Jump to content

வாற கோவத்துக்கு இவளை ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது நடந்து இரண்டு மாதங்களுக்குக்கிட்ட. போன கிழமைதான் அவள் பிரட்டின கடிதம் வந்தது. யேர்ம்ன் போல் இங்கு பொலிஸ் வந்து முடிவெடுப்பதில்லை. அதுதான் உதுகளுக்குத் துணிவு.

ஜேர்மனியிலை உந்த பிரட்டல் வேலையெல்லாம் சரிவராது  தெரியும் தானே......அது சரி காரை ஏன் பின்னுக்கு உருள விட்டனீங்கள்? 
இல்லாட்டி றிவேஸ் கியரை மாத்தி போட்டுட்டியளோ??

 

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

உதில முக்கியமான விஷயம் ஒண்டு இருக்குது.

அதுதான் இன்சூரன்ஸ் கொம்பனியலின்ட தொழில் ரகசியம்.

பிழை அந்தப் பக்கம் இருந்தாலும், அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, உண்ட ஆள் தான் பிழை எண்டு கதையை முடிசிட்டு, நம்மளில பிழை எண்டு அவை சொல்லுகினமே எண்டு இங்க நூல் விடுவினம்.

நாம சொல்லுறதை எடுக்காத மாதிரி, கதையை விட்டு, ப்ரீமியத்தை ஏத்தப் பார்ப்பினம்.

இதென்ன கோதரியாகிடக்குதெண்டு கண பேர் ப்ரீமியத்தினை கூட கடடுவினம்.

மூன்று  வழி:

ஒன்று, கொஞ்சம் காசு கூடினாலும், நல்ல, மதிப்புள்ள, இன்சூரன்ஸ் கொம்பனியளோட சகவாசம் வைக்க வேண்டும். மலிவு எண்டு சில்லறை கம்பெனியளிடம் போனால், இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இணைய யுகம் வந்த பின்னர், இந்த சில்லறைக் கொம்பனிகள் அதிகம் வந்துள்ளன.

இரண்டாவது: தகவல் அறியும் சட்டத்தின் படி, மற்ற இன்சூரன்ஸ் கம்பெனி உடனான dealing முழு விபரத்தினை நான் கோர முடியுமா என்று ஒரு மறுத்தான் நூலை போட்டு பார்க்க வேண்டும்.

மூன்றாவது: நீ, சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. முறைப்பாடு செய்யும் வழிமுறை, விபரத்தினை தா என்று அடுத்த நூலை இறக்க வேண்டும்.

டபெக்கெண்டு எல்லா நூலையும் விடாமல், நிலைமையை புரிந்து விடுங்கோ.

இங்க பகிர்ந்தியல் எண்டால், பலர் ஆலோசனை தருவார்கள்.
 

அவளது Texco.  நான் இடிக்கவும் இல்லை. கிளைம் பண்ணவும் போவதில்லை. அவர்களின் காரில் எந்தக் காயமும் இல்லை.

2 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை உந்த பிரட்டல் வேலையெல்லாம் சரிவராது  தெரியும் தானே......அது சரி காரை ஏன் பின்னுக்கு உருள விட்டனீங்கள்? 
இல்லாட்டி றிவேஸ் கியரை மாத்தி போட்டுட்டியளோ??

 

கிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள்  ஆக்க.😀 

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள்  ஆக்க.😀 

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

இருவரின் காரின் அடிவிழுந்த பகுதி போட்டோக்கால் உண்மையை சொல்லி விடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

இப்படியும் ஒரு பெருமை உலாவுதா நம்பவர்களிடம்.

ஆனால்.. எனி எல்லாக் கார்களுமே ஆட்மெட்டிக் தான். காரணம் எல்லாமே.. மின்சாரக் கார்களாகப் போகின்றன. ஆகவே இந்தப் பெருமையும் எனி எம்மவர்களிடம் இருந்து விடைபெற்றாகனும். 

ஏற்ற இறக்கங்களில்.. சரியாக கான்ட் பிரேக் போடாட்டி.. சரியான முறையில் பார்க் பண்ணாட்டி எந்தக் காரும்..தரித்து நிற்கும் எந்தக் காரும்..  முன்.. பின் என்று தளச் சரிவுக்கு ஏற்ப இயங்கும். 

