Jump to content

இலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கைபடத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project

இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை சேர்ந்த இருவரின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட 'இராவணா 1" செயற்க்கைக்கோள் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தது.

தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட 'இராவணா 1" செய்ற்கைக்கோள் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

BIRDS 3 Satellite Project

இவ்வாறு கையளிக்கப்பட்ட 'இராணவா 1" செயற்கைக்கோளுடனான ராக்கெட், அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அதிகாலை, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிக்னுஸ் (Cygnus) என்றழைக்கப்படும் பொட்களுடனான ராக்கெட் மூலம் இந்த 'இராவணா 1" செய்றகைக்கோள் நாசாவினால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பார்ட்ஸ் 3 திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை, ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து மூன்று சிறியரக செயற்கைக்கோள்களை இன்று விண்ணுக்கு ஏவியிருந்தன.

சிறிய ரகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளுக்கு, மிகவும் குறைந்தளவிலான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைபடத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project

1000 சென்டி மீட்டர் அளவை கொண்டமைந்துள்ள இந்த செயற்கைக்கோள், 1.05 கிலோகிராம் எடையை கொண்டமைந்துள்ளது.

இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக் கொள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இராவணா 1 செயற்கைக்கோளின் பயன்பாடு

இலங்கை மற்றும் அதனை அண்மித்துள்ள நாடுகளின் புகைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயன்பாட்டு திட்டங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதுபடத்தின் காப்புரிமை Getty Images

ஆர்த்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய இந்த செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு 'இராவணா 1" என பெயர் சூட்டிப்பட்டிருந்தது.

இராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48664561

Link to comment
Share on other sites

1 hour ago, பிழம்பு said:

இராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

இராவணனின் பெயர்? சிங்கள பௌத்தம் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

நாளை பெயர் மாற்றம் செய்யப்படலாம் !

Link to comment
Share on other sites

27 minutes ago, ampanai said:

இராவணனின் பெயர்? சிங்கள பௌத்தம் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

நாளை பெயர் மாற்றம் செய்யப்படலாம் !

சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னனாக தான் கூறுபவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாரா சொல்வதை போல இராவண மன்னன் மிகவும் போற்றத்தக்க மன்னனாகவும், அதிசயபிறவியாகவும் சிங்கள மக்களால் போற்றப்படுகிறர்.
இந்த வீடியோவை பாருங்கள் ...சிங்கள பேராசிரியர்,  இலங்கையில் பௌத்தர்களுக்கு முன்னரேயே சிவ வழிபாடை போற்றிய தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் ...ராவணனின் வானியல் சாஸ்திரம் பற்றிய பெருமைகளுமே 

https://youtu.be/QianljhjsqE

 

https://youtu.be/QianljhjsqE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ampanai said:

இராவணனின் பெயர்? சிங்கள பௌத்தம் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

நாளை பெயர் மாற்றம் செய்யப்படலாம் !

 

14 hours ago, Lara said:

சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னனாக தான் கூறுபவர்கள்.

இந்தியா.... இராமனுக்கு  முக்கியத்துவம் கொடுத்து,  
இராவணனனை ஒரு அரக்கனாக தான் பார்க்கிறார்கள்.

ஸ்ரீலங்கா... இந்தியாவுக்கு கடுப்பு ஏற்றுவதற்காக, 
இலங்கை மன்னன், சிவ பக்தன்...  இராவணனின் பெயரை தெரிவு  செய்து இருக்கலாம்.

தற்போது  விண்வெளியில்... இலங்கை தனது முதல் முயற்சியை  செய்துள்ளது.
இராவணா - 1 என்று பெயர் வைத்ததிலிருந்தே... இன்னும் பல இராவணாக்கள்,  
விண்ணுக்கு செல்லும் என்ற செய்தியை  சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்.

செயற்கைக்கோள்களின்  முக்கியத்துவம் அதிகரித்துள்ள  காலத்தில்...
குறிப்பாக இந்தியாவை... ஸ்ரீலங்கா வடிவாக கண்காணிக்கும்.

