Jump to content

நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு!

In இந்தியா     June 18, 2019 10:10 am GMT     0 Comments     1117     by : Yuganthini

nallini-44-720x450.jpg

காணொளி ஊடாக வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வது தொடர்பான நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு நளினியின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினி, இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினியினால் சட்டத்தரணி ஊடாக மனுவொன்றை உச்ச நீதிமன்றத்தில் அவர் கையளித்திருந்தார்.

குறித்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நளினியை உச்ச நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தினால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுமென அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையிலேயே நளினி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் நீதிபதிகள், நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றுக்கு அறியத்தருமாறு உத்தரவிட்டதுடன் விசாரணைகளை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நளினிக்கு-உச்ச-நீதிமன்றம/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.