Jump to content

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’


Recommended Posts

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

modi-tna-300x201.jpgதமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு வந்த இந்தியப் பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசரமாக அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என்று, கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியிருந்தது.

அரசியலமைப்பு திருத்தங்கள் ஒரு சிக்கலான பிரச்சினை என்பதால் இந்த விவகாரத்தை ஆய்வு செய்த பின்னரே, அதுகுறித்து பார்க்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.

அதேவேளை, பலாலி விமான நிலையத்தை  அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்தியப் பிரதமரிடம் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கோரியிருந்தனர் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.

எனினும், கூட்டமைப்பு பிரதிநிதிகளின் புதுடெல்லி பயணம் எப்போது என்ற தகவல் அந்தச் செய்தியில் கூறப்படவில்லை.

http://www.puthinappalakai.net/2019/06/17/news/38570

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு .... இது வரை இந்தியாவுக்கோ, அல்லது வேறு எந்த வெளிநாட்டுக்கோ போய்...
தமிழ் மக்களுக்கு, சாதகமாக  சாதித்ததாக  எதுவுமே இல்லை.

அப்படியிருக்க... இவர்கள்  "ஷொப்பிங்" செய்வதற்காக போகும் பயணங்களால்,  அர்த்தம் இல்லை.
மூடிக் கொண்டு... ஊரிலேயே இருப்பதுதான் நல்லது.

Link to comment
Share on other sites

31 minutes ago, nunavilan said:

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

திரு, சுமந்திரன் அவர்கள் அரசாயல் தீர்வு கிடைக்காவிடில் பதவியை துறப்பேன் என்று முன்னர் உறுதி வழங்கியிருந்தார். அதற்கு என்னவாயிற்று?

அரசாங்கத்துக்கான தமது ஆதரவை வழங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அரங்கேற்றவே அரசுக்கான தங்களின் ஆதரவு தொடர்வதாகக் கூட்டமைப்புக் கூறிவந்தது.

ஆனால் இப்போது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு என்னவாயிற்று என்றே தெரிய வில்லை 😞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பங்கள்...கிடைக்கின்ற போதெல்லாம்.....தூதாக அனுப்புவதற்க்குத்...தமிழனிடம்....ஒரு கிருஷ்ணன் கூட இல்லை  என்பதே நிதர்சனம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 சமோஷா & சாய்.......

Link to comment
Share on other sites

நல்லகாலம் வருகுது!          நல்லகாலம் வருகுது!

நாலுபேர் சென்றால் நல்லது நடக்கும்.!! 

LRG_20170623150404311932.jpg

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

அதேவேளை, பலாலி விமான நிலையத்தை  அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்தியப் பிரதமரிடம் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கோரியிருந்தனர் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.

இது ரொம்ப முக்கியம். 😂

Link to comment
Share on other sites

2 hours ago, Lara said:

இது ரொம்ப முக்கியம். 😂

முக்கியம் மட்டுமல்ல, அவசரமும்கூட. தமிழீழத்தில் குடியேற்றப்பட்ட, குடியேற்றப்படும் சிங்களமக்கள்  தமிழர்களைப்போல் கொழும்புவந்து சிரமப்படாது பயணிக்கவேண்டும் என்ற கூட்டமைப்பின் நல்லெண்ணமே தவிர வேறொன்றுமில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பு .... இது வரை இந்தியாவுக்கோ, அல்லது வேறு எந்த வெளிநாட்டுக்கோ போய்...
தமிழ் மக்களுக்கு, சாதகமாக  சாதித்ததாக  எதுவுமே இல்லை.

அப்படியிருக்க... இவர்கள்  "ஷொப்பிங்" செய்வதற்காக போகும் பயணங்களால்,  அர்த்தம் இல்லை.
மூடிக் கொண்டு... ஊரிலேயே இருப்பதுதான் நல்லது.

