Jump to content

நீருக்காக ஏங்கும் தமிழகம், ஏரிகளில் செத்து கருகிய மீன்கள் - மனதை உருக்கும் புகைப்படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்குபடத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்கு

தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலும், தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. குறைந்து போன நிலத்தடி நீர் மட்டம், வறண்டு போன ஏரிகள் என அத்தியாவசிய தண்ணீருக்காக அனுதினமும் தமிழக மக்கள் தர்ம யுத்தம் நடத்தி வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

நீருக்காக ஏங்கும் தமிழகம்படத்தின் காப்புரிமை ARUN SANKAR கிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்குபடத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption கிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்கு நீருக்காக ஏங்கும் தமிழகம்படத்தின் காப்புரிமை ARUN SANKAR
 

சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தண்ணீர் இல்லாததால் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்

சென்னை தண்ணீர் பஞ்சம்படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption தற்போது நிலவிவரும் தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர் சென்னையில் தீ அணைக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளனபடத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption சென்னையில் தீ அணைக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள் சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமை ARUN SANKAR சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமை ARUN SANKAR சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமை ARUN SANKAR

https://www.bbc.com/tamil/india-48620355

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை கூனல் முதுகு இல்லாத தமிழன் ஆட்சிக்கு வருமட்டும் இந்தக்கதை தொடர்கதைதான் .

மாரியில் வெள்ளமும் கோடையில் வறட்சியும் தமிழ்நாட்டுக்கு கிடைத்த சாபம் .

தண்ணியில்லாத நேரம்தான் வடநாட்டவர்களின் தொழில்சாலைகள் எவ்வளவு தண்ணீரை பொய் சொல்லி எடுக்கின்றனர் என்ற விபரம் சேகரிக்கின்றனர் .

Link to comment
Share on other sites


வெள்ளம் வந்த பொழுது இராணுவம் வந்தது 

வரட்சி வந்த பொழுது ......

மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது தமிழ்நாடு. அதிலும், தலைநகர் சென்னையில் முக்கிய நீர் ஆதரமாக விளங்கிய ஏரிகள் வறண்டு, பிளவுப்பட்டு மீன்கள் கொத்து கொத்தாக செத்து கிடக்கின்றன.

ஒருபுறம், பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மறுபுறம், இணையத்தில் தற்போது எழுந்துள்ள தண்ணீர் நெருக்கடிக்கு யார் காரணம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

சமூக ஊடகமான ட்விட்டரில் #தவிக்கும்தமிழ்நாடு என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

யாரை குறை கூறுவது?

"தண்ணீர் பிரச்சனைக்கு நாம் யாரையும் குறைகூற முடியாது. இந்நிலைக்கு மக்களாகிய நாமே காரணம். தற்போது, நாம் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை சேமிக்க வேண்டும்," என்கிறார் அருண்பாலா.

https://www.bbc.com/tamil/india-48646638

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டில் தண்ணிர்ப்பஞ்சம் எனது இரண்டு சந்ததிகள் காலத்திக்கும் வரவே வராது. அதுவும் தலைநகர் கெல்சிங்கியில் அப்படி எதுவும் நடக்காது. காரணம் தலைநகருக்கான தண்ணீர் பின்லாந்தின் இரண்டாவது மிகப்பெரிய வாவியகிய பையந்தின் வாவியிலிருந்து வருகிறது இந்த வாவி  1118 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. இங்கிருந்து இத்தண்ணிர் கெல்சிங்கிக்கு 115 கிலோ மீட்டர் நிலத்துக்கு அடியிலான சுரங்கப்பாதையால் கொண்டுவரப்படுகிறது தவிர இச்சுரங்கப்பாதை உலகில் மிக நீளமான, செயற்கையாக உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதையாகும். 

தவிர பின்லாந்தில் குழாயில் வரும் நீரை நேரடியாகவே பிடித்துக்குடிக்கலாம் ஐரோப்பாவில் ஒரு சில நாடுகளிலேயே இப்படியான தரமான தண்ணீர் வினியோகம் இருக்கிறது மற்றப்படி லிடில் சுப்பமார்க்கற்தான் தஞ்சம்.

ஒரு தகவலிக்காகவே இதைச்சொன்னேன்.

கூடிய விரைவில் இப்பிரச்சனை இலங்கையில் குறிப்பாக வடக்கில் அதுவும் யாழ் குடாநாட்டிலும் வரும். எமக்கான நீர் முகாமைத்துவத்தை அறிந்து அதைப்பிரயோகிக்காதுவிடின். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான், யுகேயிலும் எப்பவும் மழை என சலிப்போம். கிரிகெட்டை குழப்ப வேற செய்யும். ஆனால் பைப்பில் வரும் தண்ணீர் போத்தல் தண்ணியை விட சுத்தமானது.

நீறின்றி அமையாது உலகு. உலகின் பாலவனமாதல் மிக வேகமெடுத்துள்ளதாம். 

சீமான் சொல்வது போல் நதிகளின் இயற்கை போக்கை மாற்றுவது ஆபத்து, ஆனால் கால்வாய் மூலம் ஒரு நதியில் ஓடும் உபரி  நீரை ஓடும் இன்னொரு நதியில் சேர்க்கலாம்.

