Jump to content

வாற கோவத்துக்கு இவளை ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

64514568_10212209248059986_4013799018608

 

காலையில் வேலை ஆரம்பிப்பது எட்டு மணிக்கு.7.30 க்கு சரியா வீட்டை விட்டு இறங்குவது. சாதாரணமாக பத்து நிமிடம் போதும் போக. ஆனால் கார் பாக் கிடைப்பது கடினம் என்பதால் வெள்ளணவே போய் பாக் செய்துபோட்டு  பத்து நிமிடம் காருக்குள்ளே இருந்துவிட்டு இறங்கிப் போய் போஸ்ட் ஒபிஸ் திறப்பது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் போய்க்கொண்டிருந்தபோது வீதியில் ஐந்தில் தான் போகமுடிந்தது. அத்தனை வாகனங்கள். திடீரென என் காரில் எதுவோ இடிக்க கால் தானாகவே பிரேக்கை அழுத்த நல்ல காலம் எனக்கு முன்னே நின்ற காருக்கு நான் இடிக்காமல் தப்பித்துக்கொண்டேன். உடனே காரை நிறுத்தி விட்டு இறங்க மற்றக் கார் காரர் கோண் அடிக்கிறாங்கள்  காரைத் தள்ளி போய் ஓரமா நிப்பாட்டுங்கோ என்று. சரி என்று ஒரு பத்து மீற்றர் தள்ளி இடமிருக்க நிப்பாட்டிப் போட்டு இறங்கிப் போய் பார்த்தால் பின்பக்க பம்பரில் ஒரு ஓட்டை.

அதன் பின்தான் யார் என்று பார்த்தால் எங்கள் இனப் பெண். மூன்று பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் யூனிபோமுடன் காருக்குள் இருக்க " என்ன தங்கச்சி வேகமாகப் போனாலும் பரவாயில்லை. இப்பிடிச் சிலோவாப் போக வந்து இடிக்கிறியள்" என்று சொல்லிவிட்டு பார்க்க பதட்டமாய் கார்க் கதவைத் திறந்து இறங்குகிறாள் அவள். என்ன பெயர் என்று நான் கேட்க கீதா என்கிறாள். கணவனின் பெயரையும் தொலை பேசி எண்ணையும் வாங்கி எழுதிவிட்டு எந்த இன்சூரன்ஸ் என்கிறேன். பெயரைச் சொல்லிவிட்டு அக்கா தயவுசெய்து இன்சூரன்சுக்குப்போகவேண்டாம். எனக்கு இன்சூரன்ச் கூடிவிடும். நீங்கள் திருத்துற காசை நான் கையில தாறன் என்கிறாள். சரி பாவம் எங்கடை ஆட்கள் தானே. சரி தங்கச்சி நான் நான் வேலைக்குப் போக வேணும். அங்கே போய்நின்று உங்களோட கதைக்கிறேன் என்று கூறியபடி அவரையும் காரையும் சேர்த்துப் படம் எடுத்து என் காரையும் படமெடுத்துவிட்டு வந்து கடையைத் திறந்துவிட்டு அதன் பின் கணவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, சரி அந்தப் பெட்டையோட கதையன் என்றுவிட்டு மனிசன் வச்சிட்டுது.

ஒரு அரை  மணிநேரம் போகத்தான் எனக்கு நேரம் கிடைக்க அவளுக்குப் போன் செய்து என் கராச் காரரின் பெயரைச் சொல்லி இவரைத் தெரியுமா என்று கேட்கிறேன். ஓம் அக்கா எனக்கும் தெரியும் நீங்கள் அங்க கொண்டுபோய் விடுங்கோ நாங்கள் காசு குடுக்கிறம் என்கிறாள். நான்கு மணிக்கு வேலை முடிய நேரே காரச்சுக்குக் காரைக் கொண்டுபோய்க் காட்ட பின்பக்க பம்பரில் ஓட்டை விழுந்திருக்கு அக்கா. அதை முழுவதும் மாற்ற வேண்டும் என்கிறார் அவர். நான் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவருடன் கதைக்கும்படி கேட்க, அவர் அந்தக் கீதாவுக்கு 370 பவுன்ஸ் முடியும் என்று சொல்ல ஓகே என்றுவிட்டு அவள் போனை வைக்கிறாள். எனக்கு அடுத்த இரண்டு நாட்கள் வேலை. அதனால் வியாழன் காரைக் கொண்டுவந்து விடுகிறேன் என்றுவிட்டு நான் வந்துவிட்டேன்.

அடுத்தநாள் அந்தக் கராச் காரர் எனக்கு போன் செய்கிறார். அக்கா அந்தப் பெண்ணின் அண்ணா என்னிடம் வந்தவர்.  காசைக் குறைக்கும்படி கேட்டவர். நான் மறுத்துவிட்டேன் என்கிறார். நான் காரைக் கொண்டுவந்து விட இன்னும் இரண்டு நாட்கள் இருக்கே பார்ப்போம் என்றுவிட்டு நான் போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் மாலை அந்தக் கீதா எனக்குப் போன் செய்கிறாள். நீங்கள் சொன்ன இடத்தில காசு கூடவாக் கிடக்கு. நான் ஒரு கராச் சொல்லுறன் கொண்டுபோய் அங்கே திருத்துறியளோ என்கிறாள்.