கொழும்பிலை வீடு  டெல்லியிலும் வீடு கிடைக்கும் என்று அலையிதுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

Bildergebnis für rocket ready gif

ஆ....வருது...வருது.......ஆ  விலகு விலகு....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

 

திரு, சுமந்திரன் அவர்கள் அரசாயல் தீர்வு கிடைக்காவிடில் பதவியை துறப்பேன் என்று முன்னர் உறுதி வழங்கியிருந்தார். அதற்கு என்னவாயிற்று?

அரசாங்கத்துக்கான தமது ஆதரவை வழங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அரங்கேற்றவே அரசுக்கான தங்களின் ஆதரவு தொடர்வதாகக் கூட்டமைப்புக் கூறிவந்தது.

ஆனால் இப்போது அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு என்னவாயிற்று என்றே தெரிய வில்லை 😞 

சுமத்திரன் தமிழனை வைச்சு பிழைக்க வந்தவர் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா ampaani?

Link to comment
Share on other sites

இந்திய பிரதமருடனான சந்திப்புக்கு இன்னும் உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கவில்லை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி அழைத்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தன.

இது சம்பந்தமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் எமது செய்தி சேவை தொடர்புகொண்டு வினவிய போது, கொழும்பில் வைத்து கூட்டமைப்பு மோடியை சந்தித்த வேளையில் இதற்கான அழைப்பு கிடைத்திருந்த போதும் அதன் பின்னர் இதுவரையில் அதிகார பூர்வமான அழைப்புக்கள் எதுவும் விடுக்கப்படவில்லை என கூறினார்.

இதேவேளை இந்த செய்தி குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்த்தானிகரகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்திய மத்திய அசரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் தங்களுக்கு அனுப்பப்படவில்லை எனவும் அதன் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

http://www.hirunews.lk/tamil/218597/இந்திய-பிரதமருடனான-சந்திப்புக்கு-இன்னும்-உத்தியோகபூர்வ-அழைப்பு-கிடைக்கவில்லை-த-தே-கூ

Link to comment
Share on other sites

சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை  அடைந்தே தீர்வோம் - சுமந்திரன் 

முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

sumanthiran.jpg

ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்திய வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா நேற்று விளையாட்டுக்கழக மைதானத்தில் கழகத்தின் தலைவர் சே.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களின் அரசியல் பயணத்திலே பல வித்தியாசமான தசாப்தங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். ஆனால், இன்று நாங்கள் இருக்கின்ற சூழல் இதற்கு முன்னெப்போதும் இல்லாத சூழலாக இருக்கின்றது.  

எங்களுக்கு உகந்த ஒரு சூழலை நாம் உருவாக்கி விட்டோம் என்று நினைத்திருந்தபோது அந்தச் சூழலே எங்களுக்கு மாறானதாகவும், நாங்கள் சறுக்கி விழக்கூடியதாகவும்,  விழுந்தால் பாரிய காயம் ஏற்படக்கூடியதாகவும் இன்று  எங்கள் முன்னால் இருந்து கொண்டிருக்கின்றது. 

மிக நிதானமாக, மிக கவனமாக நாங்கள் எங்களது மக்களது நலன்களை முன்னிறுத்தி முன்னேற வேண்டிய காலமாக இருக்கின்றது. 

விசேடமாக இந்த வருடத்தில் இவை எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய வேண்டும். எமது நீண்டகால இலக்குகளை அடைவதற்கான வழிகள் என்ன? பொதுமக்களினது நலன்களை அடைவதில் அவர்களுக்கு எப்படித் தலைமைத்துவம் கொடுக்க முடியும்? என்பது குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலமாக இது இருக்கின்றது.

