Jump to content

நூறு கதை நூறு படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 1 – கிளிஞ்சல்கள்

Kilinjalgal.jpg

பிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய ஒரே ஒரு பிரச்சினை காதல் மட்டும் தான்.காதலிக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்வது ஆகச்சிரமம்.அதில் தோவியுற்றால் தனக்குக் கிடைக்காமல் போன காதலை எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம்.இரண்டு பேரும் காதலிக்கத் தொடங்கினால் அதை இருவீட்டாரிடமும் தெரியப்படுத்தி சம்மதம் பெற்றுத் திருமண வாழ்வில் இணைவது இருக்கிறதே அது பலசுற்றுப் போர்க்காலம்.அப்படிச் சம்மதம் கிட்டாமல் சேரமுடியாமற் பிரிந்த காதலை இரண்டு பேரும் எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம் 2.0.சரி வா அன்பே அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து கொள்வோம் என்று இணைந்து மரணத்தை நோக்கிச் செல்வது காதலின் உன்னதம்.வாழ விட்டார்களா நம்மை என்று கலங்கிய பிம்பங்களாகக் காற்றில் கலைந்த காதலின் கதைகள் தான் எத்தனை எத்தனை..?உண்மையை சாட்சியம் சொல்வதான கணக்கில் சினிமாவில் சொல்லப்பட்ட காதலின் பல கதைகள் அபத்தமான இயல்வாழ்வுக்கு ஒவ்வாத சாக்ரீன் தாமரைகள் தான்.அதிலொன்று கிளிஞ்சல்கள்.

kilinjalgal-1-300x188.jpg

 

சினிமாவுக்குக் காதல்களும் பாடல்களும் அஸ்திவாரம் போன்றவை.கதை சொல்லிகள் என்றைக்குக் காதலைத் தாண்டுகிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆவலோடு கண்பூத்தபடி காத்திருக்கிறார்கள்.அதீதத்தின் நம்பகத் தன்மை அற்ற இந்திய சினிமாவின் உருவேற்றப் பட்ட காதல் படங்களில் இன்னுமொரு காதல் கனவு தான் கிளிஞ்சல்கள்.ஸ்வீட் நதிங் என்று ஆங்கில சொலவடை உண்டல்லவா அப்படி இந்தப் படம் ஒரு ஸ்வீட் நத்திங்.இன்றைய காலத்தின் நிஜத்தை அணிந்து கொண்டு பார்க்கும் போது சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றக் கூடிய கதைக்களன்.நூலாம்படைகளைத் திரட்டிக் கட்டிய கயிற்றை அட்டைக்கத்தி கொண்டு அறுத்தெறிய முடியாத பலவீனத்தின் செலுலாய்ட் சாட்சியம்.டி.ராஜேந்தரின் இசையும் பாடல்களும் இந்தப் படத்தின் ஞாபகம் முற்றுப்பெற்று விடாமல் இசையினூடாகத் தப்ப வைத்திருக்கிறது என்பதே மெய்.அவர்களுக்குப் பிடித்தது.அவர்களது வீட்டாருக்குப் பிடிக்கவில்லை.முடிவில் அவர்கள் இறந்தார்கள் என்பதைத் தாண்டி இந்தப் படத்தின் கதையை இன்றைக்கு வேறு எப்படிச் சொன்னாலும் செயற்கை.

ஐ லவ் யூ என்பது கிட்டத் தட்ட மகா பெரிய சொற்கூட்டாகக் கருதப்பட்ட முந்தைய காலத்தின் இந்தப் படத்தில் காதல் தோற்பதில்லை தோற்பதெல்லாம் காதலர்கள் தான் என்ற வாக்கியத்தை வாய்ஸ் ஓவரில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே love never fails என்று எண்ட் கார்டுடன் உறைந்து போய் முடிவடையும் இதன் கதை எண்பதுகளின் ஆரம்பத்தில் எடுக்கப் பட்ட ஆயிரக்கணக்கான இந்திய காதல் திரைப்படங்களில் இன்னுமொரு படம்.ஜூலி ஐ லவ் யூ என்ற பாடலைத் தவிர்த்து இந்தப் படத்தைக் குறித்துச் சொல்வதற்கான சொற்கள் இல்லை.கலங்கிய நீர்ப்பரப்பில் காலப்போக்கில் உதிர்ந்த கிளிஞ்சல்கள்.

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/கிளிஞ்சல்கள்/

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 2 – நடிகன்

nadikan.jpg

சிரிக்க வைப்பது பெருங்கலை. மீவருகையற்ற ஒற்றைகள் என்பதால் நகைச்சுவைக்கு என்றைக்குமே மகாமதிப்பு தொடர்கிறது.நீர்ப்பூக்களைப் போல தோன்றல் காலத்தே மின்னி மறைந்துவிடுகிற படங்களுக்கு மத்தியில் காலங்கடந்து வெகு சில படங்கள் மாத்திரமே தனிக்கும்.இப்படியான காவியத் தன்மைக்குக் காரணம் அவரவர் மனசு. பிராயத்தினூடான பயணத்தின் இடையில் அந்தப் படத்தை ஒட்டிய சொந்த நினைவுகள் ஒருசிலவற்றின் புனிதத் தன்மையும் கூட காரணமாகலாம்.

nadikan-2-300x206.jpg

நடிகன் முன் காலத்தின் சில படங்களை நினைவுபடுத்தினாலும் கூட கதையின் உலர்ந்த தன்மை எளிதில் யூகித்து விடக் கூடிய சம்பவங்கள் இவற்றையும் தாண்டி வென்றதற்குக் காரணம் திரைக்கதையின் தெளிவான நகர்தல்.மனோரமா இந்தப் படத்தின் இணை நாயகி என்றால் கவுண்டமணி இதன் கூடுதல் நாயகன் எனலாம்.சின்னிஜெயந்த் பாண்டு வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும் குறிப்பிடத் தக்க அளவில் வசன வழி நிலைத்தார்கள்.வெண்ணிற ஆடை மூர்த்தி ஐலண்ட் எஸ்டேட் என்பதை உச்சரிக்கத் தெரியாத இசை ஆசிரியர்.அதன் விளைவான குழப்பங்களால் அவருக்குப் பதிலாக சத்யராஜ் இடம்மாறி வயோதிக வேடம் தரித்து அந்தப் பொய்யை பலநாள் திருடர் கவுண்டமணி தெரிந்து கொண்டு தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இளைஞனாக குஷ்பூவைக் காதலித்துக் கொண்டே தன் வயோதிக வெர்ஷனைக் காதலிக்கும் மனோரமாவிடமிருந்து தப்பி ஓடும் சத்யராஜ் என சின்ன இழையை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் மையக்கதையை நகர்த்தியது மாபெரும் சவால்.

இளையராஜா இசை வாலி பாடல்கள் அசோக்குமார் ஒளிப்பதிவு சத்யராஜ் குஷ்பூ இணை சேர்ந்து நடித்த இந்தப் படத்தின் வசனங்களை எழுதி கதை திரைக்கதை அமைத்து இயக்கியவர் பி.வாசு.ஆள் மாறாட்டம் வயோதிகராக நடிப்பது ஒரு தலைக்காதலை ஏற்க முடியாமல் தடுமாறுவது திருடனை ஒளித்து வைத்துப் புகலிடம் தருவது ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வதென்று எல்லா விதங்களிலும் வழமையான அதே நேரத்தில் கனமான சிரிப்புக் காட்சிகளுடன் இந்தப் படம் 1990 ஆமாண்டு நவம்பர் 30 அன்று வெளியானது.

இதற்கடுத்த படமாக வாசுவின் சின்னத் தம்பி வெளியாகி ஊரையே திரும்பச் செய்தாலும் வாசு இயக்கியவற்றுள் அதன் நகைச்சுவைக் காட்சிகளுக்காக இன்றைக்கும் விரும்பப் படுகிற படமாக நடிகன் இருக்கிறது.ஒரு நல்ல திரைப்படத்தின் இலக்கணம் அதனை மீவுரு செய்வதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.அந்த வகையில் நடிகன் காலங்கடந்த நவரசம்.

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறுபடம்-நூறுகதை-2-நடிகன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 3 – மௌனராகம்

mr7.png

ன்றைக்கும் இதன் கார்த்திக் ரேவதி எபிஸோடை முன்வைத்து தங்கள் கதையின் முதற்பாதியைத் துவங்க நினைத்துக் கதை பண்ணுகிற பலரும் கோடம்பாக்கத்தைத் தாண்டி அருகாமை ஆந்திர கேரளங்களிலும் உண்டு.பழைய காதலனாக மனோகர் எனும் சிறு பாத்திரத்தில் வந்தது தெரிவதற்குள் கொல்லப்படுகிற பட்டாம்பூச்சிக் காதல்யுவனாக கார்த்திக் தோன்றியது அந்தக் காலகட்டத்தின் இளம்புதுக் காதல்ராஜாவாக அவரை ஆக்கித் தந்தது.

mr4-300x226.png

மறக்க விரும்பாத  பழைய காதல் மீதான பரிவேக்கத்தை ரேவதி அழகாக முன்வைத்தார்.தகப்பனிடம் திருமணம் வேண்டாம் என்று தவிர்க்க முடியாத ரேவதி தன்னை மிகவும் விரும்பி மணமுடிக்கும் மோகனோடு டெல்லி செல்கிறார்.புதிய வாழ்வின் ஜிகினாஜீரா எல்லாம் அற்றுப் போய் தன்னிடம் முதல் பரிசாக மனைவி கேட்கும் விவாகரத்தை அவள் விருப்பப் படியே அவளுக்கு வழங்க முற்படுகிறான் கணவன்.நீதிமன்றம் ஒரே வீட்டில் சில காலம் வாழ அறிவுறுத்துகிறது.அதன் முடிவில் மலரினும் மெல்லிய கணவனின் மென்மனதின் முன் பிடிவாதங்கள் அற்றுப் போய் விவாகரத்தை ரத்து செய்துவிட்டு வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள் தம்பதிகள்.கொஞ்சம் மிஞ்சியிருந்தால் மோகன் பாத்திரம் செயற்கைவீதிகளுக்குள் கால்பதித்திருக்கும்.

இளையராஜா இன்னொரு இயக்குனராகவே செயல்பட்டார்.இதன் தீம் ம்யூசிக் இழைகளை மனனம் செய்திருக்கும் பெருங்கூட்டத்தில் நானும் ஒருவன்.மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ பாடல் இன்றும் சோகதேசத்து ஆன்ம கீதமாய் வாதையின் பெரும்பாடலாய் நிரந்தரித்திருக்கிறது.சின்னச்சின்ன வண்ணக்குயில் பாடல் ஏகாந்தத்தைப் படமாக்கிய தமிழ்ப் பாடல்களில் இன்னொரு நல்வைரம்.பனி விழும் இரவு சொல்ல முடியாத காதலின் வதங்கலை அழுத்தமாய்ப் பதிந்தது.நிலாவே வா பாடல் ரேடியோ ஹிட்களில் முதலிடத்தைப் பல காலம் தன்னகத்தே வைத்திருந்தது.

ஒரு முறை மாத்திரம் நிகழும் அற்புதமாகவே இந்தப் படத்தைத் தன் ஒளிப்பதிவால் ஸ்ரீராமும் இசையால் இளையராஜாவும் குரலால் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் சித்ராவும் வரிகளால் வாலியும் இயக்கத்தால் மணிரத்னமும் வார்த்திருந்தார்கள்.இதே படத்தின் திரைக்கதையை  சுட்டுப் பொறித்து பாதிக் கொதியலாக பின் நாட்களில் ராஜாராணி என்றொரு படம் வந்தது.நிஜத்துக்கு அருகாமையிலிருந்தாலும் நிழல் நெளிந்து தரையில் வீழ்ந்தாகவேண்டும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஓங்கி ஒலித்த ராகமாலிகையாக இந்தப் படம் இன்றும் எல்லோரின் பெருவிருப்பமாய்த் தனிக்கிறது.

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-சினிமா-3-மௌனர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 4 – சபாஷ் மீனா

aathma-poster.jpg

சபாஷ் மீனா

தனவந்தர் சதாசிவத்தின் மகன் மோகன்.ஊதாரி.பொறுப்பற்றவன்.தந்தையின் கோபத்திற்கு அப்பால் அவர் நண்பர் அப்பாதுரை வீட்டுக்குப் பட்டணத்துக்கு அனுப்பப் படுகிறான். பணக்கார மோகன் இடத்திற்கு ஏழைசேகர் மாறுகிறான். ஏழையாகத் தன்னை மாற்றிக்கொண்டு காதல் பித்தேறி அலைகிறான் மோகனஅவன் விரும்புகிற யுவதியோ பணம் என்றாலே வெறுப்பவள்.தன் அப்பாவின் சினேகிதர் மகன் என்றதால் எளிதாகக் கல்யாணம் கூடும் என்ற முதல் வரியைப்பற்றிக் கொண்டு புதிய மோகனை நிஜமோகன் என்று நம்பி காதலிக்கிறாள். அப்பாதுரையின் மகள் மாலதி. இரண்டு மோகன்கள் இரண்டு காதல்கள் ஒரு நிஜப் பொய்.  ஒரு பொய்நிஜம். ஆள்மாறாட்டம். பிடிபடும் வரை கதைரதம் நகர்வதில் பிசகில்லை. பிடிபடுங்கணம் உண்மை அவிழ்ந்து காதல்கள் கூடி சுபம்.

sabash1.jpg

பி.ஆர் பந்துலு திரைக்கதையைப் படமாக்குவதில் மேதை. ப.நீலகண்டனின் எழுத்தில் சபாஷ் மீனா காலங்கடக்கும் அற்புதம். ரங்காராவ் பி.எஸ்.ஞானம் பி.ஆர் பந்துலு போன்றவர்களின் பங்கேற்புகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் குன்றாவொளி சந்திரபாபு. சேகராகவும் ரிக்சாவண்டி இழுக்கும் சென்னைவாசியாகவும் இரட்டை வேடங்களை ஏற்ற சந்திரபாபு பேசிய சென்னைத் தமிழ் படம் வந்த காலத்தில் மட்டுமல்லாது இன்றைக்கு வரை உலராப்பெருநதியாக தொடர்ந்து புகழப்படுகிறது.

sabash2.jpg

நகைச்சுவையின் கடினம் முயன்று பார்த்தால் தெரியும். தொண்ணூறுகளின் மத்தியில் வெளியாகிப் பெரும்வசூலையும் புகழையும் எய்திய உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மைய இழை அப்படியே சபாஷ் மீனா தான். நகல்நதியே பெருவெள்ளமாய் ஓங்குகிறதென்றால் நிசத்தின் நீர்மை குறித்துப் பேசத் தேவையில்லை. ஆரம்பக் காட்சி தொடங்கி , படம் நிறைவு வரைக்கும் சபாஷ் மீனா சிரிப்புப் படங்களில் முதல் சிலவற்றில் இடம்பிடிக்கும். இதன் இந்தி மீவுரு தில் தேரா தீவானாவுக்காக தமிழில் சந்திரபாபுவின் பாத்திரத்தை ஏற்ற மெஹ்மூத் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை 1962 பெற்றார்.
மிகத்தைரியமான திரைக்கதை அமைப்புக்காகவும் இந்தப் படம் முக்கியமானது. டைப் அடித்துக் கொண்டே புகை பிடித்துக் கொண்டே பேசுகிற காட்சியில் சந்திரபாபுவின் முகபாவங்கள் மகாரசம். ஓட்டல் அறையைக் காலி செய்வதற்காக ஆட்கள் வரும்போது மெய் மறந்து தான் வாசிக்கும் இசையில் தன்னையே மறந்து கொண்டிருக்கும் காட்சியில் சிவாஜி அள்ளுவார். சிவாஜியும் சந்திரபாபுவும் மறுபடி சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் வெடியைக் கொளுத்திக் கையில் பற்றினாற் போல் அதகளம். டி.ஜி.லிங்கப்பாவின் இசையும் கு.மா.பாலசுப்ரமணியத்தின் சொல்லாடலும் படத்தின் பலங்கள். சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி இன்றளவும் நின்றொலிக்கும் நல்லிசை.

தமிழின் மறக்க முடியாத நகைச்சுவைப் படங்களில் ஒன்று சபாஷ் மீனா.

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/சபாஷ்-மீனா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தொகுப்பு கிருபன், தொடருங்கள்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 5 – ஜானி

aathma-poster-2.jpg

ரட்டை வேடப்படங்கள் இரு விதம்.ஆள்மாறாட்டத்தை முன்வைக்கிற வழமையான கதை.அல்லது அதனைத் தாண்டிய விஷயங்களைத் தன்னால் ஆன அளவு பேசிச்செல்லும் கதை.இந்த இரண்டாம் வகைமையின் முக்கிய படவரிசையில் ஒன்று ஜானி.

யாரோ ஒருவன் செய்த தவறுக்கு அவனைப் போன்ற இன்னொருவன் தொடர்ந்து தண்டிக்கப்படுவான் என்றால் தன்னைப் போலிருக்கும் அந்த இன்னொருவன் கணக்கில் தனக்கு மிகவும் தேவையான இரண்டு கொலைகளைச் செய்து கொள்ளுகிற வித்யாசாகர் எனும் முடி திருத்தும் கலைஞனாகவும், ஜானி எனும் மேம்போக்குத் திருடனாகவும் ரஜினிகாந்த் இரு வித்தியாச மனிதர்களின் வேடங்களை ஏற்ற படம் ஜானி.

2-1.jpg

மற்றுமொரு இரட்டை வேடப் படமாகத் தகர்ந்து போயிருக்கவேண்டிய ஜானி, தமிழின் நிரந்தரக் கொண்டாட்ட சினிமாக்களின் வரிசையில் ஒன்றெனத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்கான முக்கியமான காரணம் அந்தக் கதை வழங்கப்பட்ட விதம். நீர்வீழ்ச்சி ஒன்றும் சற்றே நடக்கிற தூரத்தில் குளமொன்றுமாக நீரின் இருவேறு அருகாமை விலாசங்களாகத் தனித்தும், விலகியும் காணப்பட்ட கதாபாத்திரப் புனைதல்தான் ஒரு நடிகனின் இருவேறு பிரதிபிம்பங்களாகப் பார்க்கப்பட்டிருக்க வேண்டிய இரட்டை வேடப் பாத்திரங்களைத் தன்னாலான அளவு வித்தியாசம் செய்தார் ரஜினி.

இதன் இரு பெண் கதாபாத்திரங்களும் இருவேறு வான் எல்லைகளாகவே கதைப் பறவையின் அலைதலின் முன் விரிந்தன. நான்கு வெவ்வேறு மனிதர்களை, இடை முரண் கொண்டு பிணைத்து ஒரே பெட்டியில் இட்ட வேறுபட்ட சர்ப்பங்களைப் போல் மகேந்திரனின் கதைப்பாங்கு அமைந்திருந்தது. சொல்லிச் சொல்லி வார்த்தாற் போல் ஸ்ரீதேவியும், யாராலும் யூகிக்க முடியாத தீபா உன்னிமேரியும், சுருளிராஜனும் ஜானி படத்தின் கதையை நிகழ்த்திய முகங்கள்.

