Jump to content

இலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கைபடத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project

இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை சேர்ந்த இருவரின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட 'இராவணா 1" செயற்க்கைக்கோள் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தது.

தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட 'இராவணா 1" செய்ற்கைக்கோள் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

BIRDS 3 Satellite Project

இவ்வாறு கையளிக்கப்பட்ட 'இராணவா 1" செயற்கைக்கோளுடனான ராக்கெட், அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அதிகாலை, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிக்னுஸ் (Cygnus) என்றழைக்கப்படும் பொட்களுடனான ராக்கெட் மூலம் இந்த 'இராவணா 1" செய்றகைக்கோள் நாசாவினால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பார்ட்ஸ் 3 திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை, ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து மூன்று சிறியரக செயற்கைக்கோள்களை இன்று விண்ணுக்கு ஏவியிருந்தன.

சிறிய ரகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளுக்கு, மிகவும் குறைந்தளவிலான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைபடத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project

1000 சென்டி மீட்டர் அளவை கொண்டமைந்துள்ள இந்த செயற்கைக்கோள், 1.05 கிலோகிராம் எடையை கொண்டமைந்துள்ளது.

இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக் கொள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இராவணா 1 செயற்கைக்கோளின் பயன்பாடு

இலங்கை மற்றும் அதனை அண்மித்துள்ள நாடுகளின் புகைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயன்பாட்டு திட்டங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதுபடத்தின் காப்புரிமை Getty Images

ஆர்த்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய இந்த செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு 'இராவணா 1" என பெயர் சூட்டிப்பட்டிருந்தது.

இராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48664561

Link to comment
Share on other sites

1 hour ago, பிழம்பு said:

இராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

இராவணனின் பெயர்? சிங்கள பௌத்தம் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

நாளை பெயர் மாற்றம் செய்யப்படலாம் !

Link to comment
Share on other sites

27 minutes ago, ampanai said:

இராவணனின் பெயர்? சிங்கள பௌத்தம் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

நாளை பெயர் மாற்றம் செய்யப்படலாம் !

சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னனாக தான் கூறுபவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாரா சொல்வதை போல இராவண மன்னன் மிகவும் போற்றத்தக்க மன்னனாகவும், அதிசயபிறவியாகவும் சிங்கள மக்களால் போற்றப்படுகிறர்.
இந்த வீடியோவை பாருங்கள் ...சிங்கள பேராசிரியர்,  இலங்கையில் பௌத்தர்களுக்கு முன்னரேயே சிவ வழிபாடை போற்றிய தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் ...ராவணனின் வானியல் சாஸ்திரம் பற்றிய பெருமைகளுமே 

https://youtu.be/QianljhjsqE

 

https://youtu.be/QianljhjsqE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ampanai said:

இராவணனின் பெயர்? சிங்கள பௌத்தம் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

நாளை பெயர் மாற்றம் செய்யப்படலாம் !

 

14 hours ago, Lara said:

சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னனாக தான் கூறுபவர்கள்.

இந்தியா.... இராமனுக்கு  முக்கியத்துவம் கொடுத்து,  
இராவணனனை ஒரு அரக்கனாக தான் பார்க்கிறார்கள்.

ஸ்ரீலங்கா... இந்தியாவுக்கு கடுப்பு ஏற்றுவதற்காக, 
இலங்கை மன்னன், சிவ பக்தன்...  இராவணனின் பெயரை தெரிவு  செய்து இருக்கலாம்.

தற்போது  விண்வெளியில்... இலங்கை தனது முதல் முயற்சியை  செய்துள்ளது.
இராவணா - 1 என்று பெயர் வைத்ததிலிருந்தே... இன்னும் பல இராவணாக்கள்,  
விண்ணுக்கு செல்லும் என்ற செய்தியை  சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்.

செயற்கைக்கோள்களின்  முக்கியத்துவம் அதிகரித்துள்ள  காலத்தில்...
குறிப்பாக இந்தியாவை... ஸ்ரீலங்கா வடிவாக கண்காணிக்கும்.

