Jump to content

வாற கோவத்துக்கு இவளை ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது நடந்து இரண்டு மாதங்களுக்குக்கிட்ட. போன கிழமைதான் அவள் பிரட்டின கடிதம் வந்தது. யேர்ம்ன் போல் இங்கு பொலிஸ் வந்து முடிவெடுப்பதில்லை. அதுதான் உதுகளுக்குத் துணிவு.

ஜேர்மனியிலை உந்த பிரட்டல் வேலையெல்லாம் சரிவராது  தெரியும் தானே......அது சரி காரை ஏன் பின்னுக்கு உருள விட்டனீங்கள்? 
இல்லாட்டி றிவேஸ் கியரை மாத்தி போட்டுட்டியளோ??

 

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

உதில முக்கியமான விஷயம் ஒண்டு இருக்குது.

அதுதான் இன்சூரன்ஸ் கொம்பனியலின்ட தொழில் ரகசியம்.

பிழை அந்தப் பக்கம் இருந்தாலும், அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, உண்ட ஆள் தான் பிழை எண்டு கதையை முடிசிட்டு, நம்மளில பிழை எண்டு அவை சொல்லுகினமே எண்டு இங்க நூல் விடுவினம்.

நாம சொல்லுறதை எடுக்காத மாதிரி, கதையை விட்டு, ப்ரீமியத்தை ஏத்தப் பார்ப்பினம்.

இதென்ன கோதரியாகிடக்குதெண்டு கண பேர் ப்ரீமியத்தினை கூட கடடுவினம்.

மூன்று  வழி:

ஒன்று, கொஞ்சம் காசு கூடினாலும், நல்ல, மதிப்புள்ள, இன்சூரன்ஸ் கொம்பனியளோட சகவாசம் வைக்க வேண்டும். மலிவு எண்டு சில்லறை கம்பெனியளிடம் போனால், இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இணைய யுகம் வந்த பின்னர், இந்த சில்லறைக் கொம்பனிகள் அதிகம் வந்துள்ளன.

இரண்டாவது: தகவல் அறியும் சட்டத்தின் படி, மற்ற இன்சூரன்ஸ் கம்பெனி உடனான dealing முழு விபரத்தினை நான் கோர முடியுமா என்று ஒரு மறுத்தான் நூலை போட்டு பார்க்க வேண்டும்.

மூன்றாவது: நீ, சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. முறைப்பாடு செய்யும் வழிமுறை, விபரத்தினை தா என்று அடுத்த நூலை இறக்க வேண்டும்.

டபெக்கெண்டு எல்லா நூலையும் விடாமல், நிலைமையை புரிந்து விடுங்கோ.

இங்க பகிர்ந்தியல் எண்டால், பலர் ஆலோசனை தருவார்கள்.
 

அவளது Texco.  நான் இடிக்கவும் இல்லை. கிளைம் பண்ணவும் போவதில்லை. அவர்களின் காரில் எந்தக் காயமும் இல்லை.

2 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை உந்த பிரட்டல் வேலையெல்லாம் சரிவராது  தெரியும் தானே......அது சரி காரை ஏன் பின்னுக்கு உருள விட்டனீங்கள்? 
இல்லாட்டி றிவேஸ் கியரை மாத்தி போட்டுட்டியளோ??

 

கிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள்  ஆக்க.😀 

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள்  ஆக்க.😀 

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

இருவரின் காரின் அடிவிழுந்த பகுதி போட்டோக்கால் உண்மையை சொல்லி விடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

இப்படியும் ஒரு பெருமை உலாவுதா நம்பவர்களிடம்.

ஆனால்.. எனி எல்லாக் கார்களுமே ஆட்மெட்டிக் தான். காரணம் எல்லாமே.. மின்சாரக் கார்களாகப் போகின்றன. ஆகவே இந்தப் பெருமையும் எனி எம்மவர்களிடம் இருந்து விடைபெற்றாகனும். 

ஏற்ற இறக்கங்களில்.. சரியாக கான்ட் பிரேக் போடாட்டி.. சரியான முறையில் பார்க் பண்ணாட்டி எந்தக் காரும்..தரித்து நிற்கும் எந்தக் காரும்..  முன்.. பின் என்று தளச் சரிவுக்கு ஏற்ப இயங்கும். 