அஷோக் குமாரின் ஒளிப்பதிவு, குறிப்பாக இரட்டை வேடங்கள் ஒன்றிணையும் காட்சிகள், அவற்றுக்கான கோணங்கள், மேலும் ”செனோரிட்டா”, ”ஆசையக் காத்துல தூது விட்டு” பாடல்கள், ரஜினிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனங்கள் கண்ணில் ஒற்றிக் கொள்கிறாற் போன்ற ஜானி படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் தைலவண்ணங்களைக் கொட்டி உருவாக்கப் பட்ட மாபெரிய கலாவுலகமாகவே காண்போர் நெஞ்சங்களில் உறைந்தன.மழையும் தனிமையும் மந்தகாசமும் பொறாமையும் வெம்மையற்ற பருவங்களுமாக இதுவரை அழுத்தமாய்ச் சொல்லப்படாத இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைக் கூடத் தன் போக்கில் கதையின் உபபாத்திரங்களாகவே கையாண்டது ஜானி.

1.jpg

இந்தப் படத்தின் தீம் இசை, பாடல்களோடு இசைத்தட்டில் இடம்பெற்றது. மந்தகாசத்தின் வெறுமையை அதன் பல்வேறு கிளைத்தல் நகர்தல் மற்றும் முறிதல்களை, படத்தின் பின்னணி இசையாக்கி வழங்கினார் இளையராஜா. ஐந்தில் ஒரு பாடலைக் கண்ணதாசனும், மற்றவற்றை கங்கை அமரனும் எழுதினார்கள்.

ஜானி தமிழ் மொழியினூடாக திரைப்படத்தைக் கற்க விரும்புகிற புதியவர்களுக்குக் கதையாகவும் காட்சியாகவும் நடிப்பாகவும் வழங்கப்பட்ட விதமாகவும் பாத்திரமாக்கல் மற்றும் வசனம் பாடல்கள் எனப் பல்வேறு காரணங்களுக்காக முக்கியமான படம்.இதனைப் பின் தொடர்ந்து செல்கையில் தமிழில் முயலப்பட்ட அசலான கலாமேதமைப் படங்களின் நூதன பட்டியல் ஒன்றை உருவாக்கிட முடியும்.1980 ஆமாண்டு வாக்கில் வெளியான ஜானி இன்னமும் அதன் மேற்சொன்ன மேன்மைகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஆச்சர்யம் மட்டுமல்லாது அதன் அபூர்வத்திற்கான விளக்கமும் கூட.

மீவுரு செய்ய முடியாத  சாக்லேட் சிற்பம் ஜானி.

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/5-ஜானி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 6 –  காதலிக்க நேரமில்லை

aathma-poster-3.jpg

ரு மலையின் உச்சியிலிருந்து இன்னொரு மலையின் உச்சிக்குத் தாவினாற் போல் தன் படங்களின் கதாநிலத்தை ஒன்றுக்கொன்று யூகிக்கவே முடியாத வித்யாசங்களைக் கொண்டு அமைத்தவர் இயக்குநர் சீ.வி.ஸ்ரீதர்.ஒவ்வொரு மனிதரைக் கொண்டும் காலம் தன் கையெழுத்தை இடும்.அந்த வகையில் ஸ்ரீதரின் காலம் என்று ஒரு முழுமையான கலாவுலகத் தேருலா இருந்தது என்று சொல்ல முடியும்.எத்தனையோ படங்களை இயக்கி இருந்தாலும் காலத்தை வென்ற ஸ்ரீதரின் படைப்புகளில் முதன்மையானது 1964ஆம் ஆண்டு அவர் உருவாக்கி அளித்த காதலிக்க நேரமில்லை.

cinima-column-6-300x225.jpg

சின்னமலை எஸ்டேட்டுக்கு மட்டுமல்ல  பெரும் காசுக்கும் அதிபதி விசுவநாதன்.ஒரே மகன் செல்லப்பா சினிமா எடுக்கப் போவதாக சுற்றித் திரிய பட்டணத்தில் கல்லூரி படிப்பு முடித்து விட்டுத் தகப்பன் வீடு நோக்கி வருகின்றனர் அவரது மகள்கள்  காஞ்சனாவும் நிர்மலாவும் தந்தையின் எஸ்டேட் மேனேஜராக இருக்கும் அஷோக்கோடு முட்டிக் கொள்கிறது நிர்மலாவுக்கு.காஞ்சனாவின் மனம் ஏற்கனவே சென்னையில் தனக்கு அறிமுகமான வாசுவின் வசம் இருக்கிறது.வாசுவும் அஷோக்கும் பலகால சினேகிதர்கள்.

விசுவநாதனின் அகந்தை நிர்மலாவின் செல்வத் திமிர் அஷோக்கின் வேலை போகிறது.எஸ்டேட்டை விட்டுக் கிளம்ப மறுக்கும் அஷோக் ஒருதலையாக நிர்மலாவை காதலிக்கத் தொடங்குகிறான்.நண்பனின் காதலை நிறைவேற்றித் தருகிற பரோபகார நோக்கத்திற்காக மாபெரும் செல்வந்தர் சிதம்பரமாக வயோதிக வேடம் பூண்டு அங்கே வந்து சேர்கிறான் வாசு.தன்னை விடப் பணம் என்றதும் விசுவநாதன் வாயெல்லாம் பல் ஆகிறார்.அவர் மகன் செல்லப்பாவோ ஓஹோ ப்ரொடக்ஷன்ஸ் எனும் தன் கனவுசினிமா நிறுவனத்தின் வாயிலாகத் தான் எடுக்க விழையும் படத்திற்கு செல்வந்தரிடமிருந்து கதையும் பணமும் கிடைக்காதா என்று முயன்று பார்க்கிறான்.வாசுவின் தந்தையும் விசுவநாதனும் பால்ய ஸ்னேகிதர்கள் என்பது ஒரு முடிச்சு.வாசுவுக்கும் விசுவத்தின் மகள் காஞ்சனாவுக்கும் பேச்சளவில் திருமணம் நிச்சயமாகிறது.

cinima-column-1-300x225.jpg

ஆள்மாறாட்ட போலிவேடதாரி குழப்பங்கள் யாவும் தீர்ந்து விசுவநாதனின் மூன்று மக்களுக்கும் ஒரே தினம் அடுத்தடுத்த கூடங்களில் திருமணம் நிகழ்ந்தேறுவதோடு சுபம் என்று நிறைகிறது காதலிக்க நேரமில்லை படம்.

நாகேஷ் மற்றும் பாலையா இருவருடைய ஒப்பிடுவதற்காகாத நடிப்பு இந்தப் படத்தின் முதல் பலம்.கதையின் எல்லாக் காட்சிகளிலும் வண்ணத்தைப் போலவே செல்வந்தம் ததும்பும் இப்படியொரு படம் இதற்கு முன் வந்ததில்லை என்றாற் போல் எஸ்டேட் பங்களா மலைப்பாதைகள் கார் ஜீப் இத்யாதிகள் எனப் பலவும் இப்படத்தின் கதை நகர்வுக்குத் துணை நின்றன.பாடல்களும் இசையும் தொய்விலாப் பேரின்பத்தை வழங்கின.நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா தா பாடல் முன்பின் அறியாத தன் பூக்குரலால் ஒளிரச் செய்தார் ஜேசுதாஸ்.

நாகேஷ் தன் முகமொழி மூலமாகவும் குரலாலும் ஏற்ற இறக்கங்களொடும் அடுத்தடுத்த காட்சிகளை விவரிப்பதன் மூலமாகத் தன் திரைப்படத்துக்கான கதையை தந்தை பாலையாவுக்கு விவரித்து அவர் முதுகுத் தண்டை உறையச் செய்யும் காட்சி இந்தியத் திரைவானின் ஆகச்சிறந்த நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்றெனத் தனிக்கிறது.

தொடரலாம்

அன்போடு

ஆத்மார்த்தி

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/6-காதலிக்க-நேரமில்லை/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 7 – மைக்கேல் மதன காமராஜன்

aathma-poster-3.jpg

ஞ்சு அருணாச்சலத்தின் பி.ஏ.ஆர்ட் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 1990ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம், ‘மைக்கேல் மதன காமராஜன்’. உலகெல்லாம் காணக் கிடைக்கிற தந்தையும் மகனும் சாயல் ஒற்றுமை, இரட்டைப் பிறவிகள் போன்ற நூலாம்படை லாஜிக்குகளை வைத்துக்கொண்டு எண்ணற்ற இரட்டைவேட படங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஒருவகையில் மது அருந்துபவர்களுக்குத் தன்னை மறக்கத் தேவையான கூடுதல் போதைபோலவே ஒரே நாயகனின் இரட்டை வேடமேற்றல் ரசிகனுக்கு உளத் திருப்தியைத் தந்திருக்கக்கூடும். அப்பாவும் இரு மகன்களும் என்று அதுவே மூன்றுவேடப் படங்களானது. ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லை என்கிறரீதியிலும் படங்கள் வந்தன.

image1-300x169.jpg

கிரேஸி மோகனின் எழுத்தோடு, இளையராஜா இசையில், சிங்கிதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் ‘மைக்கேல் மதன காமராஜன்’  நான்கு எனும் எண்ணைக்கொண்டு நாயகத்துவத்தை வகுத்தது. கமல்ஹாசனின் திரைவாழ்விலும் மெச்சத்தக்க பெயரைப் பெற்றுத்தந்தது. குரல், உடல் மொழி, நடை, என பாத்திரங்களுக்கு இடையில் அவர் காண்பித்த நுட்பமான வேறுபாடு ரசிக்க வைத்தது. பாலக்காட்டு பிராமணத் தமிழும், லேசான சென்னைத் தமிழும், வெளிநாட்டிலிருந்து பிறந்தகம் திரும்புகிறவனின் தமிழும், குறைவாகவே எப்போதும் பேசுகிற மைக்கேலின் தமிழுமாக வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் காட்டினார் கமல்.

இதன் மைய இழை உறவினர் சதியால் பிரிந்தவர் கூடினால் எனும் ஒற்றை இழை. நாசர், நாகேஷ், எஸ்.என்.லட்சுமி, டெல்லி கணேஷ், ‘பீம்’ பிரவீண் குமார், வெண்ணிற ஆடை மூர்த்தி, அனந்து, சந்தானபாரதி, ஆர்.எஸ்.சிவாஜி என எல்லோருடைய வாழ்விலும் பெருமைக்குரிய ஞாபகவில்லையாகவே இந்தப் படம் மாறியது. கதையின் மையக்கரு ஆள் மாறாட்டக் குழப்பம் என்றாலும்கூடக் குழப்பமற்ற திரைக்கதையும் எடுத்த விதமும் படத்தை நிமிர்த்தித் தந்தன. ஊர்வசி இந்தப் படத்தின்மூலமாகத் தன்னை உபாசிக்கிறவர்களின் எண்ணிக்கையைப் பலமடங்கு பெருக்கினார். திருவிழாக் காலத்துக் கொண்டாட்ட மனோநிலையாகவே இந்தப் படத்தின் பாடல்களை உண்டாக்கினார் ராஜா. ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்’ கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு வழியாகக் கேரளாவுக்குச் செல்லும் தென்னங்காற்று கலந்த இந்தப் பாடல் பலகாலம் தமிழர் கீதமாக ஒலித்தது. நாகேஷுக்கும் கமலுக்குமிடையே நடிப்பின் வழி யுத்தமே நடந்தது எனலாம்.

மைக்கேல் மதன காமராஜனின் மாபெரிய பலங்களில் ஒன்று, எளிய திரைக்கதை போலத் தோன்றினாலும் யூகிக்க முடியாத அதன் திருப்பங்கள்தான். இரட்டை வேடப் படம் என்றால் ஆள் மாறாட்டம், அதனால் ஏற்படும் குழப்பம் என்று வழக்கமான செலுத்துதல் இருக்கும். இங்கேயோ வேடங்கள் நான்கு.

‘மாண்புமிகு குத்துவிளக்கை அமைச்சர் ஏற்றுவார்’ எனக் கிடைத்த இடத்திலெல்லாம் சிரிக்க வைத்துச் சிதறடித்தார் கிரேஸி.

22-300x188.jpg

அவினாசி நாகேஷைப் பொறுத்தவரையில் எதிரே இருப்பது மதன். உண்மையில் அங்கு மாறியிருப்பது ராஜு. பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டால் திருப்பித் தந்துவிடுவதாக மதன் சொன்னபோதெல்லாம் அதைக் கேட்காமல், மதன் கெட்டு ராஜு வந்தபிறகு ராஜ நம்ஸ்காரம் செய்து, பயனற்றுப் போகும். தன் இருபத்து ஐந்தாயிரம் கடன் குறித்து நினைத்த மாத்திரத்தில் மதன் பாடத் தொடங்க, ‘என்ன சார், என் கஷ்டத்த சொல்லிட்டிருக்கேன், இவ்வளவு அசிங்கமா பாட்றிங்க?’ என்பார் நாகேஷ். ‘அசிங்கம்னா ஓரளவுக்கு சுமாரா பரவால்லாம நல்லாவே பாடறிங்க’ என்று சமாளிப்பார். ஆனாலும் அது பலனளிக்காது.

கெஞ்சிக்கொண்டே ‘ஏழப் பாட்டி எதோ தெரியாத்தனமா திருடிட்டேன்’ என்று காமேஸ்வரனை நடுக்கூடத்துக்கு நகர்த்தி வருவார் பாட்டி. வழியிலேயே மடியில் கட்டிய பொருட்களை சேஃபாக உதிர்த்திருப்பார். கூட்டத்தைக் கூட்டி, தன் பேத்தி கையைப் பிடித்து காமேஸ்வரன் இழுத்துவிட்டதாகப் புதுக் கதையைத் தொடங்குவார். பாட்டியைக் காட்டிக்கொடுக்காமல் அமைதிகாக்கும் திரிபுரசுந்தரியின் பரிதவிப்பு அபாரம். இந்த ஐந்து நிமிட அதே கான்ஸெப்ட் பிற்பாடு வடிவேலுவின் ஆகப் புகழ்பெற்ற கையப் பிடிச்சு இழுத்தியா என்று வேறொரு வலம் வந்தது.

மதனின் ஆங்கிலப் புலமையை வியந்தபடி கேச் மை பாயிண்ட் என்று சொல்லிப் பார்த்து ‘இதெல்லாம் அப்டியே வர்ரதுதான் இல்ல’ என்பார் கமல். அரிசியில் ஓவியம் வரையப்பட்டிருப்பதைப் புகழ்ந்து  ‘கலையரிசி’ என்பார் குஷ்புவிடம். என்னதான் காமெடி படம் என்றெல்லாம் வகைமைப்படுத்திவிட்டாலும் தன்னையறியாமல் அபாரமான ஒரு உணர்தலை நிகழ்த்தும் காட்சியும் உள்ளிருந்தே தீரும். தான் தந்தை அல்ல என்று தெரிய நேரும்போது, ‘என்னை விட்றமாட்டல்லப்பா’ என்று மைக்கேலைப் பார்த்து சந்தானபாரதி கேட்கும் காட்சி ஒரு கணத்தின் பாதி உறையச் செய்யும்.

தன்னை வெளியே எறியச் சொன்னதற்காகத் தூக்கிக்கொண்டுபோகும் பீமனைப் பார்த்து, ‘பீம் கண்ணா நா ரொம்ப கனக்கறேனா?’ என்பார் நாகேஷ். ‘உங்களுக்கு ஒரு வாரம் டயம் தரேன்’ என்று சொல்லும் முதலாளி மதனிடம், அவசரமாக இடைமறித்து, ‘ஒரு வருஷம் டயம் குடுத்தாலும் என்னால மாடியிலேருந்து கீழ குதிக்க முடியாது சார்’ என்பார்.

image1-300x169.jpg

எல்லாவற்றுக்கும் மேலாக, பழைய கலையின் கைவிடப்பட்ட மனிதர்களில் ஒருவராக, மனோரமா இந்தப் படத்தில் சில காட்சிகளே என்றாலும் பிரமாதப் படுத்தியிருப்பார். சிவராத்திரி பாடலுக்குச் சற்று முன்னால் மகளிடம் பேசுகையில் குரலாலும் முகமொழியாலும் பல உணர்வுகளை ஒருங்கே பிரதிபலிக்கும் பார்வையாலும் கோலோச்சியிருப்பார் மனோரமா.

தமிழர் திரை ரசனையில் சகலகால விருப்பமாகக் கலாச்சார மலர்தலாக நிகழ்ந்த மைகேல் மதன காமராஜன் படம் எப்போதும் சலிக்காத ரசனை ஊற்று.

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-படம்-7-மைக்கே/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 8 – ஆரண்யகாண்டம்

aathma-poster-3.jpg

மிழ்த் திரையுலகத்தின் புத்தம் புதிய முயல்வுகளுக்கென்று தனித்த வரிசை எப்போதும் உண்டு. வெளியாகிற காலத்தைத் தாண்டி வேறொரு ஓட்டகாலத்தைத் தங்களுக்கென்று தேர்வெடுத்துக்கொள்ளும் இப்படியான படங்கள் மக்களுடைய விருப்பநதி செல்லவேண்டிய அடுத்த வளைதல்களைத் தீர்மானித்துத் தருபவையும் கூட. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.பி.பி.சரண் தயாரித்து வழங்கிய ‘ஆரண்ய காண்டம்’ அப்படியான நதி நகர்தல்களில் ஒன்று.

இன்று என்பது ஒரு தினமா அல்லது எப்போதும் எஞ்சிக்கொண்டே இருக்கக்கூடிய ஒற்றையா என்பதை எடுத்துப் பேசுகிற கலைப்படைப்புகள் எல்லா நிலங்களிலும் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து இருந்துவருபவை. தத்துவார்த்தமாகவும் சித்தாந்தமாகவும் அதீதங்களுக்குள்ளேயும் தேடிப் பார்த்து விடையறியும் எத்தனங்கள் ஒருபுறம் இருக்க தேடலே விடை என்றாற்போல் கலை அதே விடயத்தைக் கையாளும். இந்தப் படத்தின் திரைக்கதை அதன் மைய இழை இன்று எனப்படுகிற ஒரே ஒரு தினத்தோடு பலரது வாழ்வுகளைத் தொகுக்கத் தொடங்கி அந்த தினத்தின் முடிவோடு அடங்கிவிடுகிறது.

MV5BZDAyOTk5MjQtZmQzMi00YTU5LTg5MjAtZTc5

 

மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கான சாட்சியமாகவும் கதை எனும் கலைவடிவம் எஞ்சக் கூடும். எப்படிப்பட்டவர்கள் அல்ல என்று வாதிட்டுக் கொண்டிருக்க தேவை இல்லை. பொது எனும் சொல்லுக்கு அருகாமையில் எப்போதும் வரப்போவதில்லை என்கிற நுட்பமான வித்யாசத்துக்கு அப்பாலான சில குறிப்பிட்ட மனிதர்களின் உயிராட்டமே ஆரண்ய காண்டம். நோக்கமும் சூழலுமே மனிதனை செலுத்துவதும் இயக்குவதும் ஆகிறது என்பது பலமுறை பேசப்பட்ட பொருள்தான். இங்கே பேசியவிதம் குறிப்பிடத் தக்கதாகிறது.