ஆனால்.. லண்டன் தெருக்களில் ஆசிய ஆன்ரிகள் (தமிழ் ஆன்ரிகள் உட்பட) போக்குவரத்து நெரிசலில் முக்கிய பங்கெடுக்கிறார்கள் என்பதை இவர்கள் வதியும் பகுதிகளில்.. பாடசாலை தொடங்கும்... விடும் நேரங்களில் காரை செலுத்தினால் புரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

இருவரின் காரின் அடிவிழுந்த பகுதி போட்டோக்கால் உண்மையை சொல்லி விடும் .

அவளின் Texco இன்சூரன்ஸ் இல் இருந்து வந்து என் காரைப் பார்ப்பதற்குக் கேட்டுள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

இப்படியும் ஒரு பெருமை உலாவுதா நம்பவர்களிடம்.

ஆனால்.. எனி எல்லாக் கார்களுமே ஆட்மெட்டிக் தான். காரணம் எல்லாமே.. மின்சாரக் கார்களாகப் போகின்றன. ஆகவே இந்தப் பெருமையும் எனி எம்மவர்களிடம் இருந்து விடைபெற்றாகனும். 

ஏற்ற இறக்கங்களில்.. சரியாக கான்ட் பிரேக் போடாட்டி.. சரியான முறையில் பார்க் பண்ணாட்டி எந்தக் காரும்..தரித்து நிற்கும் எந்தக் காரும்..  முன்.. பின் என்று தளச் சரிவுக்கு ஏற்ப இயங்கும். 

ஆனால்.. லண்டன் தெருக்களில் ஆசிய ஆன்ரிகள் (தமிழ் ஆன்ரிகள் உட்பட) போக்குவரத்து நெரிசலில் முக்கிய பங்கெடுக்கிறார்கள் என்பதை இவர்கள் வதியும் பகுதிகளில்.. பாடசாலை தொடங்கும்... விடும் நேரங்களில் காரை செலுத்தினால் புரியும். 

யேர்மனியில் மூன்று தடவை தான் ஒருவர் லைசென்சுக்கு தேர்வுக்கு ஓடிக் காட்டலாம். அதன் பிறகு லைசென்ஸ் கொடுக்க மாட்டார்கள்  நாம் லைசென்ஸ் எடுத்த காலத்தில் அப்படித்தான் சட்டம். ஸ்பெஷல் நீட் தேவையுள்ளவர்கள் மட்டுமே ஓட்டமற்றிக் கார் ஓடுவது. மிக விலை உயர்ந்த கார்களுக்கு மட்டும் ஓட்டமற்றிக் இருக்கும். இப்ப எப்படியோ தெரியவில்லை. ஆனால் இங்கு லண்டனில் பத்துத் தரம் கூட எடுக்கலாம். அதிகமான பெண்கள் பயத்தில் ஒட்டமற்றிக் கார் ஓடுவது. எனக்கு அது பிடிப்பதே இல்லை.

தளச் சரிவுகள் இல்லாத சம தளத்தில் கியர் மொடல் கார் உருளாது. அத்துடன் நான் ஐந்தில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் உருளச் சந்தர்ப்பமேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவளின் Texco இன்சூரன்ஸ் இல் இருந்து வந்து என் காரைப் பார்ப்பதற்குக் கேட்டுள்ளனர். 

Tesco தொழில் மளிகை யாவாரம்.

இன்சூரன்ஸ், பாங்கிங் எல்லாம், கமிஷன் யாவாரம்.

நான் சொன்ன சில்லறைகளில், இது பெரிய சில்லறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவளது Texco.  நான் இடிக்கவும் இல்லை. கிளைம் பண்ணவும் போவதில்லை. அவர்களின் காரில் எந்தக் காயமும் இல்லை.

கிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள்  ஆக்க.😀 

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

நான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்....VW  பசாட்  எண்டு....!

லண்டனில    பேரை மாத்தி வைச்சிட்டாங்கள் போல கிடக்குது......!😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

பிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,

உதவித் தொகை - 50%

அங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%

படிப்பு - 25%

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

நான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்....VW  பசாட்  எண்டு....!