இந்த செயற்கோளை...  ஸ்ரீலங்காவின் நட்பு  நாடான இந்தியாவிலிருந்து விண்ணுக்கு  ஏவாமல், அமெரிக்காவிலிருந்து  ஏவியதிலிருந்தே...  இருவரின் நட்பு  எப்படி இருக்குது என்று  அறிந்து கொள்ளலாம். :grin:

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா.... இராமனுக்கு  முக்கியத்துவம் கொடுத்து,  
இராவணனனை ஒரு அரக்கனாக தான் பார்க்கிறார்கள்.

வால்மீகி இராவணனை நல்ல விதமாக தான் எழுதியதாகவும் கம்பன் உட்பட சிலர் இராவணனை அரக்கனாக சித்தரித்ததாகவும் கேள்விப்பட்டேன். (வால்மீகி எழுதிய இராமாயணத்தை நான் வாசித்ததில்லை).

9 hours ago, தமிழ் சிறி said:

தற்போது  விண்வெளியில்... இலங்கை தனது முதல் முயற்சியை  செய்துள்ளது.
இராவணா - 1 என்று பெயர் வைத்ததிலிருந்தே... இன்னும் பல இராவணாக்கள்,  
விண்ணுக்கு செல்லும் என்ற செய்தியை  சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்.

10 தலை கொண்ட இராவணன் என கூறப்படுவதால் இராவணா-10 வரை அனுப்பக்கூடும். :grin:

(இராவணனுக்கு உண்மையில் 10 தலைகள் இல்லை, 10 துறைகளில் சிறந்து விளங்கியதால் அவ்வாறு கூறப்பட்டது என அறிந்தேன். புனைவுகள் இல்லாமல் யாரும் எதையும் எழுத மாட்டார்கள் தானே.:grin:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கு ஒரு தெளிவான வரலாறு கிடையாது. உலகில் ஒரு தீவில் வாழும் இந்தக் குழும மக்கள் மீது ஆதிக்க சக்திகள் அத்தீவின் அமைவிடம் கருதி.. செல்வாக்குச் செலுத்தி வருகின்றனர். 

அதனடிப்படையில் அத்தீவின் ஆட்சி அதிகாரங்களை அத்தீவின் பெரும்பான்மையினர் என்ற வகையில் இன்று சிங்களவர்கள் தம் வசம் வைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால்.. சிங்களவர்கள்.. இராவணனை விட சீதா இராமனை அதிகம் கொண்டாடுகின்றனர். புத்த கோவில்களில் இந்துக் கடவுள்களை வைத்துள்ளனர்..!

ஆனால்.. அரசியல் ரீதியில்..தமிழர்கள் வாழும் இடங்களில்.. இந்துக் கோவில்களை இடித்து.. புத்த கோவில்களை அமைக்கின்றனர். இராவணனை தமிழ் மன்னன் என்றதும்.. சீதா இராமனை விட்டு இராவணனை கொண்டாடுகின்றனர். அடிப்படையே இல்லாமல்.. சிங்கத்தில் இருந்து வந்த இனம் என்கின்றனர்..!

இப்படி சிங்களவர்களிடம்.. பல சுயமுரண்கள் காணப்படுகின்றன. ஆனால்.. உலகின் கண்களுக்கு இலங்கைத் தீவின் அமைவிடமும்.. அங்குள்ள பெரும்பான்மை இனத்தின் ஆதரவும் தான் முக்கியமாகத் தெரிகிறது. அதில் நல்லா குளிர்காய்கிறது சிங்கள இனம். அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/18/2019 at 2:38 PM, Lara said:

சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னனாக தான் கூறுபவர்கள்.

சிங்களவர்கள் கிமு கிபி இடைப்பட்ட ஆண்டுகளில்தான் இலங்கையில் குடி ஏறி கள்ள காணி பிடித்தவை என்று புளுகுவம்சம் மன்னிக்கவும் மாகாவம்சம் கூறுது அதே காலபகுதியில் தான் வால்மிகியால் ராமாயணம் தொடர் எடுக்கபட்டது சே ........ எழுதபட்டது என்கிறார்கள் இதுக்குள்ள  கள்ள காணி பிடிக்கும் போது பூர்வீக குடிகளான இயக்கர்களை கல்லெறிந்து கலைத்தவையாம் இந்த சிங்களர் எப்படி இராவணன் மன்னன் ஆகினான் இவங்களுக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோரிக்கு (பாகிஸ்தான்) × பிருத்துவி (கிந்தியா) என்டால்..ராவணனுக்கு எதிர் கட்டாயம் ஏதாவது உந்த இஸ்ரோகாரர் செய்வினம் .. பார்ப்பம் 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

