Jump to content

மணிமேகலையின் காதலும் துறவும்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணிமேகலையின் காதலும் துறவும்..

    manimegalai.jpg

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது ஊர் சீத்தலை என்றும் இவர் மதுரையில் கூல வாணிகம் செய்து வந்தவர் என்றும் அறிகிறோம். பௌத்த மதப் பரப்பலுக்காக ஒரு தனிக் காவியமே படைத்த இச்சாத்தனார் ஒரு பௌத்த நெறியாளர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. தமிழின் முதல் காப்பியம் என்ற பெருமைக்குரிய சிலப்பதிகாரமும் சாத்தனாரின் மணிமேகலையும் கதைத் தொடர்ச்சியால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப் படுகின்றன. சிலப்பதிகாரத்தின் முப்பெரும் கதை மாந்தர்களாம் கண்ணகி, கோவலன், மாதவி மூவரில் கோவலன் மாதவி இருவருக்கும் பிறந்த ஒரே மகளே மணிமேகலை. இவளே மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி.

காப்பியத் தலைவி மணிமேகலையை மாதவியின் கூற்றில் வைத்து காப்பியம் அறிமுகம் செய்யும் பகுதி பின்வருமாறு:

காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய

மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்        (2: 54-57)

இவ்வடிகளில் மாதவி, மணிமேகலையைக் கண்ணகி மகள் என்று சிறப்பிப்பதோடு இவள் தவத்திற்குரியவள் என்றும் கணிகையாகத் தீத்தொழில் புரிந்து வாழமாட்டாள் என்றும் தெளிவு படுத்துகின்றாள். ஆக மணிமேகலை, தாய் மாதவியால் ஆடலும் பாடலும் கூடிய பரத்தமை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு தவ வாழ்க்கைக்கு உரியவளாகிறாள். இது மாதவியின் விருப்பம். மணிமேகலை தவ வாழ்க்கையை விரும்பி ஏற்றாளா? இல்லையா என்பது காப்பியத்தில் பேசப்படவில்லை.

      காப்பியத்தில் மணிமேகலையின் அறிமுகம் அவளின் கண்ணீரோடுதான் தொடங்குகிறது. கண்ணீருக்குக் காரணம் மாதவி, தோழி வயந்தமாலையிடம் சொல்லிய கோவலன் கண்ணகியர் அடைந்த பெருஞ்சோகம் குறித்த விவரிப்பு. தாயின் துயரத்தோடு ஒன்றி கண்ணீர் வடிக்கிறாள் மணிமேகலை.

ஒரு காப்பியத் தலைவியைக் கண்ணீரோடு அறிமுகம் செய்யும் சாத்தனாரின் உட்குறிப்பு கதையின் ஊடாக மணிமேகலையைத் தொடர்வோருக்கே புலப்படக்கூடியது.

      காவியத்தின் தொடக்கத்தில் உவவனத்திற்கு மணிமேகலை வந்துள்ளாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவளைச் சந்திக்கத் தேரேறி வருகிறான் உதயகுமாரன். அவன் தேரொலி கேட்டு வருவது உதயகுமாரனே என்றும் அவன் தன்மேல் காதல் உடையவன் என்றும் மணிமேகலை சுதமதியிடம் கூறுகிறாள். உதயகுமாரனிடமிருந்து தப்பிக்க உவவனத்துப் பளிக்கறையில் புகுந்துகொள்கிறாள் மணிமேகலை. தேடிவந்த மணிமேகலையைக் காணாமல் சுதமதியிடம் அவள் எத்திறத்தாள்? என்று வினவும் உதயகுமாரனுக்கு சுதமதி கூறும் விடை முக்கியத்துவம் உடையது.

எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரைஎன

குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்

முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்

பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை

ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி

காமற் கடந்த வாய்மையள் என்றே

தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப    (5: 12-18)

