று மாதங்கள் அம்மாவையும் பார்த்து, குழந்தையையும் வளர்த்து, திரும்ப அனுப்பி வைத்தோம். அம்மா கருவுற்றிருந்த போது, தினமும் என் அண்ணன் அம்மாவை வாக்கிங் கூட்டிப்போய், பழரசம் வாங்கி கொடுத்து என பார்த்துக் கொண்டான்.

2008 இல் அவரின் 60 ஆவது பிறந்த நாள் அன்று நானும் என் தங்கையும் (நான் பார்த்து பிறந்த எங்கள் குடும்ப முதல் குழந்தை) இணைந்து அவர்கள் இருவரையும் சர்ப்ரைசாக பிறந்தநாள் கொண்டாடலாம் நாம் நால்வரும் என கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று  உறவினர்கள் நண்பர்கள் என 40 பேருக்கும மேலாக அவர்களுக்குத் தெரியாமல் வரவழைத்து சிறப்பாக கொண்டாடினோம். இதோ இந்த செப்டம்பர் மாதம் வந்தால் அவர்களுக்கு திருமணம் நடந்து 35 வருடங்கள் ஆகப் போகிறது.

என் 39 வயதில் நானும் கணவனைப் பிரிந்தேன். அப்பொழுது என் மகனுக்கு 12 வயதுதான். ஆனால் அவன் 19 வயதிற்கு வந்த போது அவனும் என்னை வற்புறுத்தினான் இன்னொரு திருமணம் புரியச் சொல்லி. ஒரு திருமணமே வாழ்நாளில் போதும் என்றும், இனி எவருடனும் சேர்ந்து வாழும் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை என்றும் தோன்றியதால் மறுத்துவிட்டேன்.

இதை இப்பொழுது எதற்கு சொல்கிறேன் என்றால், 35 வருடங்களுக்கு முன்பே எங்கள் குடும்பத்தில் இது நடந்து, ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கூட நாளடைவில் ஏற்றுக் கொண்டு காலங்கள் ஒடிவிட்டன. 

ஆனால் ஒரு ஆணிற்கு இரண்டாம் திருமணம் என்பது எப்படி சாதாரணமாக கடக்க வேண்டிய விஷயமாக உள்ளதோ பல நூற்றாண்டு காலமாக நம் சமூகத்தில் அந்த நிலையை ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணம் அடைய இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகுமோ என வியக்க வைக்கிறது இப்படிப்பட்ட செய்திகள் வைரலாவதைப் பார்த்தால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணவனை இழந்த பல பெண்கள் இரண்டாவது திருமணம் முடித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அபராஜிதன் said:

❤️❤️
தன்னுடைய அம்மாவிற்கு ஒரு மகன் இரண்டாம் திருமணம் செய்து வைத்தது பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் நல்ல செய்தியே. ஆனால் இதெல்லாம் ஒரு செய்தினு பேசுற சமூகத்துலதான் நாமெல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம் இன்னும்ங்கிறது தான் கேவலமா இருக்கு.

என் அம்மாவிற்கு 15 வயதில் திருமணம். அப்பாவிற்கு 28. 16 ல் அண்ணன், 18 ல் நான் பிறந்தாகிவிட்டது. அம்மா மிகவும் அழகாக இருப்பார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்பா கோடீஸ்வரர். ஊருக்கெல்லாம் மிகவும் நல்லவர். ஆனால் அம்மாவைப் பொருத்தவரை மிகவும் சந்தேகம். அந்த சந்தேகத்தினால் அடி, உதை, வாயில் வந்த வார்த்தைகள் என மிகவும் ஒரு அடிமையான வாழ்க்கையே கிடைத்திருந்தது. எனக்கு 16 வயதிலும் அண்ணாவிற்கு 18 வயதிலும் இருவரும் பிரிந்துவிட்டனர்.  