வால்மீகி இராவணனை நல்ல விதமாக தான் எழுதியதாகவும் கம்பன் உட்பட சிலர் இராவணனை அரக்கனாக சித்தரித்ததாகவும் கேள்விப்பட்டேன். (வால்மீகி எழுதிய இராமாயணத்தை நான் வாசித்ததில்லை).

லாரா... இராமாயணம், நானும் வாசித்ததில்லை.
எனக்கும்,   உங்களைப்  போல்...  சில செவிவழி  தகவல்கள் மட்டுமே தெரியும்.
எனக்குத் தெரிந்த அளவில், யாழ். களத்தில்.. புங்கையூரான் மட்டுமே, இராமாயணத்தை.. கரைத்து குடித்தவர்.  :)

 

4 hours ago, Lara said:

10 தலை கொண்ட இராவணன் என கூறப்படுவதால் இராவணா-10 வரை அனுப்பக்கூடும். :grin:

(இராவணனுக்கு உண்மையில் 10 தலைகள் இல்லை, 10 துறைகளில் சிறந்து விளங்கியதால் அவ்வாறு கூறப்பட்டது என அறிந்தேன். புனைவுகள் இல்லாமல் யாரும் எதையும் எழுத மாட்டார்கள் தானே.:grin:)

அட்றா சக்கை...  "அப்பலோ  10"  வரை.... மட்டும் தான்,  விண் வெளியை நோட்ட மிட்டது.
அப்பலோ  11,  வெளியில் கால் வைத்து  சாதனை புரிந்தது.

இராவணாவும், அப்பலோவும்...  நாசாவில் இருந்து, போனதால்...
இராவணா  11 வராமல்...  அதற்கு,  பராக்கிரமபாகு என்றோ,   பிரபாகரன் என்றோ... 

சிங்களவர் பெயர் வைக்க, சாத்தியம் நிறைய உள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோரிக்கு (பாகிஸ்தான்) × பிருத்துவி (கிந்தியா) என்டால்..ராவணனுக்கு எதிர் கட்டாயம் ஏதாவது உந்த இஸ்ரோகாரர் செய்வினம் .. பார்ப்பம் 😊

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

இது உண்மையில் செயற்கை கோளே அல்ல. செயற்கை கல். அதை விண்வெளில கொட்டினம்.. எனி அதால விண்வெளியும் அதாவது பூமியை சுற்றிய விண்வெளியிலும் நெரிசல் வரப்போகிறது. 

நாசா பல விடயங்களை மூளை கெட்டதனமாய் செய்திட்டு.. அப்புறம்.. தான் சிந்திப்பார்கள்.. ஐயோ இப்படி ஆகிச்சேன்னு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குப்பை, யூ டியூபை  பார்த்து எல்லோரும் செய்யலாம் என்று சொல்றவை தாங்களும் செய்யலாமே!...வாயால வடை சுட த்  தான் லாயக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for space waste

On 6/18/2019 at 12:31 PM, பிழம்பு said:

இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக் கொள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்றரை வருடத்துக்குப் பின் குப்பையில் போட்டது நிரந்தரக் குப்பையாகிவிடும். 

More than 7,000 satellites have been launched into Earth’s orbit for 60 years, but now only one-third are still functioning. The remaining satellites have ceased functioning, and have become space junk.

We know, the object is in the sky. But how much, no one knows. European space agency ESA’s data pointed that since 6,600 satellites have been launched since 1957. Moreover, there are more 29,000 objects measuring more 10 centimeters in Earth orbit.

It is feared that there will be a collision hazard, due to fracture of the satellite, because the diameter of one centimeter alone is a danger threat. Because the spacecraft waste space moving at speeds up to 40,000 km per hour.