பசுபதி உதிர்த்த ஒரு கூடுதல் சொல் அவனை அந்தத் தினம் முழுவதும் ஓடச் செய்கிறது. கஜபதிக்கும் கஜேந்திரனுக்கும் அவர்களுக்கு உரித்தான பொட்டலம் ஒன்று கைக்குக் கிடைக்காத வெறி அந்த தினத்தின் எல்லா பொத்தான்களையும் திறந்து பார்க்கச் செய்கிறது. சிங்கபெருமாளுக்குத் தன்னோடே இருப்பவன் தன்னை நோக்கி உதிர்க்கும் ஒரு சொல்லைத் தன் ஆழ்மன உலகத்தின் வேறொரு வீழ்ச்சியோடு பொருத்திப் பார்த்ததன் விளைவு அந்த தினத்தின் விசத்தை அவர் மனதில் பூசிவிடுகிறது. சுப்புவுக்கு இதுவரைக்கும் தான், மேற்கொண்ட தவகாலத்திற்கான வெளிச்சவரம் அந்த தினத்துக்குப் பிறகு இன்னொருமுறை கிடைக்குமா என்று தெரியாத நிலையில் தன் கதையைத் தானே எழுதிக் கொள்ளக்கூடிய தங்கவாய்ப்பு ஒன்றாக அந்த தினம் மலர்கிறது. சப்பை என்று எல்லோராலும் நிராகரிக்கப்படுகிற கோமாளிக்கு அன்றொரு தினம் ராஜாவாகும் வாய்ப்பினை வழங்குகிறாள் சுப்பு. சந்தோஷமாக ஆடு கொலைக்களன் நோக்கி ஆடியபடி நகர்கிறது. தன் தகப்பன் காளையனின் கடனை அடைப்பதற்காக சேவல் சூது ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக சேவலை ஒரு கரத்தில் ஏந்தியபடி நகரத்தின் உள்ளே வந்திருக்கிறான் கொடுக்காப்புளி. அந்த நாள் தன் சாயங்காலத்தை நோக்கி விரைந்தோடுகிற மாயரயில். அவரவர் நிறுத்தம் வரும்போது முடிந்தேறுகிறது அவரவர் கதை.

யுத்தத்தின் கடைசி நாள் அல்லது ஊழிக்காலத்தின் முடிவுநாள் என்பதை குறியீடாகக் கொண்ட படங்கள் தென் இந்தியாவில் குறைவே. ராம்கோபால் வர்மா எடுத்துரைத்த குற்றவுலகத்திற்கு அப்பால் தியாகராஜன் குமாரராஜா இந்தப் படத்தில் நமக்கெல்லாம் காணச் செய்த குற்றவுலகம் அலாதியான துல்லியத்தைத் தனதே கொண்டது.

Aranya-Kandam-Plumeria-Movies-300x135.jp

 

கதையின் வழமை நகர்தல்களை ரத்து செய்தது ஆரண்ய காண்டம் படம். என்ன என்பதை சொல்லிவிட்டு அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் மெல்லத் திறந்து வைத்தபடி கதையை மொத்தமாக உடைத்துச் சிதறடிப்பதன்மூலமாக யூகங்களுக்கு அப்பால் தனித்த இருளீர முகடொன்றில் காண்பவர் மனங்களைச் செருகி வைத்தார். அனாயாசமாக படத்தின் முடிவுவரை ஒரே கயிறற்ற கயிற்றில் கட்டுண்டு கிடந்தது பார்வையாள மனம்.

பி.எஸ்.விநோதின் ஒளிப்பதிவு ஒற்றி எடுத்த ரகசியத்தின் வரைபடம்போல முன்னர் அறியாத அனுபவமாகவே நேர்ந்தது. ரியல் சவுண்ட் மற்றும் ரியல் லைட் என்பதை பரீட்சார்த்தமாக ஆங்காங்கே முயன்ற படங்களுக்கு மத்தியில் யுவனின் இசை மாத்திரமே பல பக்கங்கள் பேசுவதற்குரிய இடுபொருளானது. யுவன் இந்தப் படத்திற்கென பின்னணி இசையை உருவாக்க மிகவும் மெனக்கெட்டிருந்தார். அது கைகொடுத்தது. செஃபியா வண்ணத்தையும் மெக்ஸிகன் நிலத்தையும் போர்த் தனிமையையும் தந்திரங்களின் விடுபடுதலையும் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ம்யூசியத்தின் காலகால தூசிப்படர்தலையும் பாதியில் உறைந்த மழைக்காலத்தின் கடைசி மழையையும் இசையில் கொணர்ந்தது யுவனின் வித்தகம்.

ஜாக்கி ஷெராஃப், யாஸ்மின், பொன்னப்பா, குரு சோமசுந்தரம், ரவிகிருஷ்ணா, சம்பத்ராஜ், மாஸ்டர் வஸந்த் பாக்ஸர், ஆறுமுகம், பாக்ஸர் தீனா மற்றும் 5ஸ்டார் கிருஷ்ணா என படத்தில் பங்கேற்ற அத்தனை நடிகர்களும் தங்கள் நிஜம் அழித்து நிழலாய்ப் பெருகினர்.

படத்தில் ஆங்காங்கே இழையோடும் மெல்லிய கார்பன் ஹ்யூமர் எனப்படுகிற சாம்பல் நகைச்சுவை தமிழ் சினிமா முன்னர் அறியாதது.

நீ மட்டும் உயிரோட இருந்த உன்னை கொன்னுருப்பேன் என்று ஒரு இடத்தில் சொல்லும் கஜேந்திரன் பாத்திரம் தன்னிடம் வந்து ஜோசியம் சொல்ல முயலும் 5ஸ்டார் கிருஷ்ணா மனசுக்குள் ரெண்டு பூக்கள் நினைத்துக்கொள்ள சொல்லிவிட்டு ஒவ்வொரு பூவாய் சொல்லி முடிக்க எல்லாவற்றையும் மறுப்பார். நீங்க மனசுல நெனச்ச அந்த ரெண்டு பூ என்னன்னு சொல்ல முடியுமா எனக் கேட்கும் கிருஷ்ணாவிடம் ப்ரபூ குஷ்பூ எனும்போது திரையரங்கம் உடைந்து சிதறும்.

உங்கப்பான்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமா எனக் கேட்கப்படும்போது கொடுக்காப்புளி சொல்லும் ஒருவரி பதில் பல தினங்கள் மனசுக்குள் ஒலித்தவண்ணம் இருந்தது
இல்லை… ஆனாலும் அவர் என் அப்பா.

ஆரண்ய காண்டம் மனிதவாழ்வின் மிருகவாதம்.

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-படம்-8-ஆரண்ய/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 9 – கரகாட்டக்காரன்

aathma-poster-3.jpg

சேந்தம்பட்டி முத்தையன் தாய் வளர்த்த பிள்ளை. அன்னையே குருவாகக் கற்பித்த கரகாட்டத்தை எல்லாத் திசைகளிலும் சென்று பேரும் புகழும் பணமும் ஈட்டுகிற கலைஞன். அப்படித்தான் அந்த ஊருக்கும் திருவிழாவில் ஆடுவதற்காகத் தன் குழுவோடு செல்லுகிறான். வாய்ப்பு மறுக்கப்பட்ட அந்த ஊரைச் சேர்ந்த கரகக் கலைஞரான நாயகி, அதனாலேயே மேலோட்டமாக நாயகனை வெறுக்கத் தொடங்குகிறாள். நம் இருவரில் யார் சிறந்தவர் என ஒரு போட்டி உருவாகிறது. இதற்கிடையில் நாயகியின் தந்தைக்குத் தெரிய வருகிறது வந்திருக்கும் நாயகன் தன் சொந்த அக்காள் மகன் என்பது. உறவெனும் உரிமை இருப்பதை அறியாமலேயே நாயகனும் நாயகியும் விரும்பத் தொடங்குகிறார்கள். நாயகியை அடையத் துடிக்கும் வில்லன், அதற்கு உதவிசெய்யும் நாயகியின் அக்காள் கணவன், அவர்களது தொடர் சதிக்குப் பின்னால் காதல் இணை ஒன்று சேருகிறது. கங்கை அமரன் எழுதி, இளையராஜா இசையமைத்து, அது வெளியானது வரைக்குமான அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்த தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றென நிரந்தரித்த கரகாட்டக்காரன் 1989ல் வெளியானது.

200px-Karagattakaran.jpg

கொத்தமங்கலம் சுப்பு எழுதி, இலக்கியமாகவும் திரைப்படமாகவும் வெற்றிபெற்ற அபூர்வங்களில் ஒன்று தில்லானா மோகனாம்பாள். அதன் தூரத்துச் சாயல்போல் தோன்றினாலும் கரகாட்டக்காரன் சாமானியர்களின் பெரும் கொண்டாட்டமாகவே மனங்களை ஈர்த்தது. கலையை நம்பி வாழும் எளிய மனிதர்களுக்கு இடையே ஏற்படக்கூடிய காதலும் காதல் சார் குழப்பங்களும் இன்ன பிறவற்றுக்கெல்லாம் அப்பால் சாதாரணமான புரிதலும் மன நிறைவுமான வாழ்க்கையை அளவெடுத்துத் தைத்தாற்போல் கதைத்துக்காட்டினார் கங்கை அமரன். எளிய வசனங்களும், அபாரமான நகைச்சுவைக் காட்சிகளும், கிராமியத்தின் வெள்ளந்திப் பசுமையும், எல்லாவற்றுக்கும் மேலாக பின்னணி மற்றும் பாடல்களுக்கு ராஜா வழங்கிய இசையும் கரகாட்டக்காரன் படத்தின் சங்க நாதமாய் ஒலித்தன.

ஒன்பது பாடல்கள். எண்பதுகளின் தமிழ் மத்தியம மனசுகளின் மனோ விருப்ப வகைமைகளாகவே கரகாட்டக்காரன் படத்தின் பாடல்கள் அமைந்தது தற்செயல் அல்ல. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ‘இந்த மான் உந்தன் சொந்த் மான்’ பாடலையும் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலையும் முற்றிலும் மேற்கத்திய இசைத்துணுக்குகளைக் கொண்டு இளையராஜா தொடங்கியிருப்பதை வைத்து அவதானிக்க முடியும். இளையராஜா சொந்தக் குரலில் பாடிய பாடல்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ‘மாங்குயிலே பூங்குயிலே’. இந்தப் பாடலை இளையராஜா தன் பதின்ம வயதிலிருந்தே கைப்பற்றி அழைத்து வந்து கொண்டிருந்தார். பாவலர் வரதராஜன் எழுதிய சாகாவரப் பாடல் நெடுங்காலப் பெருவிருப்பப் பாடலாக ரசிக நெஞ்சங்களைக் கட்டிப் போட்டது.
‘அல்வா சாப்பிட்றீங்களா?’ என்று கேட்பார் கோவை சரளா. ‘எனக்கே அல்வாவா?’ என்பார் கவுண்டமணி. மலினமான சில உள்ளடக்கங்கள் இருந்தன என்றாலும் இந்தப் படத்தின் நகைச்சுவை எபிஸோட் தமிழ்த் திரையுலகின் முக்கியமான சிரிப்புக் கொத்துக்களில் ஒன்றெனவே நிலைபெற்றது.

ஒரு ரூபாயைக் கொடுத்து இரண்டு வாழைப்பழங்களை வாங்கச் சொன்னதற்கு ஒரு பழத்தைத் தரும் செந்திலிடம், ‘இன்னொரு பழம் எங்கே?’ எனக் கேட்பார் கவுண்டமணி. ‘அதுவும் அதுதான்’ எனப் பதில் சொல்வார் செந்தில். முப்பது வருடங்களாகியும் பலநூறு முறைகள் நம்மைக் கடந்துவிட்ட போதும் இந்தக் காட்சி வந்தால் இன்றைக்கும் சேனல் மாற்றாமல் பார்த்துவிட்டே செல்பவர் எண்ணிக்கை பல்லாயிரம். . அந்த இணை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் மகுடத்தின் மணியெனவே இந்தப் படம் எல்லாவற்றிலும் சிறந்தது. நாதஸ் திருந்தி விட்டதாக நாதஸே சொல்லி அதை நம்பித் தலையை பிய்த்துக் கொள்வார் மணி.

kara9-300x220.jpg

திரைப்படம் பார்வையாளர்களின் கூட்டு அனுபவத்திலிருந்து தனி விருப்பமாக மாறுவது.சலனப்படம் முடிவுற்ற கணத்திலிருந்து பார்வையாள மனங்களின் அறிதலுக்குள் தன் கூடுதல் இயங்கியலைத் தொடங்குகிறது. அந்த அளவில் பாடல்களுக்காகவும், காமெடிக்காகவும் மட்டும் அல்லாமல், காந்திமதி – சண்முகசுந்தரம் சம்மந்தப்பட்ட இந்தப் படத்தின் உணர்ச்சிமிகுந்த காட்சி ஒன்று அடுத்த காலத்தில் பெருவிருப்பப் பகடியாக மாற்றம் செய்யப்பட்டுப் பலரையும் கவர்ந்தது.

கரகாட்டக்காரன் மீவுரு செய்ய முடியாத ஒருமுறை நிகழ்ந்தேறிய செலுலாய்ட் அற்புதம்.இயல்பெனவே உருமாறிய புனைவு தனித்தறிய முடியாமல் கதம்பத்துள் ஒளிந்திருக்கும் காகித மலர்.

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-படம்-9-கரகாட்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 10 – மௌனம் சம்மதம்

aathma-poster-3.jpg

15 ஜூன் 1990
கேசி பிலிம்ஸ் கோவை செழியன் தயாரிப்பு
இயக்கம்: கே.மது .கதை கே.என் ஸ்வாமி வசனம் கே.குணா
நடிப்பு: மம்முட்டி, சரத்குமார், ஒய்ஜி மகேந்திரா, நாகேஷ், ஜெய்கணேஷ், சார்லி, குமரிமுத்து, பீலிசிவம் ஆர்.எஸ்.சிவாஜி என்னத்த கன்னய்யா எம்.எஸ்.திருப்போணீத்துரா, ஜெய்சங்கர், ஸ்ரீஜா அமலா ஒய்.விஜயா சுகுமாரி பொன்னம்பலம் மற்றும் பலர்

சுந்தரத்தின் தம்பி பாலுவின் மனைவி விஜயலக்ஷ்மி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்கிறாள். விசாரணையில் அது கொலை என்றாகி அதற்கான காரணகர்த்தா என்று சுந்தரத்தை போலீஸ் கைது செய்கிறது. விஜியின் அண்ணனும் அம்மாவும் சுந்தரத்தின் பரம எதிரி பரமசிவம் தூண்டுதலால் வழக்கை நடத்த கீழ்க்கோர்ட்டில் சுந்தரத்திற்கு தண்டனையாகித் தீர்ப்பாகிறது.

 

1311249763Mounam_Sammatham_Tamil_DVD.jpg

சுந்தரத்தின் தங்கை ஹேமாவுக்கும் சுப்ரீம் கோர்ட் வக்கீல் கேஸி ராஜாவுக்கும் ஏற்கனவே அறிமுகமும் முரண்பாடும் உண்டு. தன் அண்ணனுக்காக வாதாட ராஜா அமர்த்தப்படுவதை முதலில் ஆட்சேபிக்கும் ஹேமா பிறகு புரிந்துகொண்டு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறாள். தான் வாதாட வந்ததன் முக்கியக் காரணம் ஹேமாவின் அண்ணன் சுந்தரம் என்பதனால்தான் என லேசாய்க் கோடிட்டுக் காட்டுகிற ராஜா வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவாக்கி நடத்தத் தொடங்குகிறான். மறுவிசாரணையின் முடிவில் சுந்தரம் நிரபராதி என்பதை நிரூபித்து உண்மையான கொலையைச் செய்த நட்ராஜனை அவனைக் காப்பாற்ற துணையாயிருந்த சுந்தரம் வீட்டு வேலையாள் மணியின் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து ஜெயிக்கிறான் ராஜா.

இந்தப் படத்தின் மூலமாக நேரடியாகத் தமிழ்ப் படங்களில் நடிகராகத் தன் கணக்கைத் தொடங்கி சொந்தக் குரலில் தனக்காகப் பேசவும் செய்தார் மம்முட்டி. நீதிமன்றக் காட்சிகளும் கொலைவழக்கை படிப்படியாக விசாரித்து யார் குற்றவாளி என்பதை அறிவதற்காக கட்டமைக்கப்பட்ட காட்சிகளும் படத்தை ரசிக்க வைத்தன. உளவியலினூடான அச்சத்தை இப்படத்தின் இசைக்கோர்வைகள் எங்கும் படர்த்தினார் இளையராஜா.

தோரணங்களாகக் கதையின் கிளைகள் தொங்கினாலும் அலுப்பூட்டிவிடாமல் படத்தின் கடைசித் துளிவரைக்கும் விறுவிறுப்பை மேலாண்மை செய்திருந்தார் இயக்குனர் மது.

இந்தப் படத்தின் பலம் இதன் நடிகர்கள் நாகேஷ் தொடங்கி ஒய்ஜி மகேந்திரா வரைக்கும் ஒய் விஜயா தொடங்கி சுகுமாரி வரைக்கும் எல்லோருமே தாங்கள் ஏற்ற பாத்திரங்களை அத்தனை அழகாக அளவாகப் பரிணமித்துக் காட்டினர். வசனம் இப்படத்தின் ஆகப்பெரும் காரணியாயிற்று. மம்முட்டியின் ஆளுமையும் அவரது முதலாவதான தமிழ்த்திரைத் தோற்றமும் நன்றாகவே எடுபட்டது.

நாகேஷூக்கும் அவரது உதவியாளர் பால்காட் என்ற வேடத்தில் நடித்த மலையாள நடிகர் எம்.எஸ்.திருப்போணீத்துராவுக்கும் இடையே நடைபெறக்கூடிய உரையாடல்களும் அவர்கள் இருவரின் உடல்மொழியும் முகபாவங்கள் இன்னபிறவெல்லாம் அபாரமாய் இருந்தன. அவர்கள் இருவரும் அதுவரை தமிழ்த்திரைக்களம் கண்டிராத புதிய இணையாகத் தோன்றினர். சின்னச்சின்ன நுட்பமான இழைதல்களால் கட்டமைக்கப்பட்ட திரைக்கதை மௌனம் சம்மதம் படத்தின் பெரும்பலமாயிற்று. புலமைப்பித்தன் எழுதி ராஜா இசையமைத்த கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா தமிழ்ப் பாடல்களின் சரித்திரத்தில் கரையாத மாயக் கற்கண்டாக இன்றளவும் இனித்து வருகிறது.