இது இலகுவான ஒரு சவால் அல்ல. முன்னெப்போதும் இல்லாத பலத்த சவால். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு  நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக முகம் கொடுக்க வேண்டிய ஒரு சவாலாக இது இருக்கின்றது. எனவே, இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/58436

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/17/2019 at 4:15 AM, nunavilan said:

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ****  நாலு பேர்... இந்தியாவுக்கு  போறதிலும்  பார்க்க,
மனோ கணேசனை... தனிய  அனுப்பி வைக்கலாம்.  பிரயோசனமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thanni-Lorry-833x474.jpg

அங்கிட்டு போய் நேர விரயம் செய்து தேதண்ணி, கொப்பி, வடை, சமோசா,பஜ்ஜி சாப்பிட்டுவதை விடுத்து மக்கள் பணிகளில் கவனம் செலுத்தலாமே..?👍

அவனவன் குடிக்க .. தண்ணீர் இல்லையென்று அலையுறான் .. மக்கள் பிரதிநிதிகள் எண்டு சொல்பவர்கள் ஆளுக்கு ஒரு ரெங்கர் லொறியில் தண்ணீர் விநியோகம் செய்யலாம்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுனருக்கெதிராக உண்ணாவிரதமிருந்து அதில் வெற்றியும் கண்ட அத்திரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதம் தமிழர்களுக்கும் சேர்த்தே  தெளிவாக ஒரு செய்தியை அப்போதே சொல்லியிருக்கிறது 

அது, என்னதான் ஐநா பக்கம் ஓடிபோயோ இந்தியா பக்கம் சாய்ந்து நின்றோ எமக்கென ஒரு தீர்வு வந்தாலும் பெளத்த பீடஙகள் அதை முளையிலேயே கிள்ளியெறிய ஓடிபோய் உண்ணாவிரதமென்று சொல்லி தலதா மாளிகைக்கு முன்னாடி மல்லாந்து படுத்துக்கொள்ளும்.நாடு தழுவிய ரீதியில்.சிங்களவர்களை கட்சி பேதஙகளை மறந்து தீர்வுக்கெதிராய் ஒன்று திரட்டும் ,தீர்வுக்கு  தலையசைக்கும் அரசை ஒரே மாசத்தில் கவிழ்க்கும்.

Link to comment
Share on other sites

On 6/17/2019 at 1:51 PM, ampanai said:

 

திரு, சுமந்திரன் அவர்கள் அரசாயல் தீர்வு கிடைக்காவிடில் பதவியை துறப்பேன் என்று முன்னர் உறுதி வழங்கியிருந்தார். அதற்கு என்னவாயிற்று?

 

செய்தி: அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக  அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சொன்னது: ஜூலை 2013. 

கேள்வி: அதற்கு என்னவாயிற்று?

இப்பொது : 2013இல் உடுத்த காட்சட்டை சைசும் காணாது!

Link to comment
Share on other sites

25 minutes ago, puthalvan said:

இப்பொது : 2013இல் உடுத்த காட்சட்டை சைசும் காணாது!

கோவணம் கட்டினால் உந்த சைசு பிரச்சனை இல்லையே. ! 🤣

A_Farmer_in_Tamil_Nadu.JPG

Link to comment
Share on other sites

"அண்மையில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தான் ஒரு போராட்டம் ஒன்றினை நடத்திய தளபதி போன்று தீர்வுக்கு முயலுவோம் என்று  உரையாற்றியிருந்தார். இவ்வுரையானது தமிழர்களிடையேயும், சமுக வலைத்தளங்களிலேயும் ஒரு கேலிக்குரிய விடயமாக நகைச்சுவையான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது. அதனால் இவர்கள் அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்குவதுதான் தமிழர்களிற்கான உண்மையான தீர்வாக அமையும் என தெரிவித்தார்."

போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் எண்ணுகின்றார் ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்.!

https://www.virakesari.lk/article/58512

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 hours ago, ampanai said:

சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை  அடைந்தே தீர்வோம் - சுமந்திரன் 

முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அந்த இலக்கு  என்னவென்று ஒருக்கா  என்றாலும்  ஓபிணா சொல்லுங்க  சார்...???

Link to comment
Share on other sites

On 6/17/2019 at 8:45 AM, nunavilan said:

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’

On 6/17/2019 at 8:58 PM, குமாரசாமி said:

Bildergebnis für rocket ready gif

ஆ....வருது...வருது.......ஆ  விலகு விலகு....:cool:

சம்மந்தன்-மாவை-சுமந்திரன் கோஷ்டியின் நிலையை காட்டும் அருமையான சலனக் காட்சி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி படிசிட்டு போங்கோ... அலுவல்கள் விறு, விறு எண்டு நடக்கும்.

