Jump to content

ரத்த தானத்துக்கு எதிரான மூடநம்பிக்கைகள் என்னென்ன? யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமாக இருக்கும் பெரும்பாலானோர் ரத்த தானம் செய்யலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சில முன் நிபந்தனைகளும் இதில் இருக்கின்றன. அது சிக்கலானதாகவும், மூட நம்பிக்கை மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்துபவையாகவும் இருக்கலாம்.

பொதுவாக காணப்படும் அதுபோன்ற மூட நம்பிக்கைகளில் வற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

சைவ உணவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது

இரும்புச் சத்து பற்றி - ரத்தத்தின் முக்கிய பொருள் பற்றி - கவலை தெரிவிக்கப்படுகிறது. சைவ உணவுகளில் இரும்புச் சத்து குறைவாக இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால், சமநிலையான சத்துகள் உள்ள உணவு சாப்பிடும் வரையில் உங்கள் உடலுக்குப் போதிய இரும்புச் சத்து கிடைக்கும்.

உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருந்தால், உங்கள் பாதுகாப்பு கருதி, ரத்த தானம் செய்ய உங்களை அனுமதிக்க மாட்டார்கள். ரத்த தானம் செய்யப்படும் இடங்களில் பெரும்பாலான நாடுகள் ஹீமோகுளோபின் பரிசோதனை வசதி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு ரத்த சோகை இல்லை என்பதை முதலில் அங்கு உறுதி செய்து கொள்வார்கள்.

பச்சை குத்தியிருப்பது, துளைகள் போட்டுக் கொள்வது நீங்கள் ரத்த தானம் செய்ய அனுமதிக்காது

அப்படி தடை ஏதும் கிடையாது. ஆனால் பச்சை குத்துதல், துளையிட்டுக் கொள்தல் அல்லது பல் சிகிச்சை செய்ததற்குப் பிறகு ரத்த தானம் செய்வதற்கு சிறிது கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பச்சை குத்தி 6 மாதங்கள் கழித்தும், உடலில் தொழில்நிபுணத்துவம் வாய்ந்தவரால் துளையிடப்பட்டால் 12 மணி நேரம் கழித்தும், பல் சிகிச்சையில் சிறிய நடைமுறை ஏதும் செய்தால் 24 மணி நேரம் கழித்தும், பெரிய நடைமுறை ஏதும் இருந்தால் ஒரு மாதம் கழித்தும் ரத்த தானம் செய்யலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

ரத்த தானத்துக்கு எதிரான மூடநம்பிக்கைகள் அம்பலம்படத்தின் காப்புரிமை Getty Images

நோயுற்றிருந்தால், கர்ப்பமாக இருந்தால், இளைய வயதினராக அல்லது முதியவராக இருந்தால் ரத்தம் தர முடியாது

இந்த விஷயம் உண்மை. எச்.ஐ.வி. (எயிட்ஸ் வைரஸ்) சோதனையில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, கிரந்தி நோய், காசநோய் போன்ற நோய்கள் இருக்கும் நபர்களால் ரத்த தானம் செய்ய முடியாது. ரத்தம் மூலம் பரவக் கூடிய நோய்களின் பட்டியலில் உள்ள பாதிப்புகள் ஏதும் இருந்தாலும் ரத்த தானம் செய்ய முடியாது.

சளி, தொண்டை வறட்சி, வாய்ப்புண், வயிற்றுப் பிரச்சினை அல்லது வேறு தொற்று இருந்தாலும் ரத்த தான மையங்களில் இருந்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.

தொற்று நோய்கள் ஏதும் இருந்தால், ரத்த தானம் செய்வதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக குணமாகி இருக்க வேண்டும். ஆண்டிபயாட்டிக் மருந்து ஏதும் சாப்பிட்டிருந்தால் ரத்த தானம் செய்வதற்கு ஏழு நாள்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மற்ற மருந்துகள் குறித்த விதிமுறைகள், ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ அல்லது சமீபத்தில் குழந்தை பெற்றவராக இருந்தாலோ அல்லது கருக்கலைப்பு நடந்திருந்தாலோ, ரத்த தானம் செய்வதற்கு முன்பு இரும்புச் சத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நீங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

இருந்தபோதிலும், மாத விலக்கு காலத்தை, காரணமாகக் கொண்டு ரத்த தானத்தை தடுக்க மாட்டார்கள்.

ரத்த தானம் செய்வதற்கு குறைந்தபட்ச வயது 16. பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வ ஒப்புதல் பெறுவதற்கான வயதாக அது இருக்கிறது. சுயநினைவு இழந்துவிடும் அபாயம் அதிகம் இருப்பதால் குறைந்தபட்ச வயது 16 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. இருந்தபோதிலும் பல நாடுகளில் 60 - 70 வயது வரை அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயித்திருக்கிறார்கள்.

