Jump to content

அமைச்சுக்களை துறந்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீண்டும் பதவியேற்பர்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சுக்களை துறந்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீண்டும் பதவியேற்பர்?

June 18, 2019

Kabir-kaleem.jpg?zoom=3&resize=335%2C234

 

அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர், மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், கபீர் ஹஸீமும் அப்துல் ஹலீமும், தாங்கள் ஏற்கெனவே வகித்த அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விருவரைத் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் ஆகியோரும் முன்னர் இராஜாங்க அமைச்சுகளைப் பொறுப்பேற்றிருந்த நால்வரும் பிரதிய அமைச்சராகவிருந்த மற்றொருவருமான ஒன்பது பேர், ஏற்கனவே தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

எனினும், அவர்கள் அனைவரும், தாங்கள் வகித்த அமைச்சுகளைப் பொறுப்பேற்பார்களா என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்கிற நிலையில், இந்த இருவரும், தற்போதைக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கவிருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. #முஸ்லிம்பாராளுமன்றஉறுப்பினர்கள் #இராஜாங்கஅமைச்சர் #அமைச்சுப்பொறுப்புகள் #ரவூப் ஹக்கீம் #ரிஷாட்பதியூதீ

http://globaltamilnews.net/2019/124555/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபீர், ஹக்கீம், ஹலீம் குறித்து தீர்க்கமான முடிவு – ரிஷாட்?

June 18, 2019

cabinet.jpg?resize=660%2C440ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (18.06.19) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் மூவர் குறித்து, முக்கியமாகக் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (17.06.19) மாலை நடைபெற்ற கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம், இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு ஆதரவளிக்கும் முகமாக, அமைச்சர்களாக இருந்த ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஸிம், ரிஷாட் பதியூதீன், அப்துல் ஹலீம் ஆகியோர், கடந்த 3ஆம் திகதியன்று, தத்ததமது பதவிகளில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது. #மைத்திரிபாலசிறிசேன #அலரிமாளிகை #ரணில்விக்கிரமசிங்க #ரவூப்ஹக்கீம் #கபீர்ஹாஸிம் #ரிஷாட்பதியூதீன்

 

http://globaltamilnews.net/2019/124564/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.