இந்த செயற்கோளை...  ஸ்ரீலங்காவின் நட்பு  நாடான இந்தியாவிலிருந்து விண்ணுக்கு  ஏவாமல், அமெரிக்காவிலிருந்து  ஏவியதிலிருந்தே...  இருவரின் நட்பு  எப்படி இருக்குது என்று  அறிந்து கொள்ளலாம். :grin:

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா.... இராமனுக்கு  முக்கியத்துவம் கொடுத்து,  
இராவணனனை ஒரு அரக்கனாக தான் பார்க்கிறார்கள்.

வால்மீகி இராவணனை நல்ல விதமாக தான் எழுதியதாகவும் கம்பன் உட்பட சிலர் இராவணனை அரக்கனாக சித்தரித்ததாகவும் கேள்விப்பட்டேன். (வால்மீகி எழுதிய இராமாயணத்தை நான் வாசித்ததில்லை).

9 hours ago, தமிழ் சிறி said:

தற்போது  விண்வெளியில்... இலங்கை தனது முதல் முயற்சியை  செய்துள்ளது.
இராவணா - 1 என்று பெயர் வைத்ததிலிருந்தே... இன்னும் பல இராவணாக்கள்,  
விண்ணுக்கு செல்லும் என்ற செய்தியை  சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்.

10 தலை கொண்ட இராவணன் என கூறப்படுவதால் இராவணா-10 வரை அனுப்பக்கூடும். :grin:

(இராவணனுக்கு உண்மையில் 10 தலைகள் இல்லை, 10 துறைகளில் சிறந்து விளங்கியதால் அவ்வாறு கூறப்பட்டது என அறிந்தேன். புனைவுகள் இல்லாமல் யாரும் எதையும் எழுத மாட்டார்கள் தானே.:grin:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கு ஒரு தெளிவான வரலாறு கிடையாது. உலகில் ஒரு தீவில் வாழும் இந்தக் குழும மக்கள் மீது ஆதிக்க சக்திகள் அத்தீவின் அமைவிடம் கருதி.. செல்வாக்குச் செலுத்தி வருகின்றனர். 

அதனடிப்படையில் அத்தீவின் ஆட்சி அதிகாரங்களை அத்தீவின் பெரும்பான்மையினர் என்ற வகையில் இன்று சிங்களவர்கள் தம் வசம் வைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால்.. சிங்களவர்கள்.. இராவணனை விட சீதா இராமனை அதிகம் கொண்டாடுகின்றனர். புத்த கோவில்களில் இந்துக் கடவுள்களை வைத்துள்ளனர்..!

ஆனால்.. அரசியல் ரீதியில்..தமிழர்கள் வாழும் இடங்களில்.. இந்துக் கோவில்களை இடித்து.. புத்த கோவில்களை அமைக்கின்றனர். இராவணனை தமிழ் மன்னன் என்றதும்.. சீதா இராமனை விட்டு இராவணனை கொண்டாடுகின்றனர். அடிப்படையே இல்லாமல்.. சிங்கத்தில் இருந்து வந்த இனம் என்கின்றனர்..!

இப்படி சிங்களவர்களிடம்.. பல சுயமுரண்கள் காணப்படுகின்றன. ஆனால்.. உலகின் கண்களுக்கு இலங்கைத் தீவின் அமைவிடமும்.. அங்குள்ள பெரும்பான்மை இனத்தின் ஆதரவும் தான் முக்கியமாகத் தெரிகிறது. அதில் நல்லா குளிர்காய்கிறது சிங்கள இனம். அவ்வளவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/18/2019 at 2:38 PM, Lara said:

சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னனாக தான் கூறுபவர்கள்.

சிங்களவர்கள் கிமு கிபி இடைப்பட்ட ஆண்டுகளில்தான் இலங்கையில் குடி ஏறி கள்ள காணி பிடித்தவை என்று புளுகுவம்சம் மன்னிக்கவும் மாகாவம்சம் கூறுது அதே காலபகுதியில் தான் வால்மிகியால் ராமாயணம் தொடர் எடுக்கபட்டது சே ........ எழுதபட்டது என்கிறார்கள் இதுக்குள்ள  கள்ள காணி பிடிக்கும் போது பூர்வீக குடிகளான இயக்கர்களை கல்லெறிந்து கலைத்தவையாம் இந்த சிங்களர் எப்படி இராவணன் மன்னன் ஆகினான் இவங்களுக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோரிக்கு (பாகிஸ்தான்) × பிருத்துவி (கிந்தியா) என்டால்..ராவணனுக்கு எதிர் கட்டாயம் ஏதாவது உந்த இஸ்ரோகாரர் செய்வினம் .. பார்ப்பம் 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Lara said:

வால்மீகி இராவணனை நல்ல விதமாக தான் எழுதியதாகவும் கம்பன் உட்பட சிலர் இராவணனை அரக்கனாக சித்தரித்ததாகவும் கேள்விப்பட்டேன். (வால்மீகி எழுதிய இராமாயணத்தை நான் வாசித்ததில்லை).

லாரா... இராமாயணம், நானும் வாசித்ததில்லை.
எனக்கும்,   உங்களைப்  போல்...  சில செவிவழி  தகவல்கள் மட்டுமே தெரியும்.
எனக்குத் தெரிந்த அளவில், யாழ். களத்தில்.. புங்கையூரான் மட்டுமே, இராமாயணத்தை.. கரைத்து குடித்தவர்.  :)

 

4 hours ago, Lara said:

10 தலை கொண்ட இராவணன் என கூறப்படுவதால் இராவணா-10 வரை அனுப்பக்கூடும். :grin:

(இராவணனுக்கு உண்மையில் 10 தலைகள் இல்லை, 10 துறைகளில் சிறந்து விளங்கியதால் அவ்வாறு கூறப்பட்டது என அறிந்தேன். புனைவுகள் இல்லாமல் யாரும் எதையும் எழுத மாட்டார்கள் தானே.:grin:)

அட்றா சக்கை...  "அப்பலோ  10"  வரை.... மட்டும் தான்,  விண் வெளியை நோட்ட மிட்டது.
அப்பலோ  11,  வெளியில் கால் வைத்து  சாதனை புரிந்தது.

இராவணாவும், அப்பலோவும்...  நாசாவில் இருந்து, போனதால்...
இராவணா  11 வராமல்...  அதற்கு,  பராக்கிரமபாகு என்றோ,   பிரபாகரன் என்றோ... 

சிங்களவர் பெயர் வைக்க, சாத்தியம் நிறைய உள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோரிக்கு (பாகிஸ்தான்) × பிருத்துவி (கிந்தியா) என்டால்..ராவணனுக்கு எதிர் கட்டாயம் ஏதாவது உந்த இஸ்ரோகாரர் செய்வினம் .. பார்ப்பம் 😊

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

இது உண்மையில் செயற்கை கோளே அல்ல. செயற்கை கல். அதை விண்வெளில கொட்டினம்.. எனி அதால விண்வெளியும் அதாவது பூமியை சுற்றிய விண்வெளியிலும் நெரிசல் வரப்போகிறது. 

நாசா பல விடயங்களை மூளை கெட்டதனமாய் செய்திட்டு.. அப்புறம்.. தான் சிந்திப்பார்கள்.. ஐயோ இப்படி ஆகிச்சேன்னு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குப்பை, யூ டியூபை  பார்த்து எல்லோரும் செய்யலாம் என்று சொல்றவை தாங்களும் செய்யலாமே!...வாயால வடை சுட த்  தான் லாயக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for space waste

On 6/18/2019 at 12:31 PM, பிழம்பு said:

இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக் கொள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்றரை வருடத்துக்குப் பின் குப்பையில் போட்டது நிரந்தரக் குப்பையாகிவிடும். 

More than 7,000 satellites have been launched into Earth’s orbit for 60 years, but now only one-third are still functioning. The remaining satellites have ceased functioning, and have become space junk.

We know, the object is in the sky. But how much, no one knows. European space agency ESA’s data pointed that since 6,600 satellites have been launched since 1957. Moreover, there are more 29,000 objects measuring more 10 centimeters in Earth orbit.

It is feared that there will be a collision hazard, due to fracture of the satellite, because the diameter of one centimeter alone is a danger threat. Because the spacecraft waste space moving at speeds up to 40,000 km per hour.