ஆனால்.. லண்டன் தெருக்களில் ஆசிய ஆன்ரிகள் (தமிழ் ஆன்ரிகள் உட்பட) போக்குவரத்து நெரிசலில் முக்கிய பங்கெடுக்கிறார்கள் என்பதை இவர்கள் வதியும் பகுதிகளில்.. பாடசாலை தொடங்கும்... விடும் நேரங்களில் காரை செலுத்தினால் புரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

இருவரின் காரின் அடிவிழுந்த பகுதி போட்டோக்கால் உண்மையை சொல்லி விடும் .

அவளின் Texco இன்சூரன்ஸ் இல் இருந்து வந்து என் காரைப் பார்ப்பதற்குக் கேட்டுள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

இப்படியும் ஒரு பெருமை உலாவுதா நம்பவர்களிடம்.

ஆனால்.. எனி எல்லாக் கார்களுமே ஆட்மெட்டிக் தான். காரணம் எல்லாமே.. மின்சாரக் கார்களாகப் போகின்றன. ஆகவே இந்தப் பெருமையும் எனி எம்மவர்களிடம் இருந்து விடைபெற்றாகனும். 

ஏற்ற இறக்கங்களில்.. சரியாக கான்ட் பிரேக் போடாட்டி.. சரியான முறையில் பார்க் பண்ணாட்டி எந்தக் காரும்..தரித்து நிற்கும் எந்தக் காரும்..  முன்.. பின் என்று தளச் சரிவுக்கு ஏற்ப இயங்கும். 

ஆனால்.. லண்டன் தெருக்களில் ஆசிய ஆன்ரிகள் (தமிழ் ஆன்ரிகள் உட்பட) போக்குவரத்து நெரிசலில் முக்கிய பங்கெடுக்கிறார்கள் என்பதை இவர்கள் வதியும் பகுதிகளில்.. பாடசாலை தொடங்கும்... விடும் நேரங்களில் காரை செலுத்தினால் புரியும். 

யேர்மனியில் மூன்று தடவை தான் ஒருவர் லைசென்சுக்கு தேர்வுக்கு ஓடிக் காட்டலாம். அதன் பிறகு லைசென்ஸ் கொடுக்க மாட்டார்கள்  நாம் லைசென்ஸ் எடுத்த காலத்தில் அப்படித்தான் சட்டம். ஸ்பெஷல் நீட் தேவையுள்ளவர்கள் மட்டுமே ஓட்டமற்றிக் கார் ஓடுவது. மிக விலை உயர்ந்த கார்களுக்கு மட்டும் ஓட்டமற்றிக் இருக்கும். இப்ப எப்படியோ தெரியவில்லை. ஆனால் இங்கு லண்டனில் பத்துத் தரம் கூட எடுக்கலாம். அதிகமான பெண்கள் பயத்தில் ஒட்டமற்றிக் கார் ஓடுவது. எனக்கு அது பிடிப்பதே இல்லை.

தளச் சரிவுகள் இல்லாத சம தளத்தில் கியர் மொடல் கார் உருளாது. அத்துடன் நான் ஐந்தில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் உருளச் சந்தர்ப்பமேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவளின் Texco இன்சூரன்ஸ் இல் இருந்து வந்து என் காரைப் பார்ப்பதற்குக் கேட்டுள்ளனர். 

Tesco தொழில் மளிகை யாவாரம்.

இன்சூரன்ஸ், பாங்கிங் எல்லாம், கமிஷன் யாவாரம்.

நான் சொன்ன சில்லறைகளில், இது பெரிய சில்லறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவளது Texco.  நான் இடிக்கவும் இல்லை. கிளைம் பண்ணவும் போவதில்லை. அவர்களின் காரில் எந்தக் காயமும் இல்லை.

கிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள்  ஆக்க.😀 

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

நான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்....VW  பசாட்  எண்டு....!

லண்டனில    பேரை மாத்தி வைச்சிட்டாங்கள் போல கிடக்குது......!😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

பிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,

உதவித் தொகை - 50%

அங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%

படிப்பு - 25%

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

நான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்....VW  பசாட்  எண்டு....!