சார்லியின் திரை வாழ்வில் முதன்மையான வேடம் இந்தப் படத்தின் திருப்புமுனையே அவர் ஏற்ற மணி எனும் வேலைக்காரன் வேடம்தான். தொடக்கம் முதலே நடிப்பதற்கான நல்வாய்ப்பு. அதனை அவர் நிறைவேற்றிய விதம் அளப்பரியது. மௌனம் சம்மதம் தமிழின் துப்பறியும் படங்கள் வரிசையில் என்றும் மாறாத பெருவிருப்பத்திற்குரியது.

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-படம்-10-மௌனம்/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 11 – ரத்தக்கண்ணீர்

aathma-poster-3.jpg

கதையின் செல்திசை எப்போதும் முன்தீர்மானங்களுக்கு உட்பட்டது. எழுதிய கதைக்கும் திரைவழி கடத்தப்படுகிற கதைக்கும் இடையிலான பெரு வித்தியாசங்கள் ஒருபுறம் இருக்கட்டும். கோட்பாடுகளின்படி வரைமுறைகள் இலக்கணங்களுக்கு உட்பட்டு எடுக்கப்படுகிற திரைப்படக் கலையில் தன்னளவில் மீறல்களுடன், கலைதல்களின் மூலமாகவும் பல்வேறு யுக்திகளைப் பரிசீலிக்கிற அல்லது அனுமதிக்கிற முயல்வுகளாகவும் அமையும்போது பரீட்சார்த்த சினிமாவாகிறது. எல்லாக் கலைகளைப் போலவும் சினிமாவும்தான் அடுத்து நகர வேண்டிய நகர்தல் திசையையும், புதிய வரைவிலக்கணங்களையும் அடுத்த காலத்திற்கான கோட்பாடுகளையும் உருவாக்க முயலுகிற மற்றும் உருவாக்குகிற தன்மையுடனானது.

இந்தியத் திரைப்படக் கலை கூத்து மற்றும் நாடகம் போன்ற நிகழ்த்துக் கலைகளின் பதிவு வடிவமாக ஆரம்பகாலம் முதலே புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது. எங்கனம் சமூக வரையறைகளுக்கு உட்பட்டே முன் காலத்திய கலைவடிவங்கள் நிகழ்த்தப்பட்டு வந்தனவோ அங்கனமே அடைப்புக் குறிகளுக்குள் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்திக்கப்பட்ட சொற்களின் கூட்டு அர்த்தமாகவே சினிமாவும் இருக்க நேர்ந்தது. நூறு வருடத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் சரித்திரத்தில் இந்திய அளவில் தொடர்ந்து நம்பப்பட்டு வருகிற திரையாக்க பெரும்பாலானவை மக்களின் ரசனை சார்ந்து எடுக்கப்பட்ட முன்முடிவுகள் ஆகவே இருப்பது தெளிவு. இன்றளவும் கதை என்பது அதன் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இயங்கக் கூடியதாக இருக்கிறது சிலவற்றை மீறுவது ஊறாகும் என்றபோதும் பெரும்பாலான நம்பிக்கைகள் திரை வணிகம் சார்ந்த தொடர் நம்பகத்தின் நிர்ப்பந்தங்களே இந்த நவீன காலத்திலேயே படத்தின் மைய இழையை தாண்டி பெரிய அளவில் மாற்றத்தையோ புரட்சியோ திரைப்படத்தால் நிகழ்த்திவிட முடியாது என்பது நிதர்சனம். காலம் காலமாக சொல்லப்பட்டு நம்பப்பட்டு பிடிவாதமாக பின்பற்றப்பட்டு வந்துகொண்டிருக்கக்கூடிய எந்த ஒரு விதிமுறையும் கண்டுகொள்ளாமல் மிகவும் புரட்சிகரமாக சற்றேறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ரத்தக்கண்ணீர் இந்தியாவின் இதுவரையிலான மிகச்சிறந்த பத்துப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் ரத்தக் கண்ணீருக்கு இடம் இருக்கும். தமிழில் முறியடிக்கப்படாத முதலிடத்தில் இன்றளவும் வீற்றிருப்பதும் ரத்தக்கண்ணீர்தான். 

220px-Rattha_kanneer-214x300.jpg

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற ஒரு கோட்டை எடுத்துக்கொண்டு மனம் திருந்தினால் மார்க்கம் உண்டு என்பதுபோன்ற பல கற்பிதங்களை அடித்து நொறுக்கியது ரத்தக்கண்ணீர் ஆங்கிலேயன் விட்டுச் சென்ற  பிற்பாடு மேற்குத் திசைமீதான இந்திய மோகத்தை இந்தப் படத்தின் அளவு இன்னொரு படம் சாடியது இல்லை வெள்ளைக்காரன் நம்மைவிட உயர்ந்தவன் என்கிற எண்ணத்தில் தொடங்கி மேட்டிமைத்தனம் ஆக கட்டமைக்கப்பட்ட வல்லாதிக்க சிந்தனைகள் பலவற்றையும் தூள் தூளாக்கியது ரத்தக்கண்ணீர் மேடை நாடகமாக பலமுறை நிகழ்த்தப்பட்ட கதை-வசனத்தை திருவாரூர் தங்கராசு எழுத கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இதனை இயக்கினார்கள் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் இதனை தயாரித்தார் திரைப்படத்தை கலையாக பயிலுகிற ஒவ்வொருவரும் காண வேண்டிய முதல் பாடமாகவே ஆதார அரிச்சுவடி ஆகவே ரத்தக்கண்ணீர் திரைக்கதை விளங்குகிறது.

வெளிநாட்டில் படித்துவிட்டு ஊர் திரும்புகிறான் மோகன் அவன் ஒரு செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. தகப்பன் இல்லாத குடும்பத்தை அவன்தான் நிமிர்த்த போகிறான் என்று காத்திருக்கிறார் தாய், வந்து சேர்பவர் முற்றிலுமாக தன்னை நாட்டு மோகத்துக்கு ஒப்புக்கொடுத்தவனாக இருக்கிறான் மெல்ல மெல்ல அவனது பலவீனங்கள் அவனைச் சார்ந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது அவனது நண்பன் பாலுவும் மோகனின் அம்மாவும் ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தால் சரியாகிவிடும் என நம்புகிறார்கள் தினந்தோறும் மோகன் தேடி செல்லுவது காந்தா எனும் வஞ்சகி என யூகிக்க முடியாத கெடுமதி கொண்ட பெண்ணை. அவள் மீதான மோகத்தில் மோகன் அங்கேயே தவம் கிடக்கிறான். தனக்கு சந்திராவோடு திருமணமான பிற்பாடு மாமனாரை அவமதிக்கிறான் அம்மாவை எட்டி உதைக்கிறான் நண்பனை சுடுசொல் சொல்லி தள்ளி வைக்கிறார் மனைவியை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இத்தனைக்கும் பின்னால் அன்னையின் மரணத்திற்குப் பிறகும் பணப்பெட்டியோடு காந்தா வீடே கதி என்று இருக்கும் மோகனுக்கு மெல்ல ஆட்கொல்லி நோய் வருகிறது. அது ஒரு சர்ப்பத்தைப்போல அவனைப் பற்றிக் கொள்கிறது இனி அவன் தேற மாட்டான் என்று ஆகும்போது மெல்ல அவனை கைவிடுகிறாள் காந்தா.

சில மனிதர்கள் வாழ்வில் நுழைந்தால் அவர்களை வைக்கிற இடத்தில் இருத்துவது உசிதம். இல்லாவிடில் வாழ்வு என்னாகும் இருக்கும்போது கண்மண் தெரியாத ஊதாரி ஒருவன் கண் தெரியாதபோது என்னவாகிறான் கோலம் அழிகிறது மெல்ல மெல்ல கண் பார்வை போகிறது காந்தாவால் செல்வம் அனைத்தும் பறித்துக்கொள்ளப்பட்டு விரட்டி அடிக்கப்படுகிறான் மோகன். ஒரு கட்டத்தில் யாசித்து அடுத்தவர் உதவியுடன் உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான் மனசாட்சியே இல்லாமல் தன் வாழ்வின் சரிபாதியை வாழ்ந்தவன் எல்லாவற்றையும் உணரும்போது காலம் கடந்துவிடுகிறது தன்னால் சந்திராவின் வாழ்க்கை பாழாகிவிட்டது என்பதை உணர்ந்து வேதனையுறும் மோகன் அவளை தன் நண்பன் பாலுவோடு இணைந்து வாழுமாறு வேண்டிக்கொண்டு தன் வாழ்வின் முடிவை நோக்கிச் செல்கிறான். மரணம் அவனைத் தழுவிக்கொள்கிறது ஊரில் எல்லோரும் பார்க்கும் இடத்தில் உருக்குலைந்த கோலத்தோடு மோகனின் சிலை இருக்கிறது அந்தச் சிலையின் கதையை பாலு ஊர்மக்களுக்கெல்லாம் எடுத்துரைக்கிற ஒரு புள்ளியில்தான் ரத்தக்கண்ணீர் படம் தொடங்கி முடிகிறது உலகின் நாகரீகமெனும் பெயரிலான பொய்கள் புரட்டுக்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் பக்தி என்னும் பெயராலும் பந்தம் எனும் பேராலும் பலவற்றாலும் எப்படி மனிதன் கட்டுண்டு கிடக்கிறான் என்பதை எல்லாம் முதல்முறையாக இந்திய அளவில் பெரிதாய்ப் பேசிய திரைப்படம் ரத்தக்கண்ணீர்.

எம்.ஆர்.ராதா எனும் மகா நடிகனின் குரலும் முகமும் உடல்மொழியும் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் தூண்களைப்போல் ஓங்கி நின்றன. S.S ராஜேந்திரன் சந்திரபாபு எம்.என்.ராஜம் ஆகியோரின் அளவான நடிப்பு வளமாயிற்று. ஜெயராமனின் பாடல் இசையும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பின்னணி இசை ஏற்பும் இப்படத்தின் பலங்கள். வசனத்திற்கான பெரு விருப்பப் படமாக ரத்தக்கண்ணீர் இன்றளவும் விளங்குகிறது. இந்தியாவின் நடிக பள்ளிகளில் மிக முக்கியமான ஒரு ஆதாரமேதமை எம்.ஆர்.ராதா என்றால் அது மிகையல்ல. அரசியல் சமூகம் மதம் திரைப்படத்துறை உள்பட இந்தப்படம் பகடி செய்யாத விஷயமே இல்லை எனும் அளவுக்கு நம்பமுடியாத நேர்மையோடு கண்கள் முன் விரிகிறது ரத்தக்கண்ணீர்.

mr-radha1.jpg

அற்புதம் என்றால் அது ஒருமுறை நிகழ்வது அற்புதம் என்றால் அது மீவுரு செய்ய இயலாதது.

காலம் கடந்து மிளிர்வது.

ரத்தக்கண்ணீர் ஒரு அற்புதம்

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-படம்-11-ரத்தக/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 12 – சின்னத் தம்பி

aathma-poster-1.jpg

ஒரு படம் ஏன் ஓடுகிறது என்பது மட்டும் யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாத சூத்திரம். சினிமாவை உலகமெல்லாம் இன்றளவும் உந்திக் கொண்டிருக்கும் மந்திரமும் அதுவே. என்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் கூட வெளியாகும் முன் மக்கள் தீர்ப்பை முன் கணிதங்களால் அறிந்துகொள்ளவே முடியாது. அந்த வகையில் சினிமாவின் சரித்திரத்தில் தனி சரிகை இழையால் கட்டப்பட்ட வெற்றிப்பதாகைப் படங்களின் வரிசைப்பட்டியல் ஒன்று உண்டு. சாதாரணமாக ஓடியவையாக இருக்காது. எல்லா ஊர்களிலும் தலை தெறிக்க ப்ரேக் லெஸ் வெஹிகில் என்பார்களே அப்படி நிறுத்துவதற்காகாக வாகனத்தைப் போல் ஓடிய படங்கள் அவை.

ChinnaThambi00003-1-300x162.jpg

சினிமா மொழியில் சொல்லவேண்டுமானால் ஒரு படம் வெளியான மறு நாள் அந்தப் படத்தின் லைட் மேனுக்குக் கூட மாற்றியமைக்கப்பட்ட அந்தஸ்தும் பெருக்கெடுத்த ஒளிவெள்ளமும் கூடுதல் சம்பளமும் இன்னபிறவுமெல்லாம் ஏற்பட்டு இருக்கும். அப்படி ஏற்பட்டால் அதன் பெயர்தான் சூப்பர்ஹிட்.
சின்னத்தம்பி அப்படிப் புரிந்துகொள்ள முடியாத வெற்றிகளிலொன்றாக அமைந்தது. அதுவரைக்குமான தமிழ் சினிமா வசூல் எல்லைகளை எல்லாம் தகர்த்தெறிந்தது. பி.வாசு இயக்கத்தில் கேபி பிலிம்ஸ் கேபாலு தயாரிப்பில் இளையராஜா இசையில் கங்கை அமரன், வாலி பாடல்கள் எழுத ராதாரவி, மனோரமா, குஷ்பூ, கவுண்டமணி இவர்களொடு பிரபு நாயகனாக நடித்த படம்.

chinna-thambi-original-imadbg93gz9anhgq-

ஆண் வாசனையே அனுமதிக்கப்படாத அரண்மனைக்கு நிகரான மாளிகையில் வளரும் நாயகி. அவளுக்குக் காணக் கிடைக்கும் வெகுளி ஆடவன் சின்னத் தம்பி. தாயைத் தவிர வேறொன்றும் அறியாத வெள்ளந்தி அவன். அவனுக்கு அபாரமாகப் பாடவரும். மாளிகையில் வந்து செல்லக்கூடிய அவன்மீது காதலாகிறாள் நாயகி. தன் வீட்டு இளவரசியை வழிபடுகிற அளவுக்கு அன்பாயிருக்கும் அண்ணன்கள் மூவரும் அவளுடைய காதலை ஏற்க மனம் வராமற் போகிறது. காதலைக் காதலென்றே அறியாத சின்னத் தம்பியோடு நாயகி சேர்ந்தாளா என்பதுதான் கதை. வெற்றிலையில் பாதி அளவு காகிதத்தில் எழுதி விடக்கூடிய எந்த விதத்திலும் நம்பகத்தின் அருகாமைக்குக் கூட வராமற் போன இந்தக் கதையைத் தான் தமிழகம் ஒரு ஆண்டு ஓடச்செய்து அழகு பார்த்தது. கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகளும்கூட எப்போதைக்குமான கோர்வையாகவே திகழ்கிறது. நடித்த யாருமே குறை சொல்ல முடியாத பங்கேற்பைத் தந்ததும் நிசம். எல்லாவற்றுக்கும் மேலாகத் திரும்பிய திசையெல்லாம் சின்னத் தம்பி என்று ஒலிக்கச் செய்ததற்கு இன்னொரு காரணம் இசை.

இளையராஜாவின் இசையை எடுத்துவிட்டு இந்தப் படத்தைப் பார்க்கவே முடியாது. இது வெறுமனே ஏற்றிச் சொல்கிற சொல்லாடல் அல்ல. கிட்டத்தட்ட குழந்தமையின் பித்து நிலைக்குக் குறைவற்ற நாயக கதாபாத்திரத்தின் மனோபாவங்கள் ஒருபுறமும் அடக்கி வைக்கப் பட்டதாலேயே விடுதலைக்காகச் சதா சர்வகாலமும் விரும்புகிற நாயகியின் தீவிரத் தன்மையும் ஒருங்கே உள்ளடக்கிய திரைக்கதையின் மேலோட்டமான உலர்தன்மையை முழுவதுமாய்த் தன் பாடல்கள் இசையால் நிரப்பிப் பசுமையாக்கித் தந்தார் ராஜா. தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே என்ற தாலாட்டுத் தன்மை பொங்கும் பாடலில் எல்லோரும் தங்களது மனங்களை இசையால் பூட்டிக் கொண்டார்கள். படம் முடியும்வரை மெய்மறந்தது மாத்திரமே இப்படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணமாயிற்று. அதன் பின்னால் இருந்து காரியமாற்றியவர் இளையராஜா.

போவோமா ஊர்கோலம் என்ற பாடல் ஸ்வர்ணலதாவுக்கு மாபெரும் அடையாளமாக மாறிற்று. அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் பாடலாகட்டும் உச்சந்தலை உச்சியிலே பாடலாகட்டும் நீ எங்கே என் அன்பே பாட்டாகட்டும் ஏற்படுத்தப் பட்ட செயற்கையான சூழல்களை எல்லாம் அறுத்தெறிந்து விட்டு அவரவர் மனங்களைக் கொண்டு இந்தப் படத்தை அதன் பாடல்களுக்குள் சிக்கிக் கொள்ளச் செய்ததனால் சின்னத் தம்பி எல்லோர்க்குமான இசைப்பேழையாகவே மாறிற்று. இன்றளவும் அகற்றி எறியமுடியாத அன்பின் தடங்களாய்த் தமிழ் சமூகத்தின் போற்றிக்குகந்த பாடல்களைக் கொண்ட மறக்க முடியாத படம் சின்னத் தம்பி.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-12-சின்ன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 13 – பலே பாண்டியா

aathma-poster.jpg

இரண்டு மனிதர்கள் ஐந்து வேடங்கள் என இந்தக் கட்டுரைக்குத் தலைப்பிடலாம்.bale-1-300x250.jpg

தன் வாழ்க்கை வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறான் பாண்டியன். அவனை ஒரு மாதம் கழித்து நீ தற்கொலை செய்துகொள் என்று தன்னோடு அழைத்து வருகிறான் கபாலி. ஒரு மாதம் கழித்து அவனைத் தன் சகா மருதுவை விட்டுக் கொன்று இன்ஷூரன்ஸ் தொகை 1 லட்சத்தை அடைய திட்டமிடுகிறான். தன் தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டு தனக்கொரு புதிய வாழ்க்கையைக் காட்டிய தெய்வமனிதனாகவே கபாலியைப் போற்றுகிறான் பாண்டியன். இதற்குள் வசந்தி எனும் பணக்காரப் பெண்ணைக் காப்பாற்றி அவளது தந்தையின் அன்புக்குப் பாத்திரமாகிறான். தன் மகனாகவே பாண்டியனைத் தத்தெடுத்துக் கொள்கிறார் செல்வந்தர். கபாலி பாண்டியனைக் கொன்றுவிட்டு மருதுவை அவன் இடத்துக்கு மாற்றிவிட்டால் லட்சங்களை அனுபவிக்கலாம் என்று புதிய திட்டத்தை வரைகிறான். பாண்டியனைக் கடலில் எறிகிறார்கள். பாண்டியனின் இடத்தில் அவனுடைய உடன்பிறந்த அண்ணன் ஷங்கர் மாறக் கபாலிக்கும் மருதுவுக்கும் திகைப்பு. மீனவர்களின் உதவியால் பாண்டியன் பிழைத்து வந்து சகோதரனுடன் சேர்ந்து எப்படி வெல்கிறான் என்பதே மிகுதிக் கதை. கபாலி தவறுதலாகத் தன் நண்பன் மருதுவைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்வதோடு படம் முடிகிறது.