லண்டனில    பேரை மாத்தி வைச்சிட்டாங்கள் போல கிடக்குது......!😘

கைதடுமாறி ஒண்டைப் போட்டிடக்கூடாது இங்க. 24 மணித்தியாலத்துக்குள்ள எடிட் பண்ணலாம் என்று நிழலி சொன்ன ஞாபகம். ஆனால் 12 மணித்தியாலத்துக்குப் பிறது விடுக்குதில்லை.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

இதற்கான பதில் நான் தனித்திரி திறந்து கூறுகிறேன். ஏனெனில் அதன் காரணங்கள் பெரிது.

1 hour ago, MEERA said:

பிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,

உதவித் தொகை - 50%

அங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%

படிப்பு - 25%

 

 

உங்களுக்கும் கோசானுக்குச் சொன்ன பதில் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்கான பதில் நான் தனித்திரி திறந்து கூறுகிறேன். ஏனெனில் அதன் காரணங்கள் பெரிது.

உங்களுக்கும் கோசானுக்குச் சொன்ன பதில் தான்

நன்றி. எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கூடவே ஜேர்மனியில் இருந்து யூகேவுக்கு வந்த பின்னரும், சதா யூகேயை புறணி பாடும் மனோநிலை பற்றியும் அலசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

 

11 hours ago, MEERA said:

பிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,

உதவித் தொகை - 50%

அங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%

படிப்பு - 25%

 

 

அப்போ யூகே சிற்றிசன் எடுத்தாப்பிறகு  கனடா அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த டமிழர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

 

அப்போ யூகே சிற்றிசன் எடுத்தாப்பிறகு  கனடா அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த டமிழர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்? :cool:

எனக்குத் தெரிய இப்படி போற ஆக்கள் வலு குறைவு. சிங்கிளாக இருப்பவர்கள் கலியாணம் கட்ட எண்டு போவீனம். அல்லது ப்ரொபெசனல்ஸ் வேலை தேடிப் போவீனம். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வாற மாரி குடும்பம் குடும்பமா வாறேல்ல.

போலந்து, ரொமேனியா, பல்கேரியா காரர் ஏன் வருகீனம் என்றது விளங்குது, ஆனா 10 வருசத்துக்கும் மேலாக யூகேயை விட பெரிய பொருளாதாரத்தை உடைய நாட்டில் வசித்து விட்டு, பிள்ளையள் நல்லா டொச் கதைக்கிற நிலையிலும் ஏன் எங்கட சனம் ஓடி வருதெண்டுதான் விளங்கேல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

எனக்குத் தெரிய இப்படி போற ஆக்கள் வலு குறைவு. சிங்கிளாக இருப்பவர்கள் கலியாணம் கட்ட எண்டு போவீனம். அல்லது ப்ரொபெசனல்ஸ் வேலை தேடிப் போவீனம். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வாற மாரி குடும்பம் குடும்பமா வாறேல்ல.

போலந்து, ரொமேனியா, பல்கேரியா காரர் ஏன் வருகீனம் என்றது விளங்குது, ஆனா 10 வருசத்துக்கும் மேலாக யூகேயை விட பெரிய பொருளாதாரத்தை உடைய நாட்டில் வசித்து விட்டு, பிள்ளையள் நல்லா டொச் கதைக்கிற நிலையிலும் ஏன் எங்கட சனம் ஓடி வருதெண்டுதான் விளங்கேல்ல.

ஓரளவுக்கு......ஆங்கிலம் பேசுபவர்களை....அண்ணார்ந்து பார்த்த அடிமைப் புத்தி தான் காரணம்.. என நினைக்கிறேன்!

நானும் இங்கிலாந்திலிருந்து...தொழில் ரீதியாக...அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தவர்களுக்குள் அடங்குவேன்! 

முக்கியமான காரணம் எனது துணைவியாருக்குக்  குளிர் காலனிலை ஒத்து வரவேயில்லை!

மற்றும் படிக்கு...இங்கிலாந்தில்....இருந்த நண்பர்களையும்.....அந்தக் காலனிலையையும்...இன்னும் மிஸ் பண்ணுகிறேன்!

பாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன்!  இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

அவுஸும் அருமையான தேசம் தான்..! எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...!

மார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்!

