Jump to content

கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம்! பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை! கொந்தளிக்கும் பிக்குகள் Report us Vethu 6 hours ago


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

விரைந்து செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளை மீட்டுள்ளனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்கு சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இதுவொரு திட்டமிட்ட இனவாத செயல் என்றும் இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட இனவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/217722?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு அணையாது போல் உள்ளது முறையா வேண்டிகட்டபோகினம் .

Link to comment
Share on other sites

தமது ஆட்களை வைத்தே புத்தர் சிலையை அங்கு வீசி விட்டு / வைத்து விட்டு அதை பொலிஸார் உதவியுடன் மீட்டிருப்பினம் என நினைக்கிறன். அப்ப தான் இனவாதத்தை தொடரலாம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

தமது ஆட்களை வைத்தே புத்தர் சிலையை அங்கு வீசி விட்டு / வைத்து விட்டு அதை பொலிஸார் உதவியுடன் மீட்டிருப்பினம் என நினைக்கிறன். அப்ப தான் இனவாதத்தை தொடரலாம். 😎

இவையளும் நல்லா வேண்டிக்கட்டனும் சிங்களவன் அடிக்கிற அடியால் அவர்கள் கத்தும்போது அரபியில் கத்துகிறார்களா என்று யராவது கேட்டு சொல்லுங்கப்பா ?

உடம்புக்கு நோவு எண்ணயை பூசும்போது வடகிழக்கு  தாய் தமிழர்களின் வலி புரியனும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தருமச் சக்கரம் போட்ட ஆடை உடுத்தியிருந்தா எண்டு பிடிச்சு வச்ச அந்த இசுலாமிய பெண்மணி இப்ப அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு போட்டிருக்காம்.  
இவை அது புத்தரின் தருமச் சக்கரம் தானோ என confirm பண்ண புத்த சாசன அமைச்சுக்கு அனுப்பினால் அவை அங்க கை விரிச்சிட்டினமாம் - தங்களிட்ட ஒரிஜினல் தரும சக்கரம் எப்படி இருக்கும் எண்டு prototype  ஒண்டும் இல்லை எண்டு .

நாங்கள் சின்ன வயதில விளையாடிய சடு குடு ஆட்டத்தில் இருந்த குவாலிஃபிகேஷன் கூட இல்லை இந்த மோடையா கூட்டம்  நாட்டை ஆளுற வள்ளிசு !

இப்ப உந்த சிலைகளெல்லாம் உண்மையான புத்தர் சிலை தான் எண்டு யார் உறுதிப் படுத்தப்  போகினம்?

படா ஷோக்கா இல்லியா இருக்கு இந்த கேம் ஒன்னு  !!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சடத்துவத்திலும்.....உயிரைக் கண்டவன் புத்தன்....!


அன்றைய இரத்தலில்...ஒரு கொல்லன் இட்ட பன்றி இறைச்சிக் கறியை உண்டு...வயிற்றுப் போக்கினால்....மரணத்தைத் தழுவியவன்....!

அவன் ....இறுதிக் காலத்தில் இவ்வாறு தான் இருந்திருப்பான்!

காரைக்கால் அம்மையாரின் ஆண் பாலைப் போல...!

 

fasting-buddha1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளுக்கு... கடுப்பு ஏத்த  வேண்டும் என்றே... ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு. 😄
பிக்குகளுக்கும்... பொழுது போக வேணும் தானே....
வாய்க்காலில் விழுந்து கிடந்த புத்தரால்... 
இந்தக் கிழமை... ஸ்ரீலங்கா செய்திகள் சூடு பிடிக்கும். :grin:

Link to comment
Share on other sites

10 hours ago, பெருமாள் said:

இவையளும் நல்லா வேண்டிக்கட்டனும் சிங்களவன் அடிக்கிற அடியால் அவர்கள் கத்தும்போது அரபியில் கத்துகிறார்களா என்று யராவது கேட்டு சொல்லுங்கப்பா ?

உடம்புக்கு நோவு எண்ணயை பூசும்போது வடகிழக்கு  தாய் தமிழர்களின் வலி புரியனும் . 

அவர்கள் அல்லா என்று கத்துவார்கள்.

அளவுக்கு மீறி அடி விழும் போது ISIS க்கு எதிரான மனநிலை உள்ளவர்களும் ISIS இல் சேர்ந்தால் என்ன என யோசிக்கக்கூடும். (அவ்வாறு யோசிப்பவர்களை வரவேற்று பயிற்சி வழங்க பலர் உள்ளார்கள்). பின் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக்கொண்டு வந்து தாக்குதல் நடத்தக்கூடும்.