“A fractional collision of an object the size of a coffee bean at such a high speed with a satellite, has the equivalent impact force of a grenade,” said the astronaut, quoting the page.

https://www.spacewastesolutions.com/decades-outer-space-junk-orbiting-earth/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

34 minutes ago, பெருமாள் said:

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

பெருமாள், யூரியூபில் இருக்கிற வீடியோக்கள் பேப்பரில் எப்படி ஒரு செய்மதியின் மொடலைச் செய்வது என்று தான் காட்டுகின்றன! எப்படி ஐயா இப்படியெல்லாம் ஏமாறுகிறீர்கள்? 😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பெருமாள் said:

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

இங்க ஒருத்தன் யுரிப்பை பார்த்து 3D பிரின்டரை பாவிச்சு சுடக்கூடிய துப்பாக்கியே செய்திருக்கான்.

இதெல்லாம் இப்ப யுயுபி. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

 

பெருமாள், யூரியூபில் இருக்கிற வீடியோக்கள் பேப்பரில் எப்படி ஒரு செய்மதியின் மொடலைச் செய்வது என்று தான் காட்டுகின்றன! எப்படி ஐயா இப்படியெல்லாம் ஏமாறுகிறீர்கள்? 😥

சிறிய செய்மதி செய்யும் ஒளிநாட உண்டு  பாஸ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

இது குப்பை, யூ டியூபை  பார்த்து எல்லோரும் செய்யலாம் என்று சொல்றவை தாங்களும் செய்யலாமே!...வாயால வடை சுட த்  தான் லாயக்கு 

நாங்க எண்ணை சட்டியில் நல்ல கொதிநிலைக்கு வந்த பின்தான் வடை என்னது சொல்லுங்க "வடை " சுடுவது உண்டு நாங்களே குப்பை என்றுவிட்டம் பின்பு உங்களுக்கு விருப்பம் என்றால் செய்து பாருங்க. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

நாங்க எண்ணை சட்டியில் நல்ல கொதிநிலைக்கு வந்த பின்தான் வடை என்னது சொல்லுங்க "வடை " சுடுவது உண்டு நாங்களே குப்பை என்றுவிட்டம் பின்பு உங்களுக்கு விருப்பம் என்றால் செய்து பாருங்க. 

 

ஊரை விட்டு ஓடி வந்து விட்டு ,இங்க  வசதியாய் இருந்து கொண்டு ஊரில் இருப்பவர்கள் தங்களால் இயன்றதை செய்கின்றனர்...அதை நக்கடிக்க கொஞ்சசம் கூட வெட்கமாயில்லை ...எல்லாத்தையும் கரைச்சு குடித்தவர்கள் மாதிரி...இது செய்வது இலகு என்று சொன்னது நீங்கள்...செய்து காட்ட வேண்டியது நீங்களே அன்றி நான் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

சிறிய செய்மதி செய்யும் ஒளிநாட உண்டு  பாஸ் .

 

பெருமாள், இந்தக் கொமெடித் திரியில் நேரம் செல்வழிக்கப் போவதில்லை! ஆனால் போக முதல்: ஒளிநாடா இருந்தால் இங்கே இணைப்பது தானே? ஜூஸ் பெட்டியில் குழந்தைகள் எப்படி செய்மதி செய்யலாம் எண்டு தான் நாசா போட்டிருக்கிறது. சென்சர்கள், சூரிய சக்தி மூலம், மின்கலம், ரிமோட் சென்சிங் என்று சில தொழில் நுட்பங்களை இணைத்துச் செய்யும் செய்மதியும் பொறியியல் விசையால் இயங்கும் 3D துப்பாக்கியும் ஒன்று என்று நீங்களும் நண்பர்களும் நம்பினால், அந்த அல்லா தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

பெருமாள், இந்தக் கொமெடித் திரியில் நேரம் செல்வழிக்கப் போவதில்லை! ஆனால் போக முதல்: ஒளிநாடா இருந்தால் இங்கே இணைப்பது தானே? ஜூஸ் பெட்டியில் குழந்தைகள் எப்படி செய்மதி செய்யலாம் எண்டு தான் நாசா போட்டிருக்கிறது. சென்சர்கள், சூரிய சக்தி மூலம், மின்கலம், ரிமோட் சென்சிங் என்று சில தொழில் நுட்பங்களை இணைத்துச் செய்யும் செய்மதியும் பொறியியல் விசையால் இயங்கும் 3D துப்பாக்கியும் ஒன்று என்று நீங்களும் நண்பர்களும் நம்பினால், அந்த அல்லா தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்!