இருந்தபோதிலும், முதன்முறையாக ரத்த தானம் செய்பவர்களைப் பொருத்த வரை அதிக கவனம் தேவைப்படுகிறது. குறிப்பாக குறைந்த வாழ்நாள் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் இந்தக் கவனம் தேவைப்படுகிறது.

``ஆபத்து ஏற்படுத்தும்'' செயல்பாடுகள்

ரத்த தானத்துக்கு எதிரான மூடநம்பிக்கைகள் அம்பலம்படத்தின் காப்புரிமை Getty Images

வாழ்க்கை என்பது அடிப்படையில் ஆபத்துகள் நிறைந்ததுதான். சில ஆபத்துகள் உங்களை ரத்த தானம் செய்ய விடாமல் தடுக்கக் கூடும்.

பலருடன் பாலியல் தொடர்பு போன்ற ``அதிக ஆபத்து வாய்ப்புள்ள நடத்தை'' உள்ளவர்கள், பணம் கொடுத்தோ, பணம் வாங்கிக் கொண்டோ பாலியல் உறவில் ஈடுபடுவர்கள், அல்லது ஆண்களுடன் பாலியல் தொடர்பு கொள்ளும் ஆண்களோ ரத்த தானம் செய்வதற்கு முன் பெரிய காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க வேண்டியிருக்கும்.

மனமகிழ்ச்சிக்காக ஊசி மருந்துகள் மூலம் போதை மருந்து பயன்படுத்துபவர்களும், ரத்த தானம் செய்ய முடியாத சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மலேரியா, டெங்கு, ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டவர்களுக்கும் இதே நிலைதான். பல நாடுகளில் ``ஆபத்து ஏற்படுத்தும்'' செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை தடை பட்டியலில் சேர்த்துள்ளனர்.

உங்களுக்கு ரத்தம் தீர்ந்துவிடாது

சராசரி மனிதனுக்கு உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். அவருடைய உடல் எடையைப் பொருத்து இது அமையும். சராசரி ரத்த தானத்தின் போது, சுமார் 500 மில்லி எடுக்கப்படும். நல்ல ஆரோக்கியமான பெரியவர்கள் உடலில் 24 - 48 மணி நேரத்தில் இந்தத் திரவம் சுரந்துவிடும்.

நீங்கள் ஆரோக்கியமாக, உடல் தகுதியாக இருந்தால்

  • குறைந்தபட்சம் 50 கிலோ மற்றும் 160 கிலோவுக்கு மிகாத எடையுடன் இருந்தால்
  • 18 மற்றும் 66 வயதுக்கு உள்பட்டவராக இருந்தால் (நாடுகளுக்கேற்ற மாறுபாடு உண்டு)
  • கர்ப்பமாகவோ அல்லது தாய்ப்பால் ஊட்டுபவராகவோ இல்லாதிருந்தால்
  • கடந்த 12 மாதங்களில், ``ஆபத்து ஏற்படுத்தும்'' செயல்பாடுகளில் ஈடுபடாதவராக இருந்தால்

.... நீங்கள் ரத்த தானம் செய்ய தகுதி உள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

https://www.bbc.com/tamil/science-48636401

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Australian Red Cross Blood Serviceன் தகவலின் படி இங்கிலாந்தில் 1980 - 1996 வரையான காலப்பகுதியில் வாழ்ந்து பின்பு அவுஸ்ரேலியாவில் குடியேறிவாழ்பவர்களும் இரத்த தானம் செய்யமுடியாது.

இதற்கு காரணம் 1980 காலப்பகுதியில் இங்கிலாந்து, வட அயர்லாந்து ,ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் BSE - Bovine spongiform encephalopathy ( mad cow disease) எனும் நோயால் மாடுகள் இறந்ததும், மாட்டிறைச்சியை சாப்பிட்ட பெரும்பாலனவர்கள்  variant Creutzfeldt-Jakob diseases (vCJD) எனும் நோயால் பாதிக்கப்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த vCJDயை இரத்ததானம் நேரத்தில்  பரிசோதனை செய்து அறிவதற்கு உகந்த உபகரணங்கள் இல்லாதமையால், தேவையற்ற நோய்காவிகளை மனித உடலில் உட்செலுத்தி பிரச்சனைகளை உருவாக்காமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்படாக இந்த கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள்..

இதே கொள்கையைதான்  மற்றைய நாடுகளும் கடைப்பிடிக்கும் என நினைக்கிறேன்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எனது மேலதிகாரியான இங்கிலாந்து பிரஜையும் உறுதிப்படுத்தினார். அவர், தான் 1980-1996 காலப்பகுதியில் இங்கிலாந்திலேயே இருந்தமையால் இரத்த தானம் செய்ய முடியாது எனக்கூறினார்.

https://www.donateblood.com.au/

இரத்த தானம் சம்பந்தமாக ஒரு மேலதிக தகவல்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.