Jump to content

ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் மற்றும் மிலேசத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.  இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று துறையின் நிறைவேற்று பணிப்பாளருமான மிச்சேல் கொனிங்ஸின் இலங்கைக்கான பயணத்தின் போது 2019 யூன் 7-8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சர்வதேச விழுமியங்கள் மற்றும் நடைமுறைகள் பிரகாரம் உறுதியான நடவடிக்கைகளை பின்பற்றி ஐ.நா பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குதல் பற்றிய விடயம் முதன்மை வகித்தது. இந்தக் கலந்துரையாடலில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாவன பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் மற்றும் சொத்துக்களை முடக்குதல், வெளிநாட்டு பயங்கரவாத போறாளிகளை கையாள்தல், பயங்கரவாத முறியடிப்பு சட்டவாக்கம், அடிப்படைவாதம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடித்தல், பயங்கரவாதிகளின் போக்குவரத்திற்கு எதிராக பயனுறுதியான எல்லை முகாமைத்துவம் மற்றும் தீவிரவாத சித்தாந்தம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் பற்றிய செய்திகளை இணையம் மற்றும் சமூக ஊடகங்களினூடாக பரப்பி அச்சுறுத்தல் விடுத்தல் போன்றவை ஆகும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தால் விடுக்கப்பட்டுள்ள புதிய அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு உதவுமாறு ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டர்ஸ்க்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபனவின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏப்ரல் 24 ஆம் திகதி விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் கொனிங்ஸ் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்ததுடன் ஏனைய அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்தார்.

பாதுகாப்பு செயலாளர் சான்த கோத்தாகொட மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரின் இணை தலைமையில் பாதுகாப்பு அமைச்சில், இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலில், தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய விரிவான விளக்கம் அளிக்கப்பட்டதுடன் பயங்கரவாதம் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிப்பதற்கு அவசியமான “ஒட்டுமொத்த அரசாங்க” அணுகுமுறையொன்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்ட அமுலாக்கம் மற்றும் புலணாய்வு முகவராண்மைகள், சட்டத்துறை தலைமை அதிபதியின் திணைக்களம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் நிதி புலணாய்வுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சமீபத்திய தாக்குதலின் பின்னர், வெளிநாட்டு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன தற்கொலை குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூன்று குழுக்களான தேசிய தௌஹீத் ஜமாத்,(NTJ) ஜமாஅதே மில்லதே இப்ராஹிம் (JMI) மற்றும் விலாயத் அஸ் ஸைலானி(WAS) ஆகியவற்றை இலங்கையின் உள்நாட்டு சட்டவாக்கத்தின் கீழ் பாதுகாப்பு சபையின் தீர்மானம் 1373(2001) இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் சொத்து முடக்குதல் அம்சங்களுக்கு வழியமைத்ததாக அவற்றை “பயங்கரவாத அமைப்புகளாக” வரையறுப்பதில் ஒத்துழைத்தன என்று சுட்டிக்காட்டப்பட்டது.

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு அமைவாக, குறிப்பாக வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளின் வளர்ச்சியை தடுத்தல் மற்றும் மிலேச்சத்தனமான தீவிரவாதத்தை முறியடித்தல் மற்றும் எல்லை பாதுகாப்பின் முக்கியத்தவம் பற்றிய தீர்மானங்களின் 2178(2014) மற்றும் 2396(2017) கீழ் சர்வதேச பயங்கரவாத முறியடிப்பு கடப்பாடுகளுக்கு இசைவாக இலங்கையால் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா உதவி செயலாளரின் விஜயத்தின் போது ஆய்வுசெய்யப்பட்டன.
விஜயத்தின் முடிவில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தில் வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரபன ஐ.நா உதவி செயலாளர் நாயகத்திடம் இருந்து ஒரு மதிப்பீட்டையும் பெற்றுக்கொண்டதுடன் அரசாங்கத்துடனான எதிர்கால ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான ஐ.நா ஒருங்கிணைப்பாளர் ஹெனா சிங்கர், தொழிநுட்ப பொருளாதார அபிவிருத்தி நிலைய(CTED) உத்தியோகத்தர்கள் மறறும் ஐ.நா நாட்டுக்குழு ஆகியோரும் உதவிச் செயலாளர் நாயகத்துடன் இணைந்திருந்தனர்.

இலங்கையின் நியூ யோர்கிற்கான நிரந்தர தூதரகமானது தொழிநுட்ப பொருளாதார அபிவிருத்தி நிலையம் (CTED) உடன் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகின்றதுடன் விஜயத்தின் பின்னரான பின்தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
தொழிநுட்ப பொருளாதார அபிவிருத்தி நிலையமானது ஐ.நா பா

துகாப்பு சபையின் பயங்கரவாத முறியடிப்பு குழுவிற்கு(CTC) உதவியளிக்க தாபிக்கப்பட்டதுடன் பயங்கரவாத முறியடிப்பு குழுவின் கொள்கை தீர்மானங்கள் முன்னெடுத்தல், உறுப்பு நாடுகளின் நிபுணத்துவ மதிப்பீடுகளை மேற்கொள்ளல் மற்றும் நாடுகளில் பயங்கரவாத முறியடிப்பு தொழில்நுட்ப உதவிகளுக்கு அனுசரணை வழங்கள் ஆகிய கடப்பாடுகளை கொண்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

http://globaltamilnews.net/2019/124196/

Link to comment
Share on other sites

ஐ.நா மனித உரிமைகள் பேரவை விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றக் கால அவ காசம் கொடுக்க வேண்டும் எனக் கூறிய கூட்டமைப்பு; ஐ.நா மனித உரிமைகள் பேரவை விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றுகிறா? என்பதைக் கவனிப்பதும் அது தொடர்பான நிலைமைகளை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. விரும்புவதுமில்லை.
 
இப் போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வை வென் றெடுக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தேர்தலும் வருகின்ற நேரமாகி விட்டதால் இனப்பிரச்சினைக்கான தீர்வை இந்தி யாவின் பக்கம் திசை திருப்பி மீண்டுமொரு காலக் கடத்தலுக்கு வழி வகுக்கிறது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.