‘முருகவேளை ஒத்த உன் இளமை அழகினை அவள் தன் கண்ணாலும் பார்க்கமாட்டாள். முன்வினைப் பயனால் தவநெறி புகுந்தவள். தீயோரைச் சுடுகின்ற சாபமாகிய அம்பினை உடையவள். காமனை வென்ற வாய்மை யுடையவள்’ என்றெல்லாம் சுதமதி மணிமேகலை குறித்து உதயகுமாரனுக்கு சொன்ன விவரிப்பு முற்ற முழுதாகக் காப்பிய ஆசிரியனின் கூற்றே ஆகும். ஏனெனில் இக்கூற்றில் பொதிந்துள்ள மணிமேகலை பற்றிய மதிப்பீடுகள் எவையும் அவள் யதார்த்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்ல. படைப்பாசிரியர் சாத்தனார் மணிமேகலைக்கு விரும்பிச் சூட்டிய கிரீடமாகவே ஊழ்தரு தவத்தள் சாபசரத்தி காமற்கடந்த வாய்மையள் என்ற இம்மதிப்பீடுகள் அமைந்துள்ளன. குறிப்பாக, காமற் கடந்த வாய்மையள் என்று சாத்தனார் சுதமதி வாயிலாக மணிமேகலைக்கு தரும் அடைமொழி காப்பியத்தின் போக்கில் எவ்வாறு ஒத்தும் உறழ்ந்தும் நிற்கின்றது என்பதனை இனிக் காண்போம்.

      உவவனத்தில் பளிக்கறையில் மறைந்துகொண்ட மணிமேகலைக் கண்டு தன் காதலைத் தெரிவிக்க முயன்று முடியாமல் திரும்பும் உதயகுமாரன் சுதமதியிடம் மணிமேகலையை அவள் பாட்டி சித்திராபதியைக் கொண்டு அடைவேன் (வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச் சித்திரா பதியால் சேர்தலும் உண்டு) என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறான்.

உதயகுமாரன் புறப்பட்டுவிட்டான் என்று தெரிந்து பளிக்கறையை விட்டு வெளியே வந்த மணிமேகலை உதயகுமாரனைக் குறித்தும் அவன் சொன்னவை குறித்தும் தன்நிலை குறித்தும் மிகவும் வெளிப்படையாகச் சொல்லும் பின்வரும் பகுதி கூர்ந்து கவனிக்கத்தக்கது.

பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக்

களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்

கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள்

வருணக் காப்புஇலள் பொருள்விலை யாட்டிஎன்று

இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது

புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்

இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை

இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என       (5: 84-90)

‘இவள் கற்பு இல்லாதவள், நல்ல தவ உணர்வும் இல்லாதவள், குலமரபின் படியும் தனக்கொரு காவல் அற்றவள், பொருளுக்காகத் தன்உடலை விற்பவள்’ என்றெல்லாம் என்னைக் குறித்து மிகஇழிவாகப் பேசி என்னை அடைய விரும்புகின்றான் என்பது தெரிந்தும் அதனைப் பொருட் படுத்தாமல் அந்தப் புதிய ஆடவனின் பின்னே என் நெஞ்சமும் செல்கின்றதே. இதுதான் காமத்தின் இயல்பா? அப்படியாயின் அக்காமத்தின் வலிமை கெட்டொழியட்டும்.

      மணிமேகலை தோழி சுதமதியிடம் மனந்திறந்து கூறுவதாக வரும் இப்பகுதி உண்மையில் மணிமேகலையின் நிலை என்ன? என்பதனை நமக்குத் தௌ;ளத் தெளிவாகக் காட்டுகிறது. மணிமேகலை இதுவரை காமத்தின் வயப்படாதவள், இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு ஆடவனைக் கண்டு அவன்மேல் காதல் கொள்கிறாள். உதயகுமாரன் தன்னை விரும்புகின்றான் என்பதனைத் தன்பாட்டி சித்திராபதியிடமிருந்து தெரிந்துகொண்ட வயந்தமாலை அதனை ஒருநாள் தன்தாய் மாதவியிடம் சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள்.

அப்பொழுதெல்லாம் அவளுக்கு உதயகுமாரனைக் குறித்து யாதொரு சிந்தனையும் தோன்றியதில்லை. இப்பொழுது பளிக்கறைக்கு உள்ளிருந்து அவனைக் கண்டபொழுதுதான் அவள் காதல் வயப்பட்டாள். அதிலும் தன்னைக் குறித்து அவன் மிகக்கேவலமாகப் பேசியதைக் கேட்டபிறகும் அவன் பின்னாலேயே தன் மனம் செல்லுகிறது.

