Jump to content

எமக்குத் தெரியாமல் வைத்தியர் ஷாபியால் கருத்தடை சிகிச்சை செய்ய முடியாது - 69 தாதியர்கள் வாக்கு மூலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே,  வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம்  ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் - சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். 

 doctor-kurunagal.jpg

சிசேரியன் சிகிச்சைகளின்போது அங்கு இருக்கும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெரியாமல் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் நிலையில், அவர் தற்போது சி.ஐ.டி. பிடியில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இந் நிலையில் வைத்தியர் ஷாபியுடன் சத்திர சிகிச்சைகளின் போது சத்திர சிகிச்சை கூடங்களில் இருந்தவர்கள் என  சி.ஐ.டி.யினர் 70  சத்திர சிகிச்சைக் கூட தாதியர்களை அடையாளம் கண்டனர். அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகயீனம் காரணமாக சிகிச்சைப் பெறும் நிலையில் ஏனைய 69 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளபோதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். 

https://www.virakesari.lk/article/58279

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை முதலிலேயே எழுத நினைத்து ஏன் எங்கள் ஆட்களின் excitement ஐக் குறைப்பான் என்று எழுதாமல் விட்டு விட்டேன்! முறைப்பாடு செய்த பெண்கள் சர்ஜரிக்குப் பிறகு கவனிக்காத படி செய்திருக்க வேண்டுமெனில் பலோப்பியன் குழாயைத் தான் வெட்டியிருக்க வேண்டும்! இரத்தப் போக்குக் கட்டுப் பாடு, மயக்க மருந்து என்று ஒரு குழுவே சேர்ந்து செய்யும் சத்திர சிகிச்சை அது! இந்தக் கள்ள வேலையெல்லாம் இலங்கையில் சாத்தியமில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இதை முதலிலேயே எழுத நினைத்து ஏன் எங்கள் ஆட்களின் excitement ஐக் குறைப்பான் என்று எழுதாமல் விட்டு விட்டேன்! முறைப்பாடு செய்த பெண்கள் சர்ஜரிக்குப் பிறகு கவனிக்காத படி செய்திருக்க வேண்டுமெனில் பலோப்பியன் குழாயைத் தான் வெட்டியிருக்க வேண்டும்! இரத்தப் போக்குக் கட்டுப் பாடு, மயக்க மருந்து என்று ஒரு குழுவே சேர்ந்து செய்யும் சத்திர சிகிச்சை அது! இந்தக் கள்ள வேலையெல்லாம் இலங்கையில் சாத்தியமில்லை! 

வேறு  எங்காவது  சாத்தியம்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

வேறு  எங்காவது  சாத்தியம்????

ஒழுங்கான மருத்துவத் தகுதியே இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்கும் இந்தியாவில் சாத்தியம்! தகுதி பெற்ற வைத்தியர்களே ஒழுங்காகக் கண்காணிக்கப் படாமல் செயற்படும் நிலையும் இந்தியாவில் இருக்கிறது. வைத்தியர் சேட்டை விட்டாலும் விசில் ஊதி விடும் தாதியர்களும் மருத்துவ நிர்வாகிகளும் இலங்கையில் இந்தியாவை விட அதிகம் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

ஒழுங்கான மருத்துவத் தகுதியே இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்கும் இந்தியாவில் சாத்தியம்! தகுதி பெற்ற வைத்தியர்களே ஒழுங்காகக் கண்காணிக்கப் படாமல் செயற்படும் நிலையும் இந்தியாவில் இருக்கிறது. வைத்தியர் சேட்டை விட்டாலும் விசில் ஊதி விடும் தாதியர்களும் மருத்துவ நிர்வாகிகளும் இலங்கையில் இந்தியாவை விட அதிகம் இருக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

ஒழுங்கான மருத்துவத் தகுதியே இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்கும் இந்தியாவில் சாத்தியம்! தகுதி பெற்ற வைத்தியர்களே ஒழுங்காகக் கண்காணிக்கப் படாமல் செயற்படும் நிலையும் இந்தியாவில் இருக்கிறது. வைத்தியர் சேட்டை விட்டாலும் விசில் ஊதி விடும் தாதியர்களும் மருத்துவ நிர்வாகிகளும் இலங்கையில் இந்தியாவை விட அதிகம் இருக்கிறார்கள்.