தங்கச்சி நான் அவரிடம் தான் என்ன பிழை என்றாலும் திருத்துவது. நீங்கள் சொல்லுபவரிடம் கொண்டு போக முடியாது என்கிறேன். அப்ப நீங்கள் இரண்டுபேரும் கதைச்சுப் பேசித்தான் அவ்வளவு காசு கேட்கிறியளோ என்கிறாள்.
எனக்கு வந்த கோபத்தை அடக்கியபடி நீங்கள் தமிழர் எண்டதால தான் நான் உங்களுக்குத் பாவம் பார்த்தனான். இனிப் பார்க்கேலாது நன்றி வணக்கம் என்றுவிட்டு போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் எனது இன்சூரன்சுக்கு அடித்து விடயத்தைக் கூறிவிட்டு இருந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து ஒரு மரக்கறிக் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தபோது உள்ளே வந்த பெண் என்னைக் கண்டவள் உடனேயே வெளியே போய்விட்டாள். எங்கேயோ கண்ட முகமாக இருக்கே என்று யோசிக்க அதன் பின் தான் நினைவு வந்தது.  என் இன்சூரன்ஸில் இருந்து £1450 எனக்குத் திருத்த வேலைகளுக்காகச் செலுத்தும்படி கேட்டுள்ளதாக கடிதம் வந்திருந்தது. கையெழுத்திட்டு இரு வாரங்கள் ஆனபின் என் இன்சூரன்ஸில் இருந்து இன்னொரு கடிதம் வந்திருந்தது. அவள் தன் தவறை ஒத்துக்கொள்ளாமல் என் கார் தான் பின்னால் உருண்டு வந்து தனக்கு இடித்தது என்று கூறிய கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தனர்.

இவளை சும்மா விடலாமா சொல்லுங்கோ ?????

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

64514568_10212209248059986_4013799018608

 

காலையில் வேலை ஆரம்பிப்பது எட்டு மணிக்கு.7.30 க்கு சரியா வீட்டை விட்டு இறங்குவது. சாதாரணமாக பத்து நிமிடம் போதும் போக. ஆனால் கார் பாக் கிடைப்பது கடினம் என்பதால் வெள்ளணவே போய் பாக் செய்துபோட்டு  பத்து நிமிடம் காருக்குள்ளே இருந்துவிட்டு இறங்கிப் போய் போஸ்ட் ஒபிஸ் திறப்பது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் போய்க்கொண்டிருந்தபோது வீதியில் ஐந்தில் தான் போகமுடிந்தது. அத்தனை வாகனங்கள். திடீரென என் காரில் எதுவோ இடிக்க கால் தானாகவே பிரேக்கை அழுத்த நல்ல காலம் எனக்கு முன்னே நின்ற காருக்கு நான் இடிக்காமல் தப்பித்துக்கொண்டேன். உடனே காரை நிறுத்தி விட்டு இறங்க மற்றக் கார் காரர் கோண் அடிக்கிறாங்கள்  காரைத் தள்ளி போய் ஓரமா நிப்பாட்டுங்கோ என்று. சரி என்று ஒரு பத்து மீற்றர் தள்ளி இடமிருக்க நிப்பாட்டிப் போட்டு இறங்கிப் போய் பார்த்தால் பின்பக்க பம்பரில் ஒரு ஓட்டை.

அதன் பின்தான் யார் என்று பார்த்தால் எங்கள் இனப் பெண். மூன்று பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் யூனிபோமுடன் காருக்குள் இருக்க " என்ன தங்கச்சி வேகமாகப் போனாலும் பரவாயில்லை. இப்பிடிச் சிலோவாப் போக வந்து இடிக்கிறியள்" என்று சொல்லிவிட்டு பார்க்க பதட்டமாய் கார்க் கதவைத் திறந்து இறங்குகிறாள் அவள். என்ன பெயர் என்று நான் கேட்க கீதா என்கிறாள். கணவனின் பெயரையும் தொலை பேசி எண்ணையும் வாங்கி எழுதிவிட்டு எந்த இன்சூரன்ஸ் என்கிறேன். பெயரைச் சொல்லிவிட்டு அக்கா தயவுசெய்து இன்சூரன்சுக்குப்போகவேண்டாம். எனக்கு இன்சூரன்ச் கூடிவிடும். நீங்கள் திருத்துற காசை நான் கையில தாறன் என்கிறாள். சரி பாவம் எங்கடை ஆட்கள் தானே. சரி தங்கச்சி நான் நான் வேலைக்குப் போக வேணும். அங்கே போய்நின்று உங்களோட கதைக்கிறேன் என்று கூறியபடி அவரையும் காரையும் சேர்த்துப் படம் எடுத்து என் காரையும் படமெடுத்துவிட்டு வந்து கடையைத் திறந்துவிட்டு அதன் பின் கணவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, சரி அந்தப் பெட்டையோட கதையன் என்றுவிட்டு மனிசன் வச்சிட்டுது.