220px-Bale_Pandiya_Sivaji.jpg

சிவாஜி மூன்று வேடத்திலும் எம்.ஆர்.ராதா இரண்டு வேடத்திலும் நடித்ததனாலேயே தன்னைப் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டது இந்தப் படத்தின் மதிப்பு என்றால் அது மிகையல்ல. மாமா மாப்ளே என்று சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் பாடும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற பாடல் அதில் நடித்த இருவரைத் தாண்டிப் பாடிய டிஎம்.சவுந்தரராஜன், இசையமைத்த மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடலை எழுதித் தந்த கவியரசர் கண்ணதாசன் மற்றும் இப்படத்தை நம்ப முடியாத குறுகிய காலத்தில் உருவாக்கிய பீ.ஆர்.பந்துலு ஆகிய யாவர்க்கும் பொருந்தும். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் வகையறாக்கள்தான். பாலாஜி மற்றும் தேவிகா ஆகியோரும் இப்படத்தில் தங்கள் பங்கைச் சிறப்பித்திருந்தார்கள்.

உருவ ஒற்றுமை என்பதற்கான தீர்மான விளக்கம் எதையும் இந்தப் படம் கொண்டிருக்கவில்லை. இரண்டு சிவாஜிகளும் அண்ணன் தம்பி என்பதேகூட வழமைக்கு விரோதமான ஒரு உள்சுற்றுத்தான் என்பது ஈர்ப்புக்குரியது. அதுவரைக்குமான பொய்க்கயிறுகளை எல்லாம் அறுத்தெறிந்து விட்டுத் தன் சுதந்திர நகர்தலினால் இப்படம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. படத்தின் தொடக்கத்தில் சிவாஜி தற்கொலை செய்து கொள்வதாக அறிவிப்பதை எம்.ஆர்.ராதா அவருடைய மனதை மாற்றுவதிலிருந்து தொடங்கும். வாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடல் நடுவே வரும். படத்தின் இறுதியில் நல்ல உறவுகள் கண் நிறைந்த காதல் செழுமையான செல்வந்தம் என எல்லாம் கிடைத்து அவர் சந்தோஷமாக வாழ்வதாகப் படம் நிறையும். தற்கொலை எண்ணத்திலிருப்பவனைத் தன் பிடிக்குள் கொணர்ந்து அவனது மரணத்தினால் தனக்கொரு பெரிய ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவனைக் காப்பாற்றுவதுபோல நடிக்கும் வில்லன் கபாலி கடைசியில் கண நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதோடு கெடுவான் கேடு நினைப்பான் எனும் பழைய சொல்லாடலை மெய்ப்பித்தவாறு படம் முடிந்தேறும்.

1962 ஆம் ஆண்டு மே மாதம் பூஜை இடப்பட்டு படம் தொடங்கி பதினைந்து தினங்களுக்குள் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுற்று அதே மாதம் 26ஆம் தேதி இப்படம் வெளியாகிப் பெருவெற்றி பெற்றது. சிவாஜி எம்.ஆர்.ராதா எனும் மாயக்கலைஞர்களின் அடங்கா வேடப்பசி இதனைச் சாத்தியப்படுத்திற்று. மிக வெள்ளந்தியான கதாமாந்தர்களும் நம்பமுடியாத அன்பின் ஊற்றான கதை நகர்வுகளையும் தாண்டி நகைச்சுவை மிகுந்த இக்கதையின் காட்சி அமைப்பிற்காகவும் என்றென்றும் விரும்பத் தகுந்த இதன் வசனங்களுக்காகவும் பலே பாண்டியா படம் காலங்கடந்து வைரமென மின்னுகிறது.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-13-பலே-பா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 14 – காதலுக்கு மரியாதை

aathma-poster-1.jpg

அனியத்திப் புறாவு என்றொரு மலையாளப் படம். தங்கைப் பறவை என்று சுமாராக அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். அதைத் தமிழில் எடுக்கலாம் என்று சங்கிலி முருகன் முடிவெடுத்தபோது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை தமிழ்த் திரை வசூல் சாதனைகளை எல்லாம் அதுவரைக்குமான கணக்குகளை அழிக்காமல் தன் பெயரை முதலிடத்தில் எழுதப் போகும் படமாக அது உண்டாகப் போகிறதென்று. அதனை வாங்கி வெளியிட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு என்னவோ அதிர்ஷ்டபலிதம் இருந்திருக்க வேண்டும். எல்லாம் அவர் வசமாயிற்று.

 

29394169500_04ebc4e2d0_b-300x220.jpg

மலையாளத்தில் கதையை எழுதி இயக்கியவர் ஃபாஸில். பாடல்களை எழுதியவர் எஸ்.ரெமேஷன் நாயர். இசை அமைத்தவர் ஔஸ்பச்சன். தன்னால் ஆன அளவுக்குத்தான் மலையாளத்தின் எடுத்த அதே கதையை வகைதொகை வடிவம் எதுவுமே மாற்றாமல் அப்படியே எடுக்க முனைந்தார் ஃபாஸில். ஏற்கனவே அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த நதியாவுக்கு அடுத்து குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டுப் படிப்பை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பிக்கொண்ட ஷாலினியின் மறுவரவாக அனியத்திப்றாவு அமைந்தது. படம் பெருவெற்றி பெற்றது. ஆனால் மலையாளத்தில் செஞ்சுரி என்றால் தமிழில் த்ரிபிள் செஞ்சுரி. காரணம் இளையராஜா பழனிபாரதி ஹரிஹரன்.

இளையராஜாவுக்கு ஒரு பழக்கம். பொதுவாக ரீமேக் படம் அதுவும் பிறமொழியில் வேறொரு இசையமைப்பாளர் இசைத்திருந்தால் அதனை வித்தியாசமாகக் கையாளவே விரும்புவார். இத்தனைக்கும் பாடல்களுக்கான களம் தொடங்கி பல நிர்ப்பந்தங்கள் இருக்கும். அத்தனை கட்டுப்பாடுகளைத் தாண்டித்தான் அந்தப் படத்தை இசைப்பதன் மூலமாக அதன் பழைய சரிதங்கள் அனைத்தையும் திருத்தி எழுத முடியுமா என்பதுதான் ராஜயோசனையாக இருக்கும்.

maxresdefault-1-300x169.jpg

காதலுக்கு மரியாதை தெலுங்கில் சிற்பியும் இந்தியில் ஏ.ஆர்.ரஹ்மானும் கன்னடத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாரும் இசைத்தார்கள். எல்லா மொழிகளிலும் சேர்த்து தமிழின் பாடல்களே முதலாவதாகக் கருதப்பட்டன. அதற்குக் காரணம் இசை.

பஸ் டிக்கட்டின் பின் பகுதியில் எழுதிவிடக்கூடிய காதல் கதை. சின்னத்தம்பி குஷ்பூவின் முரட்டு அண்ணன்களே ஷாலினியின் முரட்டு அண்ணன்கள். வீட்டின் அதே இளவரசிதான் ஷாலினி. அவள்மீது குடும்பமொத்தமும் உயிரையே வைத்திருக்கிறது. ஜீவா என்ற பேரிலான விஜய்க்கும் அவருக்கும் காதல் மலர்கிறது. வீட்டார் எதிர்க்கிறார்கள். ஊரைவிட்டு நண்பனுடைய வீடு தேடி அடைக்கலம் புகும் ஜோடி அமர்ந்து சிந்தித்து இரண்டு குடும்பங்களின் மனக்கொந்தளிப்பினூடாகத் தங்கள் காதலை வெற்றிகொள்ளத் தேவையில்லை என்று முடிவெடுத்து அவரவர் அகம் திரும்புகிறார்கள். இறுதியில் உணர்வுப்பெருக்கெடுக்கும் க்ளைமாக்ஸ் சுபமாக முடிவடைவதாக இப்படி நல்லவர்சூழ் உலகாய் இருந்திராதா இது என்று அன்றைக்கும் ஏங்க வைத்தது. இன்றைக்கும் அதே ஏக்கம் அதேபோல அப்படியே இருந்தாலும் சினிமா ஜிகினா பொய்நிஜம் என்ற அளவில் மக்கள் கொண்டாடினார்கள்.

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்…

கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்…

பழனிபாரதியின் வரிகள் பைத்தியமாக்கின. இளையராஜா ருத்ரதாண்டவம் ஆடினார். அய்யா வீடு திறந்து தான் கிடக்கு பாடல் கடல் பாடல்கள் வரிசையில் கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் தாலட்டுதே வானம் என இளையராஜாவின் சூப்பர்ஹிட்களைக் கூடுதலாக்கிற்று. இது சங்கீதத் திருநாளோ ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே ஆனந்தக் குயிலின் பாட்டு ‘ஓ பேபி பேபி’ எனப் பலரகம் பலவிதம் என்று எல்லையில்லா இசையின்பத்தை உண்டாக்கினார் ராஜா.

ஸ்ரீவித்யா மணிவண்ணன் சிவக்குமார் ராதாரவி தலைவாசல் விஜய் கேபிஎஸ்ஸி லலிதா சார்லி தாமு என எல்லோரும் உணர்ந்து நடித்திருந்தார்கள். அதுவரைக்குமான இளவட்ட முன்பின் மீறல்களை எல்லாம் இந்த ஒரு படம் மூலமாகத் துடைத்தெறிந்தார் விஜய், எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் பேசும் கண்களால் ரசிக மனங்களை எழுதிவாங்கினார் நடிப்பரசி ஷாலினி. பின்னணி இசைக்கோர்வைகள் விதவிதமான இசை ஏற்பாடுகளுடன் திரும்பத் திரும்பக் கையெழுத்திட்டுப் பழகுகிறாற்போல் இசையை உளியாக்கி செதுக்கியது என்றால் மிகையல்ல.

படத்தின் உயிர் நாடியாகவே கடைசி அரை மணி நேரம் விளங்கியது. உண்மையாகச் சொல்வதானால் விசு டைப் படங்களில் ஒன்றாக மிகச் சாதாரணமாகக் கடந்திருக்க வேண்டிய படம்தான் காதலுக்கு மரியாதை. என்ன ஒன்று இளையராஜா மந்திரித்துவிட்டதும் காண்பவர் எல்லாம் கண்கள் கலங்கி அன்பே கடவுள் என்றெல்லாம் முணுமுணுத்துக்கொண்டு சரி போனால் போகிறது ஒரே ஒரு படம்தானே ஓடிவிட்டுப் போகட்டும் என்று 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 19இல் வெளியான படம் 98 தீபாவளிக்குத்தான் தூக்கினார்கள்.

81PG527R0AL._SY550_-207x300.jpg

காதலுக்கு மரியாதை – ஒருமுறைப்பூ

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-14-காதலு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 15 – தில்லுமுல்லு

aathma-poster-2.jpg

இப்படிச் சொன்னால் ரஜினி ரசிகர்களுக்குக் கண்டிப்பாகக் கோபம் வரும். தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக நடித்த தில்லுமுல்லு படத்தின் இரண்டாவது நாயகன் ரஜினிகாந்த். நானே என்னைத் திட்டிக்கொள்ளும் அளவுக்கு எனக்கும் ரஜினி பிடிக்கும்தான். என்ன செய்வது? உரக்கச் சொன்னாலும் உள்ளூர முணுமுணுத்தாலும் உண்மை அதுதான். பொதுவாக பாலசந்தர் பிறர் உருவாக்கிய படங்களை தமிழில் ரீமேக் செய்வதை அவ்வளவு விரும்புகிறவர் இல்லை. ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் சைலேஷ் டே எழுதிய கதையை இயக்குனரும் கதாசிரியருமான சச்சின் பௌமிக் திரைக்கதை அமைக்க, உருது கவிஞர் ராஹி மாஸும் ராஜா எழுதிய வசனங்களுக்கு அமோல் பலேக்கர், உத்பல் தத், பிந்தியா கோஸ்வாமி ஆகியோர் நடிப்பில் கோல்மால் என்ற மராத்திய செவ்வியல் தன்மைகள் மிகுந்த ஒரு இந்தித் திரைப்படம், தமிழில் பின்னாளில் உச்ச நட்சத்திரமாகப் போற்றுதலுக்கு உள்ளாகப் போகிற ரஜினிகாந்தின் திரைவாழ்வில் ஆக முக்கியமான படங்களில் ஒன்றெனவே தனிக்கப் போகிறது என்பதைத் தமிழுக்கேற்ப திரைக்கதை அமைத்த விசுவும், இயக்கிய பாலசந்தருமே சற்றும் எண்ணியிருக்க மாட்டார்கள். அதுதான் நிகழ்ந்தது.

 

201904150456115337_Act-as-a-comedy-story

வலி கண்டு நகைத்தலின் இன்னொரு அம்சம் ஒருவன் ஏமாற்றப் படும்போது பார்வையாளன் மனதில் அரும்புவது. உண்மையில் அது தனக்கு நிகழவில்லை என்பதிலிருந்து தொடங்கக்கூடிய எதார்த்தத்தின் வெளியே உருவாகக்கூடிய நியதி மாற்று. வேகமாகச் செல்லுகிற வாகனத்தை இன்னும் வேகமாகச் செல்வதன் மூலமாக முந்துகிற ஒருவனை வென்றவன் என்று பாராட்டுவது ஏற்புக்குரியது அதுவே பேச்சுக் கொடுத்து தன் பங்காளி முயலை ஓரிடத்தில் அமரச் செய்துவிட்டு ‘நா வர்ற வரைக்கும் இங்கயே இரு’ என்கிற பொய்யோடு கிளம்பிப் போய், பந்தயத்தின் வெற்றிக் கோட்டைத் தாண்டிவிட்டதாகக் குதூகலம் கொள்ளும் ஆமை பொறாமையைவிடக் கல்மிஷத் தீய ஆமை என்றால் தகும். அப்படி படம் நெடுக தேங்காய் ஸ்ரீனிவாசனைத் தன் பொய்க்கொத்துகளால் ஏமாற்றுகிற தில்லுமுல்லுப் பேர்வழி தான் ரஜனிகாந்த்.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தனக்கெனத் தனிக்கொள்கைகளைக் கொண்ட கோமகன். அவரது நிறுவனத்தில், ஒரு வேலை கிடைப்பதற்காகத் தன்னை ஒழுக்க சீலனாகக் காட்டிக்கொள்கிறான் சந்திரன், அந்தப் புள்ளிதான் தில்லுமுல்லு படத்தின் ஆரம்பம் ஆகிறது.

தந்தையின் நண்பரான மருத்துவர் (பூர்ணம்) முன்கூட்டி அளித்த துப்புகளின் உபயோகத்தில் நூற்றுக்கு ஆயிரக் கணக்கில் மதிப்பெண் பெற்று ‘நீதாம்பா நான் எதிர்பார்த்த ஜூனியர் விவேகானந்தர்’ என முதலாளி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி மெய் மறக்க, எப்படி இவரைச் சமாளிக்கப் போகிறோம் என்கிற மலைப்போடு பொய்களின் உலகத்தின் முதல் கதவைத் திறந்து கொள்ளுகிறான் சந்திரன். ஒரு பொய் தன் சகாக்களை அறிமுகப் படுத்தியபடியே தலைதெறிக்க ஓடக் கூடிய திறன் பெற்றது.

கால்பந்தாட்டக் களத்தில் தன்னைப் பார்த்துவிட்ட முதலாளியிடம் இல்லாத தம்பியை உருவாக்கி, நாடகப் பித்துக்கொண்ட சௌகார் ஜானகியின் புண்ணியத்தில் இல்லாத அம்மாவை வரவழைத்து நாகேஷின் உதவியுடன் மீசை வைத்தால் ஒருவன், இல்லாவிட்டால் இன்னொருவன் என்ற குதிரையை அல்லது புல்லட்டை மாறி மாறி ஓட்ட நிர்ப்பந்திக்கப் படுகிற பரிதாபத்துக்குரிய பொய்க்காரன் தன் பொய்களின் எல்லையில் நின்றுகொண்டு, தானும் தன் உண்மையுமாய் உடைபடுவதே கதை.

தேங்காய் சீனிவாசனின் நடிப்பில் இந்தப் படம் ஒரு ஜர்தா முத்தம். அவருக்கு அடுத்த கனமான பாத்திரம் சௌகார் ஜானகிக்கு. ரஜினி மகா சிரமப்பட்டு இந்தப் படமெங்கும் மின்னினார். மாதவியின் கண்கள், எம்எஸ்விஸ்வநாதனின் ஆச்சரியமான ‘ராகங்கள் பதினாறு’ பாடல், இவற்றுக்கெல்லாம் மேலாக எந்த மொழியிலும் பெயர்க்க முடியாத, எங்கேயிருந்தும் தருவிக்கவும் முடியாத விசுவின் வசனங்கள் இந்தப் படத்தின் கலாச்சார அந்தஸ்தை நிர்ணயித்தன. மறு உருவில் ரஜனி வேடத்தில் தமிழ்ப்படம் சிவாவும், தேங்காய் வேடத்தில் பிரகாஷ் ராஜும், சௌகார் வேடத்தில் கோவை சரளாவும் நடித்து இனிப்பு நீக்கப்பட்ட குளிர்பானம் போல் அந்த வருடத்தின் யாரும் எதிர்பார்த்திராத மிகச் சிறந்த ஏமாற்றத்தை உண்டு பண்ணியதுதான் மிச்சம். வரலாற்றில் நல்ல படங்கள் முதல் காதலைப் போன்றவை.

 

8d59684db393e6228aa54ebd5356802c-300x219

‘சட்டையில என்ன பொம்ம?’ ‘பூனை சார்?’ ‘அதுல என்ன பெருமை? கெட் அவுட்’
‘சுப்பியாவது கப்பியாவது டஸ்ட் பின்’

ரணகளம் செய்யும் தேங்காய் சீனிவாசன், கோபத்தோடு வெளியே வரும் சுப்பி, தன்னைத் தாண்டி உள்ளே நுழையப் பார்க்கும் ரஜினியிடம்  ‘முன்னாடியே டிசைட் பண்ணிட்டாங்கப்பா, எல்லாம் eye was’ என்பார். உள்ளே தேங்காய் ஒரு வரியைத் திருப்பிச் சொல்லச் சொல்ல, ‘வேணாம் சார், றிஸ்கு’ என்பார். தேங்காய் அவர் எழுந்து போகும்போது ஒரு முகபாவம் காண்பிப்பார்.
சொல்லலர்ஜி, பொருளலர்ஜி, இவ்விரண்டும் கலந்த
மொழியலர்ஜி முகத்தில் தெரியும்
என்றாற் போல் பாவம் சொட்டும் அந்த முகபாவம்.

தில்லுமுல்லு அதன் மூலப் பிரதியைத் தாண்டிய செவ்வியல் அழகியல் திரைமாதிரியாகத் தமிழில் நிரந்தரிக்கிறது. தீராத நடிக நதி.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-15-தில்ல/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை தொகுப்பு...மேலே எழுதியுள்ள  அத்தனை  திரைப்படங்களும் அருமை (நான் இன்னும் ஓரிரண்டு படங்கள் பார்க்கவில்லை) 👌❤️

Edited by Sasi_varnam
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 16 – பருத்திவீரன்

aathma-poster.jpg

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி, பொன்வண்ணன், சரவணன், ப்ரியாமணி, கருப்பு ஆகியோர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் ராஜா முகமது தொகுப்பில் ராம்ஜியின் ஒளிப்பதிவில் அமீர் சுல்தான் எழுதி இயக்கிய படம் பருத்திவீரன். 

