Jump to content

பிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ரணிலின் அரசியல் எதிர்காலம்

 

இலங்­கையின் அண்­மைக்­கால அர­சியல் வர­லாற்றில் கட்­சி­யொன்றின் தலை­வ­ராக மிகவும் நீண்­ட­காலம் தொடர்ச்­சி­யாக இருந்­து­ வ­ரு­பவர் என்றால் அது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ராக அவர் சுமார் கால் நூற்­றாண்­டாக பதவி வகித்­து­ வ­ரு­கிறார்.

ranil.jpg

அதே­வேளை, ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வர்­க­ளாக இருந்­த­வர்­களில் எவரும்  பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வைப்­போன்று  தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ரான உள்­கட்சி கிளர்ச்­சி­க­ளுக்கு அடிக்­கடி  முகங்­கொ­டுத்­த­தில்லை. ஆனால், அந்த கிளர்ச்­சி­களை முறி­ய­டித்து தலைவர் பத­வியை அவரால் காப்­பாற்­றக்­கூ­டி­ய­தாக இருந்­து­ வந்­தி­ருக்­கி­றது. இலங்­கையின் அர­சி­யல்­வா­தி­களில் கூடு­த­லான கால­மாக பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் அவரே இருந்­தி­ருக்­கிறார்.

பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக 42 வரு­டங்­க­ளாக உறுப்­பி­ன­ராக இருந்­து­வரும் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் ஐக்­கிய தேசிய கட்சி வந்த பிறகு அதன் வேட்­பாளர் ஜனா­தி­பதி தேர்­தலில்  ஒரு­போ­துமே வெற்­றி­பெற்­ற­தில்லை. இறு­தி­யாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக பத­வியில் இருந்த ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரண­சிங்க பிரே­ம­தா­சவே இருந்தார்.

1994 நவம்பர் ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட காமினி திசா­நா­யக்க கொழும்பில்  தேர்தல் பிர­சா­ரக்­கூட்­ட­மொன்றில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டதை அடுத்து  பதில் வேட்­பா­ள­ராக விக்­கி­ர­ம­சிங்க கள­மி­றங்க முன்­வ­ர­வில்லை. திசா­நா­யக்­கவின் விதவை மனைவி சிறி­மாவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­யி­லான மக்கள் முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரான அன்­றைய பிர­தமர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை எதிர்த்து போட்­டி­யிட்டார்.  ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைப்­பொ­றுப்பை அதற்குப் பிறகு ஏற்­றுக்­கொண்ட விக்­கி­ர­ம­சிங்க 1999 டிசம்பர் ஜனா­தி­பதி தேர்­த­லி­லேயே முதன் முதலில் போட்­டி­யிட்டார். அதில் அவரால் வெற்றி பெற­மு­டி­ய­வில்லை. 

ஆனால், முன்னாள் ஜனா­தி­பதி குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் 2001 டிசம்­பரில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இரண்­டா­வது தட­வை­யாக பத­வி­யேற்றார். ஜனா­தி­பதி  பிரே­ம­தாச கொழும்பில் 1993 மே தினத்­தன்று தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து அப்­போது பிர­த­ம­ராக இருந்த டி.பி.விஜே­துங்க ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்க விக்­கி­ர­ம­சிங்க முதல் தட­வை­யாக பிர­த­ம­ரானார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

2005 நவம்பர் ஜனா­தி­பதித் தேர்­தலில் விக்­கி­ர­ம­சிங்க இரண்­டா­வது தட­வை­யாக போட்­டி­யிட்டார். அதிலும் அவரால் வெற்றி பெற­மு­டி­யாமல் போய்­விட்­டது. சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரான அன்­றைய பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷவே அந்த தேர்­தலில் வெற்­றி­பெற்றார். விடு­தலைப் புலிகள் தமிழ்ப்­ப­கு­தி­களில் தேர்­தலை பகிஷ்­க­ரிக்க வாக்­கா­ளர்­களை நிர்ப்­பந்­திக்­க­வில்­லை­யென்றால், விக்­கி­ர­ம­சிங்க அந்த தேர்­தலில் சுல­ப­மாக வெற்­றி­பெற்­றி­ருக்­க­மு­டியும் என்று நம்­பப்­பட்­டது. அடுத்­த­டுத்து இரண்டு தட­வைகள் ஜனா­தி­பதி தேர்­தல்­களில் தோல்­வி­கண்­ட­தற்கு பிறகு ' சூடு­கண்ட பூனை அடுப்­பங்­க­ரையை நாடாது' என்­பது போல ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதைத் தவிர்த்­துக்­கொண்டார்.

 உள்­நாட்டுப் போரில் பாது­காப்பு படைகள் விடு­தலைப் புலி­களை தோற்­க­டித்த பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் மக்கள் செல்­வாக்கு  தென்­னி­லங்­கையில் உச்­ச­நி­லையில் இருந்­தது. தனக்கு வாய்ப்­பான அந்த சூழ்­நி­லையில் உரிய காலத்­துக்கு முன்­கூட்­டியே  2010 ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தினார். இரண்­டா­வது பத­விக்­கா­லத்­துக்கு மக்­களின் ஆணையைப் பெறு­வதே அவரின் திட்டம். போரின் முடி­வுக்குப் பின்­ன­ரான நாட்­களில் ராஜ­பக் ஷ சகோ­த­ரர்­க­ளுடன் முரண்­பட்­டுக்­கொண்ட  முன்னாள் இரா­ணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சே­கா­வையே எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக  ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ­வுக்கு எதி­ராக கள­மி­றக்க விக்­கி­ர­ம­சிங்க இணங்­கிக்­கொண்டார். அந்த தேர்­தலில் சிங்­கள மக்கள் என்ன கார­ணத்­துக்­காக ராஜ­பக் ஷவை அமோ­க­மாக ஆத­ரித்­தார்­களோ அதற்கு எதி­ரீ­டான கார­ணத்­துக்­காக வடக்கு, கிழக்கில் மாத்­தி­ர­மல்ல, மலை­ய­கத்­திலும் தமி­ழர்கள் பொன்­சே­கா­வுக்கு பெரு­ம­ளவில் வாக்­க­ளித்­தார்கள். ராஜபக் ஷ­வினால் முன்னாள் இரா­ணுவத் தள­ப­தியை சுல­ப­மாகத் தோற்­க­டிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ருக்கு தேவைப்­பட்­டது பொன்­சே­காவின் வெற்­றி­யல்ல, ஜனா­தி­பதி ராஜ­பக் ஷ­வுக்கு கிடைக்­கக்­கூ­டிய தேர்தல் வெற்­றி­யினால் அர­சி­யல்­ரீ­தியில் பின்­ன­டைவைச் சந்­திப்­பது தானாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தே­யாகும்.