ஒரு அரை  மணிநேரம் போகத்தான் எனக்கு நேரம் கிடைக்க அவளுக்குப் போன் செய்து என் கராச் காரரின் பெயரைச் சொல்லி இவரைத் தெரியுமா என்று கேட்கிறேன். ஓம் அக்கா எனக்கும் தெரியும் நீங்கள் அங்க கொண்டுபோய் விடுங்கோ நாங்கள் காசு குடுக்கிறம் என்கிறாள். நான்கு மணிக்கு வேலை முடிய நேரே காரச்சுக்குக் காரைக் கொண்டுபோய்க் காட்ட பின்பக்க பம்பரில் ஓட்டை விழுந்திருக்கு அக்கா. அதை முழுவதும் மாற்ற வேண்டும் என்கிறார் அவர். நான் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவருடன் கதைக்கும்படி கேட்க, அவர் அந்தக் கீதாவுக்கு 370 பவுன்ஸ் முடியும் என்று சொல்ல ஓகே என்றுவிட்டு அவள் போனை வைக்கிறாள். எனக்கு அடுத்த இரண்டு நாட்கள் வேலை. அதனால் வியாழன் காரைக் கொண்டுவந்து விடுகிறேன் என்றுவிட்டு நான் வந்துவிட்டேன்.

அடுத்தநாள் அந்தக் கராச் காரர் எனக்கு போன் செய்கிறார். அக்கா அந்தப் பெண்ணின் அண்ணா என்னிடம் வந்தவர்.  காசைக் குறைக்கும்படி கேட்டவர். நான் மறுத்துவிட்டேன் என்கிறார். நான் காரைக் கொண்டுவந்து விட இன்னும் இரண்டு நாட்கள் இருக்கே பார்ப்போம் என்றுவிட்டு நான் போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் மாலை அந்தக் கீதா எனக்குப் போன் செய்கிறாள். நீங்கள் சொன்ன இடத்தில காசு கூடவாக் கிடக்கு. நான் ஒரு கராச் சொல்லுறன் கொண்டுபோய் அங்கே திருத்துறியளோ என்கிறாள்.

தங்கச்சி நான் அவரிடம் தான் என்ன பிழை என்றாலும் திருத்துவது. நீங்கள் சொல்லுபவரிடம் கொண்டு போக முடியாது என்கிறேன். அப்ப நீங்கள் இரண்டுபேரும் கதைச்சுப் பேசித்தான் அவ்வளவு காசு கேட்கிறியளோ என்கிறாள்.
எனக்கு வந்த கோபத்தை அடக்கியபடி நீங்கள் தமிழர் எண்டதால தான் நான் உங்களுக்குத் பாவம் பார்த்தனான். இனிப் பார்க்கேலாது நன்றி வணக்கம் என்றுவிட்டு போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் எனது இன்சூரன்சுக்கு அடித்து விடயத்தைக் கூறிவிட்டு இருந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து ஒரு மரக்கறிக் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தபோது உள்ளே வந்த பெண் என்னைக் கண்டவள் உடனேயே வெளியே போய்விட்டாள். எங்கேயோ கண்ட முகமாக இருக்கே என்று யோசிக்க அதன் பின் தான் நினைவு வந்தது.  என் இன்சூரன்ஸில் இருந்து £1450 எனக்குத் திருத்த வேலைகளுக்காகச் செலுத்தும்படி கேட்டுள்ளதாக கடிதம் வந்திருந்தது. கையெழுத்திட்டு இரு வாரங்கள் ஆனபின் என் இன்சூரன்ஸில் இருந்து இன்னொரு கடிதம் வந்திருந்தது. அவள் தன் தவறை ஒத்துக்கொள்ளாமல் என் கார் தான் பின்னால் உருண்டு வந்து தனக்கு இடித்தது என்று கூறிய கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தனர்.

இவளை சும்மா விடலாமா சொல்லுங்கோ ?????

அவோவுக்கு, வீட்டுக்கு வந்து வடையை திண்டு, டீயை வாங்கி குடிச்சுப் போட்டு, யாரோ ஐடியா கொடுத்திருக்கினம் போல கிடக்குது.

நடந்த சம்பவங்களை எல்லாம், நீங்கள், கராஜ் காரரிடம் போன விடயம், சொன்ன quotation எல்லாம் கோர்வையாக சொல்லுங்கள்.

இன்சூரன்ஸ் மோசடி என்று அவர்கள் விசாரித்து பிடித்தால், இனி இன்சூரன்ஸ் அவோவுக்கு கிடைக்காது, கிடைத்தாலும் மலிவா இருக்காது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அவோவுக்கு, வீட்டுக்கு வந்து வடையை திண்டு, டீயை வாங்கி குடிச்சுப் போட்டு, யாரோ ஐடியா கொடுத்திருக்கினம் போல கிடக்குது.

நடந்த சம்பவங்களை எல்லாம், நீங்கள், கராஜ் காரரிடம் போன விடயம், சொன்ன quotation எல்லாம் கோர்வையாக சொல்லுங்கள்.

