Jump to content

Batticaloa Campus நிறுவனத்தின், வங்கிக் கணக்கு விபரங்களை, வழங்குமாறு உத்தரவு…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Batticaloa Campus நிறுவனத்தின், வங்கிக் கணக்கு விபரங்களை, வழங்குமாறு உத்தரவு…

June 19, 2019

 

Batticaloa-Campus5.jpg?resize=800%2C450

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கை வங்கிக்கு அறிவித்துள்ளது. குறித்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்தின் வங்கி கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட அறிக்கையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு இலங்கை வங்கியின் நடவடிக்கைப் பிரிவு முகாமையாளருக்கு அறிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (Batticaloa Campus) நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எ். எல். ஏ. எம் ஹிஸ்புல்லா, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சாட்சி வழங்கியுள்ளதுடன், நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. #BatticaloaCampus #மட்டக்களப்புபல்கலைக்கழகம்

 

http://globaltamilnews.net/2019/124625/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'பட்டிக்கலோ கம்பஸ்' இற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் எவை ?

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

'பட்டிக்கலோ கம்பஸ்' ஷரியா சட்டத்தை அல்லது இஸ்லாம் மதத்துடன் தொடர்புபட்ட அடிப்படைவாதிகளை உருவாக்கும் நிறுவனமாக செயற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக  எம்மால் நம்பப்படுவதனாலும் இந்நிறுவனத்துக்கு கிடைத்த நிதிகள், காணிகள் சட்டவிரோதமானவை என்பதனாலும் இந்நிறுவனத்தை அவசரகால சட்டவிதிகள் அடிப்படையில் அரசு உடனடியாக சுவீகரிப்பதுடன் குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

batticaloa-cumpas.jpg

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 'பட்டிக்கலோ கம்பஸ்' தொடர்பில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு  சமர்ப்பித்த அறிக்கையிலேயே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஆசு மாரசிங்க இந்த அறிக்கையை இன்று சபையில் சமர்ப்பித்தார். 

இந்த அறிக்கையில் கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள் பரிந்துரைகள் வருமாறு. 

2013-08-15 ஆம் திகதி ஹிரா பவுண்டேஷன்  நிறுவனத்துக்கும் அப்போதைய இளைஞர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அமைச்சுக்கும் இடையில் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  

ஹிரா பவுண்டேஷன்   சார்பில் அப்போது பிரதியமைச்சராகவிருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. எனவே ஆரம்பத்திலேயே தவறு இழைக்கப்பட்டுள்ளது.

2016-07-17ஆம் திகதியே ஹிரா பவுண்டேஷன்   என்ற பெயரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படுகிறது. இருந்தபோதும் 2015ஆம் ஆண்ட ஜுலை மாதம் 3ஆம் திகதி திகதியிடப்படாத கடிதமொன்று உயர்கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படுகிறது. அதில் குறித்த நிறுவனத்தை உயர்கல்வி நிறுவனமாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்படாத நிறுவனமொன்றுக்கு எவ்வாறு உயர்கல்வி அந்தஸ்துக் கோரமுடியும் என்ற கேள்வி எழுகிறது. 

ஆரம்பத்தில் 'பட்டிக்கலோ கம்பஸ்' ஹொலிச் பிறைவட் லிமிட்டட் என்ற பெயரிலேயே நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது 'பட்டிக்கலோ கம்பஸ்'  பிறைவட் லிமிட்டட் எனப் பெயர்மாற்றப்பட்டது. இவ்வாறு பெயர் மாற்றப்பட்ட பின்னர் பழைய பெயரில் உள்ள இலங்கை வங்கியின் கணக்கிற்கு 3.6 பில்லியன் ரூபா வைப்பிலிடப்படுகிறது.'பட்டிக்கலோ கம்பஸ்' ஹொலிச் என்ற பெயரில் இல்லாத வங்கிக் கணக்கிற்கு எவ்வாறு பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவர முடியும்?. இது வெளிநாட்டு நிதி சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதால் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.  