(அப்ப சிங்களத்தைப் படித்தால் பிரச்சனையே இல்லாமல் போடும்)

Link to comment
Share on other sites

சுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்! 
 

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத்தமிழர்களிற்கு முற்றுமுழுதாக உதவுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அர்ஜுன் சம்பத் தனக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு அதிலும் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. ஈழத் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எனவும் செய்யப் போவதும் இல்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அண்மையில் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அர்ஜீன் சம்பத் இலங்கை ஆதிகாலம் தொட்டுச் சிவபூமி இருந்தது.அதன் பின்னரே ஏனைய மதங்கள் வந்திருந்தன.

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை. தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.

தூண்டுதல் மதமாற்றத்தையோ கட்டாய மதமாற்றத்தையோ பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கிறார்.

திருக்கேதீச்சரம் திருக்கோயில் கட்டுவதற்கு இந்திய அரசு பல கோடி ரூபாய்களை வழங்கியது. மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடிஸ்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன். மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன்.

தமிழர்களுக்கு எதிரான சைவர்களுக்கு எதிரான கடும் போக்குடைய இவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கப் போனால் பிரதமர் மோடி உதவமாட்டார். ஈழத்தமிழர் சார்பாளராக இவர்கள் போவதை இந்திய அரசு விரும்பவில்லை எனப் பலமுறை எடுத்துக் கூறியுள்ளது .

அண்மைக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தில்லி வந்த பொழுதும், கிறித்தவர்களை உங்கள் சார்பாக அனுப்பாதீர்கள் எனப் பாரதிய சனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு சிறப்பாக சைவர்களுக்கு உதவி வேண்டுமானால் அரசியல் தீர்வைக் கொண்டு வர வேண்டுமானால் சைவ தலைமை உள்ள கட்சிகள் பாரதப் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும்.பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு முற்று முழுதாக உதவுமெனவும் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

https://www.pathivu.com/2019/06/hindu_18.html

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடிஸ்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன். மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன்.

இந்தக் கறுப்பாட்டைச் சம்பந்தர் எதற்காகக் கொண்டுவந்தார்....????? 🤔🤔

Link to comment
Share on other sites

13 hours ago, ampanai said:

சுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்! 

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை. தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.

இந்திய அரச மடையர்களால் உருவாக்கப்பட்டு வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றுக்கும்முதவாத மாகாணசபை  சட்டவரைபுகளைக் கூட நடைமுறைப்படுத்த வக்கில்லாத இந்திய மாயையில் மூழ்கியுள்ள இந்தியக் கயவர்கள் தங்களது கையாலாகாத் தனத்தை மறைக்க இது போன்ற நொண்டிச்சாட்டுகளை அவிழ்த்துவிடுவது புதிதல்ல.

சிங்கள-பௌத்த அரசுகள் கொடுக்கும் சன்மானங்களை கைகட்டி வாய்பொத்தி வாங்கிக்கொண்டு தமிழின அழிப்புக்கு துணைபோகும் இந்திய அரச பயங்கரவாதிகளின் சுயரூபங்களை வெளிப்படுத்தும் முதுகெலும்பில்லாத அர்ஜுன் சம்பத் போன்ற ஹிந்திய அடிவருடிகள் இது போன்ற நொண்டிச்சாட்டுகளை அவிழ்த்துவிடுவது புதிதல்ல.

அதற்காக சுமந்திரன் திறமானவர் என்று நான் சொல்லவரவில்லை! ஆனால், சுமந்திரனைப் போலவே அடிமைத்தன அரசியல் செய்யும் கையாலாகாத அர்ஜுன் சம்பத் போன்ற ஹிந்திய அடிவருடிகளின் போலித் தனங்களில் மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மறவன்புலவு சச்சிதானந்தன் மட்டுமல்ல ஈழத்து சைவர்களும் (இந்துக்களும்) மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.