இன்சூரன்ஸ் மோசடி என்று அவர்கள் விசாரித்து பிடித்தால், இனி இன்சூரன்ஸ் அவோவுக்கு கிடைக்காது, கிடைத்தாலும் மலிவா இருக்காது.
 

அவ எனக்கு தன்னை அறியாமலே சில சாட்சிகளை விட்டிட்டா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கார் ஓட்டோமற்றிக் காராக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அவ்வாறெனில்....அது பின்னால் உருளும் சாத்தியம் இல்லையே ! அத்துடன் விபத்து நடந்த இடம் சமதளமாக இருக்குமெனநீங்கள்  புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தலாமே...!

மேலே நாதம் கூறியது போல....கராஜ் காரரிடம்....அங்கு நடந்த சம்பவங்களை விபரித்து ஒரு துண்டு வாங்குங்கள்! 

இறுதி வெற்றி.....உங்களுக்குத் தான்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவ எனக்கு தன்னை அறியாமலே சில சாட்சிகளை விட்டிட்டா 

இன்சூரன்ஸ் கம்பெனிகள், கண்ணுக்குள் எண்ணையை ஊத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த பெண் தான் ஒருவர் தான் அவ்வாறு சொல்வதாக நினைத்துக் கொண்டிருப்பார். 

ஆனால், இன்சூரன்ஸ் கொம்பனிக்கு, பல மில்லியன் பேர்களின் அனுபவம் உண்டு என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புங்கையூரன் said:

உங்கட கார் ஓட்டோமற்றிக் காராக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அவ்வாறெனில்....அது பின்னால் உருளும் சாத்தியம் இல்லையே ! அத்துடன் விபத்து நடந்த இடம் சமதளமாக இருக்குமெனநீங்கள்  புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தலாமே...!

மேலே நாதம் கூறியது போல....கராஜ் காரரிடம்....அங்கு நடந்த சம்பவங்களை விபரித்து ஒரு துண்டு வாங்குங்கள்! 

இறுதி வெற்றி.....உங்களுக்குத் தான்...!

எனது கார் கியர் தான். கராச் காரரின் கடிதம் அனுப்பியிருக்கு.

2 minutes ago, Nathamuni said:

இன்சூரன்ஸ் கம்பெனிகள், கண்ணுக்குள் எண்ணையை ஊத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த பெண் தான் ஒருவர் தான் அவ்வாறு சொல்வதாக நினைத்துக் கொண்டிருப்பார். 

ஆனால், இன்சூரன்ஸ் கொம்பனிக்கு, பல மில்லியன் பேர்களின் அனுபவம் உண்டு என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

என்றாலும் இத்தனை துணிவாக எப்படிப் பொய் சொல்கின்றனர் என்றுதான் எனக்குப் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

அவ்வாறெனில்....அது பின்னால் உருளும் சாத்தியம் இல்லையே ! அத்துடன் விபத்து நடந்த இடம் சமதளமாக இருக்குமெனநீங்கள்  புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தலாமே...!

உருளுதோ, இல்லையோ, பின்னால இடித்தால், பின்னால வந்த காரில் தான் பிழை எண்டது எப்பவோ முடிவான விசயம். Safety Gab விடவேண்டும் எண்டு சட்டம் சொல்லுது. தமிழில சொல்லுறது எண்டா, முன்னால போன காரின், குண்**** கில பின்னால வாற கார் போக கூடாது.

இப்பவெல்லாம், dashboard, rearview காமெராக்களோட சனம் திரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

உருளுதோ, இல்லையோ, பின்னால இடித்தால், பின்னால வந்த காரில் தான் பிழை எண்டது எப்பவோ முடிவான விசயம்.

இப்பவெல்லாம், dashboard, rearview காமெராக்களோட சனம் திரியுது.

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

நீங்கள் accept பண்ணினால்... அவவுக்கு செலவு இல்லை தானே. உங்கட இன்சூரன்ஸ் கொம்பனி தானே கட்டும். உங்கட பிரீமியம் கூடும்.

உங்கட கராஜ் காரர், அவர்கள் தொடர்பு கொண்டதையும், காசு விடயமாக பேரம் பேசியதையும், தமது கராஜுக்கு போக சொன்னதையும் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நீங்கள் accept பண்ணினால்... அவவுக்கு செலவு இல்லை தானே. உங்கட இன்சூரன்ஸ் கொம்பனி தானே கட்டும். உங்கட பிரீமியம் கூடும்.