இந்தப் பணம் தொடர்பில் விசாரித்தபோது  ஹிரா பவுண்டேஷனின் தற்போதைய தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லா கூறியது, வெளிநாட்டிலிருந்து நன்கொடையாகக் கிடைத்தது என்பதாகும். எனினும், நாம்'பட்டிக்கலோ கம்பஸுக்கு  சென்றிருந்தபோது அங்கு ஹிஸ்புல்லா கூறியது, கடனாகப் பெற்ற பணம் என்பதாகும். ஐவரிடமிருந்து கடன் பெற்றதாக ஒப்பந்தங்களை காண்பித்துள்ளபோதும் ஒரேயொரு நபரிடமிருந்தே வங்கி கணக்கிற்கு பெருந்தொகை பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய வங்கி மற்றும் இலங்கை வங்கியின் அதிகாரிகளிடம் விசாரித்துள்ளோம். செலாவணி கட்டுப்பாட்டு ஒழங்குவிதிகள் பின்பற்றப்படவில்லையென்பது தெளிவாகிறது.

இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு அசேலபுர பிரதேசத்தில் 35 ஏக்கர் பரப்பளவுடைய காணி மகாவலி அதிகார சபையினால் 30 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிரவும் 8 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் சட்டபூர்வமற்ற நிர்மாணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு வாகரை பிரதேச செயலளரிடம் அனுமதி பெறப்படாமல் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் காணிகளில் சட்டவிரோத கட்டடம் அமைத்தமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்நிறுவனம் தொடர்பான ஆவணங்களை பரீட்சித்தபோது இலங்கை முதலீட்டு சபை மற்றும்  உயர் கல்வி அமைச்சு ஆகிய நிறுவனங்களுக்கு முன்  வைக்கப்பட்ட தகவல்களில் Bachelor of Arts in Sharia  and Islamic Studies எனக்குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம்  ஷரியா  சட்டம் அல்லது இஸ்லாம் மதம் சார்ந்த உலமாக்களை உருவாக்குவது இதன் பிரதான நோக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. ஹிஸ்புல்லாவினால் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு பிரசாரப்படுத்தப்பட்ட வீடியோவின் ஊடாகவும் இது உறுதிப்படுத்தப்படுகின்றது. 

இந்நிறுவனம் வேறு கல்வி பாட நெறிகளை நடத்துவதாகக் கூறிக்கொண்டு மறைமுகமாக ' ஷரியா சட்டத்தை அல்லது இஸ்லாம் மதத்துடன் தொடர்புபட்ட அடிப்படைவாதிகளை உருவாக்கும் நிறுவனமாக செயற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக  எம்மால் நம்பப்படுகின்றது. அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் அரேபிய கட்டடக்கலைகளை பெரிதும் கொண்டிருப்பதால் அரபுமயப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் உள்ளது. 

இலங்கையில் தற்போது நிலவிவரும்பிரச்சினைகளை எடுத்து நோக்கும்போது ஷரியா மதம் அல்லது அடிப்படைவாத மதத்தை கற்பிக்கும் நிறுவனங்கள் உருவாகுவது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதனால் இவ்வாறான நிறுவனங்களுக்கு ஒருபோது அனுமதியளிக்கக்கூடாதென குழு கருதுகின்றது. 

இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு தற்பொழுது நடைமுறைப்படத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தையும் பயன்படுத்தி குறித்த நிறுவனத்தை அரசாங்கம் உடனடியாக சுவீகரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக துரித சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு 6 வாரங்களுக்குள் அமைச்சரவையின் அவதானிப்புக்கள் பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.  இதேவேளை இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்றும் பாராளுமன்ற குழு அறையில் குழுவின் தவிசாளர் ஆசு மாரசிங்க தலைமையில் நேற்று நடத்தப்பட்டது.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஐ.தே.க எம்பி விஜயபால ஹெட்டியாராச்சி, எதிர்க்கட்சி எம்பி சிசிர ஜயக்கொடி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

 

https://www.virakesari.lk/article/58801

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.