லண்டனில    பேரை மாத்தி வைச்சிட்டாங்கள் போல கிடக்குது......!😘

கைதடுமாறி ஒண்டைப் போட்டிடக்கூடாது இங்க. 24 மணித்தியாலத்துக்குள்ள எடிட் பண்ணலாம் என்று நிழலி சொன்ன ஞாபகம். ஆனால் 12 மணித்தியாலத்துக்குப் பிறது விடுக்குதில்லை.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

இதற்கான பதில் நான் தனித்திரி திறந்து கூறுகிறேன். ஏனெனில் அதன் காரணங்கள் பெரிது.

1 hour ago, MEERA said:

பிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,

உதவித் தொகை - 50%

அங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%

படிப்பு - 25%

 

 

உங்களுக்கும் கோசானுக்குச் சொன்ன பதில் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்கான பதில் நான் தனித்திரி திறந்து கூறுகிறேன். ஏனெனில் அதன் காரணங்கள் பெரிது.

உங்களுக்கும் கோசானுக்குச் சொன்ன பதில் தான்

நன்றி. எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கூடவே ஜேர்மனியில் இருந்து யூகேவுக்கு வந்த பின்னரும், சதா யூகேயை புறணி பாடும் மனோநிலை பற்றியும் அலசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

 

11 hours ago, MEERA said:

பிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,

உதவித் தொகை - 50%

அங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%

படிப்பு - 25%

 

 

அப்போ யூகே சிற்றிசன் எடுத்தாப்பிறகு  கனடா அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த டமிழர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

 

அப்போ யூகே சிற்றிசன் எடுத்தாப்பிறகு  கனடா அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த டமிழர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்? :cool:

எனக்குத் தெரிய இப்படி போற ஆக்கள் வலு குறைவு. சிங்கிளாக இருப்பவர்கள் கலியாணம் கட்ட எண்டு போவீனம். அல்லது ப்ரொபெசனல்ஸ் வேலை தேடிப் போவீனம். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வாற மாரி குடும்பம் குடும்பமா வாறேல்ல.

போலந்து, ரொமேனியா, பல்கேரியா காரர் ஏன் வருகீனம் என்றது விளங்குது, ஆனா 10 வருசத்துக்கும் மேலாக யூகேயை விட பெரிய பொருளாதாரத்தை உடைய நாட்டில் வசித்து விட்டு, பிள்ளையள் நல்லா டொச் கதைக்கிற நிலையிலும் ஏன் எங்கட சனம் ஓடி வருதெண்டுதான் விளங்கேல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

எனக்குத் தெரிய இப்படி போற ஆக்கள் வலு குறைவு. சிங்கிளாக இருப்பவர்கள் கலியாணம் கட்ட எண்டு போவீனம். அல்லது ப்ரொபெசனல்ஸ் வேலை தேடிப் போவீனம். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வாற மாரி குடும்பம் குடும்பமா வாறேல்ல.

போலந்து, ரொமேனியா, பல்கேரியா காரர் ஏன் வருகீனம் என்றது விளங்குது, ஆனா 10 வருசத்துக்கும் மேலாக யூகேயை விட பெரிய பொருளாதாரத்தை உடைய நாட்டில் வசித்து விட்டு, பிள்ளையள் நல்லா டொச் கதைக்கிற நிலையிலும் ஏன் எங்கட சனம் ஓடி வருதெண்டுதான் விளங்கேல்ல.

ஓரளவுக்கு......ஆங்கிலம் பேசுபவர்களை....அண்ணார்ந்து பார்த்த அடிமைப் புத்தி தான் காரணம்.. என நினைக்கிறேன்!

நானும் இங்கிலாந்திலிருந்து...தொழில் ரீதியாக...அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தவர்களுக்குள் அடங்குவேன்! 

முக்கியமான காரணம் எனது துணைவியாருக்குக்  குளிர் காலனிலை ஒத்து வரவேயில்லை!

மற்றும் படிக்கு...இங்கிலாந்தில்....இருந்த நண்பர்களையும்.....அந்தக் காலனிலையையும்...இன்னும் மிஸ் பண்ணுகிறேன்!

பாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன்!  இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

அவுஸும் அருமையான தேசம் தான்..! எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...!

மார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்!