“A fractional collision of an object the size of a coffee bean at such a high speed with a satellite, has the equivalent impact force of a grenade,” said the astronaut, quoting the page.

https://www.spacewastesolutions.com/decades-outer-space-junk-orbiting-earth/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

34 minutes ago, பெருமாள் said:

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

பெருமாள், யூரியூபில் இருக்கிற வீடியோக்கள் பேப்பரில் எப்படி ஒரு செய்மதியின் மொடலைச் செய்வது என்று தான் காட்டுகின்றன! எப்படி ஐயா இப்படியெல்லாம் ஏமாறுகிறீர்கள்? 😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பெருமாள் said:

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

இங்க ஒருத்தன் யுரிப்பை பார்த்து 3D பிரின்டரை பாவிச்சு சுடக்கூடிய துப்பாக்கியே செய்திருக்கான்.

இதெல்லாம் இப்ப யுயுபி. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

 

பெருமாள், யூரியூபில் இருக்கிற வீடியோக்கள் பேப்பரில் எப்படி ஒரு செய்மதியின் மொடலைச் செய்வது என்று தான் காட்டுகின்றன! எப்படி ஐயா இப்படியெல்லாம் ஏமாறுகிறீர்கள்? 😥

சிறிய செய்மதி செய்யும் ஒளிநாட உண்டு  பாஸ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

இது குப்பை, யூ டியூபை  பார்த்து எல்லோரும் செய்யலாம் என்று சொல்றவை தாங்களும் செய்யலாமே!...வாயால வடை சுட த்  தான் லாயக்கு 

நாங்க எண்ணை சட்டியில் நல்ல கொதிநிலைக்கு வந்த பின்தான் வடை என்னது சொல்லுங்க "வடை " சுடுவது உண்டு நாங்களே குப்பை என்றுவிட்டம் பின்பு உங்களுக்கு விருப்பம் என்றால் செய்து பாருங்க. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

நாங்க எண்ணை சட்டியில் நல்ல கொதிநிலைக்கு வந்த பின்தான் வடை என்னது சொல்லுங்க "வடை " சுடுவது உண்டு நாங்களே குப்பை என்றுவிட்டம் பின்பு உங்களுக்கு விருப்பம் என்றால் செய்து பாருங்க. 

 

ஊரை விட்டு ஓடி வந்து விட்டு ,இங்க  வசதியாய் இருந்து கொண்டு ஊரில் இருப்பவர்கள் தங்களால் இயன்றதை செய்கின்றனர்...அதை நக்கடிக்க கொஞ்சசம் கூட வெட்கமாயில்லை ...எல்லாத்தையும் கரைச்சு குடித்தவர்கள் மாதிரி...இது செய்வது இலகு என்று சொன்னது நீங்கள்...செய்து காட்ட வேண்டியது நீங்களே அன்றி நான் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

சிறிய செய்மதி செய்யும் ஒளிநாட உண்டு  பாஸ் .

 

பெருமாள், இந்தக் கொமெடித் திரியில் நேரம் செல்வழிக்கப் போவதில்லை! ஆனால் போக முதல்: ஒளிநாடா இருந்தால் இங்கே இணைப்பது தானே? ஜூஸ் பெட்டியில் குழந்தைகள் எப்படி செய்மதி செய்யலாம் எண்டு தான் நாசா போட்டிருக்கிறது. சென்சர்கள், சூரிய சக்தி மூலம், மின்கலம், ரிமோட் சென்சிங் என்று சில தொழில் நுட்பங்களை இணைத்துச் செய்யும் செய்மதியும் பொறியியல் விசையால் இயங்கும் 3D துப்பாக்கியும் ஒன்று என்று நீங்களும் நண்பர்களும் நம்பினால், அந்த அல்லா தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

பெருமாள், இந்தக் கொமெடித் திரியில் நேரம் செல்வழிக்கப் போவதில்லை! ஆனால் போக முதல்: ஒளிநாடா இருந்தால் இங்கே இணைப்பது தானே? ஜூஸ் பெட்டியில் குழந்தைகள் எப்படி செய்மதி செய்யலாம் எண்டு தான் நாசா போட்டிருக்கிறது. சென்சர்கள், சூரிய சக்தி மூலம், மின்கலம், ரிமோட் சென்சிங் என்று சில தொழில் நுட்பங்களை இணைத்துச் செய்யும் செய்மதியும் பொறியியல் விசையால் இயங்கும் 3D துப்பாக்கியும் ஒன்று என்று நீங்களும் நண்பர்களும் நம்பினால், அந்த அல்லா தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்!