காகங்கள் மட்டும்...கொஞ்சம் வித்தியாசம்..! அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..!😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புங்கையூரன் said:

பாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன்!  இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

அவுஸும் அருமையான தேசம் தான்..! எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...!

மார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்!

காகங்கள் மட்டும்...கொஞ்சம் வித்தியாசம்..! அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..!😋

கராஜ் ஒன்றில் வேலை செய்யும் போது, ஒரு வெள்ளை பாக்கி என்றான்.

போடா ஐரிஷ்காரா என்றேன்.

அவ்வளவு தான். தான் எப்படிப்பட்ட ஆங்கிலேயன், அப்பா, அம்மா என்று தோம்பு இழுத்து, தனது பரம்பரை சொல்லி, என்னை போய், ஐரிஸ்  காரர் எண்டு சொல்லி போட்டியே என்றான்.

ஆகா, உங்கட வீக் பாயிண்ட் அங்கவா இருக்குது எண்டு.... ஆனாலும், சுத்த ஆங்கிலேயன் இப்படி நடந்து கொள்ள மாட்டானே.... எண்ட படியால் நீ, ஐரிஸ் தான் என்றேன்.

நொந்து போய் போனார்.

ஐரிஷ் காரர்கள் எங்களுக்கு ஒன்றும் கெடுதல் செய்ய வில்லை.  ஆங்கிலேயர்கள் அவர்களை கீழாகவே பார்ப்பார்கள் என்று புரிந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புங்கையூரன் said:

ஓரளவுக்கு......ஆங்கிலம் பேசுபவர்களை....அண்ணார்ந்து பார்த்த அடிமைப் புத்தி தான் காரணம்.. என நினைக்கிறேன்!

நானும் இங்கிலாந்திலிருந்து...தொழில் ரீதியாக...அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தவர்களுக்குள் அடங்குவேன்! 

முக்கியமான காரணம் எனது துணைவியாருக்குக்  குளிர் காலனிலை ஒத்து வரவேயில்லை!

மற்றும் படிக்கு...இங்கிலாந்தில்....இருந்த நண்பர்களையும்.....அந்தக் காலனிலையையும்...இன்னும் மிஸ் பண்ணுகிறேன்!

பாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன்!  இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

அவுஸும் அருமையான தேசம் தான்..! எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...!

மார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்!

காகங்கள் மட்டும்...கொஞ்சம் வித்தியாசம்..! அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..!😋

நான் ஒரு மழை விரும்பி. மப்பும் மந்தாரமாக 364 நாள் இருக்கும் நாடெல்லாவா இது😂. வெள்ளையள் எல்லாம் மழை, மழை என சலித்துகொள்ள நானோ காரில் இருந்து ஒவ்வொரு மழைதுளியாக ரசிக்கும் பேர்வழி. ஆகவே பொருத்தமான உடுப்பை போட்டால் காலநிலை எனக்கு பெரிய அலுப்பில்லை. சின்னதில் அப்பாவுடன் ஹட்டன் போய், திரும்பி போக வேண்டாம் என அடம்பிடிச்ச ஆள் நான், ஆகவே எனக்கு சொல்லப்போனால் இந்த காலநிலை ஒரு நித்திய வரப்பிரசாதம்.

நீங்கள் 90களில் இருந்திருப்பீர்களோ? முன்பு போல முகத்தில் அடிக்கும் துவேசம் இப்போ குறைவு. ஒரு பாக்கி நாட்டின் முன்னாள் கிரிகெட் கேப்டன், ஒரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் லண்டன் மேயர், இன்னொரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் உள்நாட்டு மந்திரி 😂😂😂.

வைத்தியம், சட்டம், அரசியல், கலை, தொலைக்காட்சி தொடங்கி அரச குடும்பம் வரை வெள்ளையர் அல்லாதோர் பிரசன்னம்.

நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. என் வாழ்நாளில் கண்ட அளவிலியே.

ஆனாலும் பாக்கி என்றைழைக்கப் படுவது இருக்கத்தான் செய்கிறது. டாமி ரொபின்சன் வகையறாக்கள் வெறுப்பை உமிழ்வதும் தொடர்கிறது. 