மதுரை வட்டாரத்தில் நடைபெற்ற நிஜத்தைப் புனைவாக்கி எடுக்கப்பட்ட திரைப்படம் 2007 ஃபிப்ரவரி 23 ஆம் தேதி வெளியான பருத்திவீரன்.

காதலித்து கலப்பு மணம் புரிந்த பெற்றோரின் மகன் பருத்திவீரன். சாதி பிடிமானத்தில் ஊறிய மாமன் கழுவத்தேவனின் மகள் முத்தழகுமீது பருத்திவீரனுக்கு சிறுவயதிலிருந்தே பெருங்காதல் அவளும் காதலிப்பதை உறுதிசெய்து கொள்ளுகிற நிமிடம் வாழ்வில் தனக்கு எல்லாமே கிடைத்து விட்டாற்போல் கொண்டாடி மகிழ்வது வீரனின் இயல்பு.சித்தப்பன் செவ்வாழையுடனும் பாட்டியுடனும் வாழ்ந்து வரும் வீரன் சிறு சிறு குற்றங்களுக்காகக் காவலும் தண்டனையும் பெற்று வருபவன். எப்படியாவது பெரிய குற்றம் ஒன்றை செய்து பெரிய ஜெயிலில் கொஞ்ச நாட்களாவது இருந்துவிட வேண்டுமென்பதே அவனுடைய வாழ்கால லட்சியம் எனக் குறிப்பிடுபவன்.
images-2.jpg

 

முத்தழகும் பருத்திவீரனும் பழகுவதை தெரிந்துகொள்ளும் கழுவத்தேவன் எப்படியாவது அவர்கள் இருவரிடையே இருக்கும் காதலை துண்டாடிவிட என்னென்னவோ முயன்று பார்த்தும் அத்தனையும் தவிடுபொடியாகிறது. ஒரு கட்டத்தில் வேண்டா திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள் பெற்றோர் முத்தழகு பருத்திவீரனோடு வாழ்வதற்காகக் கிளம்பிச் செல்கிறாள்.

பருத்திவீரன் வந்து சேர்வதற்குள் முத்தழகி எதிர்பாராத நிகழ்வொன்றுக்கு ஆட்படுகிறாள். தன்னைக் கண்டம் துண்டமாக வெட்டிவிடுமாறு பருத்திவீரனை இறைஞ்சுகிறாள். பருத்திவீரன்தான் அவளுடைய மரணத்துக்குக் காரணம் என்று தவறாகக் கருதும் கழுவத்தேவனும் அவனுடைய ஆட்களும் பருத்திவீரனைக் கொல்வதோடு நிறைகிறது படம்.

Paruthiveeran-Header-300x208.jpg

ப்ரியாமணிக்கு மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்த படம் பருத்தி வீரன். காட்சி அமைப்புக்களின் அழகியலுக்காகவும் படம் மொத்தமும் நமக்கு நிகழ்த்தித் தருகிற செஞ்சாந்து வண்ண அனுபவத்திற்காகவும் இயல்பான தெற்கத்தி வசனங்களுக்காகவும் கூர்மையான பாத்திரமாக்கலுக்காகவும் படத்தின் இயங்குதளத்தினுள் உறுத்தாமல் தொனித்துச் சென்ற நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒளிப்பதிவு மற்றும் யுவனின் முன் நேரா இசைமழைக்காகவும் கூடக் காலம் கடந்து நிற்கும் திரைப்படம் பருத்திவீரன். 

இளையராஜா தன் குரலில் பாடி வழங்கிய அறியாத வயசு புரியாத மனசு பாடல் இனம் புரியாத நிம்மதியை நிரவிற்று. விட்டேற்றியாக வாழ்வைக் கழித்துக்கொண்டு திரியும் அச்சு அசலான மனிதர்களை அதற்குமுன் யாருமே கதைப்படுத்தாத அவர்தம் நுட்பமான யதார்த்தங்களைத் திரையில் பெயர்த்துத் தன் திரைவாழ்வின் முக்கியமான படமாக பருத்திவீரனை உருவாக்கினார் அமீர்.

இந்தப் படத்தின் மூலமாக நடிகர் சிவக்குமாரின் முகவரியிலிருந்து சூர்யாவுக்கு அடுத்த வரவாக கார்த்தி தன் முதல் படத்திலேயே பெருவாரி ஜனகவனத்தை ஈர்த்தவண்ணம் அறிமுகமானார்.பருத்திவீரன் கார்த்தி என்பதே அவரது அடைமொழியாக மாறி ஒலிக்கலாயிற்று. ப்ரியாமணி சரவணன் பொன்வண்ணன் கருப்பு என பலரும் தங்கள் திரைவாழ்வின் உன்னதங்களை நடித்து வழங்கினர்.

பருத்திவீரன் எப்போதாவது வந்து திரும்புகிற பேருந்து சன்னலின் வழி ஒலிக்கிற பெருவிருப்பப் பாடலின் சலிக்காத இசைக்கோர்வைபோல வொரு திரைவழி அபாரம்.

 

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-16-பருத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 17 – பாசமலர்

aathma-poster-2.jpg

கதை ஏபி கொட்டாரக்கரா, வசனம் ஆரூர் தாஸ், இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடல்கள் கண்ணதாசன், ஒளிப்பதிவு விட்டல்ராவ்  இயக்கம் ஏ.பீம்சிங்

1961 ஆம் ஆண்டு வெளியான பாசமலர் தமிழின் சிறந்த குடும்பப் பாசத் திரைப்படங்களில் ஒன்றெனத் திகழ்வதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். நடிகர் திலகம் என விளிக்கப்பட்ட சிவாஜிக்கு நடிகையர் திலகம் எனப் போற்றப்பட்ட சாவித்ரி தங்கை. பெற்றோரை இழந்த பின் தானே தன் தங்கைக்கு சகலமுமாகிறான் ராஜூ. தங்கை ராதாவின் முகம் பார்த்தே வாழ்பவன் ராஜூ. வேலை பார்க்கும் ஆலை முடங்கிப் போகையில் தான் சிறுவயதிலிருந்து சேமித்த ஆயிரம் ரூபாயை (இன்றது பல லட்சம்) அண்ணனிடம் தந்து தனக்கு நன்றாய்த் தெரிந்த பொம்மை செய்தலையே தொழிலாகச் செய்யுமாறு அறிவுறுத்துகிறாள். குறுகிய காலம் கடின உழைப்பில் ராஜூ பெரும் பணத்தை ஈட்டுகிறான். தனக்கு முந்தைய ஆலையில் வேலை வாங்கிக் கொடுத்த நண்பன் ஆனந்தைத் தற்செயலாகச் சந்திக்கிறான். அவனுக்குத் தன் தொழிலில் வேலையும் அளிக்கிறான்.

2534-300x216.jpg

தன் தங்கையும் ஆனந்தனும் விரும்புவதை அறிந்த ராஜூ முதலில் கடுமையாக நடக்கிறான். தங்கையின் ஆழக்காதல் அறிந்த பிற்பாடு ஆனந்தனையே அவளுக்கு இணையராக்கி மகிழ்கிறான். ராஜூவுக்கும் டாக்டர் மாலதிக்கும் மணமாகிறது. ஆனந்தனின் குடும்பத்தோடு அனைவரும் ராஜூவின் மாளிகையிலேயே வாழ்வைத் தொடங்குகின்றனர். குடும்பம் எனும் ஒரு சொல்லுக்குள் அமைதியும் ஆர்ப்பரிப்பும் தனியே இடம்பெறுவதில்லை. மாறாக குடும்பத்தாரின் குண நன்மைகளைப் பொறுத்து அவை இரண்டும் முடிவாகின்றன.

ஆனந்தன் தன் அத்தையின் பேச்சை புறந்தள்ள முடியாதவனாகிறான். அத்தையின் சூதும் சுயநலனும் குடும்பத்தைத் துண்டாடுகிறது. குடும்பம் உடைந்து பிரிகிறது. எத்தனையோ முயன்றும் தங்கை குடும்பத்தோடு இணையமுடியாத ஏக்கம் அண்ணனும் தங்கையும் பிரிவெனும் புயலைத் தாளவொண்ணாமல் பரிதவிக்கின்றனர். குடும்பத்தைவிட்டு வெகுதூரம் சென்று பலகாலம் கழித்துத் திரும்பும் ராஜூவால் தன் தங்கையை சந்திக்கக்கூட முடியாமற் போகிறது. துவண்டு திரும்புகிறவன் பட்டாசுவெடித்தலினின்றும் ஒரு குழந்தையைக் காப்பாற்றப் போய் அவனது கண்பார்வை பறிபோகிறது. மருத்துவமனைக்கு வரும் ராதா சொல்லித்தான் ராஜூவால் காப்பாற்றப்பட்டது ராதாவின் குழந்தை என்பது தெரியவருகிறது. ராஜூ இறக்கிறான். ராதாவும் அண்ணன் மீதே சரிந்து விழுந்து இறக்கிறாள். பாசமலர்கள் என்றென்றும் வாடுவதில்லை என்பதைப் பறைசாற்றியபடி படம் நிறைகிறது.

39840-dayfrjghqe-1471730302-300x135.jpg

நாடகத் தன்மை மிகுந்தொளிர்ந்த சினிமாவின் தொடக்கக்காலத்தின் ஆகக் கடைசி பருவத்தின் பெருவெற்றி சினிமா என நம்மால் பாசமலரை சுட்ட முடிகிறது. அதற்குப் பல காரணங்கள். மையக்கதையாடலின் பலத்தைவிடக் கொஞ்சமும் குறைவற்ற உபகதையாடல்கள் இந்தப் படத்தின் பெரியதோர் பலமாகவே திகழ்ந்தன. தொழிலாளியாக ஜெமினியும் முதலாளியாக சிவாஜியும் வார்த்தை மோதலில் ஈடுபடுகிற நெடிய காட்சி முதல் உதாரணம். சிவாஜி இன்ஸ்பெக்டரை அழைத்துப் பேசும்போது குழப்பம் என்பதைத் தன் முகத்தில் மட்டுமல்லாது தொனியிலும் நிகழ்த்தி இருப்பார். விருந்தொன்றில் சிவாஜியும் எம்.என்.நம்பியார் மற்றும் எம்.என்.ராஜம் இருவரும் சந்திக்கும்போது சிவாஜி மற்றும் ராஜம் ஆகியோரது உடல்மொழியும் முகபாவங்களும் பேசாமல் பேசிக்கொள்ளும் அன்றைய காலத்துக் காதல் ஆதார கணத்துப் பரிமாற்றத்தின் ஏக்கம் தவிப்பு இன்னபிறவற்றை எல்லாம் அழகுற எடுத்தியம்பிற்று. ஒரு சிட்டிகை கூடுதலானாலும் மிகை நடிப்பு என்று தள்ளப்பட்டிருக்கும். அதனதன் இடத்தில் அவ்வந்தச் சொற்களை நிறுத்தி உணர்வுகளைப் பெருக்கி அற்புதமான நடிப்பை நல்கினார் சிவாஜி.
சாவித்ரி சென்று நம்பியாரிடம் நின்றுபோன சிவாஜி ராஜம் இருவரின் திருமணத்தை நடத்துவதற்காகக் கேட்கும் போது நம்பியாரின் நடிப்பு அந்த ஒரு காட்சி வாழ்காலத்துக்குப் போதுமான ஒளிர்தலை நிகழ்த்திற்று என்பது என் அபிப்ராயம். ஒரு கட்டத்தில் மெல்லக் கனியும் நம்பியாரின் முகம் அடுத்த கணம் லேசாய்ச் சிரிப்பார். அந்த அளவு அந்தச் சிரிப்பிற்கான வழங்கல் மாபெரிய நுட்பமான குணவாளத்தைப் பறைசாற்றும். முன்பின் காணவியலா அற்புதமாக்கிற்று.

238442-270x300.jpg

இந்தக் கதை என்பது இம்மாதிரியான கதைகளின் கூட்டுப்பிரதி. இவற்றுக்கு ஒருமித்த புள்ளியிலான ஒற்றை முடிவு என்பது யூகத்திற்கு அப்பாறபட்டது. அப்படியான கதையை சோகத்திலாழ்த்தி முடித்தது ரசிகர்களின் மனங்களில் அண்ணன் தங்கை எனும் உறவுக்கு என்றைக்குமான போற்றிச்சித்திரமாக வணக்கத்திற்குரிய கதாபாத்திரங்களாக நடிகர்களாக ஏன் ஞாபகங்களாகவும் பாசமலர் சிவாஜி சாவித்ரி ஆகிய பதங்களை மாற்றிற்று. வாழ்க்கைக்குள் சினிமாவை அழைத்தலின் ஒரு பங்காகவே இன்னமும் கல்யாணம் அண்ணன் தங்கைப்பாசம் போன்ற பலவற்றிற்கும் பாசமலரின் கதைமாந்தர்களும் அவர்களிடை உணர்வுப்பெருக்கமான பாசம் ஆகியவை சுட்டப்படுகிறது.

பாசமலரின் பாடல்கள் தனித்த அடையாளம் கொண்டு பெருகுபவை. முழுமையான ஆல்பம் என்று பாசமலரின் பாடல் பேழையைச் சொல்ல முடியும். வாழ்வின் பல அணுக்கத் தருணங்களை ஒட்டிய சொற்களை இசையை அவற்றுக்கான இடம்பெறலை மன ஓட்டங்களை எல்லாம் எடுத்துவைக்கும் இசைவழி சாட்சியங்களாகவே பாடல்கள் விளங்கின. எதைச் சொல்லி எதைவிட்டாலும் அது குற்றம் மொத்தமாகவே பாடல்கள் அனைத்தும் தங்கம்.

பாசமலர் பீம்சிங் செய்து காட்டிய மேஜிக். அது வித்தகமா திறமையா திறனா கலையா என்றெல்லாம் பகுத்துப் பார்ப்பதைவிடவும் பாசமலர் படத்தின் ஒரேயொரு வருகையைக் கொண்டாடுவதே ரசிகன் செய்தாக வேண்டிய ரசனை ஆகமம். வாடாபாச மலர்மல்லி.

 

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/நூறு-கதை-நூறு-படம்-17-பாசமல/

Link to comment
Share on other sites

ஒவ்வொரு திரைப்படத்தையும் அணுவணுவாக ரசித்து எழுதியிருக்கிறார் எழுத்தாளர். 

இங்கு குறிப்பிட்ட சில படங்களை நான் பார்த்திருந்தாலும் நான் பார்க்காத கோணங்களில் இருந்து அணுகியுள்ளமை மீண்டும் அவற்றைப் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி கிருபன்! 😊 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 18 – சர்வர் சுந்தரம்

aathma-poster-3.jpg

nagesh-story_647_092716120652-300x187.jp

 

மனுஷ வாழ்க்கையின் உள்ளே சின்றெல்லா உள்ளிட்ட தேவதைக் கதைகளுக்கு என்றைக்குமே மதிப்பு உண்டு. தான் இருக்கிற இடத்திலிருந்து ஒரு அடியாவது முன்னேறிவிட வேண்டும் என்பதைத்தான் உழைப்பதற்கான காரணமாகக் கொள்ள விரும்புகிற எந்தவொரு சாமான்யனுமே கடவுள் அருள் அல்லது அதிர்ஷ்டம் என்பதைத் தன் உழைப்புக்கு அப்பாலான சின்ன நடுத்தர அல்லது பெரிய உயர்தல்களுக்குக் காரணமாக அமைவதற்கான ஏக்கத்தை எப்போதும் கைக்கொண்டபடி இருக்க விரும்புகிறான். எதாவதொன்று நடந்து தன்நிலை உயராதா என்று ஏங்குவது திறந்திருக்கும் கதவுப்பக்கம் திரும்பிப் பார்த்தபடி ப்ரியமானவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டே காலம் தள்ளத் தலைப்படுகிற அன்பின் அதே யுத்திதான். சிலருக்கு அது பலிதமாகும் போதெல்லாம் அடுத்தது தனக்கான அதிர்ஷ்டத்தின் வரவுதான் என்று இன்னும் காத்திரமாகத் தன் கனவைக் கைப்பற்றிக்கொள்வது மானிட குணாதிசயம் தானன்றி வேறில்லை.

சினிமாவில் நடிகனாவது என்பது எல்லோர்க்கும் எட்டாக்கனியாகவே இன்றளவும் இருந்து கொண்டிருக்கிற அருகில் வர மறுக்கிற அல்லது முரண்டு பிடிக்கிற தங்கச்சுவர்தான். இன்றைக்கு சினிமா வசமாவது எளிதானாற்போல் தோன்றுகிறது என்றாலும் முன்பைவிடப் பரவாயில்லை என்று சொல்லத்தக்க அளவில்தான் அத்தகைய மாற்றத்தைக் கருத வேண்டி இருக்கிறதே ஒழிய எளிதில் தட்டுகிற யாவர்க்கும் அந்தக் கதவு திறப்பதற்கில்லை இன்னும்.

ஏழ்மை என்பது முகவரியின் முதல்வரியாகக் கொள்ள வேண்டியதுதானே ஒழிய அது முழுவரிகளையும் அடைத்துவிடுவதில்லை. ஆனாலும் தான் ஏழை என்பதைத் தன்சுய இரக்கத்திற்கான முதல் நம்பிக்கையாகக் கொண்டவன் சுந்தரம். அதைவிடத்தான் பார்ப்பதற்கு சுமாரான முகவெட்டு உள்ளவன் என்பதன் மீது எக்கச்சக்கமான தாழ்வு மனப்பான்மை கொண்டவன். தன் ஆப்த நண்பன் ராகவன் ஒருவனைத் தவிர வேறாரிடமும் பழக மறுப்பவன். ஓட்டல் அதிபர் சக்கரவர்த்தியின் மனதைக் கவர்ந்து அவரிடமே சர்வராகப் பணிபுரிகிறான். தன்னையே விளக்காக எண்ணி வாழ்ந்து வருகிற தாயிடம் நல்ல வேலையில் தானிருப்பதாகப் பொய் சொல்கிற சுந்தரத்தைக் கடிந்துகொள்கிறாள் தாய். எந்த வேலை என்பதல்ல முக்கியம் செய்வதை பொய்யின்றிப் பகிர்வதுதான் சத்தியம் என்று அவனை நேர்ப்படுத்துகிறாள்.

தன் முதலாளியின் மகள் என்பதை அறியாமல் கண்டதும் ராதாவோடு ஒருதலைக் காதல் கொள்கிறான் சுந்தரம். தன் வாழ்வின் ஆதாரமாகவே தான்கொண்ட காதலை எண்ணி உருகி வருபவனின் காதலை அறியும் ராகவன் அவனை ஊக்கப் படுத்துகிறான். விதி, ராகவனுக்கு மணம்புரிவதற்காகப் பெண் பார்க்கச் செல்லும்போது ராதா என்றறிந்ததும் பாராமுகம் காட்டித் திரும்புகிறான்.