 

யாரும் உங்களை இழுத்து பிடிப்பதில்லை பாஸ் கருத்து சுதந்திரம் .

7 minutes ago, ரதி said:

ஊரை விட்டு ஓடி வந்து விட்டு ,இங்க  வசதியாய் இருந்து கொண்டு ஊரில் இருப்பவர்கள் தங்களால் இயன்றதை செய்கின்றனர்...அதை நக்கடிக்க கொஞ்சசம் கூட வெட்கமாயில்லை ...எல்லாத்தையும் கரைச்சு குடித்தவர்கள் மாதிரி...இது செய்வது இலகு என்று சொன்னது நீங்கள்...செய்து காட்ட வேண்டியது நீங்களே அன்றி நான் இல்லை 

உங்கடை இனமா சிங்களவர் ? அவர்கள்தான் இந்த மினி சட்லைட் செய்துவிட்டு அடைகோழி போல் கத்துகின்றனர் அதுவும் சிங்கள அரசின் அனுசாரனையுடன் . இதே வேலையை வடகிழக்கு மாணவர்கள் செய்தால் பின் தள்ளபட்டு இருப்பார்கள் எந்த உதவியும் கிடைத்தும் இருக்காது .

என்னுடன் கோபபட்டு விட்டு போங்கள் நான் கவலைப்படமாட்டன் ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இந்தக் கொமெடித் திரியில் நேரம் செல்வழிக்கப் போவதில்லை!

தாங்கள் ஏதோ பிரம்மன் போல் இங்கு வந்து தரிசனம் தருகின்றீர்கள்.தாங்கள் ஒரு தனி திரி திறந்தாலும் ஏதோ தங்களை புதுமையாக விசேடமானவனாக வெளிக்காட்டுகின்றீர்கள்.தங்கள் கருத்துக்களும் ஏதோ  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை போல் இங்கே பகிர்கின்றீர்கள். உங்களுக்கு நேரமில்லையெண்டால் எவன் வெத்திலை வைச்சு கூப்பிட்டவன்? முன்னர் ஒரு திரியில் நீங்கள் குறிப்பிட்டது போல் உங்களுக்கு  பிரயோசனமான தளங்களில் போய் வெட்டி புடுங்க வேண்டியதுதனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

யாரும் உங்களை இழுத்து பிடிப்பதில்லை பாஸ் கருத்து சுதந்திரம் .

உங்கடை இனமா சிங்களவர் ? அவர்கள்தான் இந்த மினி சட்லைட் செய்துவிட்டு அடைகோழி போல் கத்துகின்றனர் அதுவும் சிங்கள அரசின் அனுசாரனையுடன் . இதே வேலையை வடகிழக்கு மாணவர்கள் செய்தால் பின் தள்ளபட்டு இருப்பார்கள் எந்த உதவியும் கிடைத்தும் இருக்காது .

என்னுடன் கோபபட்டு விட்டு போங்கள் நான் கவலைப்படமாட்டன் ............

சும்மா சிங்களம்,தமிழ் என்று கதை விட வேண்டாம்...அண்மையில் வன்னியில் இருந்து ஒரு தமிழ் மாணவனது சாதனையும், கல்முனையில் இருந்து  ஒரு  தமிழ் மாணவனது சாதனையும்  உதே சிங்களவன் தான் பாராட்டு ஊக்கம்  கொடுத்து செய்வித்தவன்.
 நீங்கள் அவர்களை பாராட்டவோ,ஊக்கம் கொடுக்கவோ தேவையில்லை...அவர்களுக்கு அது தேவையுமில்லை...ஆனால் நக்கலடிக்காமல்,குறை சொல்லி உங்களை தாழ்த்தாமல் இருந்திருக்கலாம்.

