Jump to content

மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்!

In இலங்கை     June 18, 2019 9:33 am GMT     0 Comments     1247     by : Dhackshala

மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.

நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருட காலமாக இடம்பெற்று வந்த ஆயுத மோதலை ஆட்சியாளர்கள் வெற்றிகொண்டிருந்தாலும் நாட்டிலுள்ள பல இனத்தவர்களினதும் மனங்களை வெல்லத் தவறிவிட்டனர்.

இதனாலேயே இப்பொழுது மதவாத நெருக்கடி அதிகரித்து நாளுக்கு நாள் புதுப்புது வடிவத்தில் விஸ்வரூபமெடுத்து வருகிறது. பேரினவாத மதவாதம் இந்த நாட்டைப் பிளவுபடுத்தியுள்ளது.

அதிகாரமளிக்கப்படாத ஆனால், அதிகாரத்தை செயற்படுத்தும் அதிகாரிகள் என மதவாதிகள் அறைகூவல் விடுத்து ஒரு சில இனவாதிகளை தவறாக வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைமையை ஆட்சியாளர்கள் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதை உற்றுக் கவனிக்கின்றபோது அதன் இனவாத ஆபத்து ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டும் என்றே எண்ணத்தோன்றுகிறது.

இதற்கும் மேலதிகமாக ஒருபடி மேலே சென்று ‘இனிமேல் நாட்டில் தீர்க்கப்படாமல் இருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சமயவாதிகளே தீர்வைப் பெற்றுத் தருவார்கள்’ என கடுங்கோட்பாட்டு பேரினவாத மதவாதிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். இது எங்கு சென்று முடியுமென அச்சம் ஏற்படுகிறது.

பேரினவாதமும் அயோக்கிய அரசியலும் ஒன்றிணைந்துள்ளதன் விளைவு இதுவரை நடந்த அழிவுகளைவிட இன்னமும் இந்த நாட்டை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். அவ்வாறு இல்லாமல் இருக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கிய செயற்பாட்டாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/மதத்தை-முன்னுரிமைப்படுத/

Link to comment
Share on other sites

  1. இஸ்லாமிய தீவிரவாதம் குண்டு வைத்துக் கொல்கிறது.
  2. முல்லைத்தீவு நீராவியடியில் பிள்ளை யார் ஆலயம் அமைந்த இடத்தில் புத்தரை பிரதிஷ்டை செய் என்று பெளத்த சிங்களம் போர்க் கொடி தூக்குகிறது.
  3. இந்து ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகமும் மகோற்சவமும் பணம் பறிக்கும் சடங்காயிற்று.
  4. மன்னாரில் பாடல் பெற்ற சிவத்தலத் தின் சிவராத்திரி வளைவை கத்தோ லிக்க மதகுருமார் முன்னிற்க, தள்ளி விழுத்தி காலால் மிதித்தனர்.
  5. அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணா விரதத்தை உசுப்பேத்த கொழும்பு மேற் றாணியார் தேரரை நேரில் சென்று சந்திக்கின்றார்.
இலங்கையில் இதுவே நிலை 😞 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா... உங்களது ஆட்சீயில தான், கிழக்கிலே மதத்துக்கு முன்னுரிமை கொடுத்து, அரேபியமும், வஹாபிஸமும், பயங்கரவாதமும் வளர இடம் கொடுத்து, சஹாரானையும் கண்டுகொள்ளாமல் வளர விட்டு, சக தமிழ் பேசும் மக்களை அதே மட்டக்களப்பிலும், வெளியேயும் கொன்றழித்து விட்டு, இது... போதனை... வேற தேவையா?

3 hours ago, பரியாரி said:

மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்!

In இலங்கை     June 18, 2019 9:33 am GMT     0 Comments     1247     by : Dhackshala

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். அவன் ஒட்டகம் வெளியே இருந்தது. அதிக குளிர் அடிக்கவே, ஒட்டகம் சிறிது மூக்கை மட்டும் உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை இன்னொரு பன்டிக்குட்டி சொல்லக்கூடாது......

Link to comment
Share on other sites

8 hours ago, பரியாரி said:

மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இவர் சிங்கள-பௌத்த இனமதவெறியை காரணமாக சொல்கிறாரா அல்லது உலகளாவிய முஸ்லீம் இனமதவெறியை காரணமாக சொல்கிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுற ஆளை பாருங்கள், இவர்கள் எப்பவாவது தமிழர் என்று தங்களை அடையாள படுத்தியிருக்கிறார்களா ? இப்ப பௌத்தமும் இஸ்லாமும் முட்டி மோதுகிறார்கள். இவர்களுக்கு வெளியில் இருந்து மத ரீதியாக பல ஆதரவுகள் வருகுது. ஊருக்குத்தான் உபதேசம் எனக்கு இல்லை.

 எப்பவும் தனக்கு என்றால் படக்கு படக்கு என்று அடிக்குமாம், 

Link to comment
Share on other sites

கண்ணாடியை பார்த்துக்கொண்டு இதை சொன்னால் அழகு. 😎

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

இஸ்லாமிய தீவிரவாதம் குண்டு வைத்துக் கொல்கிறது.

வஹாபிஸம் என்பது முஸ்லிம்களுக்குள் பிரச்சினைகளை உருவாக்கவும் அடிப்படை இஸ்லாத்தை அழிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒன்று. (உருவாக்கத்தில் UK இன் பங்கு இருந்தது)

சவுதி அதற்குள் விழுந்த ஒரு நாடு.

இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் சவுதியுடன் தொடர்பிலிருப்பதால் இலகுவில் வஹாபிஸம் இலங்கைக்குள் வந்து விட்டது.

அல் கைடா, தலிபான், ISIS போன்றவற்றை உருவாக்கியவர்கள், பயன்படுத்துபவர்கள் யார் என்று பார்த்தால் குண்டு வைத்து கொல்வது இஸ்லாமிய தீவிரமா இல்லை வேறு தீவிரவாதமா என்று புரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.