காகங்கள் மட்டும்...கொஞ்சம் வித்தியாசம்..! அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..!😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புங்கையூரன் said:

பாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன்!  இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

அவுஸும் அருமையான தேசம் தான்..! எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...!

மார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்!

காகங்கள் மட்டும்...கொஞ்சம் வித்தியாசம்..! அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..!😋

கராஜ் ஒன்றில் வேலை செய்யும் போது, ஒரு வெள்ளை பாக்கி என்றான்.

போடா ஐரிஷ்காரா என்றேன்.

அவ்வளவு தான். தான் எப்படிப்பட்ட ஆங்கிலேயன், அப்பா, அம்மா என்று தோம்பு இழுத்து, தனது பரம்பரை சொல்லி, என்னை போய், ஐரிஸ்  காரர் எண்டு சொல்லி போட்டியே என்றான்.

ஆகா, உங்கட வீக் பாயிண்ட் அங்கவா இருக்குது எண்டு.... ஆனாலும், சுத்த ஆங்கிலேயன் இப்படி நடந்து கொள்ள மாட்டானே.... எண்ட படியால் நீ, ஐரிஸ் தான் என்றேன்.

நொந்து போய் போனார்.

ஐரிஷ் காரர்கள் எங்களுக்கு ஒன்றும் கெடுதல் செய்ய வில்லை.  ஆங்கிலேயர்கள் அவர்களை கீழாகவே பார்ப்பார்கள் என்று புரிந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புங்கையூரன் said:

ஓரளவுக்கு......ஆங்கிலம் பேசுபவர்களை....அண்ணார்ந்து பார்த்த அடிமைப் புத்தி தான் காரணம்.. என நினைக்கிறேன்!

நானும் இங்கிலாந்திலிருந்து...தொழில் ரீதியாக...அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தவர்களுக்குள் அடங்குவேன்! 

முக்கியமான காரணம் எனது துணைவியாருக்குக்  குளிர் காலனிலை ஒத்து வரவேயில்லை!

மற்றும் படிக்கு...இங்கிலாந்தில்....இருந்த நண்பர்களையும்.....அந்தக் காலனிலையையும்...இன்னும் மிஸ் பண்ணுகிறேன்!

பாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன்!  இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

அவுஸும் அருமையான தேசம் தான்..! எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...!

மார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்!

காகங்கள் மட்டும்...கொஞ்சம் வித்தியாசம்..! அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..!😋

நான் ஒரு மழை விரும்பி. மப்பும் மந்தாரமாக 364 நாள் இருக்கும் நாடெல்லாவா இது😂. வெள்ளையள் எல்லாம் மழை, மழை என சலித்துகொள்ள நானோ காரில் இருந்து ஒவ்வொரு மழைதுளியாக ரசிக்கும் பேர்வழி. ஆகவே பொருத்தமான உடுப்பை போட்டால் காலநிலை எனக்கு பெரிய அலுப்பில்லை. சின்னதில் அப்பாவுடன் ஹட்டன் போய், திரும்பி போக வேண்டாம் என அடம்பிடிச்ச ஆள் நான், ஆகவே எனக்கு சொல்லப்போனால் இந்த காலநிலை ஒரு நித்திய வரப்பிரசாதம்.

நீங்கள் 90களில் இருந்திருப்பீர்களோ? முன்பு போல முகத்தில் அடிக்கும் துவேசம் இப்போ குறைவு. ஒரு பாக்கி நாட்டின் முன்னாள் கிரிகெட் கேப்டன், ஒரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் லண்டன் மேயர், இன்னொரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் உள்நாட்டு மந்திரி 😂😂😂.

வைத்தியம், சட்டம், அரசியல், கலை, தொலைக்காட்சி தொடங்கி அரச குடும்பம் வரை வெள்ளையர் அல்லாதோர் பிரசன்னம்.

நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. என் வாழ்நாளில் கண்ட அளவிலியே.

ஆனாலும் பாக்கி என்றைழைக்கப் படுவது இருக்கத்தான் செய்கிறது. டாமி ரொபின்சன் வகையறாக்கள் வெறுப்பை உமிழ்வதும் தொடர்கிறது. 