இதுதான் காமமா? என்று முதன்முறையாக அந்த அனுபவம் குறித்துக் கேள்வி எழுப்புகிறாள் மணிமேகலை. அப்படியானால் இதற்கு முன்பே சுதமதி வாயிலாக சாத்தனார் சொன்ன, காமற் கடந்த வாய்மையள் என்ற மதிப்பீட்டிற்கு என்ன பொருள். காமத்தை அடைந்த பிறகல்லவா? அதனைக் கடக்க வேண்டும். இங்கே மணிமேகலை அடைந்த காமத்தைக் கடக்கத் துணிகிறாள்.

இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை

இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என

இதுதான் காமத்தின் இயல்பா? அப்படியானால் அந்தக் காமம் என்னை விட்டு விலகி அழிந்து போகட்டும் என்று காமத்தைக் கடக்கக் கருதுகிறாள். ஆனால் மணிமேகலை உண்மையில் காமத்தைக் கடந்து வென்றாளா? என்பதனைக் காப்பியத்தின் தொடர் நிகழ்ச்சிகளில் நாம் காணவேண்டும்.

      காமத்தை எதிர்கொள்ளாமலே அதனைக் கடந்திருக்க வேண்டிய மணிமேகலை ஏன் உதயகுமாரனிடத்தில் காதல் கொண்டாள். காப்பிய ஆசிரியனுக்கு விடைசொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ‘மந்திரம் கொடுத்த காதை’ இதற்குப் பதில் சொல்கிறது. சென்ற பிறவியில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் அமுதபதி இணையருக்குப் பிறந்த பெண் இலக்குமி. அவளே இந்தப் பிறவியில் மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். இலக்குமியின் கணவனாக இருந்தவன் இராகுலன். அவன் மன்னன் அத்திபதி நீலபதி இணையருக்குப் பிறந்தவன்.

அந்தப் பிறவியில் இராகுலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பு கொன்றுவிட இலக்குமி அவனோடு தீக்குளித்து இறந்து போனாள். இந்த இலக்குமி இராகுலன் இணையரே இப்பிறவியில் மணிமேகலை உதயகுமாரனாகப் பிறந்துள்ளார்கள் என்ற செய்தியை பீடிகை கண்டு பழம் பிறந்துணர்ந்தும் மணிமேகலா தெய்வம் உரைத்தும் தெரிந்துகொண்டாள் மணிமேகலை. மேலும்,

உவவன மருங்கில் உன்பால் தோன்றிய

உதய குமரன் அவன்உன் இராகுலன்

ஆங்குஅவன் அன்றியும் அவன்பால் உள்ளம்

நீங்காத் தன்மை நினக்கும்உண்டு ஆகலின்

கந்த சாலியின் கழிபெரு வித்துஓர்

வெந்துஉகு வெங்களர் வீழ்வது போன்ம்என

அறத்தின் வித்துஆங்கு ஆகிய உன்னைஓர்

திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன்    (10: 42-49)

உவவனத்தில் காமத்தோடு உன்னைநாடி வந்த உதயகுமாரனே உன்னுடைய முற்பிறப்புக் கணவனாகிய இராகுலன். அதனால்தான் அவன் உன்னை விரும்பியதோடு மட்டுமல்லாமல் நீயம் அவனிடத்தில் நீங்காத விருப்பம் கொண்டாய். உன் உள்ளத்தில் தோன்றிய அக்காமம், கந்தசாலி என்னும் நெல்லின் மிகச்சிறந்த வித்து வெந்து உருகுகின்ற உப்பு நிலத்தில் வீழ்வதைப் போன்றது என்று கருதி அறத்தின் வித்தாகிய உன்னைச் சரியான நிலைக்கு ஆற்றுப்படுத்தவே இத்தீவிற்குக் கொண்டுவந்தேன் என்று மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் உரைத்தது.

      மணிமேகலா தெய்வத்தின் இக்கூற்று சில விளக்கங்களை சாத்தனார் சார்பாக நின்று நமக்குத் தெரிவிக்கின்றது. ஒன்று, மணிமேகலை உதயகுமாரனைக் கண்டு காதல் வயப்பட்டது முன்வினைத் தொடர்ச்சியே, காமவயப்படுதல் என்ற குறையைக் காப்பியத் தலைவிமேல் சுமத்தமுடியாது. இரண்டு, தெய்வம் மணிமேகலையை இத்தீவிற்குக் கொண்டு வரவில்லையெனில் அறத்தின் வித்தாகிய மணிமேகலை காமம் என்ற வெங்களர் நிலத்தில் வீழ்ந்துவிட வாய்ப்பிருக்கிறது. மூன்று, பிறவிகள் தோறும் தொடரும் கணவன் மனைவி உறவுகள் வினைப்பயனால் விளைவது, அதனை வெல்லுதல் அத்துனை எளிமையானதன்று.

