Jump to content

வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும் : வாசுதேவ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும்.அவர்களை பயங்கரவாத சட்டத்துக்கு கீழ் கைதுசெய்யவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

vasudewa.jpg

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பைத்தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர், வடமாகாண ஆளுனர், யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவை தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை தொடர்பில் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாகுழு என்பது ஆயுத குழுவாகும்.அரசியல் கட்சி அல்ல. ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு முரணாகும். 

ஏனெனில் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் அவர்களுக்கு அங்கிகாரம் கிடைத்ததுபோலாகும். சாதாரணமாக செயற்பட்டுவந்த இவர்கள் இதன் பின்னர் தீவிரமாக செயற்படலாம். ஆளுநரின் நடவடிக்கையானது அவர்களை மேலும் பலமடையசெய்வதாகும். இதனை அவர் செய்யக்கூடாது.

எனவே ஆயுத குழுவான ஆவாகுழுவை பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அதன் மூலமே பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தலாம். மாறாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுப்பதானது மேலும் அவர்களை பலப்படுத்தவதாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/58432

Link to comment
Share on other sites

2 hours ago, பிழம்பு said:

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாகுழு என்பது ஆயுத குழுவாகும்.அரசியல் கட்சி அல்ல. ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு முரணாகும். 

இந்தக்குழுவை தமது தேவைக்கு வளர்த்து, பாதுகாத்து வருபவர்கள் இப்படு கூறுவது இலங்கையில் மட்டும்தான். இதை மறுதலித்து கேள்வி கேட்கும் நிலையில் இந்த நாட்டின் பத்திரிகை தூரம் இல்லாததும் இந்த நாட்டின் எதிர்காலம் அழிவுகள் நிறைந்ததாகவே தொடரும் என்பதை காட்டுகின்றது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவா குழு வெறும் கூலிப்படை மட்டும்தான் அவர்களின் எஜமானர்களை கண்டறிந்து கைதுசெய்யுங்கள் பிரச்சினை தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்போன்ற ஒரு கேவலம் இதுவரை எங்கேயும் நடந்ததில்லை. கத்தி வாள் பொல்லுகளுடன் எந்தவித குறிக்கோளும் இல்லாது வன்முறை விதைக்கும் ஒரு காடையர் கூட்டத்தை அழைத்துப் பேசுகிறேன் பேர்வளி என யார் கூறுகிறார் என்றால் நிறைவேற்று அதிகாரம்கொண்ட சிறீலங்காவின் அதிபரால் நேரடியாக நியமிக்கப்பட்ட வடமாகாணம் முழுமையிலுமுள்ள சட்டம் ஒழுங்கினை கவனிக்கக்கூடிய காவல்துறையையும் அதனுடன் இணைந்த நீதித்துறையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய வடமாகாணத்தின் மிகப்பெரிய பொறுப்பிலுள்ள அதிகாரி.

இப்படியான அதிகாரம் எனக்கு இருக்குமாக இருந்தால் எண்ணி நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் இந்த வன்முறைக்கும்பலை இல்லாதொழிப்பேன் 

முதலில் இவர் செய்யவேண்டியது 

முப்படைகள் போக்குவரத்து இலாகா உதவியுடன் யாழ்குடாநாட்டில் மூலை முடுக்குகள் எல்ல்லாவற்றிலும் அதிகாலையிலிருந்து மாலைவரை வாகனச்சேதனை செய்து வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் வரி மற்றும் காப்புறுதி இல்லாதவர்கள் கெல்மட் இல்லாதவர்கள் தண்ணியடிச்சுப்போட்டு வாகனம் ஓட்டுவோர்  ஆகியோரை இனம்கண்டு அவர்களது வாகனங்களைப் பறிமுதல்செய்து முத்தவெளியில் நிரப்பினால் முதலாவது படிநிலையின் முன்னேற்றம் 

யாழ் சிறையில் நடக்கும் கஞ்சா பவுடர் சாராயம் வினியோகத்தை இல்லாதொழித்தால் அடுத்த முன்னேற்றம் 

காவாலிகளுக்காக நீதிமன்றில் வாதாடும் சட்டவாளர்களை சரியான முறையில் கவனித்தால் இன்னும் முன்னேற்றம் 

இவற்றுக்கும் அடங்காதுவிடின் இராணுவப்புலனாய்வை இறக்கி இவர்களை மண்டையிலபோட்டால் அதைவிட முன்னேற்றம்

இணையத்தளங்களில் அதாவது முகநூலில் கணக்குத்திறந்து அட்டகாசம் செய்யும் காவாலிகள் யார் எனகண்டுபிடித்தால் இன்னுமொரு முன்னேற்றம்

அதற்குசமாந்தரமாக வெளிநாடுகளில் ஆவா சைபர் குறூப் என முகநூல் திறந்து வாளுகள் கத்திகள் ஆகியவைகளை படம்போட்டு பயம்காட்டும் காவாலிக்கூட்டங்களைக் கண்டுபிடித்து ஊருக்குத் திருப்பி அனுப்பினால் அடேங்கப்பா முன்னேற்றம்.

இப்படியான பொறுக்கிகளது உறவினர்க்கு அரசாங்க வேலையோ அன்றேல் எந்தவித சலுகைகளோ இல்லை என அறிவித்தால் மிகவும் முன்னேற்றம்.

எல்லொரையும் அள்ளிக்கொண்டுபோய் கண்காணாத சிங்கள நாடுகளில் சங்கிலியால் கட்டிப்போட்டால் அடடா முன்னேற்றம் 

இவை அனைத்துக்கும் நாற்பத்தியெட்டு மணி நேரம் போதும்.

அனால் ஒரு பிரச்சனை இவைகளைக் கடந்தகாலங்களில் செய்தவர்களை இனிமேல் தேடிப்பிடிக்கவேண்டும்.

இன்னுமொரு விடையம் யாழ் குடாநாடு இப்படிச் சிக்கிச் சீரழிவதையே நான் மிகவும் விரும்புகிறேன். 

ஆவா குழுவே நீ வாழ்க இன்னமும் பலமாக வளர்வாயாக.

Link to comment
Share on other sites

சஹாரான் குழுவை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் சிங்கள-பௌத்த முப்படைப் புலனாய்வுப் பயங்கரவாதிகள் ஊடாக ஊக்குவித்து, சம்பளம் கொடுத்து எப்படி ஒரு முஸ்லீம் பயங்கரவாதக் குழுவாக கட்டியெழுப்பினார்களோ, அதே பாணியில் வடக்கில் காடையர்களை குழுக்களாக ஒன்றிணைத்து "ஆவா", "தனு", "ரொக்" போன்ற பெயர்களில் வாள்வெட்டு கும்பல்களை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் சிங்கள-பௌத்த முப்படைப் புலனாய்வுப் பயங்கரவாதிகள் ஊடாக உருவாக்கி இயக்கி வருகிறார்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.