Jump to content

நான் ”மாடுகளுக்கு” பிரதிநிதி அல்ல ! சீறும் வியாழேந்திரன் !!!


Recommended Posts

நான் ”மாடுகளுக்கு” பிரதிநிதி அல்ல ! சீறும் வியாழேந்திரன் !!!

 நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து கல்வித்திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் வள நிலையம் மீளமைக்கப்பட்டு இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

பட்டிப்பளையில் அமைந்துள்ள படுவான்கரை பிரதேசத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நிலையம் இறுதி யுத்ததினை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு தொடக்கம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையமாக செயற்பட்டுவந்தது.

இந்த நிலையில் வடகிழக்கு அபிவிருத்திக்கான செயலணி கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த வள நிலையம் விடுவிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளர் த.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகள், பிரதேசசபை உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் ஆசிரிய பௌதீகள வளப்பற்றாக்குறை கொண்ட வலயங்களாக கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. இதற்கு காரணம் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சிசெய்தவர்களும் கிழக்கு கல்வி பணிப்பாளர்களும்தான் காரணமாகும்.

மாகாண ரீதியாக ஆட்சிசெய்யும் அரசியல்வாதியாக இருந்தாலும்சரி, மாகாணத்தில் இருந்த கல்வித்துறைக்கு பொறுப்பானவர்களும்சரி இந்த இரண்டு கல்வி வலயங்களிலும் உள்ள ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஆசிரிய வெற்றிடத்தினைக்காட்டி ஆசிரியர் நியமனம்பெற்றுவந்ததன் பின்னர் அரசியல்வாதிகளை பிடித்துக்கொண்டு தமது இடத்திற்கும் மாவட்டத்திற்கும் சென்ற நிலைமையும் அம்பாறையில் இருந்து கொண்டு இங்கு ஆசிரியர் சம்பளம் எடுத்த நிலைமையும் இருக்கின்றது.

இதற்கு அரசியலும் மாகாணத்தில் துணைபோனது, மாகாண கல்விபணிப்பாளரும் துணைபோயிருக்கின்றார்.

41வருடமாக வாகரை பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய பகுதியான கட்டுமுறிவு பாடசாலைக்கு ஒரு ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. கல்வி அமைச்சராக கிழக்கில் ஒரு தமிழர் இருந்துள்ளார். வெட்ககேடு. தரம் 01 தொடக்கம் 11வரையான பாடசாலையில் ஒரு ஆங்கில ஆசிரியர் இல்லை.

இதேபோன்று வாகரை பிரதேசத்தில் உள்ள மருதங்கேணிகுளம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் 01 தொடக்கம் 03வரையுள்ள வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாத காரணமாக எந்தவித கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இல்லாமல் பாடசாலை வந்துசெல்கின்றனர். எங்களிடம் செய்யக்கூடிய அதிகாரங்கள் இருந்தும் நாங்கள் அதனைச் செய்யவில்லை.

அண்மையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களை இரத்துச்செய்ய பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தவேளையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்போது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வேறு மாவட்டங்களை சேர்ந்த, சகோதர இனத்தினை சேர்ந்த 22 பேர் கல்விசாரா ஊழியர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். கடந்த காலத்தில் இருந்த மாகாண அரசியலே இந்த நியமனத்தினை வழங்கியுள்ளது.

சாதாரண சிற்றூழியர் நியமனத்திற்கு, சாதாரண காவலாளர் நியமனத்திற்கு கூட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் கற்ற பிள்ளைகள் இல்லையா என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது.

தற்போது வந்துள்ள ஆளுனர் நீதியாக நியாயமாக செயற்பட வேண்டும் என கோரியுள்ளோம். இந்த மாகாணம் மூவின மக்களும் வாழும் மாகாணம். இந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்றார்கள்.

மூன்று இன மக்களுக்கும் சமமான சேவையினை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.குரங்கு சேட்டைகளை காட்டினால் நாங்களும் எங்கள் சேட்டைகளை களரீதியாக காட்டவேண்டிவரும்.

இந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதம் ஒரு சமூகத்தினை கருவோடு அழிக்கும் செயற்பாட்டினை செய்துள்ளது. இன்னும் அந்த பயங்கரவாதம் முடிவடையவில்லை. அப்பாவி மக்களை நாங்கள் ஒருபோதும் குற்றம் சொல்வதில்லை. யாராகயிருந்தாலும் நீதியாகவும் நியாயமாகவும் செயற்பட வேண்டும்.

நாங்கள் மக்களுக்கு சேவைசெய்யும்போது கட்சிபேதங்கள் காட்டத்தேவையில்லை. அரசியலில்தான் அந்தந்த கட்சிசார்ந்து திறமைகளை காட்டவேண்டும். மற்றைய சமூக அரசியல்வாதிகளில் மூன்று பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் 21பேரும் பதவி விலகியுள்ளனர்.

தேர்தல் காலங்களில் பல்வேறு நோக்கங்களுடன் செயற்பட்டாலும் தேர்தல் முடிந்ததன் பின்னர் தமது சமூகம் சார்ந்த ஒரு குறிக்கோளுடனேயே அவர்கள் செயற்படுவார்கள்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது. எனக்கு அழைப்பிருந்தால் பாடசாலை நிகழ்வுகளில் எனது பெயரை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நான் தமிழ் மக்கள் வாக்களித்துவந்த பிரதிநிதி. நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல.

எமது சமூகத்திற்காக சேவைக்காக வந்துவிட்டால் அனைவரும் ஒன்றித்து பயணிக்கவேண்டும். எங்களுக்குள் மாறுபட்ட கொள்கைகள், கருத்துகள் இருக்கலாம். தேர்தல் காலங்களில் அவற்றினை பார்த்துக் கொள்ள முடியும்.

கல்விக்குள்ளும் விளையாட்டுக்குள்ளும் அரசியல் வரக்கூடாது என எதிர்பார்ப்பவர்கள் நாங்கள். 20 இலட்சம் மக்களைக் கொண்ட ஜமேக்கா ஒலிம்பிக்போட்டிகளில் தங்க பதக்கங்களை அள்ளிக்குவிக்கின்றது.

இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலப்பதக்கமே இதுவரையில் பெறப்பட்டுள்ளது. கல்விக்குள் அரசியல். எல்லாவற்றுக்குள்ளும் அரசியல். இதன்காரணமாகவே இந்த நிலைமை காணப்படுகின்றது என்றார்.

https://sltnews.com/archives/22199

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.