அட நாசமாய் போக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

ஒரு விபத்து நடந்து 24 மணி நேரத்துக்குள் உங்கள் காப்புறுதி நிறுவனத்துக்கு உங்களில் பிழை இல்லை என்றாலும் அறிவிக்கனும் என்பதை அநேக காப்புறுதி நிருவனம்கள் வலியுறுத்து கின்றனர் அதனால் உங்கள் பிரிமியம் கூடபோவதில்லை மேல் சொன்னவாறு தவறான கிளைம்களை தடுக்கவே அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் நிறைய ஆதரம்களை தேட வேண்டி இருக்கும் .(இண்டைக்கு நித்திரை துலன்சுது இவேக்கு )😀😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

ஒரு விபத்து நடந்து 24 மணி நேரத்துக்குள் உங்கள் காப்புறுதி நிறுவனத்துக்கு உங்களில் பிழை இல்லை என்றாலும் அறிவிக்கனும் என்பதை அநேக காப்புறுதி நிருவனம்கள் வலியுறுத்து கின்றனர் அதனால் உங்கள் பிரிமியம் கூடபோவதில்லை மேல் சொன்னவாறு தவறான கிளைம்களை தடுக்கவே அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் நிறைய ஆதரம்களை தேட வேண்டி இருக்கும் .(இண்டைக்கு நித்திரை துலன்சுது இவேக்கு )

இவ உங்களுக்குத் தெரிஞ்ச ஆளாகவும் இருப்பா. இவற்ற  நித்திரையும் துலைஞ்சுது  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவ உங்களுக்குத் தெரிஞ்ச ஆளாகவும் இருப்பா. இவற்ற  நித்திரையும் துலைஞ்சுது  😀

எனக்கு தெரிந்ச ஆட்கள் லண்டனில் கூட உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் பிழை செய்தால் பேசாமல் இருப்பது உங்கள் இயல்பாக்கும்  நம்மை பொறுத்தவரை பிழை யார் விட்டாலும் அதிலும் இப்படியனதுகளை சும்மா விட்டால் நாளைக்கு அதுகளின்ரை சொறி குணத்தை எல்லாரிடமும் காட்ட வெளிக்கிடுங்கள் அப்படி குற்றம் அவர்கள் செய்வதுக்கு நாங்களும் ஒரு காரணமாய் இருக்கக்கூடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

அவர்களுக்கு உழைப்புத்தானே அவன்ரை பக்கமும் 7.5 சனி இனி வரும் ஐந்து வருடத்துக்கு சிப்பிலி ஆட்டும் இந்த கேசில் அவ  வெல்ல போவதில்லை வெண்டாலும் ஏலரைதான் அவவுக்கு ஒவ்வொரு வருடமும் காப்புறுதி புதுபிக்க போகையில் அழகாய் கேட்ப்பார்கள் "Have You Had An Accident In Last 5 Years? "? ஓம் உங்களில் பிழை இல்லை என்றாலும்  நடந்தால் yes தான் சொல்லணும் .அதன் பின் தொடங்கும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

எனக்கு தெரிந்ச ஆட்கள் லண்டனில் கூட உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் பிழை செய்தால் பேசாமல் இருப்பது உங்கள் இயல்பாக்கும்  நம்மை பொறுத்தவரை பிழை யார் விட்டாலும் அதிலும் இப்படியனதுகளை சும்மா விட்டால் நாளைக்கு அதுகளின்ரை சொறி குணத்தை எல்லாரிடமும் காட்ட வெளிக்கிடுங்கள் அப்படி குற்றம் அவர்கள் செய்வதுக்கு நாங்களும் ஒரு காரணமாய் இருக்கக்கூடாது .

உவையள், உந்த ரேடியோ விளம்பரத்தை கேட்டு, சன்னதம் கொண்டாடுற ஆக்கள், கண்டியளோ.

முந்தி காருக்குள ஏறின, ibc, ஆதவன் தான். இப்ப அந்த பக்கமே போறதில்லை.

இன்னமும், இலங்கைக்கிலேயே வைத்திருக்கினம் எண்ட மாதிரி தான் நிகழ்வுகள். ஒரு செய்தியாவது வாழும், புலம் பத்தினது எண்டால் இல்லை.

இதில வாற விளம்பரம் தான், 'வாகன விபத்தா'... வாகனங்களை அப்புறப்படுத்துவது மட்டுமல்ல.... 'காப்புறுதி நிறுவனத்துக்கு எப்படி சொல்வது என்றும் சொல்லி தருவோமாம்'.

இவர்கள் தான் அந்த, வடை, தேத்தண்ணி ஆலோசகர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

எனக்கு தெரிந்ச ஆட்கள் லண்டனில் கூட உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் பிழை செய்தால் பேசாமல் இருப்பது உங்கள் இயல்பாக்கும்  நம்மை பொறுத்தவரை பிழை யார் விட்டாலும் அதிலும் இப்படியனதுகளை சும்மா விட்டால் நாளைக்கு அதுகளின்ரை சொறி குணத்தை எல்லாரிடமும் காட்ட வெளிக்கிடுங்கள் அப்படி குற்றம் அவர்கள் செய்வதுக்கு நாங்களும் ஒரு காரணமாய் இருக்கக்கூடாது .

நன்றி பெருமாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

அதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாடா மேடத்தை அஞ்சாறு நாளாய் காணேல்லையே எண்டு பாத்தன்? இதே பிரச்சனை? ஆக்களுக்கு சேதம் இல்லாதவரைக்கும் சந்தோசம்.
வந்து வாய்க்கிறதெல்லாம் தலையிலை சம்பல் அரைக்கிற கும்பலாய் எல்லே கிடக்கு...🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

 

2 hours ago, MEERA said:

அதே!