உண்மைதான்

வைத்தியம்  அதிலும்  பிரசவம்

அதிலும் அரச வைத்தியசாலையில் (போதனா வைத்தியசாலை -  குருநாகல)

ஒரு  கூட்டு  முறையில் தான் நடைபெற  வாய்ப்புள்ளது

ஆயிரக்கணக்கான  பெண்களுக்கு ......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

உண்மைதான்

வைத்தியம்  அதிலும்  பிரசவம்

அதிலும் அரச வைத்தியசாலையில் (போதனா வைத்தியசாலை -  குருநாகல)

ஒரு  கூட்டு  முறையில் தான் நடைபெற  வாய்ப்புள்ளது

ஆயிரக்கணக்கான  பெண்களுக்கு ......???

எல்லாவற்றிற்கும் அடிப்படையான விடயங்களை விளங்கிக் கொள்ளாமல் fake news மூலம் பீதியைக் கிளப்பும் இணைய செய்திகள் தான் காரணம். இதே போன்ற இன்னொரு போலிச் செய்தி தான் ஆண்களை மலடாக்கும் மருந்துகளை முஸ்லிம்கள் உணவில் கலந்திருக்கக் கூடும் என்ற செய்தி. அப்படியொரு மருந்து இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

எல்லாவற்றிற்கும் அடிப்படையான விடயங்களை விளங்கிக் கொள்ளாமல் fake news மூலம் பீதியைக் கிளப்பும் இணைய செய்திகள் தான் காரணம். இதே போன்ற இன்னொரு போலிச் செய்தி தான் ஆண்களை மலடாக்கும் மருந்துகளை முஸ்லிம்கள் உணவில் கலந்திருக்கக் கூடும் என்ற செய்தி. அப்படியொரு மருந்து இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை! 

இதுக்குத்தான் நாங்க  யாழுக்க  கிடக்கிறம்...😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இதை முதலிலேயே எழுத நினைத்து ஏன் எங்கள் ஆட்களின் excitement ஐக் குறைப்பான் என்று எழுதாமல் விட்டு விட்டேன்! முறைப்பாடு செய்த பெண்கள் சர்ஜரிக்குப் பிறகு கவனிக்காத படி செய்திருக்க வேண்டுமெனில் பலோப்பியன் குழாயைத் தான் வெட்டியிருக்க வேண்டும்! இரத்தப் போக்குக் கட்டுப் பாடு, மயக்க மருந்து என்று ஒரு குழுவே சேர்ந்து செய்யும் சத்திர சிகிச்சை அது! இந்தக் கள்ள வேலையெல்லாம் இலங்கையில் சாத்தியமில்லை! 

ஜஸ்டின்,நான் இந்த டொக்டர் இப்படி செய்தாரா,இல்லையா என்று கருத்து எழுத விரும்பவில்லை...ஆனால் ஊரில் இருக்கின்ற பிரசவம் பார்க்கின்ற வைத்தியர்கள் சிலர் சிசேரியரின் போது கருந் துளையினுடாக ஊசி போடுவதன் மூலம் இது சாத்தியம் என்று சொல்கிறார்கள்...இது பற்றிய உங்கள் கருத்து என்ன?...பக்கத்தில் இருப்பவர்கள் பார்ப்பதற்கு முன்னர் இவ்வாறு குறுகிய நேரத்தில் ஊசி போடலாம் என்று சொல்கிறார்கள் 


அவரோடு வேலை செய்த டாக்டர்கள் சிலர் அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று சொல்கிறார்கள்...ஆனால் எதற்காக 1000க் கணக்கான பெண்கள் இவருக்கு எதிராக காலத்தில் இறங்கினார்கள்?...இவரை மாதிரி எத்தனையோ முஸ்லீம் டொக்டர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள் அல்லவா?...அவர்கள் மேல் காட்டப் படாத துவேசம் இவர் எல் காட்டப் படுவதன் நோக்கம் என்ன ?