 

யாரும் உங்களை இழுத்து பிடிப்பதில்லை பாஸ் கருத்து சுதந்திரம் .

7 minutes ago, ரதி said:

ஊரை விட்டு ஓடி வந்து விட்டு ,இங்க  வசதியாய் இருந்து கொண்டு ஊரில் இருப்பவர்கள் தங்களால் இயன்றதை செய்கின்றனர்...அதை நக்கடிக்க கொஞ்சசம் கூட வெட்கமாயில்லை ...எல்லாத்தையும் கரைச்சு குடித்தவர்கள் மாதிரி...இது செய்வது இலகு என்று சொன்னது நீங்கள்...செய்து காட்ட வேண்டியது நீங்களே அன்றி நான் இல்லை 

உங்கடை இனமா சிங்களவர் ? அவர்கள்தான் இந்த மினி சட்லைட் செய்துவிட்டு அடைகோழி போல் கத்துகின்றனர் அதுவும் சிங்கள அரசின் அனுசாரனையுடன் . இதே வேலையை வடகிழக்கு மாணவர்கள் செய்தால் பின் தள்ளபட்டு இருப்பார்கள் எந்த உதவியும் கிடைத்தும் இருக்காது .

என்னுடன் கோபபட்டு விட்டு போங்கள் நான் கவலைப்படமாட்டன் ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இந்தக் கொமெடித் திரியில் நேரம் செல்வழிக்கப் போவதில்லை!

தாங்கள் ஏதோ பிரம்மன் போல் இங்கு வந்து தரிசனம் தருகின்றீர்கள்.தாங்கள் ஒரு தனி திரி திறந்தாலும் ஏதோ தங்களை புதுமையாக விசேடமானவனாக வெளிக்காட்டுகின்றீர்கள்.தங்கள் கருத்துக்களும் ஏதோ  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை போல் இங்கே பகிர்கின்றீர்கள். உங்களுக்கு நேரமில்லையெண்டால் எவன் வெத்திலை வைச்சு கூப்பிட்டவன்? முன்னர் ஒரு திரியில் நீங்கள் குறிப்பிட்டது போல் உங்களுக்கு  பிரயோசனமான தளங்களில் போய் வெட்டி புடுங்க வேண்டியதுதனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

யாரும் உங்களை இழுத்து பிடிப்பதில்லை பாஸ் கருத்து சுதந்திரம் .

உங்கடை இனமா சிங்களவர் ? அவர்கள்தான் இந்த மினி சட்லைட் செய்துவிட்டு அடைகோழி போல் கத்துகின்றனர் அதுவும் சிங்கள அரசின் அனுசாரனையுடன் . இதே வேலையை வடகிழக்கு மாணவர்கள் செய்தால் பின் தள்ளபட்டு இருப்பார்கள் எந்த உதவியும் கிடைத்தும் இருக்காது .

என்னுடன் கோபபட்டு விட்டு போங்கள் நான் கவலைப்படமாட்டன் ............

சும்மா சிங்களம்,தமிழ் என்று கதை விட வேண்டாம்...அண்மையில் வன்னியில் இருந்து ஒரு தமிழ் மாணவனது சாதனையும், கல்முனையில் இருந்து  ஒரு  தமிழ் மாணவனது சாதனையும்  உதே சிங்களவன் தான் பாராட்டு ஊக்கம்  கொடுத்து செய்வித்தவன்.
 நீங்கள் அவர்களை பாராட்டவோ,ஊக்கம் கொடுக்கவோ தேவையில்லை...அவர்களுக்கு அது தேவையுமில்லை...ஆனால் நக்கலடிக்காமல்,குறை சொல்லி உங்களை தாழ்த்தாமல் இருந்திருக்கலாம்.