சுருங்ககூறின் மல்டி கல்சரலிசம் வளர்கிறது, துவேசம் குறைகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

நான் ஒரு மழை விரும்பி. மப்பும் மந்தாரமாக 364 நாள் இருக்கும் நாடெல்லாவா இது😂. வெள்ளையள் எல்லாம் மழை, மழை என சலித்துகொள்ள நானோ காரில் இருந்து ஒவ்வொரு மழைதுளியாக ரசிக்கும் பேர்வழி. ஆகவே பொருத்தமான உடுப்பை போட்டால் காலநிலை எனக்கு பெரிய அலுப்பில்லை. சின்னதில் அப்பாவுடன் ஹட்டன் போய், திரும்பி போக வேண்டாம் என அடம்பிடிச்ச ஆள் நான், ஆகவே எனக்கு சொல்லப்போனால் இந்த காலநிலை ஒரு நித்திய வரப்பிரசாதம்.

நீங்கள் 90களில் இருந்திருப்பீர்களோ? முன்பு போல முகத்தில் அடிக்கும் துவேசம் இப்போ குறைவு. ஒரு பாக்கி நாட்டின் முன்னாள் கிரிகெட் கேப்டன், ஒரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் லண்டன் மேயர், இன்னொரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் உள்நாட்டு மந்திரி 😂😂😂.

வைத்தியம், சட்டம், அரசியல், கலை, தொலைக்காட்சி தொடங்கி அரச குடும்பம் வரை வெள்ளையர் அல்லாதோர் பிரசன்னம்.

நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. என் வாழ்நாளில் கண்ட அளவிலியே.

ஆனாலும் பாக்கி என்றைழைக்கப் படுவது இருக்கத்தான் செய்கிறது. டாமி ரொபின்சன் வகையறாக்கள் வெறுப்பை உமிழ்வதும் தொடர்கிறது. 

சுருங்ககூறின் மல்டி கல்சரலிசம் வளர்கிறது, துவேசம் குறைகிறது.

பகிர்வுக்கு நன்றி....கோசான்!

நீங்கள் சரியாகக் கணித்துள்ளீர்கள்! தொண்ணூறுகளில் தான்!

அவுஸ்திரேலியா மல்ரி கல்சரலிஸத்துக்கு  முன்னுதாரணமாகக் கூறப்படும்  ஒரு நாடு எனினும்...பழைய  POM தலைமுறையின் எச்சங்களும்...மிச்சங்களும் இன்னும் உணடு...! ஆனால் அவர்களின் domination  குறைந்து கொண்டு வருகின்றது!

POM - Prisinors of Motherland ( Referring to convicts)

Please do not try this with any Englishmen, because it is a rude word over there.

Note: Technically our Head of State is still your Queen!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புங்கையூரன் said:

 

POM - Prisinors of Motherland ( Referring to convicts)

Please do not try this with any Englishmen, because it is a rude word over there.

இங்கத்தையன் வெள்ளையள் தான் அவுஸ் காரர்களை மட்டம் தட்ட சொல்வார்கள்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இது சகயம்.

சில ஆடுகளுக்கு முன் இங்கிலாந்தின் கேப்டனாக குக் இருந்த போது, ஆஸி பேட்டிங் செய்யும் போது, ஒரு பதாதை வைத்திருந்தார்கள்.
'A cook from England civilised you in the 1770s....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கராஜ் ஒன்றில் வேலை செய்யும் போது, ஒரு வெள்ளை பாக்கி என்றான்.

போடா ஐரிஷ்காரா என்றேன்.

அவ்வளவு தான். தான் எப்படிப்பட்ட ஆங்கிலேயன், அப்பா, அம்மா என்று தோம்பு இழுத்து, தனது பரம்பரை சொல்லி, என்னை போய், ஐரிஸ்  காரர் எண்டு சொல்லி போட்டியே என்றான்.

ஆகா, உங்கட வீக் பாயிண்ட் அங்கவா இருக்குது எண்டு.... ஆனாலும், சுத்த ஆங்கிலேயன் இப்படி நடந்து கொள்ள மாட்டானே.... எண்ட படியால் நீ, ஐரிஸ் தான் என்றேன்.

நொந்து போய் போனார்.

ஐரிஷ் காரர்கள் எங்களுக்கு ஒன்றும் கெடுதல் செய்ய வில்லை.  ஆங்கிலேயர்கள் அவர்களை கீழாகவே பார்ப்பார்கள் என்று புரிந்தது. 