அதற்குப் பிறகு அப்பாவின் சொந்தத்தில் ஒருவருக்கு அம்மாவின் மேல் பிரியம் இருப்பது தெரிந்து, நானே அவரிடம் பேசி, நானும், அண்ணனும் அம்மாவின் 40 ஆவது வயதில் இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்து, அவர் வெளிநாட்டில் வேலையில் இருந்ததால், எங்களை விட்டு போகத் தயங்கிய அம்மாவின் தயக்கத்தைப் போக்கி அனுப்பி வைத்தோம். அவர்கள் திருமணத்திற்கு நான், என் அண்ணன், அண்ணனின் இரண்டு நண்பர்கள், அம்மாவின் அம்மா (என் பாட்டி), அவரின் இரண்டு நண்பர் குடும்பம் என எல்லோரும் உடன் இருந்துதான் நடத்தினோம்.

இதோடு நிற்காமல், அம்மா கருவுற்றிருந்த போது, எங்கள் வீட்டிற்கு வரத் தயங்கினார் (240 குடும்பங்கள் கொண்ட மத்திய வகுப்பு மக்கள் வாழும் காலனி அது). நானும் அண்ணனும் நீங்க வாங்க, நாங்க இருக்கோமில்லனு சொல்லி வரவழைத்து,  நானும், அவரின் அம்மா (திருமணத்தின் போது இத்திருமணத்தை ஏற்காதவர்) இருவரும் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து, மகப்பேறு பார்த்து, மூன்று மாதங்கள் அம்மாவையும் பார்த்து, குழந்தையையும் வளர்த்து, திரும்ப அனுப்பி வைத்தோம். அம்மா கருவுற்றிருந்த போது, தினமும் என் அண்ணன் அம்மாவை வாக்கிங் கூட்டிப்போய், பழரசம் வாங்கி கொடுத்து என பார்த்துக் கொண்டான்.

2008 இல் அவரின் 60 ஆவது பிறந்த நாள் அன்று நானும் என் தங்கையும் (நான் பார்த்து பிறந்த எங்கள் குடும்ப முதல் குழந்தை) இணைந்து அவர்கள் இருவரையும் சர்ப்ரைசாக பிறந்தநாள் கொண்டாடலாம் நாம் நால்வரும் என கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று  உறவினர்கள் நண்பர்கள் என 40 பேருக்கும மேலாக அவர்களுக்குத் தெரியாமல் வரவழைத்து சிறப்பாக கொண்டாடினோம். இதோ இந்த செப்டம்பர் மாதம் வந்தால் அவர்களுக்கு திருமணம் நடந்து 35 வருடங்கள் ஆகப் போகிறது.

என் 39 வயதில் நானும் கணவனைப் பிரிந்தேன். அப்பொழுது என் மகனுக்கு 12 வயதுதான். ஆனால் அவன் 19 வயதிற்கு வந்த போது அவனும் என்னை வற்புறுத்தினான் இன்னொரு திருமணம் புரியச் சொல்லி. ஒரு திருமணமே வாழ்நாளில் போதும் என்றும், இனி எவருடனும் சேர்ந்து வாழும் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை என்றும் தோன்றியதால் மறுத்துவிட்டேன்.

இதை இப்பொழுது எதற்கு சொல்கிறேன் என்றால், 35 வருடங்களுக்கு முன்பே எங்கள் குடும்பத்தில் இது நடந்து, ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கூட நாளடைவில் ஏற்றுக் கொண்டு காலங்கள் ஒடிவிட்டன. 

ஆனால் ஒரு ஆணிற்கு இரண்டாம் திருமணம் என்பது எப்படி சாதாரணமாக கடக்க வேண்டிய விஷயமாக உள்ளதோ பல நூற்றாண்டு காலமாக நம் சமூகத்தில் அந்த நிலையை ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணம் அடைய இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகுமோ என வியக்க வைக்கிறது இப்படிப்பட்ட செய்திகள் வைரலாவதைப் பார்த்தால்.

இணைப்பிற்கு நன்றி...இதை யார் எழுதியது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அபராஜிதன் said:

லதா என்ற எழுத்தாளர்

👏👏👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.