நாடு அதை நோக்கி செல்கிறதோ என ஒரு சந்தேகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

அவர்கள் அல்லா என்று கத்துவார்கள்.

அளவுக்கு மீறி அடி விழும் போது ISIS க்கு எதிரான மனநிலை உள்ளவர்களும் ISIS இல் சேர்ந்தால் என்ன என யோசிக்கக்கூடும். (அவ்வாறு யோசிப்பவர்களை வரவேற்று பயிற்சி வழங்க பலர் உள்ளார்கள்). பின் அல்லாஹு அக்பர் என்று சொல்லிக்கொண்டு வந்து தாக்குதல் நடத்தக்கூடும்.

நாடு அதை நோக்கி செல்கிறதோ என ஒரு சந்தேகம். 

நாடு நல்லா இருந்து தமிழனுக்கு தீர்வு தருதோ அல்லது தமிழனை  நிம்மதியாய் இருக்க விடுதோ ? இவ்வளவு நடந்தும் உதட்டளவில் கூட சிங்களத்தால் தீர்வை பற்றி கதைக்க முடியலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

சடத்துவத்திலும்.....உயிரைக் கண்டவன் புத்தன்....!


அன்றைய இரத்தலில்...ஒரு கொல்லன் இட்ட பன்றி இறைச்சிக் கறியை உண்டு...வயிற்றுப் போக்கினால்....மரணத்தைத் தழுவியவன்....!

அவன் ....இறுதிக் காலத்தில் இவ்வாறு தான் இருந்திருப்பான்!

காரைக்கால் அம்மையாரின் ஆண் பாலைப் போல...!

 

fasting-buddha1.jpg

சிறிலங்காவில் இருக்கிற புத்தர் எல்லாம் கொழுத்த புத்தர இருக்கினம்..அது எப்படி?

புத்தருக்கு  பன்டீறைச்சி ஒத்துக்கொள்ளாதோ .....அப்ப புத்தர் முஸ்லீமா?......புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

சிறிலங்காவில் இருக்கிற புத்தர் எல்லாம் கொழுத்த புத்தர இருக்கினம்..அது எப்படி?

புத்தருக்கு  பன்டீறைச்சி ஒத்துக்கொள்ளாதோ .....அப்ப புத்தர் முஸ்லீமா?......புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா?

தானமாகக் கிடைக்கும் உணவு எதுவாக இருப்பினும் அதை உண்ண வேண்டும் என்கிறது புத்த மதம்! 

புத்தர் மரணிக்கும் முன்னர்...அந்தக் கொல்லன் கொடுத்த உணவு தனது மரணத்துக் காரணமில்லை என்று தனது சீடர்களிடம் தெரிவித்திருந்தார்! அவரது இயற்பெயர் சித்தார்த்தன் என்று நினைவு! பின்னர் கௌதம புத்தராகினார்! புத்தரின் மகனின் பெயர் ராகுலன்!

ஒரு வேளை...ரஹிம் ...ராகுலனாகி இருக்குமோ?😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஹாப்டீன் என்ற பெயரே பின்னாளில் சித்தார்தன் என்றானது. 😂

 

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

.புத்தரின் உண்மையான பெயர் பு(முஸ்)த்தாபாவா?

எனக்குக் கூகுள் ஆண்டவர் தந்த புத்தரின் மறு பெயர்கள்..... இவை தவிர இன்னமும் உள்ளனவாம்.! 