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

 

சாமானியன், உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்..!

நான் அங்கிருக்கும் காலத்தில்...நடந்தது! 

ஐரிஸ் பெண்களுக்கு ....எமது இனத்து ஆண்களை மிகவும் பிடிக்கும்!

காரணம்...நாங்கள் பெரிய மன்மதர்கள் என்று அல்ல..!

அவர்கள் கத்தோலிக்கர்கள் என்பதாலும்...எங்கள் ஆண்கள்...கலியாணம் கட்டினால் ..இடையில்  விட்டு விட்டு ஓடி விட மாட்டார்கள் என்பதாலும் மட்டுமே!

இவ்வாறு நம்மவர் ஒருவருக்கு....ஐரிஸ் பெட்டையுடன் தொடர்பு  ஏற்பட்டுக் கொஞ்ச நாட்கள்  ஒன்றாகவும் இருந்தார்கள்!

பின்னர் அவருக்கு ஊரில் கலியாணம் பேச .....அவர் எங்களிடம்  ஆலோசனை கேட்க.. அவள் காலெல்லாம் பிடிச்சு விடுகிறாள்......பேசாமல்...கலியாணத்தைக் கட்டு...என்பதே எமத  ஆலோசனையாக இருந்தது!

அவன் விடாப் பிடியாய்.....நிற்கவே.....சரி...ஒரு நாளைக்கு நல்ல மிளகாய் போட்டு....ஒடியல் கூழைக் காய்ச்சு......என்னநடக்குது என்டு பாப்பம் என்று கூறினோம்!

அவன் கூழும் காய்ச்ச ....அவளும் சேர்ந்து குடித்து விட்டு......அன்றைய பொழுது...போய் விட்டது.!

காரத்துக்குப்  பயந்து அவள் ...ஓடி விடுவாள் என்று அவர் நினைத்தார்!

அடுத்த நாள்...அவள் முதலில்...கேட்ட கேள்வி.இது தான்..!

அடுத்த கூழ் எப்போது செய்வீர்கள்.?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இங்கத்தையன் வெள்ளையள் தான் அவுஸ் காரர்களை மட்டம் தட்ட சொல்வார்கள்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இது சகயம்.

சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும், இது பிழையான தகவல்.

பொம்ஸ், பொமீஸ் -என்பது யுகே வெள்ளைகளை கேலி செய்ய அவுஸ்ரேலியர்கள் பயன்படுத்தும் சொல்லாடல்.

அவுஸ்ரேலியர்களை மட்டம் தட்ட - பிரிடிஸ்காரார் “கான்விக்ட்ஸ்” convicts என்ற பதத்தையே பாவிப்பர்.

சுருங்க சொல்லின்,

அவுஸ்ர்ரேலியர்= Convicts

பிரிட்ஸ் = Poms/Pommies

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

 

எம்மை போலவே “குடும்ப பாங்காகனவர்கள்” ஐரிஸ்காரர். எனவே எங்கள் ஆண்கள் மீது இயல்பான ஈர்ப்பு. 

உங்கள் நண்பருக்கு “கூல் டவுண்” என்று சொல்லி இருப்பியள் போல 😂.

4 hours ago, சாமானியன் said:

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

 

ஆங்கிலேயர்கள் கொஞ்சம் உயர்வுநவிற்சி உடையவர்கள்தாம் ஆனாலும் பழக இனிமையானவர்களே. குறிப்பாக, சட்டத்தின் ஒழுங்கு, வரிசையில் நிற்றல், நீதி (fairness) என்பவற்றை கடைப்பிடிப்பதில் பிரிடிஸ்காரர் மேலானவர்கள். ஐரிஸ்காரரில் சுத்துமாத்து பேர்வழிகள் அதிகம்.

கத்தோலிக்கமா, புரொட்டஸ்டாண்டா என்று வரும் போது ஐரிஸ்காரர் துவேசிப்பதை போல  பிரிட்டிஸ்காரார் இல்லை.

சுருங்கச் சொல்லின். வீட்டுக்கு வீடு வாசல்ப்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேற திரி திறக்கிறன் எண்டதுக்குக் காரணம் இருக்கு. பிறகு அவசரப்பட்டு இதில் எழுதுறியளே??????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.