Jump to content

தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த சதி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவையில் கைதான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை யின்போது நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, இந்தியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளர்களை கண்டறியும் பணியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) தீவிரப்படுத் தினர். அதில், கோவை உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த முகமது அசாருதீன்(32) உள்ளிட்ட சிலர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதையும், பிரத்யேக சாட் பக்கம் மூலம் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய தீவிரவாதி ஜஹ்ரான் ஹாசிமுடன் முகநூல் மூலம் தொடர்பு ஏற்படுத்தி, தகவல்களை பரிமாறி வந்ததையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து, என்ஐஏ அதி காரிகள், டிஎஸ்பி விக்ரம் தலைமை யில் 7 குழுக்களாக பிரிந்து முகமது அசாருதீன், போத்தனூர் திருமறை நகரைச் சேர்ந்த அக்ரம் ஜிந்தா(26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா(38), குனியமுத்தூ ரைச் சேர்ந்த அபுபக்கர்(29), போத்த னூர் உமர் நகரைச் சேர்ந்த சதாம் உசேன்(26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற ஷாகிம்ஷா(28) ஆகிய 6 பேரின் வீடு, முகமது அசா ருதீன் வேலை செய்து வந்த டிராவல்ஸ் ஏஜென்சி ஆகிய இடங் களில் சோதனை நடத்தினர். மேலும், முகமது அசாருதீனை கைது செய்து கொச்சிக்கு அழைத்துச் சென்றனர். மற்ற 5 பேரையும் கொச்சி அலு வலகத்துக்கு வரவழைத்து விசா ரித்தனர்.

மேலும் 3 இடங்களில் சோதனை

இதைத் தொடர்ந்து, ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பில் உள்ளதாகக் கூறி கோவை உக்கடம் வின்சென்ட் சாலை ஹவுசிங் யூனிட் டைச் சேர்ந்த முகமது உசேன்(25), உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான்(25), கரும்புக்கடையைச் சேர்ந்த ஷபிபுல்லா(29) ஆகியோரது வீட்டில் வருவாய்த் துறையினர் முன்னிலையில், மாநகர போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தி, ஆவணங்கள், இயக்கம் சார்ந்த புத்தகங்கள், பென்டிரைவ் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர். அவர் களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகர காவல் ஆணை யர் சுமித் சரண் கூறும்போது, ‘‘போத்த னூரைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தடை செய்யப் பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் தரப்பில் ஆதாரங் களுடன் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் முகமது உசேன், ஷாஜகான், ஷபிபுல்லா ஆகியோர் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத் தின் (யுஏபிஏ) 18, 38, 39 ஆகிய பிரிவுகளின்கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதியப்பட்டது. 3 பேரின் வீட்டிலும் சோதனை நடத்தி செல் போன்கள், வங்கி கணக்கு ஆவ ணங்கள், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், மெமரிகார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தகவல்

முகமது அசாருதீன் டிராவல்ஸ் ஏஜென்சியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 230 பேரை நண்பர்களாக கொண்டு ‘‘khilafah gfx’’ என்ற பெயரில் முகநூல் பக்கத்தை நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை இன் பாக்ஸ் மூலம் பரிமாறி வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத் தின் முக்கிய தீவிரவாதியான ஜஹ் ரான் ஹாசிமுடன் முகநூல் மூலம் தொடர்பில் இருந்து, தமிழில் தகவல் களை பரிமாறி உள்ளார்.

மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக தமிழகம், கேரளாவில் ஆட்களைத் திரட்டி மூளைச்சலவை செய்து தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை என்ஐஏ அதிகாரிகளும் தங்களது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாநகர போலீஸார், உளவுப்பிரிவு, சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு, சிறப்பு புல னாய்வு பிரிவு போலீஸார் தங்களது ரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

https://tamil.thehindu.com/tamilnadu/article27903557.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.