Jump to content

வாற கோவத்துக்கு இவளை ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

64514568_10212209248059986_4013799018608

 

காலையில் வேலை ஆரம்பிப்பது எட்டு மணிக்கு.7.30 க்கு சரியா வீட்டை விட்டு இறங்குவது. சாதாரணமாக பத்து நிமிடம் போதும் போக. ஆனால் கார் பாக் கிடைப்பது கடினம் என்பதால் வெள்ளணவே போய் பாக் செய்துபோட்டு  பத்து நிமிடம் காருக்குள்ளே இருந்துவிட்டு இறங்கிப் போய் போஸ்ட் ஒபிஸ் திறப்பது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் போய்க்கொண்டிருந்தபோது வீதியில் ஐந்தில் தான் போகமுடிந்தது. அத்தனை வாகனங்கள். திடீரென என் காரில் எதுவோ இடிக்க கால் தானாகவே பிரேக்கை அழுத்த நல்ல காலம் எனக்கு முன்னே நின்ற காருக்கு நான் இடிக்காமல் தப்பித்துக்கொண்டேன். உடனே காரை நிறுத்தி விட்டு இறங்க மற்றக் கார் காரர் கோண் அடிக்கிறாங்கள்  காரைத் தள்ளி போய் ஓரமா நிப்பாட்டுங்கோ என்று. சரி என்று ஒரு பத்து மீற்றர் தள்ளி இடமிருக்க நிப்பாட்டிப் போட்டு இறங்கிப் போய் பார்த்தால் பின்பக்க பம்பரில் ஒரு ஓட்டை.

அதன் பின்தான் யார் என்று பார்த்தால் எங்கள் இனப் பெண். மூன்று பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் யூனிபோமுடன் காருக்குள் இருக்க " என்ன தங்கச்சி வேகமாகப் போனாலும் பரவாயில்லை. இப்பிடிச் சிலோவாப் போக வந்து இடிக்கிறியள்" என்று சொல்லிவிட்டு பார்க்க பதட்டமாய் கார்க் கதவைத் திறந்து இறங்குகிறாள் அவள். என்ன பெயர் என்று நான் கேட்க கீதா என்கிறாள். கணவனின் பெயரையும் தொலை பேசி எண்ணையும் வாங்கி எழுதிவிட்டு எந்த இன்சூரன்ஸ் என்கிறேன். பெயரைச் சொல்லிவிட்டு அக்கா தயவுசெய்து இன்சூரன்சுக்குப்போகவேண்டாம். எனக்கு இன்சூரன்ச் கூடிவிடும். நீங்கள் திருத்துற காசை நான் கையில தாறன் என்கிறாள். சரி பாவம் எங்கடை ஆட்கள் தானே. சரி தங்கச்சி நான் நான் வேலைக்குப் போக வேணும். அங்கே போய்நின்று உங்களோட கதைக்கிறேன் என்று கூறியபடி அவரையும் காரையும் சேர்த்துப் படம் எடுத்து என் காரையும் படமெடுத்துவிட்டு வந்து கடையைத் திறந்துவிட்டு அதன் பின் கணவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, சரி அந்தப் பெட்டையோட கதையன் என்றுவிட்டு மனிசன் வச்சிட்டுது.

ஒரு அரை  மணிநேரம் போகத்தான் எனக்கு நேரம் கிடைக்க அவளுக்குப் போன் செய்து என் கராச் காரரின் பெயரைச் சொல்லி இவரைத் தெரியுமா என்று கேட்கிறேன். ஓம் அக்கா எனக்கும் தெரியும் நீங்கள் அங்க கொண்டுபோய் விடுங்கோ நாங்கள் காசு குடுக்கிறம் என்கிறாள். நான்கு மணிக்கு வேலை முடிய நேரே காரச்சுக்குக் காரைக் கொண்டுபோய்க் காட்ட பின்பக்க பம்பரில் ஓட்டை விழுந்திருக்கு அக்கா. அதை முழுவதும் மாற்ற வேண்டும் என்கிறார் அவர். நான் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவருடன் கதைக்கும்படி கேட்க, அவர் அந்தக் கீதாவுக்கு 370 பவுன்ஸ் முடியும் என்று சொல்ல ஓகே என்றுவிட்டு அவள் போனை வைக்கிறாள். எனக்கு அடுத்த இரண்டு நாட்கள் வேலை. அதனால் வியாழன் காரைக் கொண்டுவந்து விடுகிறேன் என்றுவிட்டு நான் வந்துவிட்டேன்.

அடுத்தநாள் அந்தக் கராச் காரர் எனக்கு போன் செய்கிறார். அக்கா அந்தப் பெண்ணின் அண்ணா என்னிடம் வந்தவர்.  காசைக் குறைக்கும்படி கேட்டவர். நான் மறுத்துவிட்டேன் என்கிறார். நான் காரைக் கொண்டுவந்து விட இன்னும் இரண்டு நாட்கள் இருக்கே பார்ப்போம் என்றுவிட்டு நான் போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் மாலை அந்தக் கீதா எனக்குப் போன் செய்கிறாள். நீங்கள் சொன்ன இடத்தில காசு கூடவாக் கிடக்கு. நான் ஒரு கராச் சொல்லுறன் கொண்டுபோய் அங்கே திருத்துறியளோ என்கிறாள்.