குழப்பாதீங்கோ, பாவம், இரா முழுக்க, அக்காவும், அத்தாரும் நித்திரை இல்லாமல் அல்லாடி போட்டினம். 

டிராபிக் இருக்கிற ரோட்டில, பின்னால் உருண்டாலும், 'உம்மா' தான் கொடுக்கும் வேகம் இருக்குமே தவிர, உதை கொடுத்து, £350 க்கு வேலை செய்ய வேண்டின காயம் வராது எண்டு, படத்தை பார்த்து சொல்ல, இன்சூரன்ஸ் கொம்பனி வித்துவான்கள் இருக்கினம் கண்டியளே. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்ஸ்சூரன்சுக்குள் போனால் இரண்டு வாகனமும் ஒரே இன்சூரன்ஸ் என்றால் அதிகம் பிரச்சினை இல்லை.வெவ்வேறு இன்சூரன்ஸ் என்றால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் கதைத்துத்தான் முடிவெடுப்பினம்.....!

ஒருமுறை ஒரு பொடியன் ஒரு மொபைலட்டில் (அது ஓட லைசென்ஸ் தேவையில்லை) எனது காருக்கு பின்னால் வேகமாய் வந்து பிழையான பக்கத்தால் முந்தும்போது எனது காரின் சைட் கண்ணாடியை உடைத்து பாலன்ஸ் தவறி வேலிக்குள் விழுந்து அவரது மொபைலட்டின் முன் பாகம் முழுதும் நொறுங்கி போட்டுது. எனது காருக்கு கண்ணாடி மட்டும்தான் சேதம்.மற்றும்படி ஒரு கீறலும் விழவில்லை. நான் ஓடிப்போய் அவரையும் சைக்கிளையும் தூக்கி விட்டன்.பலமுறை மன்னிப்பு சொன்னான். அவன் அழுவாரைப்போல் நின்றான். பார்க்க பாவமாய் இருந்தது.  நான் கேட்டன்  இப்ப என்ன செய்யலாம் என்று.அவன் சொன்னான் தன்னில் பிழை என்று எழுதித் தாறன் எண்டு. நான் அதற்குரிய படிவத்தை எடுத்து படமெல்லாம் கீறி நிரப்பி கையெழுத்து வாங்கி  விட்டு சொன்னன் உனக்கு விருப்பமெண்டால் சொல்லு நான் இதை இன்சூரன்சுக்கு கொடுக்கவில்லை. எனது காரை நான் திருத்தி கொள்ளுறன், நீ உனது வண்டியை திருத்தி கொள்  என்று. அவன் சொன்னான் தன்னுடையது புது வண்டி. முன்னுக்கு முழுதும் சேதமாய் போட்டுது. ஆனால் தன்னுடையது" தூ ரிஸ்க் இன்சூரன்ஸ்" full insurance  (அதாவது அவரின் வண்டிக்கு அவரோ அன்றி மற்றவர்களோ அடித்தாலும் இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது இன்சூரன்ஸ் எப்பொழுதும் மினிமம்தான். நான் யாரையாவது அடித்தால் அவர்களது வாகனத்தை இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது வாகனத்தை நான்தான் திருத்த வேண்டும். வேறு யாரும் எனது வாகனத்தை இடித்தால் இன்சூரன்ஸ் எனது வாகனத்தை திருத்தித் தரும்.) அதனால் நீங்கள் படிவத்தை உங்களது இன்சூரன்ஸில் குடுங்கோ என்கிறார். நானும் சரி என்டு போட்டு அவரையும் சைக்கிளையும் ஏற்றிக்கொண்டு போய் அவரிடத்தில் விட்டு விட்டு எனது இன்சூரன்ஸில் விடயத்தை சொல்லி படிவத்தை குடுத்து விட்டு வந்தேன். 

சில நாளில் எனக்கு கடிதம் வருகுது. பிழை 50/50 என்றும் எனக்கு போனஸ் கூடும் என்றும் வருது. நான் நேரில் போய் கேட்டன்  எண்ணில் ஒரு பிழையும் இல்லை எப்படி 50/50 வரும் என்று. அது தாங்கள் அவர்களின் இன்சூரன்சுடன் கதைத்தது என்று சொன்னார்.நான் சொன்னன் நான் போய் என்ர லோயருடன் வாறன், பிறகு நீ என்னுடைய கார்கள் (மகன், மகளுடையது ) எல்லா இன்சூரன்சும் இங்குதான் இருக்கு நான் எல்லாத்தையும் நிப்பாட்ட போறன் என்று வெளிக்கிட அவர் என்னை இருக்க சொல்லிவிட்டு  மற்றும் கூட வேலை செய்யும்  இருவருடன் கதைத்து விட்டு போனில் மேலிடத்துடன் கதைச்சினம். பிறகு வந்து சொன்னார் நாங்கள் எல்லாம் கதைசிட்டம் உன்னில் பிழை இல்லை என்று. நான் விடேல்ல என்ர  சைட் மிரர் உடைந்திட்டுது என்ன செய்யிறது என்று கேட்க , அவர் ஒரு கராஜ் விலாசம் தந்தார் அங்கு கொண்டுபோய் காட்ட  சொல்லி கடிதமும் தந்தார். நானும் அதை வாங்கி கொண்டுபோய் அந்த கராஜில் குடுத்து சில நாளில் புதிதாக போட்டு தந்தார்கள். போனஸும் ஏறவில்லை......!  

எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

மிச்சம் ஐங்சனில் இருந்து ஒரு ஐம்பது மீற்றரில வலது பக்கம் இரண்டு றோட்டுகள் திரும்புமல்லோ அதுக்குப் பக்கத்திலதான் நடந்தது. அதில் உருள ரு வாய்ப்பே இல்லை.

8 hours ago, குமாரசாமி said:

என்னாடா மேடத்தை அஞ்சாறு நாளாய் காணேல்லையே எண்டு பாத்தன்? இதே பிரச்சனை? ஆக்களுக்கு சேதம் இல்லாதவரைக்கும் சந்தோசம்.
வந்து வாய்க்கிறதெல்லாம் தலையிலை சம்பல் அரைக்கிற கும்பலாய் எல்லே கிடக்கு...🤠

இது நடந்து இரண்டு மாதங்களுக்குக்கிட்ட. போன கிழமைதான் அவள் பிரட்டின கடிதம் வந்தது. யேர்ம்ன் போல் இங்கு பொலிஸ் வந்து முடிவெடுப்பதில்லை. அதுதான் உதுகளுக்குத் துணிவு.

9 hours ago, MEERA said:

அதே!

😡😡

6 hours ago, Nathamuni said:

 

குழப்பாதீங்கோ, பாவம், இரா முழுக்க, அக்காவும், அத்தாரும் நித்திரை இல்லாமல் அல்லாடி போட்டினம். 

டிராபிக் இருக்கிற ரோட்டில, பின்னால் உருண்டாலும், 'உம்மா' தான் கொடுக்கும் வேகம் இருக்குமே தவிர, உதை கொடுத்து, £350 க்கு வேலை செய்ய வேண்டின காயம் வராது எண்டு, படத்தை பார்த்து சொல்ல, இன்சூரன்ஸ் கொம்பனி வித்துவான்கள் இருக்கினம் கண்டியளே. :grin:

நல்லாச் சொல்லுங்கோ உவர் மீராவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இன்ஸ்சூரன்சுக்குள் போனால் இரண்டு வாகனமும் ஒரே இன்சூரன்ஸ் என்றால் அதிகம் பிரச்சினை இல்லை.வெவ்வேறு இன்சூரன்ஸ் என்றால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் கதைத்துத்தான் முடிவெடுப்பினம்.....!

ஒருமுறை ஒரு பொடியன் ஒரு மொபைலட்டில் (அது ஓட லைசென்ஸ் தேவையில்லை) எனது காருக்கு பின்னால் வேகமாய் வந்து பிழையான பக்கத்தால் முந்தும்போது எனது காரின் சைட் கண்ணாடியை உடைத்து பாலன்ஸ் தவறி வேலிக்குள் விழுந்து அவரது மொபைலட்டின் முன் பாகம் முழுதும் நொறுங்கி போட்டுது. எனது காருக்கு கண்ணாடி மட்டும்தான் சேதம்.மற்றும்படி ஒரு கீறலும் விழவில்லை. நான் ஓடிப்போய் அவரையும் சைக்கிளையும் தூக்கி விட்டன்.பலமுறை மன்னிப்பு சொன்னான். அவன் அழுவாரைப்போல் நின்றான். பார்க்க பாவமாய் இருந்தது.  நான் கேட்டன்  இப்ப என்ன செய்யலாம் என்று.அவன் சொன்னான் தன்னில் பிழை என்று எழுதித் தாறன் எண்டு. நான் அதற்குரிய படிவத்தை எடுத்து படமெல்லாம் கீறி நிரப்பி கையெழுத்து வாங்கி  விட்டு சொன்னன் உனக்கு விருப்பமெண்டால் சொல்லு நான் இதை இன்சூரன்சுக்கு கொடுக்கவில்லை. எனது காரை நான் திருத்தி கொள்ளுறன், நீ உனது வண்டியை திருத்தி கொள்  என்று. அவன் சொன்னான் தன்னுடையது புது வண்டி. முன்னுக்கு முழுதும் சேதமாய் போட்டுது. ஆனால் தன்னுடையது" தூ ரிஸ்க் இன்சூரன்ஸ்" full insurance  (அதாவது அவரின் வண்டிக்கு அவரோ அன்றி மற்றவர்களோ அடித்தாலும் இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது இன்சூரன்ஸ் எப்பொழுதும் மினிமம்தான். நான் யாரையாவது அடித்தால் அவர்களது வாகனத்தை இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது வாகனத்தை நான்தான் திருத்த வேண்டும். வேறு யாரும் எனது வாகனத்தை இடித்தால் இன்சூரன்ஸ் எனது வாகனத்தை திருத்தித் தரும்.) அதனால் நீங்கள் படிவத்தை உங்களது இன்சூரன்ஸில் குடுங்கோ என்கிறார். நானும் சரி என்டு போட்டு அவரையும் சைக்கிளையும் ஏற்றிக்கொண்டு போய் அவரிடத்தில் விட்டு விட்டு எனது இன்சூரன்ஸில் விடயத்தை சொல்லி படிவத்தை குடுத்து விட்டு வந்தேன். 