சந்திராயன் மண்ணாங்கட்டிராயன் என்று கரியாக்கும் காசை இப்படி செலவழிக்கலாம்.

ஆனால் தாகம் எடுப்பது தமிழனுக்கு - ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

உண்மைதான், யுகேயிலும் எப்பவும் மழை என சலிப்போம். கிரிகெட்டை குழப்ப வேற செய்யும். ஆனால் பைப்பில் வரும் தண்ணீர் போத்தல் தண்ணியை விட சுத்தமானது.

நீறின்றி அமையாது உலகு. உலகின் பாலவனமாதல் மிக வேகமெடுத்துள்ளதாம். 

சீமான் சொல்வது போல் நதிகளின் இயற்கை போக்கை மாற்றுவது ஆபத்து, ஆனால் கால்வாய் மூலம் ஒரு நதியில் ஓடும் உபரி  நீரை ஓடும் இன்னொரு நதியில் சேர்க்கலாம்.

சந்திராயன் மண்ணாங்கட்டிராயன் என்று கரியாக்கும் காசை இப்படி செலவழிக்கலாம்.

ஆனால் தாகம் எடுப்பது தமிழனுக்கு - ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

 

காசு வேண்டி ஒட்டு போடும் மக்கள் இனியாவது சிந்திக்கணும் இந்த பிரச்சனை தேர்தலுக்கு முதல் வந்திருக்கணும் .

Link to comment
Share on other sites

'வà¯à®à®®à®¾à® à®à¯à®±à¯à®¯à¯à®®à¯ நிலதà¯à®¤à®à®¿ நà¯à®°à¯'

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அஞ்சதக்க அளவில் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலையில் 4.5 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாத இடைவெளியில் மட்டும், கடலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவு நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

64518408_1382923371850175_74882612728241

அது ஒரு அழகிய கனா காலம்..😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - பன்னீர்செல்வம்.

 

தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக தேனியில் அவர் தெரிவித்ததாவது,

“தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயற்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக குடி மராமத்து பணி செய்ய 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் குடிநீர் தட்டுப்பாடு நிலைவரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் எந்தெந்த மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி, குடிநீர் தட்டுப்பாடு சீரமைக்கப்படும்.” என்றார்.

 

https://www.virakesari.lk/article/58318

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இப்போது தான் த‌ண்ணீர் ப‌ஞ்ச‌ம் அதிக‌ரித்து இருக்கு / 500 1000 சில்ல‌ரை காசை வேண்டி போட்டு திருட்டு கும்ப‌லுக்கு ஓட்டு போட்டா உது தான் கெதி / 

அண்ண‌ன் சீமான் சொன்ன‌து எல்லாம் இப்ப‌ செய‌லில் ந‌ட‌க்குது 👏
அண்ண‌ன் சீமானின் அறிவுக்கு அமெரிக்காவில் இருக்க‌ வேண்டிய‌வ‌ர் , ஏதோ அவ‌ர் கொண்ட‌ இன‌ ப‌ற்றால் த‌மிழ் நாட்டில் இருக்கிறார் & ( இது க‌வுண்ட‌ம‌னியின் ப‌ஞ்சு டையிலாக்கில் சுட்ட‌ வ‌ச‌ன‌ம் 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவ வல்லரசாக்கி காட்டிற நம்ப கனவு என்னாச்சு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vanangaamudi said:

இந்தியாவ வல்லரசாக்கி காட்டிற நம்ப கனவு என்னாச்சு?

இது எல்லாம் சும்மா வெட்டி பேச்சு உற‌வே , 2020ம் ஆண்டு இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று , 

வெளிப்ப‌டையாய் சொல்ல‌ போனால் இந்தியா இப்ப‌ போல‌ எப்ப‌வும் ஒரு குப்பை நாடா தான் இருக்கும் , 
இந்தியா எல்லாத்திலும் பின் நோக்கி போய் விட்ட‌து / 

ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள்
மூனு நேர‌ உண‌வு சாப்பிடின‌மா
இல்லாவே இல்லை / 

சுத‌ந்திர‌ இந்தியாவில் ம‌க்க‌ள்
தெரு ஓர‌ங்க‌ளில் ப‌டுக்கின‌ம் /

பிராடுக‌ளிட்டை நாட்டை குடுத்தா நாடு எப்ப‌டி வ‌ள‌ர்ச்சி அடையும் / 
ஊழ‌லில் இந்தியா இர‌ண்டாவ‌து இட‌ம் / தூ தூ 

Link to comment
Share on other sites

காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கலாம்... மாயம் மந்திரமில்லை... முழுக்க அறிவியல்!