தங்கச்சி நான் அவரிடம் தான் என்ன பிழை என்றாலும் திருத்துவது. நீங்கள் சொல்லுபவரிடம் கொண்டு போக முடியாது என்கிறேன். அப்ப நீங்கள் இரண்டுபேரும் கதைச்சுப் பேசித்தான் அவ்வளவு காசு கேட்கிறியளோ என்கிறாள்.
எனக்கு வந்த கோபத்தை அடக்கியபடி நீங்கள் தமிழர் எண்டதால தான் நான் உங்களுக்குத் பாவம் பார்த்தனான். இனிப் பார்க்கேலாது நன்றி வணக்கம் என்றுவிட்டு போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் எனது இன்சூரன்சுக்கு அடித்து விடயத்தைக் கூறிவிட்டு இருந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து ஒரு மரக்கறிக் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தபோது உள்ளே வந்த பெண் என்னைக் கண்டவள் உடனேயே வெளியே போய்விட்டாள். எங்கேயோ கண்ட முகமாக இருக்கே என்று யோசிக்க அதன் பின் தான் நினைவு வந்தது.  என் இன்சூரன்ஸில் இருந்து £1450 எனக்குத் திருத்த வேலைகளுக்காகச் செலுத்தும்படி கேட்டுள்ளதாக கடிதம் வந்திருந்தது. கையெழுத்திட்டு இரு வாரங்கள் ஆனபின் என் இன்சூரன்ஸில் இருந்து இன்னொரு கடிதம் வந்திருந்தது. அவள் தன் தவறை ஒத்துக்கொள்ளாமல் என் கார் தான் பின்னால் உருண்டு வந்து தனக்கு இடித்தது என்று கூறிய கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தனர்.

இவளை சும்மா விடலாமா சொல்லுங்கோ ?????

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

64514568_10212209248059986_4013799018608

 

காலையில் வேலை ஆரம்பிப்பது எட்டு மணிக்கு.7.30 க்கு சரியா வீட்டை விட்டு இறங்குவது. சாதாரணமாக பத்து நிமிடம் போதும் போக. ஆனால் கார் பாக் கிடைப்பது கடினம் என்பதால் வெள்ளணவே போய் பாக் செய்துபோட்டு  பத்து நிமிடம் காருக்குள்ளே இருந்துவிட்டு இறங்கிப் போய் போஸ்ட் ஒபிஸ் திறப்பது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் போய்க்கொண்டிருந்தபோது வீதியில் ஐந்தில் தான் போகமுடிந்தது. அத்தனை வாகனங்கள். திடீரென என் காரில் எதுவோ இடிக்க கால் தானாகவே பிரேக்கை அழுத்த நல்ல காலம் எனக்கு முன்னே நின்ற காருக்கு நான் இடிக்காமல் தப்பித்துக்கொண்டேன். உடனே காரை நிறுத்தி விட்டு இறங்க மற்றக் கார் காரர் கோண் அடிக்கிறாங்கள்  காரைத் தள்ளி போய் ஓரமா நிப்பாட்டுங்கோ என்று. சரி என்று ஒரு பத்து மீற்றர் தள்ளி இடமிருக்க நிப்பாட்டிப் போட்டு இறங்கிப் போய் பார்த்தால் பின்பக்க பம்பரில் ஒரு ஓட்டை.

அதன் பின்தான் யார் என்று பார்த்தால் எங்கள் இனப் பெண். மூன்று பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் யூனிபோமுடன் காருக்குள் இருக்க " என்ன தங்கச்சி வேகமாகப் போனாலும் பரவாயில்லை. இப்பிடிச் சிலோவாப் போக வந்து இடிக்கிறியள்" என்று சொல்லிவிட்டு பார்க்க பதட்டமாய் கார்க் கதவைத் திறந்து இறங்குகிறாள் அவள். என்ன பெயர் என்று நான் கேட்க கீதா என்கிறாள். கணவனின் பெயரையும் தொலை பேசி எண்ணையும் வாங்கி எழுதிவிட்டு எந்த இன்சூரன்ஸ் என்கிறேன். பெயரைச் சொல்லிவிட்டு அக்கா தயவுசெய்து இன்சூரன்சுக்குப்போகவேண்டாம். எனக்கு இன்சூரன்ச் கூடிவிடும். நீங்கள் திருத்துற காசை நான் கையில தாறன் என்கிறாள். சரி பாவம் எங்கடை ஆட்கள் தானே. சரி தங்கச்சி நான் நான் வேலைக்குப் போக வேணும். அங்கே போய்நின்று உங்களோட கதைக்கிறேன் என்று கூறியபடி அவரையும் காரையும் சேர்த்துப் படம் எடுத்து என் காரையும் படமெடுத்துவிட்டு வந்து கடையைத் திறந்துவிட்டு அதன் பின் கணவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, சரி அந்தப் பெட்டையோட கதையன் என்றுவிட்டு மனிசன் வச்சிட்டுது.

