Jump to content

இலங்கை பொருளாதாரம் : இரண்டாம் காலாண்டு (APR - JUL ) : வீழ்ந்ததைக் கட்டியெழுப்புமா?


Recommended Posts

இலங்கையில், 4/21 அன்று இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் ஆரம்பித்துள்ள இலங்கையின் இரண்டாம் காலாண்டுக்கான பொருளாதாரமானது, மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரண்டாம் காலாண்டுப் பகுதியானது, மக்களிடத்தில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுடன், சர்வதேச் ரீதியில் வீழ்ந்துபோயுள்ள இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்து, சுற்றுலாத்துறையை மீளக்கொணர்வதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக அமைந்துள்ளது.   

இவற்றின் மூலமாக, இலங்கை இவ்வருடத்தில் திட்டமிட்ட பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள முடியாவிட்டாலும், மிக மோசமான எதிர்ப்பக்க நிலைமைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இதற்கு நாட்டின் உள்நாட்டு வர்த்தக நம்பிக்கைகள் உயர்வடைவதும் அரசியல் சூழ்நிலைகள் ஸ்திரமாக அமையப்பெறுவதும் மிக முக்கியமானதாகும். இல்லாவிடின், 2019ஆம், 2020ஆம் ஆண்டுகளில், இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமாகப் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் காணப்படுவதாக, பொருளியல் வல்லுநர்கள் எதிர்வு கூறுகிறார்கள்.  

பொருளாதார வளர்ச்சி 

2019ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 3 சதவீதம் தொடக்கம் 5 சதவீதம் வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாகவும் வேகமாக மீள்புத்துணர்ச்சி பெற்றுவரும் சுற்றுலாத்துறை காரணமாகவும் 2018இல் எட்டப்பட்ட 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடித்து, 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இந்த வருட இறுதியில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தல், அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, இந்த இலக்கை அடைந்துகொள்ளுவது, தற்போதைய நிலையில், சாத்தியமானதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.   

2019ஆம் ஆண்டில், ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவது முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவொன்றாகும். ஆனாலும், எதிர்பாராதவிதமாக நேர்ந்த பயங்கரவாதத் தாக்குதலும் அதையொட்டி இடம்பெறும் மதரீதியான அரசியல் அசாதாரண செயற்பாடுகளும், இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாகப் பாதிக்கச் செய்துள்ளன. இந்த நிலைமைகளிலிருந்து முழுமையாக மீள, குறைந்தது மூன்று தொடக்கம் ஆறுமாத காலமாவது தேவையாகவுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதிக்குப் பின்னதாக, உடனடியாகவே ஜனாதிபதி தேர்தல் வருகின்றமையானது, அனைத்தையுமே மீளவும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய அபாயநிலையைத் தோற்றுவித்துள்ளது. அதிலும், தற்போது நிலவிவருகின்ற அரசியல் போர்ச்சூழலானது, எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூட வழிவகுக்கக் கூடியதாகவுள்ளது. எனவே, எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதென்பது, முட்பாதையில் நடப்பதற்குச் சமமான ஒன்றாகும்.   

சர்வதேச நிலைமைகள் 

இலங்கையைப் பொறுத்தவரையில், தற்போது சர்வதேச நாடுகள் தாம் விதித்திருந்த இலங்கைக்கான பயணத்தடையை, மெல்ல மெல்லத் தளர்த்தி வருவது சாதகமான காரணியாகவுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கப்பெற்றமையும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, பொருளாதாரம் மோசமாகத் தளர்ந்துபோகாமலிருக்க உறுதுணையாக அமைந்திருந்தது.  

இலங்கையின் சர்வதேச வர்த்தக நிலைமைகளைப் பொறுத்தவரையில், அமெரிக்க டொலருக்கு எதிராக, இலங்கை நாணயமானது மிக மெதுவாக உறுதியான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இதன்விளைவாக, சர்வதேச வர்த்தகத்திலும் நாணய ஒதுக்கத்திலும், இலங்கையானது, வலுவடையக் கூடிய நிலையைக் கொண்டிருக்கிறது. அத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை நாணயம் வலுப்பெறுவதன் விளைவாக, நாட்டின் வட்டிவீதங்களிலும் சாதகமான மாற்றங்கள் உருவாக வாய்ப்பேற்பட்டுள்ளது.   

எரிபொருள் விலை   

சர்வதேச ரீதியில் எரிபொருளுக்கான விலை அதிகரிக்கா விட்டாலும், இலங்கையின் கடந்தகால அசம்பாவிதங்கள் காரணமாக, அதிகரிக்காத எரிபொருள் விலையை, தற்போது இலங்கை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதற்குப் பின், சர்வதேச ரீதியில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாதவிடத்து அல்லது அமெரிக்கா ஏதேனும் விபரீத முடிவுகளை எடுக்காதவிடத்து, இலங்கையிலும் எரிபொருள் விலையின் தடுமாற்றமானது குறைவாகவே அமைந்திருக்கும். இதன்மூலமாக, மக்களின் அடிப்படைப் பொருளாதாரச் செயல்பாடுகளிலோர் உறுதியான நிலையைப் பேணிக்கொள்ள முடியும்.  