 மீண்டும் அதே ' தந்­தி­ரோ­பா­யத்தின்' அடிப்­ப­டையில் 2015 ஜன­வரி ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ராகத் தான் கள­மி­றங்­காமல் எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் என்ற போர்­வையில் வேறு ஒரு­வரை நிறுத்­து­வ­தற்கு விக்­கி­ர­ம­சிங்க உடன்­பட்டார். ஜனா­தி­ப­தியின்  இரு பத­விக்­கால வரை­ய­றையை இல்­லா­தொ­ழித்து ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்கும் ஒருவர் எத்­தனை தட­வை­களும் தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்கு வச­தி­யாக தனது இரண்­டா­வது பத­விக்­கா­லத்தின் ஆரம்­பக்­கட்­டத்தில் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தத்தை கொண்­டு­வந்த மஹிந்த ராஜ­பக் ஷ மூன்­றா­வது பத­விக்­கா­லத்­துக்கு மக்­களின் ஆணையைப் பெறு­வ­தற்­காக அந்த தேர்­த­லையும் உரிய காலத்­துக்கு முன்­கூட்­டியே நடத்­தினார். அதில் அவரின் அர­சாங்­கத்தில்  மூத்த அமைச்­சர்­களில் ஒரு­வ­ரா­கவும் சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ரா­கவும் இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்­டதும்  அவர் ராஜ­பக் ஷவைத் தோற்­க­டித்து ஜனா­தி­ப­தி­யா­கி­யதும்  பிறகு விக்­கி­ர­ம­சிங்­கவின் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து அவர்  அமைத்த ' நல்­லாட்சி' யின் இலட்­ச­ணங்கள் எல்லாம் அண்­மைக்­கால வர­லாறு.

இப்­போது எழு­கின்ற முக்­கி­ய­மான கேள்வி; மீண்டும் ஒரு தடவை பிர­தமர் விக்­கிர­ம­சிங்­க­வினால் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தி­லி­ருந்து நழுவ முடி­யுமா? 

எதிர்­வரும் டிசம்பர் இரண்­டா­வது வாரத்­துக்கு முன்­ன­தாக ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்­டி­ய­தாக இருக்­கி­றது. அதற்கு இன்னும் ஐந்து மாதங்­களே இருக்­கின்­றன. அந்த தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்கள் பற்றி பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவைத் தவிர அவரின் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் பகி­ரங்­க­மாக  பேசு­வ­தைக்­ கா­ணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

 ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்த ஒரு­வரே நிச்­சயம் வேட்­பா­ள­ராக இருப்பார் என்று சிலரும் பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய அல்­லது வீட­மைப்பு அமைச்­சரும் கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாச வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டிய சாத்­தியம் இருப்­ப­தாக வேறு­சி­லரும் கட்­சியின் தலை­வரே போட்­டி­யி­ட­வேண்டும் என்று இன்­னொரு பிரி­வி­னரும் கூறு­கி­றார்கள். பிர­பல தொழி­ல­திபர் ஒரு­வரை  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வது குறித்தும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­வ­தாக சில வாரங்­க­ளுக்கு முன்னர் செய்­திகள் பெரி­தாக அடி­பட்­டன. ஆனால், பிர­தமர் அவை பற்றி எதுவும் பேசாமல் அமை­தி­யாக இருக்­கிறார்.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­து­வத்தில் மாற்றம் செய்­யப்­ப­ட­வேண்டும் என்று நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை பிர­த­மரின் நெருக்­க­மான விசுவாசிகளில் ஒருவர் என்று பரவலாக நம்பப்படும் அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியிருப்பதே விக்கிரம சிங்கவின் அரசியல் குறித்து இன்று அலசப்படுவதற்கான உடனடிக் காரண மாகும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஆற்றல்கொண்ட ஒரு சில தலைவர்கள் கட்சியில் இருப்பதாகவும் அவர்களில் ஒருவரிடம் தலைமைத்துவத்தைக் கையளிக்கவேண்டும் என்றும் கட்சிக்குள் இதே கருத்தைக் கொண்ட பலர் இருப்பதாகவும் பெரேரா குறிப்பிட்டிருக்கிறார்.

 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றவேண்டும் என்ற  கோரிக்கை பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவரைத் தலை வராக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாக அர்த்தப்படும்? 

அதுவும் அந்த மாற்றத்தை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் செய்ய வேண்டும் என்று கேட்பது விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்தினால் தோல்விதான் கிடைக்கும் என்று அஞ்சுவதாகத்தானே அர்த்தப்படும்! ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரதமர் விக்கிரமசிங்க எடுக்கப்போகும் முடிவு  அவரது அரசியல் எதிர்காலத்தை நிச்சயம் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

https://www.virakesari.lk/article/58388

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.