ஒரு அரை  மணிநேரம் போகத்தான் எனக்கு நேரம் கிடைக்க அவளுக்குப் போன் செய்து என் கராச் காரரின் பெயரைச் சொல்லி இவரைத் தெரியுமா என்று கேட்கிறேன். ஓம் அக்கா எனக்கும் தெரியும் நீங்கள் அங்க கொண்டுபோய் விடுங்கோ நாங்கள் காசு குடுக்கிறம் என்கிறாள். நான்கு மணிக்கு வேலை முடிய நேரே காரச்சுக்குக் காரைக் கொண்டுபோய்க் காட்ட பின்பக்க பம்பரில் ஓட்டை விழுந்திருக்கு அக்கா. அதை முழுவதும் மாற்ற வேண்டும் என்கிறார் அவர். நான் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவருடன் கதைக்கும்படி கேட்க, அவர் அந்தக் கீதாவுக்கு 370 பவுன்ஸ் முடியும் என்று சொல்ல ஓகே என்றுவிட்டு அவள் போனை வைக்கிறாள். எனக்கு அடுத்த இரண்டு நாட்கள் வேலை. அதனால் வியாழன் காரைக் கொண்டுவந்து விடுகிறேன் என்றுவிட்டு நான் வந்துவிட்டேன்.

அடுத்தநாள் அந்தக் கராச் காரர் எனக்கு போன் செய்கிறார். அக்கா அந்தப் பெண்ணின் அண்ணா என்னிடம் வந்தவர்.  காசைக் குறைக்கும்படி கேட்டவர். நான் மறுத்துவிட்டேன் என்கிறார். நான் காரைக் கொண்டுவந்து விட இன்னும் இரண்டு நாட்கள் இருக்கே பார்ப்போம் என்றுவிட்டு நான் போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் மாலை அந்தக் கீதா எனக்குப் போன் செய்கிறாள். நீங்கள் சொன்ன இடத்தில காசு கூடவாக் கிடக்கு. நான் ஒரு கராச் சொல்லுறன் கொண்டுபோய் அங்கே திருத்துறியளோ என்கிறாள்.

தங்கச்சி நான் அவரிடம் தான் என்ன பிழை என்றாலும் திருத்துவது. நீங்கள் சொல்லுபவரிடம் கொண்டு போக முடியாது என்கிறேன். அப்ப நீங்கள் இரண்டுபேரும் கதைச்சுப் பேசித்தான் அவ்வளவு காசு கேட்கிறியளோ என்கிறாள்.
எனக்கு வந்த கோபத்தை அடக்கியபடி நீங்கள் தமிழர் எண்டதால தான் நான் உங்களுக்குத் பாவம் பார்த்தனான். இனிப் பார்க்கேலாது நன்றி வணக்கம் என்றுவிட்டு போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் எனது இன்சூரன்சுக்கு அடித்து விடயத்தைக் கூறிவிட்டு இருந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து ஒரு மரக்கறிக் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தபோது உள்ளே வந்த பெண் என்னைக் கண்டவள் உடனேயே வெளியே போய்விட்டாள். எங்கேயோ கண்ட முகமாக இருக்கே என்று யோசிக்க அதன் பின் தான் நினைவு வந்தது.  என் இன்சூரன்ஸில் இருந்து £1450 எனக்குத் திருத்த வேலைகளுக்காகச் செலுத்தும்படி கேட்டுள்ளதாக கடிதம் வந்திருந்தது. கையெழுத்திட்டு இரு வாரங்கள் ஆனபின் என் இன்சூரன்ஸில் இருந்து இன்னொரு கடிதம் வந்திருந்தது. அவள் தன் தவறை ஒத்துக்கொள்ளாமல் என் கார் தான் பின்னால் உருண்டு வந்து தனக்கு இடித்தது என்று கூறிய கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தனர்.

இவளை சும்மா விடலாமா சொல்லுங்கோ ?????

அவோவுக்கு, வீட்டுக்கு வந்து வடையை திண்டு, டீயை வாங்கி குடிச்சுப் போட்டு, யாரோ ஐடியா கொடுத்திருக்கினம் போல கிடக்குது.

நடந்த சம்பவங்களை எல்லாம், நீங்கள், கராஜ் காரரிடம் போன விடயம், சொன்ன quotation எல்லாம் கோர்வையாக சொல்லுங்கள்.

இன்சூரன்ஸ் மோசடி என்று அவர்கள் விசாரித்து பிடித்தால், இனி இன்சூரன்ஸ் அவோவுக்கு கிடைக்காது, கிடைத்தாலும் மலிவா இருக்காது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அவோவுக்கு, வீட்டுக்கு வந்து வடையை திண்டு, டீயை வாங்கி குடிச்சுப் போட்டு, யாரோ ஐடியா கொடுத்திருக்கினம் போல கிடக்குது.

நடந்த சம்பவங்களை எல்லாம், நீங்கள், கராஜ் காரரிடம் போன விடயம், சொன்ன quotation எல்லாம் கோர்வையாக சொல்லுங்கள்.