உப்பு நீரைச் சுத்திகரிக்கப்பட்ட நீராக மாற்றுவது என்பது ஒரு மதிப்பு மிக்கசெயல்முறை என்று தான் கூற வேண்டும். ஒன்றில் மூன்று பங்கு மக்களுக்கு இந்த அணுகு முறையில்லை. ஒன்றில் ஐந்து பங்கிலான மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு தான் தங்களது வாழ்வை நகர்த்துகின்றனர். இந்த நிலையைத் தீர்க்கும் பொருட்டு அறிவியல் முறையில் அதாவது wind powered device என்று சொல்லக் கூடிய காற்று இயங்கு சாதனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இந்த சாதனம் ஒரு நாளைக்கு 37 லிட்டர் அளவிலான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குமாம் நமக்கு.

இதற்குப் பெயர் water seer என்பது.அதாவது தண்ணீர் சீயர். இதனைப் பயன்படுத்தி அவரவர் தனது சுய தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள இயலும். இதனை நம் அறிஞர்கள் புரோட்டோ-டைப் முறைமையில் ஏற்கனவே பரிசீலனை செய்து பார்த்துவிட்டனர். மேலும் இதன் சமீபத்திய மாடல் ஒன்று 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இறுதியாக்கப்பட்டுள்ளது.

சரி, இதை எப்படி செயல்முறைப்படுத்துவது?

இந்த சாதனம் நிலத்திலிருந்து ஆறு அடிக்குக் கீழ் பொறுத்தப்பட வேண்டும். நிலத்தடியில் அமைந்துள்ள மெட்டல் சைடுகள் மணலால் குளிர்ச்சியாக்கப்படும். காற்று டர்பனைச் சுழற்சி செய்து அதிலுள்ள காற்றாடிகள் காற்றை ஒடுக்கிய அறையினுள் (condensation chamber) செலுத்தும். அதனால் குளிர்ச்சியான காற்றானது அந்த அறையையும் குளிர்ச்சிபடுத்தி நீராவியைக் கெட்டியாக்கி ரிசர்வாயரின் உள்ளே ஒழுகச் செய்யும். அந்த ரிசர்வாயரின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள பம்பு குழாயும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீரை வெளியேற்றும்.

காற்று இல்லை என்றாலும் நம்மால் 24 மணி நேரமும் நீரை உறிஞ்ச முடியுமாம். அதற்கென்று மீண்டும் நாம் தண்ணீரை இஷ்டத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது.அளவுக்கு மீறினால் திறம்பவும் இதே கதி தான்.புரிஞ்சுதோ!!!

இது எல்லா சூழ்நிலையிலும் செயல்படாது. 37 லிட்டர் எப்போதும் கிடைக்காது என இந்த முறையை குறை சொல்லியும் பல வீடியோக்களை பார்க்க முடிந்தது. ஆனால், இது நடக்கவே நடக்காத காரியம் என அவர்களாலும் சொல்ல முடியவில்லை. நீரின் அளவு கூடும்.குறையும் எனதான் சொல்கிறார்கள். விரைவில் இது உண்மையாகி, பரவலாக பயன்பாட்டுக்கு வர வேண்டும். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதுதான்  எல்லோரின் ஆசையும்.

https://www.vikatan.com/news/information-technology/87942-this-machine-can-get-us-water-from-thin-air.html

குறிப்பு : இந்த தொழில்நுட்பம் எவ்வளவு தூரம் சாத்தியம் என தெரியவில்லை 

 

 

https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/காற்றில்-இருந்து-நீர்-2993997.html

 

Link to comment
Share on other sites

சராசரி மழை வீழ்ச்சி - சென்னை : https://en.wikipedia.org/wiki/Chennai : The average annual rainfall is about 140 cm (55 in). The city gets most of its seasonal rainfall from the north–east monsoon winds, from mid–October to mid–December.

சராசரி மழை வீழ்ச்சி - அரிசோனா, அமெரிக்க்கா ( வறண்ட மாநிலம் ) 1971 to 2000 was 8.29 inches, and from 2000 to 2015 it was 6.54 inches https://www.tripsavvy.com/does-it-rain-in-phoenix-2683743

சென்னையில் 7.5 வீதம் அதிக மழை, அரிஸோனாவுடன் ஒப்பிடும்பொழுது 

எவ்வாறு மழை நீரை அரிஸோனாவில் வாழும் இவர் சேமிக்கின்றார் 

 

 

Link to comment
Share on other sites

India's sixth biggest city is almost entirely out of water

The floor of the Chembarambakkam reservoir is cracked open, dry and sun-baked. About 25 kilometers (15.5 miles) away, in Chennai, India's sixth largest city, millions of people are running out of water.

Chembarambakkam and the three other reservoirs that have traditionally supplied Chennai are nearly all dry, leaving the city suffering from an acute water shortage, said Jayaram Venkatesan, an activist in the city.
 
Srini Swaminathan, who took this photograph of Chembarambakkam reservoir from a plane, told CNN: "I have been living here since 1992 and have never seen anything like this before."
Due to an inability to collect sufficient rain water combined with low groundwater levels, the Tamil Nadu state government has been struggling to provide water to residents.
With the reservoirs dry, water is being brought directly into Chennai neighborhoods in trucks. Every day, hundreds of thousands of residents have no choice but to stand in line for hours in soaring summer temperatures, filling dozens of cans and plastic containers.

https://www.cnn.com/2019/06/19/india/chennai-water-crisis-intl-hnk/index.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.