1) அகளங்கமூர்த்தி – சூ.
2) அகளங்கன் – தி.
3) அண்ணல் – சூ. தி.
4) அத்வயவாதி – நா.
5) அநந்தலோசனன் – தி.
6) அர்க்கபந்து – நா.
7) அரசுநிழலிருந்தோன் – சூ.
😎 அருங்கலைநாயகன் – தி.
9) அருணெறிகாக்குஞ்செல்வன் – தி.
10) அருளறம்பூண்டோன் – ம.
11) அறத்தகைமுதல்வன் – ம.
12) அறம்பகர்ந்தகோன் – வே.
13) அறவாழியாள்வோன் – ம.
14) அறவியங்கிழவோன் – ம.
15) அறவோன் – ம.
16) அறிவன் – பி.
17) ஆதி – சூ. தி.
18) ஆதிதேவன் – சூ.
19) ஆதிபுங்கவன் – பி.
20) ஆதிமுதலவன் – ம.
21) ஆதிமுனிவன் – ம.
22) ஆரியன் – ம.
23) இயல்குணன் – ம.
24) உரகர்துயரமொழிப்போன் – ம.
25) உலோகஜித் – நா.
26) எண்ணில்கண்ணுடையோன் – சூ.
27) எண்பிறக்கொழியவிருந்தோன் – ம.
28) ஏகதேவன் – தி. ம.
29) ஒருவன் – ம.
30) கண்பிறர்க்களிக்குங்கண்ணோன் – ம.
31) கந்தன் – வே.
32) கலைகட்கெல்லாம்நாதன் – சூ.
32) காமற்கடந்தோன் – ம.
33) கௌதமன் – நா.
34) சாக்கியமுனி – நா.
35) சாக்கியன் – சூ.
36) சாக்கியஸிஹ்மன் – நா.
37) சாந்தன் – சூ. தி. பி.
38) சாஸ்தா – நா.
39) சினந்தவிர்ந்தோன் – சூ.
40) சினன் – சூ. தி. பி.
41) சினேந்திரன் – ம.
42) செல்வன் – சூ.
43) சைனன் – சூ. தி.
44) சௌத்தோதனி – நா.
45) தசபலன்- நா.
46) ததாகதன் – சூ. நா.
47) தயாவீரன் – ம.
48) தர்மராஜன் – சூ. நா.
49) தருமதலைவன் – ம.
50) தருமன் – பி.
51) தன்னுயிர்க்கிரங்கான் – ம.
52) தீநெறிக்கடும்பகைகடந்தோன் – ம.
53) தீமொழிக்கடைத்தசெவியோன் – ம.
54) துறக்கம்வேண்டாத்தொல்லோன் – ம.
55) நரகர்துயர்கெடநடப்போன் – ம.
56) நல்லறம்பகர்ந்தோன் – வே.
57) நற்றவமூர்த்தி – தி.
58) நாதன் – ம.
59) பகவன் – சூ. தி. பி. ம.
60) பகவான் – நா.
61) பஞ்சதாரைவிட்டவுணர்க்கூட்டியபெருமான் – சூ. தி.
62) பரதுக்கதுக்கன் – வே.
63) பார் – வே.
64) பார்மிசநடந்தோன் – பி.
65) பாரின்மிசையோன் – தி.
66) பிடகன் – பி.
67) பிணிப்பறுமாதவன் – ம.
68) பிறர்க்கறமருளும்பெரியோன் – ம.
69) பிறர்க்கறமுயலும்பெரியோன் – ம.
70) பிறர்க்குரியாளன் – ம.
71) பிறவிப்பிணிமருத்துவன் – ம.
72) புங்கவன் – தி.
73) புண்ணியமுதல்வன் – சூ. தி.
74) புண்ணியமூர்த்தி – சூ. தி.
75) புத்தஞாயிறு – ம.
76) புத்தன் – தி. நா.
77) புலவன் – ம.
78) புனிதன் – தி. பி.
79) பூமிசைநடந்தோன் – சூ. நா.
80) பெரியவன் – ம.
81) பெருந்தவமுனிவன் – ம.
82) பெருமகன் – ம.
83) பேரறிவாளன் – ம.
84) பொதுவறிவிகழ்ந்து புலமுறுமாதவன் – ம.
85) போதித்தலைவன் – ம.
86) போதிநாதன் – ம.
87) போதிப்பகவன் – ம.
88) போதிமாதவன் – ம.
89) போதிமூலத்துநாதன் – ம.
90) போதியுரவோன் – ம.
91) போதிவேந்தன் – தி. பி. வே.
92) பௌத்தன் – வே.
93) மன்னுயிர்முதல்வன் – ம.
94) மாயாதேவீசுதன் – சூ. நா.
95) மாரனைவென்றவீரன் – ம.
96) மாரஜித் – நா.
97) மிக்கோன் – ம.
98) முக்குற்றங்கடிந்தோன் – தி.
99) முக்குற்றமில்லோன் – தி.
100) முத்தன் – தி.
101) முழுதுமுணர்ந்தோன் – ம.
102) முற்றவுணர்ந்தமுதல்வன் – ம.
103) முன்னவன் – ம.
104) முனி – நா.
105) முனீந்திரன் – சூ. நா.
106) முனைவன் – பி.
107) வரதன் – வே.
108) வரன் – சூ. தி. பி.
109) வாமன் – சூ. தி. பி. ம.
110) வாய்மொழிசிறந்தநாவோன் – ம.
111) விநாயகன் – சூ. நா.
112) ஜினன் – நா.
113) ஸ்ரீகனன் – நா.
114) ஷடபிஜ்ஞன் – நா.
115) ஸந்மார்க்கநாதன் – வே.
116) ஸமந்தபத்ரன் – நா.
117) ஸர்வஜ்ஞன் – நா.
118) ஸர்வார்த்தஸித்தன் – நா.
119) ஸித்தார்த்தன் – வே.
120) ஸூகதன் – நா. ம.