வர்த்தகப் பற்றாக்குறை

இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பிரச்சினையாகவிருப்பது கடந்த காலங்களில் அதிகரித்துச் செல்லும் வர்த்தகப் பற்றாக்குறையாகும். 2017ஆம் ஆண்டில் இது 9.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்ததுடன், கடந்த வருடத்தில் 10.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது. இந்தப் பாரிய வர்த்தகப் பற்றாக்குறையானது, சென்மதி நிலுவையையும் வெளிநாட்டு நாணயவிருப்பையும் பாதிப்பதாக அமைந்துள்ளது.   

இலங்கையைப் பொறுத்தவரையில், கடந்த சில வருடங்களாக ஏற்றுமதியைப் பார்க்கிலும், இறக்குமதியானது மிக அதிகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சலும் வெளிநாட்டு நாணயவிருப்பு ஒதுக்கமும் குறைவாகவுள்ளது. குறிப்பாக, 2018ஆம் ஆண்டில், இலங்கையின் ஏற்றுமதியானது, 11.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது. ஆனால், இறக்குமதியானது, 22.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது. இந்த இடைவெளியைப் பூர்த்தி செய்ய, இலங்கையானது தனது வெளிநாட்டு வருமானங்களைப் பயன்படுத்தவேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டிருந்தது.   

ஆனால், 2019ஆம் ஆண்டில் இந்த நிலையில் மிக முன்னேற்றகரமான நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில், இறக்குமதி அளவானது, 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து, குறைவாகவே உள்ளது. இந்த நிலையானது, இனிவரும் காலாண்டுகளிலும் தொடருமாயின், நாட்டின் வெளிநாட்டு நாணயவிருப்புக்கு இது பலம்சேர்ப்பதாக அமையும்.   

சுற்றுலாத்துறை

இலங்கையானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் தான், வழமையான சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்க்க முடியுமென, பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்க்கை அறிக்கையானது சுட்டிக்காட்டுகின்றது. எனவே, இலங்கையானது எதிர்வரும் மாதங்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான உகந்த சூழலை, நாட்டில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அத்துடன், நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு, விளம்பரங்கள் ஆகியவற்றை, சர்வதேச அரங்கில் மீளவும் நிகழ்த்த வேண்டியதாகவுள்ளது. இதற்கான செலவுகள் அனைத்தும் எதிர்காலச் சுற்றுலாத்துறை வருமானத்தின் முதலீடாக அமைவதுடன், வருங்காலச் சுற்றுலாத்துறையின் அஸ்திபாரமாகவும் அமையும்.  

இவ்வருடத்தின் ஆரம்பத்தில், இலங்கையின் சுற்றுலாத்துறை மூலமாக, 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனாலும், 3 தொடக்கம் 3.5 பில்லியன் வருமானத்தையே தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்தது. இருந்தபோதிலும் இவ்வருடத்தின் இறுதியில் இடம்பெறக்கூடிய ஜனாதிபதித் தேர்தல், இதைப் பாதிக்கக்கூடிய சாத்தியப்பாடுகளும் அதிகமாகவுள்ளன.   

இவ்வாண்டில், நாம் சுற்றுலாத்துறை வருமானத்தின் மூலமாக இழக்கின்ற மேலதிக எதிர்பார்க்கை வருமானமானது, நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. நாட்டின் அந்நியச் செலவாணி வருமானத்தில் ஏற்படுகின்ற இந்தக் குறையைப் போக்கிக்கொள்ள, இலங்கை அரசாங்கமானது, மாற்றீட்டு வழிமுறைகளைக் கண்டறிந்து கொள்வது அவசியமாகிறது. இதன்மூலமாக, நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தேக்கநிலையைத் தவிர்த்துக்கொள்ளக் கூடியதாகவிருக்கும்.  

பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக, இலங்கையின் முதலாம் காலாண்டு பாதிப்படைந்துள்ளதுடன், மூன்றாம் / நான்காம் காலாண்டில் இடம்பெறக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் ஏதேனும் குழப்பநிலை ஏற்படுமாயின், அதன் காரணமாகவும் பொருளாதாரச் செயற்பாடுகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, இந்த இரண்டாம் காலாண்டானது, இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்தக் காலாண்டில் இலங்கை அரசாங்கமானது, தனது பொருளாதாரத்தை மீளெடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.    

http://www.tamilmirror.lk/business-analysis/இரண்டாம்-காலாண்டு-வீழ்ந்ததைக்-கட்டியெழுப்புமா/145-234279

Orientation Programme on “Sri Lanka’s Economic Outlook aftermath of Easter Attacks” Speech delivered by Dr. Indrajit Coomaraswamy, Governor of the Central Bank of Sri Lanka. organized by the Secretary/Foreign Affairs for foreign diplomats.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.