      தெய்வத்தின் இச்சீரிய முயற்சியால் பழம் பிறப்புணர்ந்து உதயகுமாரன் மேல் கொண்ட காமத்தை வெல்லவேண்டிய மணிமேகலை அதற்கு நேர்மாறாக முற்பிறப்புக் கணவன் என்று உதயகுமாரன் மேல் கூடுதல் ஈர்ப்புடையவளாக மாற்றம் பெறுகிறாள். ஒரு பக்கம் கொண்ட துறவிக் கோலத்தால் இயல்பாக எழும் காதலை அடக்கிய தவிப்பும் மறுபுறம் முற்பிறவிக் கணவன் என்பதனால் உதயகுமாரன் மீதான ஈர்ப்புமாக மணிமேகலையின் மனம் ஊசலாடுகிறது.

      ஆபுத்திரனின் அமுதசுரபி பெற்று பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என உண்டி கொடுத்து உயிர்க்குலம் காக்கும் கடமையில் ஈடுபட்டுவரும் மணிமேகலைக்கு உதயகுமாரனின் சந்திப்பு மீண்டும் சிக்கலை உருவாக்குகிறது.

      சித்திராபதியால் தூண்டப்பட்ட உதயகுமாரன் குதிரைகள் பூட்டப்பட்ட நெடுந்தேரில் ஏறி மணிமேகலை தங்கியிருந்த உலக அறவியை அடைந்தான். அங்கே மணிமேகலை, கையில் அமுதசுரபி ஏந்தி பெரும்பசி உடைய வறியவர் களுக்கெல்லாம் மிகுதியான உணவினை வாரி வழங்கிக் கொண்டிருந்தாள். மணிமேகலையைக் கண்டவுடன் பெருகிய காமத்தோடு அவளை நெருங்கிப் பேசத் தொடங்கினான் உதயகுமாரன். முன்பு உவவனத்தில் இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை இதுவே ஆயின் கெடுகதன் திறம்!என, காமத்தைக் கடக்க உறுதி பூண்ட மணிமேகலை, இப்பொழுது, இவன் எனது முற்பிறவிக் கணவன் இராகுலனே என்று நினைக்கிறாள். அவன் பாதங்களில் விழுந்து வணங்குவதும் தகுதியானதே என்று கருதி அவனடி தொழுது வணங்கி நிற்கிறாள்.

என்அமர் காதலன் இராகுலன் ஈங்குஇவன்

தன்அடி தொழுதலும் தகவு!என வணங்கி

அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்

இறைவளை முன்கை ஈங்குஇவன் பற்றினும்

தொன்று காதலன் சொல்எதிர் மறுத்தல்

நன்றி அன்று!என நடுங்கினள் மயங்கி             (18: 128-133)

உதயகுமாரனை வணங்கியதோடு அல்லாமல் மணிமேகலையின் சிந்தனையோட்டம் பல தடைகளைத் தாண்டி பெருக்கெடுக்கிறது. எனது நெஞ்சம் கட்டுப்பாட்டினை இழந்து உதயகுமாரனிடத்திலே சென்றாலும் வளைகள் குலுங்கும் எனது கரங்களை அவன் பற்றினாலும் முற்பிறப்புக் கணவனாகிய இவன் பேச்சை மறுத்தல் கூடாது என்று மனதில் உறுதி கொள்கிறாள் மணிமேகலை.

      காப்பியத்தின் இப்பகுதி மணிமேகலையின் மனஓட்டப் பதிவு என்பதனை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். வெளிப்படையாகப் பேசுகிற பேச்சைவிட மனத்துக்குள்ளே ஒருவர் பேசுகிற பேச்சே உண்மைக்கு நெருக்கமாயிருக்கும். மன ஊசலாட்டத்தின் வெளிப்பாடுகள் யாவும் நம் விருப்பின் பல முகங்கள். இங்கே மணிமேகலையின் மனஓட்டத்தில் உதயகுமாரன் நம் கரங்களைப் பற்றினாலும் நாம் ஒன்றும் மறுத்துப் பேசக்கூடாது என்று நினைப்பது அவன் அத்துமீறி விடுவானோ என்ற அச்சத்தில் தோன்றுவது.