( இன்னும் பலவுள )

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

நாடு நல்லா இருந்து தமிழனுக்கு தீர்வு தருதோ அல்லது தமிழனை  நிம்மதியாய் இருக்க விடுதோ ? இவ்வளவு நடந்தும் உதட்டளவில் கூட சிங்களத்தால் தீர்வை பற்றி கதைக்க முடியலை .

நாடு எப்ப நல்லா இருந்தது? 😀

இலங்கையின் பல நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதே இஸ்ரேல். 😎

இஸ்ரேல் பலஸ்தீனர்களை எவ்வாறு நடத்துகிறது என்று பார்த்தால் இலங்கை அரசு தமிழர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 🙃

போரில் தமிழர்களை தோற்கடித்த பின் தீர்வை தட்டில் வைத்து தர சிங்களத்திற்கு அவசியமில்லை. இஸ்ரேலுக்கு அவசியம் இருந்தால் இந்தியா, அமெரிக்கா மூலம் அதை நிறைவேற்றும். இல்லாவிட்டால் காலப்போக்கில் தமிழர்கள் சிங்களவர்களாகி விடுவர். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Lara said:

இல்லாவிட்டால் காலப்போக்கில் தமிழர்கள் சிங்களவர்களாகி விடுவர். 😎

உங்களின் பதிலுக்குத்தான் மறுமொழி உங்களின் பதிலை மறுபடியும் படித்து பாருங்கள் நண்பரே தமிழன் சிங்களவன் ஆகிறதுக்கு முதல் சிங்களவன் அல்லாவை கும்பிட மக்காவுக்கு  கிளம்பிடுவான் அந்தளவுக்கு நிலைமை 😀😀

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

உங்களின் பதிலுக்குத்தான் மறுமொழி உங்களின் பதிலை மறுபடியும் படித்து பாருங்கள் நண்பரே தமிழன் சிங்களவன் ஆகிறதுக்கு முதல் சிங்களவன் அல்லாவை கும்பிட மக்காவுக்கு  கிளம்பிடுவான் அந்தளவுக்கு நிலைமை 😀😀

நான் “நாடு அதை நோக்கி செல்கிறதோ என ஒரு சந்தேகம்” என எழுதியதற்காக நாடு இப்ப நல்லா இருக்கு என்று சொல்ல வரேல்லை, நீங்கள் மாறி விளங்கி விட்டீர்கள் போல.

வஹாபிஸம், அரேபியம், பயங்கரவாதம் போன்றவற்றை உள்ளே விட்டது சிங்கள முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கவும் தான். இப்பொழுது அது உருவாக்கப்பட்டு விட்டது.

இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்பம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

தானமாகக் கிடைக்கும் உணவு எதுவாக இருப்பினும் அதை உண்ண வேண்டும் என்கிறது புத்த மதம்! 

புத்தர் மரணிக்கும் முன்னர்...அந்தக் கொல்லன் கொடுத்த உணவு தனது மரணத்துக் காரணமில்லை என்று தனது சீடர்களிடம் தெரிவித்திருந்தார்! அவரது இயற்பெயர் சித்தார்த்தன் என்று நினைவு! பின்னர் கௌதம புத்தராகினார்! புத்தரின் மகனின் பெயர் ராகுலன்!

ஒரு வேளை...ரஹிம் ...ராகுலனாகி இருக்குமோ?😗

நஞ்சுஊறிய காளானை உண்டதானலதான் புத்தர் மரணித்தார் 
பன்றி இறைச்சி இல்லை.

ஒவ்வருவரும் புத்தரை அழைத்து உணவு கொடுப்பது வழக்கம் 
அவ்வாறே புத்தர் கொல்லன் வீட்டிற்கும் போனார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நஞ்சுஊறிய காளானை உண்டதானலதான் புத்தர் மரணித்தார் 
பன்றி இறைச்சி இல்லை.

ஒவ்வருவரும் புத்தரை அழைத்து உணவு கொடுப்பது வழக்கம் 
அவ்வாறே புத்தர் கொல்லன் வீட்டிற்கும் போனார். 

புத்தரின் மரணம் குறித்துப் பல விதமான கருத்துக்கள் உள்ளன! அவற்றுள் நீங்கள் கூறுவதும் ஒன்றாகும்! புத்தர் அறுபது வருடங்கள் இறைச்சி சாப்ப்பிடாமல் இருந்ததாகவும்... அவரது இளைத்துப் போயிருந்த உடலுக்கு இறைச்சியைச் சமிபாடடைய இயலவில்லை என்றும் கூறுகிறார்கள்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.