இன்சூரன்ஸ் மோசடி என்று அவர்கள் விசாரித்து பிடித்தால், இனி இன்சூரன்ஸ் அவோவுக்கு கிடைக்காது, கிடைத்தாலும் மலிவா இருக்காது.
 

அவ எனக்கு தன்னை அறியாமலே சில சாட்சிகளை விட்டிட்டா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கார் ஓட்டோமற்றிக் காராக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அவ்வாறெனில்....அது பின்னால் உருளும் சாத்தியம் இல்லையே ! அத்துடன் விபத்து நடந்த இடம் சமதளமாக இருக்குமெனநீங்கள்  புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தலாமே...!

மேலே நாதம் கூறியது போல....கராஜ் காரரிடம்....அங்கு நடந்த சம்பவங்களை விபரித்து ஒரு துண்டு வாங்குங்கள்! 

இறுதி வெற்றி.....உங்களுக்குத் தான்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவ எனக்கு தன்னை அறியாமலே சில சாட்சிகளை விட்டிட்டா 

இன்சூரன்ஸ் கம்பெனிகள், கண்ணுக்குள் எண்ணையை ஊத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த பெண் தான் ஒருவர் தான் அவ்வாறு சொல்வதாக நினைத்துக் கொண்டிருப்பார். 

ஆனால், இன்சூரன்ஸ் கொம்பனிக்கு, பல மில்லியன் பேர்களின் அனுபவம் உண்டு என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புங்கையூரன் said:

உங்கட கார் ஓட்டோமற்றிக் காராக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அவ்வாறெனில்....அது பின்னால் உருளும் சாத்தியம் இல்லையே ! அத்துடன் விபத்து நடந்த இடம் சமதளமாக இருக்குமெனநீங்கள்  புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தலாமே...!

மேலே நாதம் கூறியது போல....கராஜ் காரரிடம்....அங்கு நடந்த சம்பவங்களை விபரித்து ஒரு துண்டு வாங்குங்கள்! 

இறுதி வெற்றி.....உங்களுக்குத் தான்...!

எனது கார் கியர் தான். கராச் காரரின் கடிதம் அனுப்பியிருக்கு.

2 minutes ago, Nathamuni said:

இன்சூரன்ஸ் கம்பெனிகள், கண்ணுக்குள் எண்ணையை ஊத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த பெண் தான் ஒருவர் தான் அவ்வாறு சொல்வதாக நினைத்துக் கொண்டிருப்பார். 

ஆனால், இன்சூரன்ஸ் கொம்பனிக்கு, பல மில்லியன் பேர்களின் அனுபவம் உண்டு என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

என்றாலும் இத்தனை துணிவாக எப்படிப் பொய் சொல்கின்றனர் என்றுதான் எனக்குப் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

அவ்வாறெனில்....அது பின்னால் உருளும் சாத்தியம் இல்லையே ! அத்துடன் விபத்து நடந்த இடம் சமதளமாக இருக்குமெனநீங்கள்  புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தலாமே...!

உருளுதோ, இல்லையோ, பின்னால இடித்தால், பின்னால வந்த காரில் தான் பிழை எண்டது எப்பவோ முடிவான விசயம். Safety Gab விடவேண்டும் எண்டு சட்டம் சொல்லுது. தமிழில சொல்லுறது எண்டா, முன்னால போன காரின், குண்**** கில பின்னால வாற கார் போக கூடாது.

இப்பவெல்லாம், dashboard, rearview காமெராக்களோட சனம் திரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

உருளுதோ, இல்லையோ, பின்னால இடித்தால், பின்னால வந்த காரில் தான் பிழை எண்டது எப்பவோ முடிவான விசயம்.

இப்பவெல்லாம், dashboard, rearview காமெராக்களோட சனம் திரியுது.

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

நீங்கள் accept பண்ணினால்... அவவுக்கு செலவு இல்லை தானே. உங்கட இன்சூரன்ஸ் கொம்பனி தானே கட்டும். உங்கட பிரீமியம் கூடும்.

உங்கட கராஜ் காரர், அவர்கள் தொடர்பு கொண்டதையும், காசு விடயமாக பேரம் பேசியதையும், தமது கராஜுக்கு போக சொன்னதையும் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நீங்கள் accept பண்ணினால்... அவவுக்கு செலவு இல்லை தானே. உங்கட இன்சூரன்ஸ் கொம்பனி தானே கட்டும். உங்கட பிரீமியம் கூடும்.