Link to comment
Share on other sites

4 hours ago, பிழம்பு said:

சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே,  வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம்  ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் - சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். 

மெத்தச் சரி. வைகாசிமாதம் இந்த வைத்தியர்மேல் புகார் கூறப்பட்டது. அச்சமயம் இது பொய்யென உடன் வாக்குமூலம் அளிக்க முன்வராத இந்தத் தாதிகள் ஒருமாதம் கடந்தபின் வைத்தியருக்குச் சார்பாக சாட்சிசொல்ல முன்வந்த காரணம் என்ன......???? எந்தப் புற்றில் எந்தப் பாம்போ....! நாங்களும் பால் ஊற்றுவோம்.!! 🤔 

Link to comment
Share on other sites

15 minutes ago, Paanch said:

மெத்தச் சரி. வைகாசிமாதம் இந்த வைத்தியர்மேல் புகார் கூறப்பட்டது. அச்சமயம் இது பொய்யென உடன் வாக்குமூலம் அளிக்க முன்வராத இந்தத் தாதிகள் ஒருமாதம் கடந்தபின் வைத்தியருக்குச் சார்பாக சாட்சிசொல்ல முன்வந்த காரணம் என்ன......???? எந்தப் புற்றில் எந்தப் பாம்போ....! நாங்களும் பால் ஊற்றுவோம்.!! 🤔 

எங்கே போய் வாக்கு மூலம் அளித்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? கும்பலாக போய்  மீடியாவை கூப்பிட்டு சொல்லியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்களா?

இவர்களை இப்ப தான் சி.ஐ.டி கூப்பிட்டு விசாரிக்கின்றது. அவர்களும் தகுந்த இடத்தில் தான் தம் வாக்குமூலங்களை கொடுத்து இருக்கின்றனர். இதுதான் சரியான முறையும் கூட.

இவ் மருத்துவரை குற்றம் சாட்டிய பெண்களை அரசு தன் செலவிலேயே மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்து தெளிவான விளக்கத்தை பெற முடியும். அதை விட்டுட்டு பிரச்சனையை தீவிரமாக்குவதன் மூலம் குறுகிய அரசியல் லாபத்தை பெறத்தான் அரசு முயல்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஜஸ்டின்,நான் இந்த டொக்டர் இப்படி செய்தாரா,இல்லையா என்று கருத்து எழுத விரும்பவில்லை...ஆனால் ஊரில் இருக்கின்ற பிரசவம் பார்க்கின்ற வைத்தியர்கள் சிலர் சிசேரியரின் போது கருந் துளையினுடாக ஊசி போடுவதன் மூலம் இது சாத்தியம் என்று சொல்கிறார்கள்...இது பற்றிய உங்கள் கருத்து என்ன?...பக்கத்தில் இருப்பவர்கள் பார்ப்பதற்கு முன்னர் இவ்வாறு குறுகிய நேரத்தில் ஊசி போடலாம் என்று சொல்கிறார்கள் 


அவரோடு வேலை செய்த டாக்டர்கள் சிலர் அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று சொல்கிறார்கள்...ஆனால் எதற்காக 1000க் கணக்கான பெண்கள் இவருக்கு எதிராக காலத்தில் இறங்கினார்கள்?...இவரை மாதிரி எத்தனையோ முஸ்லீம் டொக்டர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள் அல்லவா?...அவர்கள் மேல் காட்டப் படாத துவேசம் இவர் எல் காட்டப் படுவதன் நோக்கம் என்ன ?