ஆனால் இவள் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள் நம் நெஞ்சம் கட்டுப்பாடிழந்து அவனிடத்திலே சென்றுவிட்டால் அதையும் நாம் ஏற்றுக்கொள்வது தான் நல்லது என்று. ஆக, மணிமேகலையின் மனம் உதயகுமாரனை அடையத் முடிக்கிறது, அதற்குக் காரணம் அவன் முற்பிறப்புக் கணவன். மணிமேகலா தெய்வம் நினைத்தது வேறு, நடந்தது வேறு. தெய்வம் நினைத்தது என்னவென்றால் மணிமேகலை பழம்பிறப்பு உணர்ந்தால் உதயகுமாரன் மீது ஏற்பட்ட காதலும் அதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் நீங்கிவிடும் அதனால் அவள் தெளிவு பெற்று அறத்தின் வித்தாக மாறுவாள் என்பதுதான்.

ஆனால் நிலைமை தலைகீழாகிப் போனது பழம்பிறப்பு உணர்ந்ததால் மணிமேகலை உதயகுமாரன் காதல் இன்னும் நெருக்கமாகிப் போனது. கதையின் போக்கிலேயே இதற்கு ஒரு தீர்வும் கிடைக்கின்றது.

      மயங்கிய மணிமேகலை தெளிவு பெறுகிறாள். அவளின் காதல் மனம் அடங்கி, துறவு மனம் விழிக்கிறது. மீண்டும் உதயகுமாரனைச் சந்தித்தால் துறவு வெல்லுமா? காதல் வெல்லுமா? என்ற ஐயத்தில் அதற்கான வாய்ப்பைத் தவிர்க்க விரும்பி காயசண்டிகை என்ற விஞ்சையப் பெண்ணாக மாற்றுரு கொள்கிறாள் மணிமேகலை. காயசண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலையே என்று தெரிந்துகொண்ட உதயகுமாரன் அவளை நெருங்கி உரையாட, உறவாட, உண்மை அறியாத காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் உதயகுமாரனை வாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான்.

கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் உதயகுமாரனின் உடல்கண்டு மீண்டும் தடுமாறுகிறாள் மணிமேகலை.உதயகுமாரனின் வெட்டுண்ட உடலைக் கண்டு மணிமேகலை புலம்பும் காட்சியில் மணிமேகலையின் தவக்கோலத்தை நாம் காண முடியவில்லை. கணவன் அல்லது காதலனின் மரணத்திற்கான புலம்பலாகவே அக்காட்சியைப் படைக்கின்றார். சாத்தனார்.

காதலனே! திட்டிவிடம் என்னும் தீண்ட உன்உயிர் நீங்கிய அந்தநாளில் பெருநெருப்புடைய ஈமத்தீயில் விழுந்து நான் உயிரைவிட்டேன். உவவனத்தில் உன்னிடம் என் உள்ளம் சென்றதைத் தவிர்க்க முடியவில்லை. என்று தொடங்கும் மணிமேகலையின் புலம்பலில்

திட்டி விடம்உண நின்உயிர் போம்நாள்

கட்டுஅழல் ஈமத்து என்உயிர் சுட்டேன்

உவவன மருங்கில் நின்பால் உள்ளம்

தவிர்விலேன்     .. .. .. .. .. ..                       (21: 11-14)

வைவாள் விஞ்சையன் மயக்குஉறு வெகுளியின்

வெவ்வினை உருப்ப விளிந்தனை யோ!என

விழுமக் கிளவியின் வெய்துஉயிர்த்துப் புலம்பி

அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்

செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!

அல்லிஅம் தாரோன் தன்பால் செல்லல்!

நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்

மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்

பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்            (21: 23-31)

கூரிய வாளினையுடைய விஞ்சையன் காஞ்சனன் என்னைத் தன்மனைவி காயசண்டிகை எனத் தவறாக உணர்ந்து சீற்றம் கொண்டு உன்னைக் கொன்றுவிட்டானே என்று அழுது புலம்பி ஏக்கப்பெருமூச்சுடன் உதயகுமாரனை நெருங்குகின்றாள். தவக்கோலம் பூண்ட மணிமேகலையின் இப்புலம்பலில் மிக்குத் தோன்றுவது காமத்தைக் கடந்கவியலாத அவளின் இயல்பான சோகமே.