அட நாசமாய் போக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

ஒரு விபத்து நடந்து 24 மணி நேரத்துக்குள் உங்கள் காப்புறுதி நிறுவனத்துக்கு உங்களில் பிழை இல்லை என்றாலும் அறிவிக்கனும் என்பதை அநேக காப்புறுதி நிருவனம்கள் வலியுறுத்து கின்றனர் அதனால் உங்கள் பிரிமியம் கூடபோவதில்லை மேல் சொன்னவாறு தவறான கிளைம்களை தடுக்கவே அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் நிறைய ஆதரம்களை தேட வேண்டி இருக்கும் .(இண்டைக்கு நித்திரை துலன்சுது இவேக்கு )😀😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

ஒரு விபத்து நடந்து 24 மணி நேரத்துக்குள் உங்கள் காப்புறுதி நிறுவனத்துக்கு உங்களில் பிழை இல்லை என்றாலும் அறிவிக்கனும் என்பதை அநேக காப்புறுதி நிருவனம்கள் வலியுறுத்து கின்றனர் அதனால் உங்கள் பிரிமியம் கூடபோவதில்லை மேல் சொன்னவாறு தவறான கிளைம்களை தடுக்கவே அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் நிறைய ஆதரம்களை தேட வேண்டி இருக்கும் .(இண்டைக்கு நித்திரை துலன்சுது இவேக்கு )

இவ உங்களுக்குத் தெரிஞ்ச ஆளாகவும் இருப்பா. இவற்ற  நித்திரையும் துலைஞ்சுது  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவ உங்களுக்குத் தெரிஞ்ச ஆளாகவும் இருப்பா. இவற்ற  நித்திரையும் துலைஞ்சுது  😀

எனக்கு தெரிந்ச ஆட்கள் லண்டனில் கூட உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் பிழை செய்தால் பேசாமல் இருப்பது உங்கள் இயல்பாக்கும்  நம்மை பொறுத்தவரை பிழை யார் விட்டாலும் அதிலும் இப்படியனதுகளை சும்மா விட்டால் நாளைக்கு அதுகளின்ரை சொறி குணத்தை எல்லாரிடமும் காட்ட வெளிக்கிடுங்கள் அப்படி குற்றம் அவர்கள் செய்வதுக்கு நாங்களும் ஒரு காரணமாய் இருக்கக்கூடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

அவர்களுக்கு உழைப்புத்தானே அவன்ரை பக்கமும் 7.5 சனி இனி வரும் ஐந்து வருடத்துக்கு சிப்பிலி ஆட்டும் இந்த கேசில் அவ  வெல்ல போவதில்லை வெண்டாலும் ஏலரைதான் அவவுக்கு ஒவ்வொரு வருடமும் காப்புறுதி புதுபிக்க போகையில் அழகாய் கேட்ப்பார்கள் "Have You Had An Accident In Last 5 Years? "? ஓம் உங்களில் பிழை இல்லை என்றாலும்  நடந்தால் yes தான் சொல்லணும் .அதன் பின் தொடங்கும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

எனக்கு தெரிந்ச ஆட்கள் லண்டனில் கூட உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் பிழை செய்தால் பேசாமல் இருப்பது உங்கள் இயல்பாக்கும்  நம்மை பொறுத்தவரை பிழை யார் விட்டாலும் அதிலும் இப்படியனதுகளை சும்மா விட்டால் நாளைக்கு அதுகளின்ரை சொறி குணத்தை எல்லாரிடமும் காட்ட வெளிக்கிடுங்கள் அப்படி குற்றம் அவர்கள் செய்வதுக்கு நாங்களும் ஒரு காரணமாய் இருக்கக்கூடாது .

உவையள், உந்த ரேடியோ விளம்பரத்தை கேட்டு, சன்னதம் கொண்டாடுற ஆக்கள், கண்டியளோ.

முந்தி காருக்குள ஏறின, ibc, ஆதவன் தான். இப்ப அந்த பக்கமே போறதில்லை.

இன்னமும், இலங்கைக்கிலேயே வைத்திருக்கினம் எண்ட மாதிரி தான் நிகழ்வுகள். ஒரு செய்தியாவது வாழும், புலம் பத்தினது எண்டால் இல்லை.

இதில வாற விளம்பரம் தான், 'வாகன விபத்தா'... வாகனங்களை அப்புறப்படுத்துவது மட்டுமல்ல.... 'காப்புறுதி நிறுவனத்துக்கு எப்படி சொல்வது என்றும் சொல்லி தருவோமாம்'.

இவர்கள் தான் அந்த, வடை, தேத்தண்ணி ஆலோசகர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

எனக்கு தெரிந்ச ஆட்கள் லண்டனில் கூட உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் பிழை செய்தால் பேசாமல் இருப்பது உங்கள் இயல்பாக்கும்  நம்மை பொறுத்தவரை பிழை யார் விட்டாலும் அதிலும் இப்படியனதுகளை சும்மா விட்டால் நாளைக்கு அதுகளின்ரை சொறி குணத்தை எல்லாரிடமும் காட்ட வெளிக்கிடுங்கள் அப்படி குற்றம் அவர்கள் செய்வதுக்கு நாங்களும் ஒரு காரணமாய் இருக்கக்கூடாது .

நன்றி பெருமாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

அதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாடா மேடத்தை அஞ்சாறு நாளாய் காணேல்லையே எண்டு பாத்தன்? இதே பிரச்சனை? ஆக்களுக்கு சேதம் இல்லாதவரைக்கும் சந்தோசம்.
வந்து வாய்க்கிறதெல்லாம் தலையிலை சம்பல் அரைக்கிற கும்பலாய் எல்லே கிடக்கு...🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

 

2 hours ago, MEERA said:

அதே!