சில நாளில் எனக்கு கடிதம் வருகுது. பிழை 50/50 என்றும் எனக்கு போனஸ் கூடும் என்றும் வருது. நான் நேரில் போய் கேட்டன்  எண்ணில் ஒரு பிழையும் இல்லை எப்படி 50/50 வரும் என்று. அது தாங்கள் அவர்களின் இன்சூரன்சுடன் கதைத்தது என்று சொன்னார்.நான் சொன்னன் நான் போய் என்ர லோயருடன் வாறன், பிறகு நீ என்னுடைய கார்கள் (மகன், மகளுடையது ) எல்லா இன்சூரன்சும் இங்குதான் இருக்கு நான் எல்லாத்தையும் நிப்பாட்ட போறன் என்று வெளிக்கிட அவர் என்னை இருக்க சொல்லிவிட்டு  மற்றும் கூட வேலை செய்யும்  இருவருடன் கதைத்து விட்டு போனில் மேலிடத்துடன் கதைச்சினம். பிறகு வந்து சொன்னார் நாங்கள் எல்லாம் கதைசிட்டம் உன்னில் பிழை இல்லை என்று. நான் விடேல்ல என்ர  சைட் மிரர் உடைந்திட்டுது என்ன செய்யிறது என்று கேட்க , அவர் ஒரு கராஜ் விலாசம் தந்தார் அங்கு கொண்டுபோய் காட்ட  சொல்லி கடிதமும் தந்தார். நானும் அதை வாங்கி கொண்டுபோய் அந்த கராஜில் குடுத்து சில நாளில் புதிதாக போட்டு தந்தார்கள். போனஸும் ஏறவில்லை......!  

எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄

நான் கோட்டுக்குப் போய்த்தன்னும் அவளுக்கு    நிரூபிக்காமல் விடுறேல்லை.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:
51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கோட்டுக்குப் போய்த்தன்னும் அவளுக்கு    நிரூபிக்காமல் விடுறேல்லை.😄

எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄

உதில முக்கியமான விஷயம் ஒண்டு இருக்குது.

அதுதான் இன்சூரன்ஸ் கொம்பனியலின்ட தொழில் ரகசியம்.

பிழை அந்தப் பக்கம் இருந்தாலும், அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, உண்ட ஆள் தான் பிழை எண்டு கதையை முடிசிட்டு, நம்மளில பிழை எண்டு அவை சொல்லுகினமே எண்டு இங்க நூல் விடுவினம்.

நாம சொல்லுறதை எடுக்காத மாதிரி, கதையை விட்டு, ப்ரீமியத்தை ஏத்தப் பார்ப்பினம்.

இதென்ன கோதரியாகிடக்குதெண்டு கண பேர் ப்ரீமியத்தினை கூட கடடுவினம்.

மூன்று  வழி:

ஒன்று, கொஞ்சம் காசு கூடினாலும், நல்ல, மதிப்புள்ள, இன்சூரன்ஸ் கொம்பனியளோட சகவாசம் வைக்க வேண்டும். மலிவு எண்டு சில்லறை கம்பெனியளிடம் போனால், இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இணைய யுகம் வந்த பின்னர், இந்த சில்லறைக் கொம்பனிகள் அதிகம் வந்துள்ளன.

இரண்டாவது: தகவல் அறியும் சட்டத்தின் படி, மற்ற இன்சூரன்ஸ் கம்பெனி உடனான dealing முழு விபரத்தினை நான் கோர முடியுமா என்று ஒரு மறுத்தான் நூலை போட்டு பார்க்க வேண்டும்.

மூன்றாவது: நீ, சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. முறைப்பாடு செய்யும் வழிமுறை, விபரத்தினை தா என்று அடுத்த நூலை இறக்க வேண்டும்.

டபெக்கெண்டு எல்லா நூலையும் விடாமல், நிலைமையை புரிந்து விடுங்கோ.

இங்க பகிர்ந்தியல் எண்டால், பலர் ஆலோசனை தருவார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்த காப்புறுதி மெடிக்கல் அது இது அந்த நோவுக்கு 5000 ஆயிரம் குடும்பமே போய் செட்டப்  இடிபட்டு கிளைம் எடுக்கும் கள்ள முறையால் (தொடக்கம் கனடா ) இப்ப சின்ன விடயத்துக்கும் அதிகமாய் பிரீமியத்தை கூட்டுகிறார்கள் இந்த இன்சூரன்ஸ் கொம்பனிகாறர் முன்பெல்லாம் நோ கிளைம் போனஸ் புரட்டக்சன் என்ற ஒன்று இருந்தது இப்ப அது பேருக்குத்தான் இருக்குது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.