யாழை எத்தனை பேர்  பார்க்கினம்...உங்களுக்கு இது பிடிக்கா விட்டால் விலகி போங்கள்...நீங்கள் எத்தனை நூல்களை வாசிக்கிறீர்கள்...உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களாக பார்க்காது இரண்டு தனி மனிதர்களின் முயற்சி என பார்க்கும்போது,

உலகமே பல பில்லியன் கோடி டாலர்களை கொட்டி இயங்கும் ஒரு துறையில், உலகம் முழுவதுமே பிச்சை எடுக்கும் நாட்டிலிருந்து இரு மனிதர்களின் சிறு அளவிலான எத்தனமும் அதை வெற்றிகரமாக விண்வெளியில் நிறுத்தும் அளவிற்கு தரமானதாக வடிவமைத்ததும்   சிறிலங்காவின் கொண்டிசனோடு ஒப்பிடும்போது அந்த நாடுக்காரர் இருவர் செய்தது நிச்சயம் பெரிய பாய்ச்சல்தான்.சாதனைதான்.

இதையே வடகிழக்கில் இருக்கும் இரு  தமிழ் பல்கலைகழக மாணவர்களோ புத்தி ஜீவிகளோ செய்திருந்தால் வாழ்த்து மழைகள் விண்ணை முட்டியிருக்கும்.

அடக்குமுறை என்று வரும்போது சிங்களவன் தமிழன் பேதம் கண்டிப்பாக பார்க்கப்படவேண்டும்.

அறிவியலில் அது எதற்கு?

செயற்கைகோள் தொழில் நுட்பத்தில்; அரிவரி நிலையில்உள்ள நாட்டில் கொண்டு ஓரிருவரின் கூட்டு முயற்சியில் உருவான சாதனைக்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் இதனை சிங்கள இனத்தின் சாதனையாக அவர்கள் உள் நாட்டிலும் வெளி உலகத்துக்கும் காட்டிக்கொண்டார்கள் என்றால் காரி துப்பிவிட்டு வாழ்த்தை வாபஸ் வாங்கவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தாங்கள் ஏதோ பிரம்மன் போல் இங்கு வந்து தரிசனம் தருகின்றீர்கள்.தாங்கள் ஒரு தனி திரி திறந்தாலும் ஏதோ தங்களை புதுமையாக விசேடமானவனாக வெளிக்காட்டுகின்றீர்கள்.தங்கள் கருத்துக்களும் ஏதோ  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை போல் இங்கே பகிர்கின்றீர்கள். உங்களுக்கு நேரமில்லையெண்டால் எவன் வெத்திலை வைச்சு கூப்பிட்டவன்? முன்னர் ஒரு திரியில் நீங்கள் குறிப்பிட்டது போல் உங்களுக்கு  பிரயோசனமான தளங்களில் போய் வெட்டி புடுங்க வேண்டியதுதனே.

அண்ணை, அவ்வளவு சீக்கிரமாகப் போய் விடப் போவதில்லை! அதிருக்கட்டும், இது அறிவியல் சம்பந்தமான திரியல்லவா? நீங்கள் உங்க நிண்டு என்ன செய்யிறீங்கள்? 

3 hours ago, பெருமாள் said:

யாரும் உங்களை இழுத்து பிடிப்பதில்லை பாஸ் கருத்து சுதந்திரம் .

உங்கடை இனமா சிங்களவர் ? அவர்கள்தான் இந்த மினி சட்லைட் செய்துவிட்டு அடைகோழி போல் கத்துகின்றனர் அதுவும் சிங்கள அரசின் அனுசாரனையுடன் . இதே வேலையை வடகிழக்கு மாணவர்கள் செய்தால் பின் தள்ளபட்டு இருப்பார்கள் எந்த உதவியும் கிடைத்தும் இருக்காது .

என்னுடன் கோபபட்டு விட்டு போங்கள் நான் கவலைப்படமாட்டன் ............

சரி, அந்த பேப்பர் சற்றலைற் செய்யும் இணைப்பு எங்கே? அல்லது அதுவும் முன்னர் ஒரு திரியில் GMO உணவை இங்கிலாந்தில் துகிலுரித்த ஒரு விஞ்ஞானியின் பேப்பரைத் தேடிக் கொண்டு வாறன் எண்டு "கம்"மெண்டு கழண்ட மாதிரிக் கழரும் திட்டம் தானா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.