குழப்பாதீங்கோ, பாவம், இரா முழுக்க, அக்காவும், அத்தாரும் நித்திரை இல்லாமல் அல்லாடி போட்டினம். 

டிராபிக் இருக்கிற ரோட்டில, பின்னால் உருண்டாலும், 'உம்மா' தான் கொடுக்கும் வேகம் இருக்குமே தவிர, உதை கொடுத்து, £350 க்கு வேலை செய்ய வேண்டின காயம் வராது எண்டு, படத்தை பார்த்து சொல்ல, இன்சூரன்ஸ் கொம்பனி வித்துவான்கள் இருக்கினம் கண்டியளே. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்ஸ்சூரன்சுக்குள் போனால் இரண்டு வாகனமும் ஒரே இன்சூரன்ஸ் என்றால் அதிகம் பிரச்சினை இல்லை.வெவ்வேறு இன்சூரன்ஸ் என்றால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் கதைத்துத்தான் முடிவெடுப்பினம்.....!

ஒருமுறை ஒரு பொடியன் ஒரு மொபைலட்டில் (அது ஓட லைசென்ஸ் தேவையில்லை) எனது காருக்கு பின்னால் வேகமாய் வந்து பிழையான பக்கத்தால் முந்தும்போது எனது காரின் சைட் கண்ணாடியை உடைத்து பாலன்ஸ் தவறி வேலிக்குள் விழுந்து அவரது மொபைலட்டின் முன் பாகம் முழுதும் நொறுங்கி போட்டுது. எனது காருக்கு கண்ணாடி மட்டும்தான் சேதம்.மற்றும்படி ஒரு கீறலும் விழவில்லை. நான் ஓடிப்போய் அவரையும் சைக்கிளையும் தூக்கி விட்டன்.பலமுறை மன்னிப்பு சொன்னான். அவன் அழுவாரைப்போல் நின்றான். பார்க்க பாவமாய் இருந்தது.  நான் கேட்டன்  இப்ப என்ன செய்யலாம் என்று.அவன் சொன்னான் தன்னில் பிழை என்று எழுதித் தாறன் எண்டு. நான் அதற்குரிய படிவத்தை எடுத்து படமெல்லாம் கீறி நிரப்பி கையெழுத்து வாங்கி  விட்டு சொன்னன் உனக்கு விருப்பமெண்டால் சொல்லு நான் இதை இன்சூரன்சுக்கு கொடுக்கவில்லை. எனது காரை நான் திருத்தி கொள்ளுறன், நீ உனது வண்டியை திருத்தி கொள்  என்று. அவன் சொன்னான் தன்னுடையது புது வண்டி. முன்னுக்கு முழுதும் சேதமாய் போட்டுது. ஆனால் தன்னுடையது" தூ ரிஸ்க் இன்சூரன்ஸ்" full insurance  (அதாவது அவரின் வண்டிக்கு அவரோ அன்றி மற்றவர்களோ அடித்தாலும் இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது இன்சூரன்ஸ் எப்பொழுதும் மினிமம்தான். நான் யாரையாவது அடித்தால் அவர்களது வாகனத்தை இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது வாகனத்தை நான்தான் திருத்த வேண்டும். வேறு யாரும் எனது வாகனத்தை இடித்தால் இன்சூரன்ஸ் எனது வாகனத்தை திருத்தித் தரும்.) அதனால் நீங்கள் படிவத்தை உங்களது இன்சூரன்ஸில் குடுங்கோ என்கிறார். நானும் சரி என்டு போட்டு அவரையும் சைக்கிளையும் ஏற்றிக்கொண்டு போய் அவரிடத்தில் விட்டு விட்டு எனது இன்சூரன்ஸில் விடயத்தை சொல்லி படிவத்தை குடுத்து விட்டு வந்தேன். 

சில நாளில் எனக்கு கடிதம் வருகுது. பிழை 50/50 என்றும் எனக்கு போனஸ் கூடும் என்றும் வருது. நான் நேரில் போய் கேட்டன்  எண்ணில் ஒரு பிழையும் இல்லை எப்படி 50/50 வரும் என்று. அது தாங்கள் அவர்களின் இன்சூரன்சுடன் கதைத்தது என்று சொன்னார்.நான் சொன்னன் நான் போய் என்ர லோயருடன் வாறன், பிறகு நீ என்னுடைய கார்கள் (மகன், மகளுடையது ) எல்லா இன்சூரன்சும் இங்குதான் இருக்கு நான் எல்லாத்தையும் நிப்பாட்ட போறன் என்று வெளிக்கிட அவர் என்னை இருக்க சொல்லிவிட்டு  மற்றும் கூட வேலை செய்யும்  இருவருடன் கதைத்து விட்டு போனில் மேலிடத்துடன் கதைச்சினம். பிறகு வந்து சொன்னார் நாங்கள் எல்லாம் கதைசிட்டம் உன்னில் பிழை இல்லை என்று. நான் விடேல்ல என்ர  சைட் மிரர் உடைந்திட்டுது என்ன செய்யிறது என்று கேட்க , அவர் ஒரு கராஜ் விலாசம் தந்தார் அங்கு கொண்டுபோய் காட்ட  சொல்லி கடிதமும் தந்தார். நானும் அதை வாங்கி கொண்டுபோய் அந்த கராஜில் குடுத்து சில நாளில் புதிதாக போட்டு தந்தார்கள். போனஸும் ஏறவில்லை......!  

எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

மிச்சம் ஐங்சனில் இருந்து ஒரு ஐம்பது மீற்றரில வலது பக்கம் இரண்டு றோட்டுகள் திரும்புமல்லோ அதுக்குப் பக்கத்திலதான் நடந்தது. அதில் உருள ரு வாய்ப்பே இல்லை.

8 hours ago, குமாரசாமி said:

என்னாடா மேடத்தை அஞ்சாறு நாளாய் காணேல்லையே எண்டு பாத்தன்? இதே பிரச்சனை? ஆக்களுக்கு சேதம் இல்லாதவரைக்கும் சந்தோசம்.
வந்து வாய்க்கிறதெல்லாம் தலையிலை சம்பல் அரைக்கிற கும்பலாய் எல்லே கிடக்கு...🤠

இது நடந்து இரண்டு மாதங்களுக்குக்கிட்ட. போன கிழமைதான் அவள் பிரட்டின கடிதம் வந்தது. யேர்ம்ன் போல் இங்கு பொலிஸ் வந்து முடிவெடுப்பதில்லை. அதுதான் உதுகளுக்குத் துணிவு.

9 hours ago, MEERA said:

அதே!

😡😡

6 hours ago, Nathamuni said:

 

குழப்பாதீங்கோ, பாவம், இரா முழுக்க, அக்காவும், அத்தாரும் நித்திரை இல்லாமல் அல்லாடி போட்டினம். 

டிராபிக் இருக்கிற ரோட்டில, பின்னால் உருண்டாலும், 'உம்மா' தான் கொடுக்கும் வேகம் இருக்குமே தவிர, உதை கொடுத்து, £350 க்கு வேலை செய்ய வேண்டின காயம் வராது எண்டு, படத்தை பார்த்து சொல்ல, இன்சூரன்ஸ் கொம்பனி வித்துவான்கள் இருக்கினம் கண்டியளே. :grin:

நல்லாச் சொல்லுங்கோ உவர் மீராவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இன்ஸ்சூரன்சுக்குள் போனால் இரண்டு வாகனமும் ஒரே இன்சூரன்ஸ் என்றால் அதிகம் பிரச்சினை இல்லை.வெவ்வேறு இன்சூரன்ஸ் என்றால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் கதைத்துத்தான் முடிவெடுப்பினம்.....!

ஒருமுறை ஒரு பொடியன் ஒரு மொபைலட்டில் (அது ஓட லைசென்ஸ் தேவையில்லை) எனது காருக்கு பின்னால் வேகமாய் வந்து பிழையான பக்கத்தால் முந்தும்போது எனது காரின் சைட் கண்ணாடியை உடைத்து பாலன்ஸ் தவறி வேலிக்குள் விழுந்து அவரது மொபைலட்டின் முன் பாகம் முழுதும் நொறுங்கி போட்டுது. எனது காருக்கு கண்ணாடி மட்டும்தான் சேதம்.மற்றும்படி ஒரு கீறலும் விழவில்லை. நான் ஓடிப்போய் அவரையும் சைக்கிளையும் தூக்கி விட்டன்.பலமுறை மன்னிப்பு சொன்னான். அவன் அழுவாரைப்போல் நின்றான். பார்க்க பாவமாய் இருந்தது.  நான் கேட்டன்  இப்ப என்ன செய்யலாம் என்று.அவன் சொன்னான் தன்னில் பிழை என்று எழுதித் தாறன் எண்டு. நான் அதற்குரிய படிவத்தை எடுத்து படமெல்லாம் கீறி நிரப்பி கையெழுத்து வாங்கி  விட்டு சொன்னன் உனக்கு விருப்பமெண்டால் சொல்லு நான் இதை இன்சூரன்சுக்கு கொடுக்கவில்லை. எனது காரை நான் திருத்தி கொள்ளுறன், நீ உனது வண்டியை திருத்தி கொள்  என்று. அவன் சொன்னான் தன்னுடையது புது வண்டி. முன்னுக்கு முழுதும் சேதமாய் போட்டுது. ஆனால் தன்னுடையது" தூ ரிஸ்க் இன்சூரன்ஸ்" full insurance  (அதாவது அவரின் வண்டிக்கு அவரோ அன்றி மற்றவர்களோ அடித்தாலும் இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது இன்சூரன்ஸ் எப்பொழுதும் மினிமம்தான். நான் யாரையாவது அடித்தால் அவர்களது வாகனத்தை இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது வாகனத்தை நான்தான் திருத்த வேண்டும். வேறு யாரும் எனது வாகனத்தை இடித்தால் இன்சூரன்ஸ் எனது வாகனத்தை திருத்தித் தரும்.) அதனால் நீங்கள் படிவத்தை உங்களது இன்சூரன்ஸில் குடுங்கோ என்கிறார். நானும் சரி என்டு போட்டு அவரையும் சைக்கிளையும் ஏற்றிக்கொண்டு போய் அவரிடத்தில் விட்டு விட்டு எனது இன்சூரன்ஸில் விடயத்தை சொல்லி படிவத்தை குடுத்து விட்டு வந்தேன். 