யாழை எத்தனை பேர்  பார்க்கினம்...உங்களுக்கு இது பிடிக்கா விட்டால் விலகி போங்கள்...நீங்கள் எத்தனை நூல்களை வாசிக்கிறீர்கள்...உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களாக பார்க்காது இரண்டு தனி மனிதர்களின் முயற்சி என பார்க்கும்போது,

உலகமே பல பில்லியன் கோடி டாலர்களை கொட்டி இயங்கும் ஒரு துறையில், உலகம் முழுவதுமே பிச்சை எடுக்கும் நாட்டிலிருந்து இரு மனிதர்களின் சிறு அளவிலான எத்தனமும் அதை வெற்றிகரமாக விண்வெளியில் நிறுத்தும் அளவிற்கு தரமானதாக வடிவமைத்ததும்   சிறிலங்காவின் கொண்டிசனோடு ஒப்பிடும்போது அந்த நாடுக்காரர் இருவர் செய்தது நிச்சயம் பெரிய பாய்ச்சல்தான்.சாதனைதான்.

இதையே வடகிழக்கில் இருக்கும் இரு  தமிழ் பல்கலைகழக மாணவர்களோ புத்தி ஜீவிகளோ செய்திருந்தால் வாழ்த்து மழைகள் விண்ணை முட்டியிருக்கும்.

அடக்குமுறை என்று வரும்போது சிங்களவன் தமிழன் பேதம் கண்டிப்பாக பார்க்கப்படவேண்டும்.

அறிவியலில் அது எதற்கு?

செயற்கைகோள் தொழில் நுட்பத்தில்; அரிவரி நிலையில்உள்ள நாட்டில் கொண்டு ஓரிருவரின் கூட்டு முயற்சியில் உருவான சாதனைக்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் இதனை சிங்கள இனத்தின் சாதனையாக அவர்கள் உள் நாட்டிலும் வெளி உலகத்துக்கும் காட்டிக்கொண்டார்கள் என்றால் காரி துப்பிவிட்டு வாழ்த்தை வாபஸ் வாங்கவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தாங்கள் ஏதோ பிரம்மன் போல் இங்கு வந்து தரிசனம் தருகின்றீர்கள்.தாங்கள் ஒரு தனி திரி திறந்தாலும் ஏதோ தங்களை புதுமையாக விசேடமானவனாக வெளிக்காட்டுகின்றீர்கள்.தங்கள் கருத்துக்களும் ஏதோ  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை போல் இங்கே பகிர்கின்றீர்கள். உங்களுக்கு நேரமில்லையெண்டால் எவன் வெத்திலை வைச்சு கூப்பிட்டவன்? முன்னர் ஒரு திரியில் நீங்கள் குறிப்பிட்டது போல் உங்களுக்கு  பிரயோசனமான தளங்களில் போய் வெட்டி புடுங்க வேண்டியதுதனே.

அண்ணை, அவ்வளவு சீக்கிரமாகப் போய் விடப் போவதில்லை! அதிருக்கட்டும், இது அறிவியல் சம்பந்தமான திரியல்லவா? நீங்கள் உங்க நிண்டு என்ன செய்யிறீங்கள்? 

3 hours ago, பெருமாள் said:

யாரும் உங்களை இழுத்து பிடிப்பதில்லை பாஸ் கருத்து சுதந்திரம் .

உங்கடை இனமா சிங்களவர் ? அவர்கள்தான் இந்த மினி சட்லைட் செய்துவிட்டு அடைகோழி போல் கத்துகின்றனர் அதுவும் சிங்கள அரசின் அனுசாரனையுடன் . இதே வேலையை வடகிழக்கு மாணவர்கள் செய்தால் பின் தள்ளபட்டு இருப்பார்கள் எந்த உதவியும் கிடைத்தும் இருக்காது .

என்னுடன் கோபபட்டு விட்டு போங்கள் நான் கவலைப்படமாட்டன் ............

சரி, அந்த பேப்பர் சற்றலைற் செய்யும் இணைப்பு எங்கே? அல்லது அதுவும் முன்னர் ஒரு திரியில் GMO உணவை இங்கிலாந்தில் துகிலுரித்த ஒரு விஞ்ஞானியின் பேப்பரைத் தேடிக் கொண்டு வாறன் எண்டு "கம்"மெண்டு கழண்ட மாதிரிக் கழரும் திட்டம் தானா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.