நிலைமை கட்டுமீறிப் போவதை உணர்ந்த கந்திற்பாவை செல்லாதே! செல்லாதே மணிமேகலையே உதயகுமாரனை நெருங்கிச் செல்லாதே என்று எச்சரிக்கைக் குரல் எழுப்புகிறது. கந்திற்பாவையின் எச்சரிக்கை எழாமல்போனால் மணிமேகலையின் காதலும் துயரமும் துறவு என்ற கட்டினையும் மீறிச் செயல்பட்டிருக்கும் என நாம் ஊகிக்க முடியும்.

      கந்திற்பாவையே இச்சிக்கலான சூழலை முடிவுக்குக் கொண்டுவருகின்றது. சென்ற பிறப்பில் இவன் உனக்குக் கணவனாகத் தோன்றியதும் அவனுக்கு நீ மனைவியாகத் தோன்றியதும் அந்தப் பிறப்பினில் மட்டுமல்ல அதற்கு முன்னும் முன்னும் பல பிறப்புகளில் தொடர்ந்து வந்துள்ளது பிறவியில் அழுந்துகின்ற தடுமாற்றத்தினைப் போக்க முயலுகின்ற தவக்கோலப் பெண்ணாகிய நீ இவன் மரணத்திற்காகத் துன்பம் கொள்ளாதே என்று மணிமேகலையின் தவக்கோலத்தை நினைவுபடுத்தி காமத்தைக் கடக்க வேண்டிய கடமையை அறிவுறுத்துகின்றது.

      காப்பியத்தின் தொடக்கத்தில் சுதமதி கூறிய காமற் கடந்த வாய்மையள் என்ற தகுதிப் பாட்டினை ஒத்தும் உறழ்ந்துமே மணிமேகலையின் வாழ்க்கைப் பயணம் நடைபோடுகின்றது. மாதவி தவக்கோலத்தை புனைந்துவிட்டாள். தோழி சுதமதி அக்கோலத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை வாய்மொழியாக வழங்கிவிட்டாள். மணிமேகலா தெய்வம்தான் அவளின் தவக்கோலத்திற்கு ஓர் அர்த்தத்தை ஏற்படுத்துகின்றான். மணிமேகலை என்ற இயல்பான பெண்ணுக்கும் மணிமேகலை என்ற தவமகளுக்குமான மோதலே காப்பியத்தை நடத்திச் செல்கின்றது. உதயகுமாரனின் மரணம் இப்போராட்டத்தை ஓர் உச்சக் கட்டத்திற்குக் கொண்டு சென்று சிக்கலை ஒருவாறு முடித்தும் வைக்கிறது. காதலனாம் உதயகுமாரனின் மரணத்திற்குப் பின்னும்கூட அவன்தாய் பட்டத்தரசியை காதலன் பயந்தோய்! என்று விளித்து அறம் சொல்லத் தொடங்குகிறாள் மணிமேகலை.

காப்பியத் தலைவியை அறிமுகப்படுத்தும் போதே கண்ணீரோடு அறிமுகப் படுத்தினார் சாத்தனார் என்று முன்னர் குறிப்பிட்டேன். மணிமேகலையின் கண்ணீருக்குக் காரணம் தவக்கோலம். பிறர் ஏற்றிவைத்த சுமையோடு அதனைச் சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் தோன்றாமல் அவள் படும் வேதனையின் முற்குறியே மணிமேகலையின் கண்ணீர். ஆசிரியர் சாத்தனார் மணிமேகலையின் இந்த உள்முரணை முழுதாக உணர்ந்தே காப்பியம் படைக்கின்றார். அதனால்தான் மணிமேகலையின் உள்மன ஓட்டங்களையும் தடுமாற்றங் களையும் ஆசிரியனின் அனுமதியோடு நாம் கேட்க முடிகிறது. இதுவே படைப்புக்கும் படைப்பாளிக்குமான வெற்றி.

துணைநூல்: சிலம்பொலி சு. செல்லப்பன், மணிமேகலைத் தெளிவுரை, பாரதி பதிப்பகம், சென்னை-17, 1998.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி -605008

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37450-2019-06-14-08-43-00

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் இதென்ன விளையாட்டு, திடீரென்று மணிமேகலை பக்கம் காத்தடிக்குது.....!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.