சுருங்ககூறின் மல்டி கல்சரலிசம் வளர்கிறது, துவேசம் குறைகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

நான் ஒரு மழை விரும்பி. மப்பும் மந்தாரமாக 364 நாள் இருக்கும் நாடெல்லாவா இது😂. வெள்ளையள் எல்லாம் மழை, மழை என சலித்துகொள்ள நானோ காரில் இருந்து ஒவ்வொரு மழைதுளியாக ரசிக்கும் பேர்வழி. ஆகவே பொருத்தமான உடுப்பை போட்டால் காலநிலை எனக்கு பெரிய அலுப்பில்லை. சின்னதில் அப்பாவுடன் ஹட்டன் போய், திரும்பி போக வேண்டாம் என அடம்பிடிச்ச ஆள் நான், ஆகவே எனக்கு சொல்லப்போனால் இந்த காலநிலை ஒரு நித்திய வரப்பிரசாதம்.

நீங்கள் 90களில் இருந்திருப்பீர்களோ? முன்பு போல முகத்தில் அடிக்கும் துவேசம் இப்போ குறைவு. ஒரு பாக்கி நாட்டின் முன்னாள் கிரிகெட் கேப்டன், ஒரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் லண்டன் மேயர், இன்னொரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் உள்நாட்டு மந்திரி 😂😂😂.

வைத்தியம், சட்டம், அரசியல், கலை, தொலைக்காட்சி தொடங்கி அரச குடும்பம் வரை வெள்ளையர் அல்லாதோர் பிரசன்னம்.

நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. என் வாழ்நாளில் கண்ட அளவிலியே.

ஆனாலும் பாக்கி என்றைழைக்கப் படுவது இருக்கத்தான் செய்கிறது. டாமி ரொபின்சன் வகையறாக்கள் வெறுப்பை உமிழ்வதும் தொடர்கிறது. 

சுருங்ககூறின் மல்டி கல்சரலிசம் வளர்கிறது, துவேசம் குறைகிறது.

பகிர்வுக்கு நன்றி....கோசான்!

நீங்கள் சரியாகக் கணித்துள்ளீர்கள்! தொண்ணூறுகளில் தான்!

அவுஸ்திரேலியா மல்ரி கல்சரலிஸத்துக்கு  முன்னுதாரணமாகக் கூறப்படும்  ஒரு நாடு எனினும்...பழைய  POM தலைமுறையின் எச்சங்களும்...மிச்சங்களும் இன்னும் உணடு...! ஆனால் அவர்களின் domination  குறைந்து கொண்டு வருகின்றது!

POM - Prisinors of Motherland ( Referring to convicts)

Please do not try this with any Englishmen, because it is a rude word over there.

Note: Technically our Head of State is still your Queen!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புங்கையூரன் said:

 

POM - Prisinors of Motherland ( Referring to convicts)

Please do not try this with any Englishmen, because it is a rude word over there.

இங்கத்தையன் வெள்ளையள் தான் அவுஸ் காரர்களை மட்டம் தட்ட சொல்வார்கள்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இது சகயம்.

சில ஆடுகளுக்கு முன் இங்கிலாந்தின் கேப்டனாக குக் இருந்த போது, ஆஸி பேட்டிங் செய்யும் போது, ஒரு பதாதை வைத்திருந்தார்கள்.
'A cook from England civilised you in the 1770s....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கராஜ் ஒன்றில் வேலை செய்யும் போது, ஒரு வெள்ளை பாக்கி என்றான்.

போடா ஐரிஷ்காரா என்றேன்.

அவ்வளவு தான். தான் எப்படிப்பட்ட ஆங்கிலேயன், அப்பா, அம்மா என்று தோம்பு இழுத்து, தனது பரம்பரை சொல்லி, என்னை போய், ஐரிஸ்  காரர் எண்டு சொல்லி போட்டியே என்றான்.

ஆகா, உங்கட வீக் பாயிண்ட் அங்கவா இருக்குது எண்டு.... ஆனாலும், சுத்த ஆங்கிலேயன் இப்படி நடந்து கொள்ள மாட்டானே.... எண்ட படியால் நீ, ஐரிஸ் தான் என்றேன்.

நொந்து போய் போனார்.

ஐரிஷ் காரர்கள் எங்களுக்கு ஒன்றும் கெடுதல் செய்ய வில்லை.  ஆங்கிலேயர்கள் அவர்களை கீழாகவே பார்ப்பார்கள் என்று புரிந்தது. 

