Jump to content

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இராஜினாமா; டுவிட்டரில் ட்ரம்ப் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இராஜினாமா; டுவிட்டரில் ட்ரம்ப் அறிவிப்பு

 

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ்  ஜனாதிபதி ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், ஒரு முறை, “ட்ரம்ப் ஜனாதிபதி ஆகவேண்டும் கடவுளே விரும்புகிறார்” என கூறியதன் மூலம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றார்.

 pra.jpg

இந்நிலையில், சாரா சாண்டர்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்த தகவலை ட்ரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். இது பற்றி அவர், “3½ ஆண்டுகளாக சிறப்பான பணிக்கு பிறகு, சாரா சாண்டர்ஸ் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். சாரா அற்புதமான திறமைகளுடன் கூடிய மிக சிறப்பான நபர். அவர் சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். நன்றி சாரா” என தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பணியிலிருந்து விடைபெறுவது குறித்து சாரா சாண்டர்ஸ் தெரிவிக்கையில், “எனக்கு வழங்கப்பட்ட பணி என் வாழ் நாள் முழுவதும் எனக்கு அளிக்கப்பட்ட கௌரவம். நான் தற்போது எனது குழந்தைகளுடன் இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். நான் பணிபுரிந்த அனைத்து நேரத்தையும் விரும்பினேன். எனது துயர நாட்களையும் சேர்த்துதான்” என்றார். 

 

 

https://www.virakesari.lk/article/58289

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.