220px-Server_Sundaram_poster-216x300.jpg

சுந்தரம் சினிமாவில் நடிகனாகிறான். அவனது வாழ்வு ஒளிப்பெருக்கெடுக்கும் வெற்றிச்சுனையாக மாறுகிறது. எண்ணியதெல்லாம் கைவந்துவிட்டதாகவே மகிழும் சுந்தரம் ராதாவைத்தான் மணம் முடிப்பதில் இனி எந்த சங்கடமும் இல்லை என்று மகிழ்கிறான். ராதா தான் ராகவனுக்கானவள் என்பதை சுந்தரத்திடம் தெரியப்படுத்துகிறாள். சினிமா சினிமா என்று பரபரப்பாக சுந்தரம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தினம் சுந்தரத்தின் அம்மா மாடியிலிருந்து தவறி விழுந்து அந்தச் செய்தி சுந்தரத்தை அடையவே முடியாமற்போகிறது.

சுந்தரம் திரும்பி வந்து நோக்கும்போது அன்னை உலகத்தைவிட்டுச் சென்று விடுகிறாள். சுந்தரத்துக்குத்தான் பெரிய புகழுச்சியை அடைந்ததனால் எதுவுமே தன் வாழ்வில் மாறிவிடாது என்பதனை உணர்கிறான். சுந்தரம் மறுபடி சர்வர் உடையோடு ராதா ராகவன் திருமண விருந்தில் எல்லோரையும் விருந்துபசாரம் செய்வதோடு படம் முடிகிறது.

தமிழ் சினிமாவின் எப்போதும் கொண்டாடப்படுகிற படங்களில் ஒன்றாக சர்வர் சுந்தரம் இன்றளவும் விளங்குகிறது. கே.பாலச்சந்தர் நாகேஷ் இருவருடைய திரை வாழ்வின் அதிரிபுதிரி ஆரம்பம் இந்தப் படம்தான். 1964 ஆமாண்டு தமிழ்த் திரையுலகில் நாகேஷின் ஆகச்சிறந்த அதிர்ஷ்டகரமான ஆண்டு என்பதற்கு காதலிக்க நேரமில்லை சர்வர் சுந்தரம் என்ற இரண்டு படங்களே சாட்சி. அந்த ஆண்டின் சிறந்த இரண்டு படங்கள் இவை என்றால் தகும். மேலும் கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசாகத்தான் இருக்கும் இடத்திலிருந்தே சினிமா எடுப்பதே தன் உயிர் லட்சியம் என்று திரியும் செல்லப்பாவாக காதலிக்க நேரமில்லை படத்தில் தோன்றிய அதே நாகேஷ் சினிமா என்பதெல்லாம் தாற்காலிகம் என்று சர்வர் வேலையை நோக்கித் திரும்புவதாக சர்வர் சுந்தரத்தில் காட்சியளித்ததன் பின்னே ஒளிந்திருக்கக்கூடிய முரண்சுவைதான் சினிமா என்னும் கணிக்க முடியாத தேவதையின் கண் சிமிட்டலுக்கு இன்னுமோர் உதாரணம்.

ரஜனிகாந்த் எனும் சூப்பர்ஸ்டாரை வைத்து அதே பாலச்சந்தர் தயாரித்த அண்ணாமலை எனும் மாஸ் ஹிட் திரைப்படத்தின் ஒன் லைன் மட்டுமன்றி அந்தக் கதையின் பூர்த்தி வரைக்கும் பல ஒற்றுமைகளை நம்மால் அவதானிக்க முடியும். என் இயக்குனர் நண்பர் சொல்வார் அதாங்க நாகேஷூக்கு பதிலா ரஜினி. அதனால சர்வருக்கு பதிலா பால்காரர். முத்துராமனுக்கு பதிலா சரத்பாபு. கே.ஆர்.விஜயாவோட அப்பா மேஜர்ங்குறதுக்கு பதிலா சரத்பாபுவோட அப்பா ராதாரவி. அவங்களுக்குள்ள சவாலாய்டுது. கடசீல எல்லாரும் ஒண்ணாகி நான் மறுபடி பால்காரன்தான். அதுதான் நிம்மதின்னு அதே சுந்தரவசனத்தை மறுபடி பேசுவார் ரஜினி.

சினிமாத் துறையின் பல மனிதர்களையும் சூழல்களையும் அருகே சென்று காணச்செய்த திரைப்படம் சர்வர் சுந்தரம் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.எம்.சவுந்தரராஜன், எல்.ஆர் ஈஸ்வரி எனக் கலைஞர்கள் பாடல் பதிவில் பங்கேற்பது போலக் காட்சி அமைத்திருந்தார் பாலச்சந்தர். வாலி எழுதிய அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் இப்படத்தின் மகுடமணி ஆயிற்று.

மேடை நாடகமாகப் பலமுறை நிகழ்த்தப்பட்ட கதை சினிமாவாகவும் வெற்றி விளைச்சல் கண்டது. நாகேஷின் நடிப்பும் முத்துராமனின் பரிதவிப்பும் கே.ஆர்.விஜயாவின் குழந்தமை மாறாத புன்சிரிப்பும் மேஜர் சுந்தர்ராஜனின் கணீர் குரலும் என இந்தப் படத்துக்குப் பல ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக கே.பாலச்சந்தரின் திரைக்கதை. பின் நாட்களில் இந்தியாவின் பல மொழிகளில் இந்தப் படம் மீவுரு கண்டது.

சர்வர் சுந்தரம் சாமான்யர்களின் ராஜகுமாரன்

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-18-சர்வர/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தொகுப்புகள். நன்றி கிருபன்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 19 – குடைக்குள் மழை

aathma-poster-1.jpg

சீஷோஃப்ரீனியா என்ற பெயரிலான மனநிலைக் குறைபாட்டைப் பற்றி இந்திய அளவில் எடுக்கப்பட்ட முதற்சில திரைப்படங்களில் ஒன்று குடைக்குள் மழை. கதையாய்க் காகிதத்தில் எழுதுவதற்கு எனச் சில சிக்கல்கள் இருக்கின்றாற்போலவே எழுதிய எல்லாவற்றையும் திரைப்படுத்துவதில் முட்டுக்கட்டைகள் இருந்தே தீருமல்லவா..? ஆயிரம் கோடிக் குதிரைகள் என்று எழுதுவதற்கு மூன்றே வார்த்தைகள் போதுமானதாயிருக்கின்றன. அதனைக் காட்சியில் காண்பிக்க க்ராஃபிக்ஸ் என்றால்கூட எத்தனை செலவும் பிரயத்தனமும் ஆகும்..? தமிழ் சினிமாவின் முந்தைய உயரங்களை மாற்ற முயற்சித்த பரீட்சார்த்த சினிமாக்களின் வரிசையில் குடைக்குள் மழை என்ற பெயரை எழுதத் தகும்.

ஆர்.பார்த்திபன் தான், இயக்குகிற படங்களுக்கென்று ஒரு முகமற்ற முகத்தைத் தொடர்ந்து பராமரித்து வந்தார். ஒரு மனிதனை அவனது உள்ளகம் வெளித்தோற்றம் என எளியமுறையில் பகுக்கலாம். அவனறிந்த அகம் அவனறியாத அகம் என்று உப பகுப்பைக்கொண்டு வரைய முனைந்த சித்திரம்தான் இந்தப் படம். தீராக் காதல் கொண்ட ஒருவனின் கதை குடைக்குள் மழை ஆயிற்று.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. ஹிடன் காமிரா எனப்படுகிற கண்ணுக்குத் தெரியாமல் காமிராவை வைத்துக் கொண்டு நிஜம் போலவே ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு கடைசியில் எல்லாம் சும்மா தான் எனப்படுகிற ப்ராங்க் ஷோக்கள் இன்றைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாக நம் வாழ்வுகளுக்குள் மெல்ல நுழைந்து கொண்டிருக்கிறது. இன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அத்தகைய டிவி நிகழ்ச்சி ஒன்றில் தான் கோமாளியாக்கப்பட்டதைத் தாளவொண்ணாமல் மனம் பிறழ்கிற வெங்கட கிருஷ்ணன் எனும் மனிதனாக நம் கண்களின் முன் தோன்றினார் பார்த்திபன்.இந்தக் கணம் கூட இயல்பென்று ஏற்க முடியாத ப்ராங்க் தன்மையை அன்றைய காலகட்டத்தில் தான் காதலிக்கப் படுவதாக நம்பி அந்த ஓரிழைப் பொய்யின் கருணையற்ற கரத்தைப் பற்றிக் கொண்டு பின் செல்கிறான் வெங்கடகிருஷ்ணன்.எல்லாம் பொய் எனத் தெரியவரும் போது மனம் நொறுங்குகிறான்.தான் விரும்பியதைக் காணத் தொடங்கும் மனவிரிசலினால் என்ன்வாகிறான் என்பது குடைக்குள் மழை படத்தின் மிகுதிக் கதை.

kudaikkul-Mazhai-300x225.jpg

கிருஷ்ணன் எனும் சிங்கப்பூர் கோமானாக வந்து இறங்கும் இன்னொரு பார்த்திபன் அவருடைய வணிகமுகத்தின் பிரதி பிம்பம்.ஆல்டர் ஈகோ என்ற சொல்லாடலை ஆர்.பார்த்திபன் அளவுக்கு இன்னொரு நடிகர் சாத்தியப்படுத்தவில்லை எனத் தோன்றுமளவுக்கு நிஜத்தில் ஆர்.பார்த்திபன் எனும் படைப்பாளி மற்றும் அவருக்கு புறவுலகம் தந்த நடிக பிம்பம் ஆகிய இரண்டையும் இந்தப் படத்தில் வெவ்வேறு விதங்களில் நம்மால் உணரமுடிகிறது.அதே வேளையில் நிஜம் என்பதையே நிகழ்ந்தது மற்றும் நிகழவிரும்பியது என்ற இரண்டாய்ப் பகுக்கலாம் என்ற அளவில் நம் கண்களின் முன் விரிந்த படத்தின் முதல் பாதிக்கும் அடுத்த பார்த்திபன் வந்த பிறகு நாம் காணும் இரண்டாம் பாதிக்கும் கடைசியில் நமக்குப் படத்தின் பூர்த்தியில் கிடைக்கிற முற்றிலும் எதிர்பார்க்கவே முடியாத மனவிளையாட்டு அபாரமான காட்சி அனுபவமாக மனதில் உறைகிறது.

மிக எளிய காட்சியாக இந்தப் படத்தின் கதையின் அடி நாதம் உறையும்.அதன் அதிர்ச்சியிலிருந்து எப்போதுமே பார்வையாளனால் மீள முடியாது.அத்தனை தந்திகளினுள் தன் அன்னையின் மரணமும் ஒளிந்திருந்ததைக் கண்ணுற்று அதிர்கிற காட்சியில் ஆர்.பார்த்திபனின் முகமும் உடலும் உள்மனமும் என சகலமும் பரிமளிக்கும்.தமிழின் மிகச்சிறந்த காதல் வசனப் படங்களின் பட்டியல் ஒன்றினைத் தயாரிக்கும் போதும் மறக்காமல் குடைக்குள் மழை படத்தின் பெயரை அதன் வரிசையில் எழுதியே ஆகவேண்டும்.அத்தனை ரசம் சொட்டும் வசனங்கள் அழகோ அழகு.மதுமிதா போதுமான இயல்பான நடிப்பை வழங்கினார்.

பார்த்திபனின் ரசனை உலகறிந்த ஒன்று.இந்தப் படத்தின் பின்புலத்தில் இடம்பெறுகிற உயிரற்ற பொருட்களுக்கும் இந்தப் படத்தினுள் உயிர் இருந்தது.உதாரணமாகச் சொல்வதானால் ஒரு மாடர்ன் ஆர்ட் சித்திரம் மற்றும் கடிகாரம் டெலிஃபோன் ஆகியவற்றைச் சொல்லலாம்.கலை இயக்கம் தொடங்கிப் படக்கலவை வரை எல்லாமும் குறிப்பிடத் தக்க உன்னதத் தரத்தில் விளங்கின.நா.முத்துக்குமாரின் பாடல்கள் இசைப்பேழையை வளமாக்கின.

தான் கையிலெடுக்கிற எல்லா முடிச்சுக்களையும் கொண்டு கடைசி பத்து நிமிடங்களில் பார்வையாள மனங்களின் அத்தனை ஒவ்வாமை சந்தேகங்கள் அனைத்திற்குமான கேளாவினாக்களுக்கெல்லாமும் விடைகள் தந்துவிடுவது அற்புதமான அறிவுஜீவித்தனமான உத்தி.அந்த வகையில் முதல் முறையை விட இரண்டாம் முறை காணும் போது இந்தப் படம் இன்னொரு உன்னதமாக அனுபவரீதியினால இன்பமாகவே ரசிகனுக்கு நிகழ்கிறது.புதிர்த் தன்மை மிகுந்த ஊகிக்க முடியாத விளையாட்டின் இறுதிப்போட்டி தருகிற ரத்த அழுத்தத்தினை எதிர்பாராமையை மனப்பிசைவை எல்லாம் இந்தப் படம் உருவாக்கியது.ரசிக மேதமைக்குள் இயங்க முயன்ற வெகு சில படங்களில் ஒன்றானது. இந்தப் படத்தை வழக்கசாத்தியமற்ற அபூர்வம் என்றே சொல்லலாம்.

ஒளிப்பதிவும் இசையும் படத்தொகுப்பும் இந்தப் படத்தின் உபதளபதிகள் என்றே சொல்லலாம்.இளையராஜா தன் குரலில் பாடிய அடியே கிளியே எப்போதைக்குமான சுந்தரகானம்.இசை கார்த்திக்ராஜா.மனம் ஆறாமல் பலகாலம் தவிக்கும் சோகக் கவிதையாகவே குடைக்குள் மழை படத்தினைச் சுட்ட முடிகிறது.மிக முக்கியமான திரைப்படம்.

இன்னொரு மழை வேறொரு குடை அசாத்தியம்.காதலற்ற காதலின் கவிதை குடைக்குள் மழை.

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-19-குடைக்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 20 – நாயகன்

aathma-poster-3.jpg

மணிரத்னத்தின் வருகைக் காலம் நடுமத்திய எண்பதுகள். நாயகன் அவரது திரைநதியின் திசைவழியைத் தீர்மானித்துத் தந்தது. நிலம் என்பது மனிதனுக்கு இந்தப் பிரபஞ்சத்துக்கும் வாழ்வதற்கும் இடையிலான பற்றுக் கோடாக எப்போதும் விளங்குவது. சொந்த உடலைச் சொந்தம் கொண்டாடுவதைப் போலவே ஊரை இறுக்கமாகத் தழுவிக் கொள்ளுகிறான். எந்த மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. பிறந்த ஊர், வளர்ந்த வீதி, பக்கத்து வீடு, படித்த பள்ளி, எனக் காலம் நினைவுகளாகவும், ஞாபகங்களாகவும் அவரவர் வசம் அலைதீராக் கடலாகிறது.

மொழி, இனம், மதம், என மற்ற பற்றுதல்கள் யாவும் மண்ணுக்குப் பின்னால் மட்டுமே அணிவகுக்கின்றன. ஊரை இழப்பது என்பது எத்தனை தொலைவு தன் ஊரிலிருந்து நகர்கிறானோ அத்தனை பதற்றத்துக்குரியவனாகத் தானற்ற வேறொருவனாக, தனக்குப் பிடிக்காத தன் பிரதியாக மனிதனை ஆக்குகிறது. மேலும், ஞாபக வாஞ்சை சொந்த ஊரைச் சுற்றியே அல்லாடுகிறது. இவை எல்லாமும் வாழ்வதற்காக நிலம் பெயர்ந்த யாவர்க்கும் அப்படியே பொருந்துவதில்லை. சொந்த இடம் அன்றி வந்த இடத்தை இனி வாழ்வதற்கான ஒட்டுமொத்தமாக உணர்கிற மனிதன், மேற்சொன்ன பதற்றங்களோடு கூடவே வாழ்விடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் போராடத் தொடங்குகிறான். இருப்பதும் கசப்பதும் குறைந்தபட்சம் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச வித்தியாசத்தைக் கூப்பிய கரங்களின் மன்றாட்டுத் தொடங்கி, குறுவாளின் நுனியில் மினுக்குகிற உயிரச்சம் வரை வெவ்வேறாக வாழ நேர்கையில் தன்னைத் துரத்துபவர்களிடமிருந்து பிடிபட்டு விடாமல் இருப்பதற்காகவும், தான் துரத்துபவர்கள் தன்னிடமிருந்து தப்பிச்செல்லாமல் இருக்கவும், ஒரு ஓட்டத்தின் இருவேறு நோக்கங்களோடு களமாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட வேலு எனும் சாமானியனின் கதை ‘நாயகன்’ என்ற படமானது.

nayagan-300x200.jpeg

நகர்வதற்கு இனி இடமில்லை எனும்போது திருப்பி அடிக்க ஆரம்பிக்கும் எளிய ஒருவனாக கமலஹாசன்.பிழைப்புக்காகப் புகுந்த ஊரில் வாழ்ந்தே ஆகவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்ட கூட்டத்தில் ஒருவன் மெல்ல எப்படி அந்தக் கூட்டத்திற்கான முதன்மை மனிதனாகிறான் என்பது காலம் காலமாக இருந்துவருகிற கதைமாதிரி எல்லா நிலங்கள் மொழிகளிலும் பல்வேறு பட்ட காலங்களிலும் நிகழ்ந்த கதைகளின் வரிசையில் இப்படியான சம்பவங்களை நிகழ்த்திச் சென்ற பலரது வாழ்வியல் சாட்சியங்களும் நிரம்பியிருப்பது சத்தியம்.அப்படியான கதை எதையும் கண்ணுறுகிற பொது சமூகம் தன் பிரதிநிதியாகவே அந்த மைய மனிதனைக் கண்ணுற விரும்பும்.எல்லோருக்கும் தனக்கான ஒருவன் உருவாவதை விரும்ப மட்டுமே இயலும்.திசைகளெங்கும் யாராவது நமக்காக முன்வர மாட்டனரா என்று ஏங்குவது காலமெல்லாம் சாமான்ய மக்களின் திறந்தவிழிக் கனவு தானே

மும்பை என்றழைக்கப்படுகிற பம்பாய் பெருநகரத்தில் வேலு பிழைக்க வழி தேடுகிறான்.அங்கே ஏற்கனவே முரண்பட்டுக் கிடக்கிற சிலபல தரப்புகளுக்கு மத்தியில் எதுவுமற்ற ஏழைமக்களின் தரப்பாக வேலுவும் அவனது ஆட்களும் உருவாகிறார்கள்.நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல என்பது வேலு கூட்டத்தாரின் தாரகமந்திரம்.மருத்துவம் உணவு உறைவிடம் கல்வி என ஆதாரத் தேவைகளுக்கான பெருங்குரலை எழுப்ப முற்படுவதாகக் கதை கட்டமைக்கப் படுகிறது.தனக்கென்று தனித்த சட்ட திட்டங்களுடன் பம்பாய் நகரத்தின் தவிர்க்க முடியாத மனிதனாக உருவெடுக்கும் வேலு தன் பெயருக்கு மாற்றான நிரந்தர அச்சமொன்றை ஏற்படுத்தி அதனைத் தானும் தன் கூட்டமுமாய்ப் பராமரித்து வருவதாகக் கதையின் அடுத்த கிளைத்தல் தொடங்குகிறது.