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

 

சாமானியன், உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்..!

நான் அங்கிருக்கும் காலத்தில்...நடந்தது! 

ஐரிஸ் பெண்களுக்கு ....எமது இனத்து ஆண்களை மிகவும் பிடிக்கும்!

காரணம்...நாங்கள் பெரிய மன்மதர்கள் என்று அல்ல..!

அவர்கள் கத்தோலிக்கர்கள் என்பதாலும்...எங்கள் ஆண்கள்...கலியாணம் கட்டினால் ..இடையில்  விட்டு விட்டு ஓடி விட மாட்டார்கள் என்பதாலும் மட்டுமே!

இவ்வாறு நம்மவர் ஒருவருக்கு....ஐரிஸ் பெட்டையுடன் தொடர்பு  ஏற்பட்டுக் கொஞ்ச நாட்கள்  ஒன்றாகவும் இருந்தார்கள்!

பின்னர் அவருக்கு ஊரில் கலியாணம் பேச .....அவர் எங்களிடம்  ஆலோசனை கேட்க.. அவள் காலெல்லாம் பிடிச்சு விடுகிறாள்......பேசாமல்...கலியாணத்தைக் கட்டு...என்பதே எமத  ஆலோசனையாக இருந்தது!

அவன் விடாப் பிடியாய்.....நிற்கவே.....சரி...ஒரு நாளைக்கு நல்ல மிளகாய் போட்டு....ஒடியல் கூழைக் காய்ச்சு......என்னநடக்குது என்டு பாப்பம் என்று கூறினோம்!

அவன் கூழும் காய்ச்ச ....அவளும் சேர்ந்து குடித்து விட்டு......அன்றைய பொழுது...போய் விட்டது.!

காரத்துக்குப்  பயந்து அவள் ...ஓடி விடுவாள் என்று அவர் நினைத்தார்!

அடுத்த நாள்...அவள் முதலில்...கேட்ட கேள்வி.இது தான்..!

அடுத்த கூழ் எப்போது செய்வீர்கள்.?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இங்கத்தையன் வெள்ளையள் தான் அவுஸ் காரர்களை மட்டம் தட்ட சொல்வார்கள்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இது சகயம்.

சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும், இது பிழையான தகவல்.

பொம்ஸ், பொமீஸ் -என்பது யுகே வெள்ளைகளை கேலி செய்ய அவுஸ்ரேலியர்கள் பயன்படுத்தும் சொல்லாடல்.

அவுஸ்ரேலியர்களை மட்டம் தட்ட - பிரிடிஸ்காரார் “கான்விக்ட்ஸ்” convicts என்ற பதத்தையே பாவிப்பர்.

சுருங்க சொல்லின்,

அவுஸ்ர்ரேலியர்= Convicts

பிரிட்ஸ் = Poms/Pommies

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

 

எம்மை போலவே “குடும்ப பாங்காகனவர்கள்” ஐரிஸ்காரர். எனவே எங்கள் ஆண்கள் மீது இயல்பான ஈர்ப்பு. 

உங்கள் நண்பருக்கு “கூல் டவுண்” என்று சொல்லி இருப்பியள் போல 😂.

4 hours ago, சாமானியன் said:

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

 

ஆங்கிலேயர்கள் கொஞ்சம் உயர்வுநவிற்சி உடையவர்கள்தாம் ஆனாலும் பழக இனிமையானவர்களே. குறிப்பாக, சட்டத்தின் ஒழுங்கு, வரிசையில் நிற்றல், நீதி (fairness) என்பவற்றை கடைப்பிடிப்பதில் பிரிடிஸ்காரர் மேலானவர்கள். ஐரிஸ்காரரில் சுத்துமாத்து பேர்வழிகள் அதிகம்.

கத்தோலிக்கமா, புரொட்டஸ்டாண்டா என்று வரும் போது ஐரிஸ்காரர் துவேசிப்பதை போல  பிரிட்டிஸ்காரார் இல்லை.

சுருங்கச் சொல்லின். வீட்டுக்கு வீடு வாசல்ப்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேற திரி திறக்கிறன் எண்டதுக்குக் காரணம் இருக்கு. பிறகு அவசரப்பட்டு இதில் எழுதுறியளே??????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.