ரதி, கருப்பையில் என்ன பெயருடைய ஊசியைப் போட்டால் கருத்தடை நிகழும் என்று அந்த ஊரில் இருக்கும் டாக்டர்கள் சொன்னார்களா? தெரிந்தால் அந்த ஊசி மருந்தின் பெயரை இங்கே குறிப்பிடுங்கள், தேடிப் பார்க்கலாம். எனது ஊகிப்பின் படி நீண்டகாலம் கருத்தரிப்பைத் தடுக்கக் கூடிய intrauterine device (IUD) எனப்படும் சிறிய குச்சி மாதிரியான உபகரணத்தை கருப்பையின் உள்ளே வைப்பதால் தான் தொடர்ந்த மலடாக்கலைச் செய்ய முடியும். ஆனால் IUD இருந்தால் மாதவிடாய் வராது, அது கருப்பையினுள் இருப்பதும் பெண்ணுக்கு உணர முடியும். எல்லாவற்றையும் விட மேலாக IUD வைக்கப் பட முடியாது என நான் நம்புவதன் காரணம், டாக்டர் தன் பொக்கற்றில் எடுத்துச் சென்று மற்றவர் காணாமல் சொருகி விடும் அளவுக்கு சத்திர சிகிச்சை கூடங்களின் செயற்பாடு சந்தைக் கடை மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொரு பணிக்கும் ஒரு உதவியாளர் இருப்பார், எல்லாம் பதிவு செய்யப் பட்டு சைன் இன் சைன் அவுற் என்று தான் சத்திர சிகிச்சைக் கூடம் வேலை செய்கிறது. இதையெல்லாம் அறியாதவர்கள் இப்படி பயப் பிராந்தி கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். 

29 minutes ago, Paanch said:

மெத்தச் சரி. வைகாசிமாதம் இந்த வைத்தியர்மேல் புகார் கூறப்பட்டது. அச்சமயம் இது பொய்யென உடன் வாக்குமூலம் அளிக்க முன்வராத இந்தத் தாதிகள் ஒருமாதம் கடந்தபின் வைத்தியருக்குச் சார்பாக சாட்சிசொல்ல முன்வந்த காரணம் என்ன......???? எந்தப் புற்றில் எந்தப் பாம்போ....! நாங்களும் பால் ஊற்றுவோம்.!! 🤔 

நீங்கள் பால் ஊற்றுங்கள் பாம்பை வளர்த்தெடுங்கள்! அந்த அரசியலில் எனக்கு உடன்பாடில்லா விட்டாலும் அது உங்கள் செயல் உங்கள் உரிமை!  ஆனால் விஞ்ஞானத்தை மருத்துவ அடிப்படையை fake news இனால் மூடி மறைக்கிற வேலையைச் செய்யாதிருங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டரின் வருமானம் திடிரேன அதிகரித்த விடயம் சமபந்தமாக முதலில் விசாரணை நடக்க தொடங்கியது என நினைக்கிறேன்..

Link to comment
Share on other sites

14 hours ago, நிழலி said:

இவர்களை இப்ப தான் சி.ஐ.டி கூப்பிட்டு விசாரிக்கின்றது.

 

14 hours ago, Justin said:

நீங்கள் பால் ஊற்றுங்கள் பாம்பை வளர்த்தெடுங்கள்! அந்த அரசியலில் எனக்கு உடன்பாடில்லா விட்டாலும் அது உங்கள் செயல் உங்கள் உரிமை!  ஆனால் விஞ்ஞானத்தை மருத்துவ அடிப்படையை fake news இனால் மூடி மறைக்கிற வேலையைச் செய்யாதிருங்கள்! 

உடனே விசாரித்தால் எப்படி.? மூடி மறைக்கிற வேலைகளை எப்படிச் செய்ய முடியும். ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.