தன் உயிரைத் தவிர சகல உடல்பாகங்களிலும் அடித்து நொறுக்கப்படுகிற வேலு தன்னையும் தன்னை ஒத்த எளியமக்கள் கூட்டத்திற்கும் பெரும் சவாலாக பயங்கரமான அச்சுறுத்தலாக விளங்கும் காவலதிகாரியைக் கொல்கிற வேலு தன்னிடம் மறு நாள் பரீட்சை என்பதால் தன்னை சீக்கிரம் விட்டுவிடுமாறு கெஞ்சுகிற சின்னஞ்சிறியவளை பாலியல் விலங்கினின்று விடுவித்துத் தன் இணையாளாக்கிக் கொள்ளும் வேலு தன்னிடம் உதவி எனக் கேட்டுக் கெஞ்சுகிற காவல் உயர் அதிகாரிக்குப் பதிலாக அரசியல் செல்வாக்குள்ள மனிதனை வெட்டுகிற வேலு தன் மகளின் வினாக்களுக்கு பதில் சொல்ல இயலாமல் தவிக்கும் முதிய வேலு கடைசியில் தன்னால் கொல்லப்பட்டவனின் மகனது துப்பாக்கி குண்டுக்கு இரையாகும் வேலு என தன் சுயத்தை பெரிதளவு அழித்து நம் கண்களின் முன்னால் வேலு என்ற வேறொரு புதியமனிதனாகவே தோற்றமளித்தார் கமல்ஹாஸன்.

விஜயன் தாரா நாஸர் கார்த்திகா டெல்லி கணேஷ் ஜனகராஜ் சரண்யா நிழல்கள் ரவி ப்ரதீப்சக்தி டினு ஆனந்த் ஆகியோர் தங்கள் அளவறிந்து வழங்கிய நடிப்பு உறுத்தலற்ற மலர்தலாயிற்று.

ஒளிப்பதிவு பிசி ஸ்ரீராம்.

20487-fl18_tam_nayagan_1603411g-300x215.

மணிரத்னம் தன் பாணி கதைசொலல் முறையை இந்தப் படத்தில் வடிவமைத்தார் என்றால் தகும்.அதன் திரையாக்கத்தில் ஸ்ரீராமின் பங்கு மெச்சத் தக்கது.ஒரு காட்சியில் கதையின் நாயகன் கோபமாக ஒரு இடத்திற்குச் செல்கிறான் என்றால் மின்னலாய் இருவேறு பகுப்புகளில் அந்த இடத்தை அடைந்தான் என்று காட்டமுனைவது பெருவாரியான திரையாளர்களின் பாணியாக இருந்தது என்றால் மணிரத்னம் அதில் முற்றிலுமாக மாறுபட்டார்.காத்திருத்தல் கணங்கள் இடைக்கணங்கள் நகர்கணங்கள் ஆகியவற்றுக்கு திரையில் இடமுண்டு என்று நிறுவ விரும்பினார்.படிகளில் வரிசையாக ஏறிவருவது காண்பிக்கப் படும் போது ஒன்றாகவும் படியின் ஆரம்பம் நடு மற்றும் சேர்விடம் எனக் காட்டும் போது வேறொன்றாகவும் இருந்தே தீரும் என்று நம்பினார்.இதனை அவர் பகல் நிலவு படத்தில் இருந்தே தொடங்கினார் என்றாலும் நாயகன் அதை அவருடைய முத்திரையாகவே நிலைநிறுத்திற்று.ராமச்சந்திரபாபு அதை உள்வாங்கி பகல் நிலவு படத்தில் செய்ததை விட ஸ்ரீராம் நாயகனிலும் பின்னதான மணிரத்னத்துடன் கூட்டு சேர்ந்த படங்களிலும் அழகாக அதனை எடுத்தளித்தார் எனலாம்.
பெரிய கட்டிடத்தின் வாசலில் இருந்து கூட்டமாய் ஜனங்கள் நின்றுகொண்டு அய்யா எனக் கத்தி அழைக்கும் போது சன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் பெரியவர் பிறகு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டு கூடத்தில் நடந்து படிகள் முழுவதிலும் இறங்கி வந்து ஜனங்களை நெருங்கும் வரை துண்டு துளி விடாமல் காட்சியனுபவமாகக் கிட்டியபோது மக்கள் அதனைப் பெரிதும் ரசித்தார்கள்.

புலமைப்பித்தன் எழுதிய பாடல்கள் சாகாவரம் பெற்றன.நீ ஒரு காதல் சங்கீதம் வாய்மொழி சொன்னால் தெய்வீகம் பாடல் தமிழ்ச்சமூகத்தின் குரல்பறவையாகவே இன்னும் மன வானமெங்கும் பறந்து திரிகிறது.நான் சிரித்தால் தீபாவளி இன்னொரு மறக்க இயலாத முத்து.தென் பாண்டிச் சீமையிலே நாயகன் படத்தின் கைரேகை போல மாறி ஒலித்தவண்ணம் இருக்கிறது.அந்திமழை மேகம் தங்க மழை தூவும் கூட்டப் பாடல்களின் மழைப்பாடல்களின் வரிசைகளில் தனக்கென்று தனியிடங்களைப் பெற்றிருக்கிறது.நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே இன்றளவும் இசை ஞானியின் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்த வண்ணம் உயிர்க்கிறது.

பின்னணி இசை இந்தப் படத்தின் உயிர் பதுங்கிய கிளி.சொல்லித் தீராத மகத்தான கோர்வைகளுக்காகவே இன்றும் திரும்பித் திரும்பிப் பார்க்கப்படுகிற படங்களில் நாயகனுக்கு முக்கிய இடமுண்டு. இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் எப்போதும் இடம் பெறக் கூடிய தமிழ்ப் படங்களில் ஒன்று நாயகன்.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-20-நாயகன்/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்: 21 – யுத்தம் செய்

aathma-poster-3.jpg

பைபிள் கதாபாத்திரமான ஜூதாஸ் காட்டிக் கொடுத்தவன். இந்தக் கதையில் ஒரு ஜூதாஸ் வருகிறார். அவர் ஒரு டாக்டர். காட்டிக் கொடுக்காமல் உயிரை விடும் டாக்டர். கொஞ்சம் மூளையும் நிறையப் பணமும் வச்சிட்டு அதிகாரத்தால பணத்தால ஆள்பலத்தால அரசியல் பலத்தால போலீஸ் பலத்தால விரட்டி விரட்டி ஓட முடியாம செய்றியே எங்களுக்கு இருக்கிற மூளைக்கு நாங்க விரட்டுறோம். நீ ஓடு. எங்க ஓடினாலும் தப்பிக்கவே முடியாது என்றாற் போல் தன் கடைசி வாக்குமூலத்தை ஜூதாஸ் தந்தபடி தன் உயிரை விடுகிற காட்சியில் நாம் வாழும் உலகம் என்னமாதிரியானது என்பதைப் பற்றிய சித்திரம் மனதை நெருக்குகிறது.

நகரின் பரபரப்பான இடங்களில் வரிசையாக வெட்டப்பட்ட மனிதக் கரங்கள் அட்டைப் பெட்டியிலிடப்பட்டு கிடக்கின்றன.மக்கள் பீதியடைகிறார்கள்.காவல் துறையை அரசாங்கம் நெருக்குகிறது.தன் காணாமற் போன தங்கை சாருவைத் தேடுவதற்காக விடுப்பு கோரி தன்னை சந்திக்க வரும் ஜேகேயிடம் நீ இந்த கரங்கள் வெட்டப்பட்ட வழக்கை கண்டுபிடி இதோடு உன் தங்கை காணாமற் போன வழக்கையும் சேர்த்து விசாரிக்க கமிஷனரிடம் அனுமதி வாங்கித் தருகிறேன் என்று சிபிசி ஐடி பிரிவு டிஎஸ்.பி சந்திரமௌலி ஜேகேயைப் பணிக்கிறார்.தனக்கு உதவியாக ஒரு பெண் இரண்டு ஆண் காவலர்களுடன் அந்த வழக்கினுள் நுழைகிறான் ஜேகே.

அடுத்தடுத்த சம்பவங்கள் ஒரு கட்டத்தில் கரங்களுக்கு பதிலாக மனிதத் தலை ஒன்று இமைகள் நீக்கப்பட்டு காவல் நிலையத்தின் எதிரே தர்பூஸ் பழக்கடையின் மூடிய தார்பாலின் போர்வைக்குள் பழங்களுக்கு மத்தியில் இருத்தப்படும் போது வழக்கு சூடுபிடிக்கிறது.

Yuththam-Sei-240x300.jpg

சில காலத்துக்கு முன்பாகக் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட டீன் புருஷோத்தமன் குடும்பத்தின் அந்த முடிவுக்கும் தற்போதைய வெட்டுண்ட கரங்கள் ப்ளஸ் மனிதத் தலை ஆகியவற்றோடு இருக்கும் சம்பந்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து செல்கையில் ஜேகேயுடன் பார்வையாளர்களுக்கும் இரண்டே முக்கால் மணி’ நேரத்தின் நகர்தலின் அயர்ச்சி துளியும் இன்றி ஒச்சமற்ற கதைசொலல் மூலமாக மாபெரும் உணர்வு இழைகளைப் பெயர்த்துத் தருகிறார் மிஷ்கின்.பணம் கண்ணை மறைக்கையில் அதிகாரம்

வளைந்து கொடுக்கையில் அன்பைக் கடவுளாகத் தொழுவதைத் தவிர வேறொரு குற்றமும் புரியாத கையறு நிலையில் தள்ளப்படுகிற மென்மன மனிதர்களது வாழ்வில் மிருகங்களாய் நுழைவோர் மனிதர்கள் இல்லை என்பதும் அவர்களைத் தீர்த்துக் கட்டுகிற வரை மனிதத் தன்மையோடு அணுகத் தேவையில்லை என்பதும் அன்பு கொடூரமாய்க் கையாளப்படும் போது கொடிதினும் கொடிய வழிமுறைகளில் தண்டிக்கப் படுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதும் யுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதை நகரும் திசைவழி.

மிஷ்கின் தான் நம்புகிற கதையினூடாகத் தானே எல்லாருமாய் புகுந்து திரும்பிய பிறகே கதை தொடங்கும் இயல்புள்ள படைப்பாளி.அவருடைய மனிதர்கள் எளியவர்கள்.அவர் முன்வைக்கிற உலகம் கடும் சட்ட திட்டங்களுக்கான கீழ்ப்படிதலை முன்வைத்த வண்ணம் எப்போதும் பாதுகாக்கப்பட்டுக் கொள்ள வேண்டிய உலகமாகவே இருக்கிறது.அவருடைய உலகம் மனம் கொண்ட்வர்கள் மனமற்றவர்கள் என்று இரண்டாய்க் கிளைக்கிறது.மனம் கொண்டவர்களைத் தீண்டியும் துன்புறுத்தியும் கொன்றும் மனமற்றவர்கள் செயல்படும் போதெல்லாம் மிஷ்கின் பரமாத்மாவாகிறார்.அவருடைய கதை ஒரு போதும் துன்பியலுக்குத் துக்கமே தீர்வு என்று முடிவதே இல்லை.கணக்கைத் தீர்த்துக் கறைகளை சுத்தம் செய்து அச்சத்தை நிலை நாட்டி அன்பை மாற்றற்ற ஒரே ஒரு
ஒன்றாகவே முன்வைப்பவர் மிஷ்கின்.அவருடைய கெட்டவர்களுக்குள் கையறு நிலையும் தொடங்கியதை முடிக்கத் தெரியாத தன்மையும் ஆங்காங்கே காணப்படுவது ரசம்.ஒரு கடவுள் தோன்றிக் கதைகளைப் பாதியில் தீர்த்துத் தந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என
மிஷ்கினின் தீயவர்கள் கூட ஒரு ஓரத்தில் ஏங்குவதைக் காணமுடியும்.இது திரைப்படைப்புகளில் அத்தனை எளிதில் காணக்கிடைக்கிற சமாச்சாரம் இல்லை.அபூர்வமான அரிய ஒன்றுதான்.

யுத்தம் செய் படத்தில் திரிசங்குவாகத் தோன்றும் செல்வா ஜேகேயின் தங்கை சாருவிடம் பேசும் காட்சியும் இசக்கிமுத்துவாகத் தோன்றும் மாரிமுத்து தன் கண்ணில் அடிக்கப் பட்ட ஸ்ப்ரேயைப் பற்றித் திட்டியவாறே வண்டியில் ஏறும் காட்சியும் யதார்த்தமான மனித சித்திரங்களை முன்வைக்கிறவை.அதிகாரத்தின் மீதான சாடலே படைத்தலின் உச்சபட்ச சுதந்திரம்.இந்தப் படத்தில் இன்னும் இரண்டு காட்சிகள் வரும். அதுவரை ஜேகே தன் தங்கை காணாமற் போன இடத்தின் எதிர்வீட்டுப் பெண்ணிடம் தன்னை போலீஸ் என்றே காண்பித்துக் கொள்ளாமல் விசாரிப்பார்.ஆட்டோக்காரர்களிடமும் கூட காவலர் என்றே காண்பித்துக் கொள்ள மாட்டார்.பொது உடுப்பு தான் அணிவது சிபிசி ஐடி பிரிவினரின் வழக்கம் என்பது வசதியாக இருக்கும்.எந்தத் தகவலும் கிடைக்காது.ஒரு கட்டத்தில் ஜேகேவுக்கு இன்னொரு தகவல் கிடைக்கும்.ஆட்டோவில் இரண்டு பேர் இருந்தார்கள் என்ற தகவலை உறுதி செய்வதற்காக இன்னொரு முறை அதே பெண் வீட்டுக்கு செல்வார்.ஜேகேயைப் பார்த்ததும்

vlcsnap-2011-03-25-15h42m12s101-300x134.

“ஏம்பா அறிவில்ல உனக்கு எத்தினி வாட்டி சொல்றது?” என எகிறுவார் அந்தப் பெண்ணின் தாய்.உடனே சேரனுக்கு உதவியாளர் கிட்டப்பாவாக வரும் ஈ.ராமதாஸ் அடி செருப்பால வாயை மூடிட்டு உள்ள போ.ப்ராத்தல் கேஸ்ல உள்ள தள்ளிருவேன்..போ உள்ளே என்பார்.ஏற்கனவே பல முறை காவல்துறையினர் விசாரித்து எல்லாம் சொல்லிவிட்டேனே என அதே பெண் சென்றமுறை சேரனிடம் பதில் சொல்லும் காட்சியும் வரும்.சேரன் காவலர் என்று தெரியாமல் அவரைத் திட்டும் அந்த வீட்டின் பெண்மணியிடம் தான் எந்தப் பிரிவில் என்ன பணியிடத்தில் இருந்தாலும் குறைவான அதிகாரத்தை மட்டுமே கையில் கொண்டிருக்கக் கூடிய கிட்டப்பா அந்தப் பெண்மணியிடம் சிந்தும் சொற்கள் போலீஸ் எனும் துறையின் பொது அதிகாரமாக எங்கேயும் தமது கரத்தில் உயர்த்திப் பிடிக்க விரும்புகிற ஒற்றைச் சவுக்காக பார்வையாளன் கண்முன் விரியும்.இன்னொரு காட்சியில் காவல் நிலையத்துக்கு நேர் எதிரே தர்பூஸ் பழங்களை ப்ளாட்ஃபாரத்தில் அடுக்கி வியாபாரம் செய்யும் எளிய மனிதன் தன்னால் இயன்ற அளவு தார்பாலின் ஷீட் கொண்டு அந்தக் கடையை மூடிப் போர்த்திக் கட்டி விட்டு வீட்டுக்குச் செல்வது காட்சியாய் விரியும்.அடுத்த கணமே தன் பணி முடிந்து வீட்டுக்குக் கிளம்பும் அந்த ஸ்டேஷன் காவலர் ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை அந்தக் கடைமுன் நிறுத்துவதும் தார்பாலீன் ஷீட்டை நெகிழ்த்தி ஒரு தர்பூஸ் பழத்தை எடுத்துத் தன் வாகன பெட்ரோல் டேங்க் மீது இருத்திக் கொண்டு கிளம்பிப் போவதும் காட்சியாகும்.

காவல் நிலையத்திற்கு எதிரே தன் தர்பூஸ் பழக் கடையை நடத்தி வருகிற மனிதன் வீட்டுக்குச் சென்றபின்னரும் கூட தனக்குண்டான கனியைக் கொய்து செல்லும் மாமூலான காவல்கரங்களை கண்ணுறும் அதே வேளையில் அந்தக் கடைக்காரன் நாளும் கடை நடத்துகையில் நித்யத்தின் எத்தனை கனிகளை அதிகாரத்திற்கான வாடகையாக/விலையாக/அன்பளிப்பாக/லஞ்சமாக தரவேண்டி இருக்கும் என்கிற கணக்கு புரியாமல் இல்லை.இன்னும் ஆழ்ந்தால் அது மேற்சொன்ன எந்த வகைமைக்குக் கீழும் வராது என்பதும் ஒரு கம்பீரத்துக்கு மாற்றாய்த் தரவேண்டிய காணிக்கை என்பதும் புரியவரும்.பின்னே காவல் நிலையத்துக்கு நேர் எதிர் ப்ளாட்ஃபாரத்தில் இருக்கிற கடை என்பது கம்பீரமில்லையா என்ன..அந்தக் கடைக்காரனுக்கே அதுவொரு அந்தஸ்தான ஸ்தலமாகவும் அடையாளமாகவும் இருக்கும் தானே..?

மிஷ்கின் தமிழில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான படைப்பாளுமை.அவரது படவரிசையின் மூலமாக மிஷ்கினின் கதாமாந்தர்களும் அவர்தம் கதைகளும் கூட்டு மனங்களின் தனித்த இடத்தை நிரடியபடி நிலைக்கின்றன.

இந்தத் திரைப்படம் முன்வைக்கிற அன்பு எளியவர்களின் வாழ்வின் மீதான வன்முறை இவற்றிற்கெதிரான யுத்தத்தை முன் வைக்கிறது.நல்ல எனும் பதத்திற்கும் கெட்ட எனும் பதத்திற்கும் இருந்து வரக் கூடிய காலகால முரண் இப்படியான யுத்தங்களின் பின்னே இருக்கக் கூடிய குறைவற்ற நியாயமாகிறது.எப்போதும் உலர்ந்துபோகாத ஈரமான அன்பை இறைஞ்சுகிற நல்மனங்களின் கூட்டுக்குரல் யுத்தம் செய்.

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-21-யுத்த/

 

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.