சில நாளில் எனக்கு கடிதம் வருகுது. பிழை 50/50 என்றும் எனக்கு போனஸ் கூடும் என்றும் வருது. நான் நேரில் போய் கேட்டன்  எண்ணில் ஒரு பிழையும் இல்லை எப்படி 50/50 வரும் என்று. அது தாங்கள் அவர்களின் இன்சூரன்சுடன் கதைத்தது என்று சொன்னார்.நான் சொன்னன் நான் போய் என்ர லோயருடன் வாறன், பிறகு நீ என்னுடைய கார்கள் (மகன், மகளுடையது ) எல்லா இன்சூரன்சும் இங்குதான் இருக்கு நான் எல்லாத்தையும் நிப்பாட்ட போறன் என்று வெளிக்கிட அவர் என்னை இருக்க சொல்லிவிட்டு  மற்றும் கூட வேலை செய்யும்  இருவருடன் கதைத்து விட்டு போனில் மேலிடத்துடன் கதைச்சினம். பிறகு வந்து சொன்னார் நாங்கள் எல்லாம் கதைசிட்டம் உன்னில் பிழை இல்லை என்று. நான் விடேல்ல என்ர  சைட் மிரர் உடைந்திட்டுது என்ன செய்யிறது என்று கேட்க , அவர் ஒரு கராஜ் விலாசம் தந்தார் அங்கு கொண்டுபோய் காட்ட  சொல்லி கடிதமும் தந்தார். நானும் அதை வாங்கி கொண்டுபோய் அந்த கராஜில் குடுத்து சில நாளில் புதிதாக போட்டு தந்தார்கள். போனஸும் ஏறவில்லை......!  

எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄

நான் கோட்டுக்குப் போய்த்தன்னும் அவளுக்கு    நிரூபிக்காமல் விடுறேல்லை.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:
51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கோட்டுக்குப் போய்த்தன்னும் அவளுக்கு    நிரூபிக்காமல் விடுறேல்லை.😄

எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄

உதில முக்கியமான விஷயம் ஒண்டு இருக்குது.

அதுதான் இன்சூரன்ஸ் கொம்பனியலின்ட தொழில் ரகசியம்.

பிழை அந்தப் பக்கம் இருந்தாலும், அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, உண்ட ஆள் தான் பிழை எண்டு கதையை முடிசிட்டு, நம்மளில பிழை எண்டு அவை சொல்லுகினமே எண்டு இங்க நூல் விடுவினம்.

நாம சொல்லுறதை எடுக்காத மாதிரி, கதையை விட்டு, ப்ரீமியத்தை ஏத்தப் பார்ப்பினம்.

இதென்ன கோதரியாகிடக்குதெண்டு கண பேர் ப்ரீமியத்தினை கூட கடடுவினம்.

மூன்று  வழி:

ஒன்று, கொஞ்சம் காசு கூடினாலும், நல்ல, மதிப்புள்ள, இன்சூரன்ஸ் கொம்பனியளோட சகவாசம் வைக்க வேண்டும். மலிவு எண்டு சில்லறை கம்பெனியளிடம் போனால், இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இணைய யுகம் வந்த பின்னர், இந்த சில்லறைக் கொம்பனிகள் அதிகம் வந்துள்ளன.

இரண்டாவது: தகவல் அறியும் சட்டத்தின் படி, மற்ற இன்சூரன்ஸ் கம்பெனி உடனான dealing முழு விபரத்தினை நான் கோர முடியுமா என்று ஒரு மறுத்தான் நூலை போட்டு பார்க்க வேண்டும்.

மூன்றாவது: நீ, சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. முறைப்பாடு செய்யும் வழிமுறை, விபரத்தினை தா என்று அடுத்த நூலை இறக்க வேண்டும்.

டபெக்கெண்டு எல்லா நூலையும் விடாமல், நிலைமையை புரிந்து விடுங்கோ.

இங்க பகிர்ந்தியல் எண்டால், பலர் ஆலோசனை தருவார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்த காப்புறுதி மெடிக்கல் அது இது அந்த நோவுக்கு 5000 ஆயிரம் குடும்பமே போய் செட்டப்  இடிபட்டு கிளைம் எடுக்கும் கள்ள முறையால் (தொடக்கம் கனடா ) இப்ப சின்ன விடயத்துக்கும் அதிகமாய் பிரீமியத்தை கூட்டுகிறார்கள் இந்த இன்சூரன்ஸ் கொம்பனிகாறர் முன்பெல்லாம் நோ கிளைம் போனஸ் புரட்டக்சன் என்ற ஒன்று இருந்தது இப்ப அது பேருக்குத்தான் இருக்குது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.