Jump to content

பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் தேர்தலுக்காகவா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் தேர்தலுக்காகவா?

எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 04:21 Comments - 0

உலகில் வேலைநிறுத்தம் செய்த முதலாவது நாட்டுத் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவாகத்தான் இருக்க வேண்டும். ஏனைய வேலைநிறுத்தங்களைப் போலவே, அவரது வேலைநிறுத்தத்தின் மூலமும் பொது மக்களே பாதிக்கப்பட்டனர். 

ஏனைய வேலை நிறுத்தங்களைப் போலவே, ஜனாதிபதியும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஆராய, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை, இரத்து செய்யவேண்டும்” என்பதே, அவரது கோரிக்கையாகும்.“எனது கோரிக்கையை, சபாநாயகர் நிறைவேற்றாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை” என அவர் கூறியிருந்தார். அவரது அந்த வேலை நிறுத்தம் காரணமாக, கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.

ஜனாதிபதியின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, இவ்வாரம் முதல், மீண்டும் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த, ஜனாதிபதி இணங்கியதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தின்படியே, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. பதவி விலகிய அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்தனர். 

அத்தோடு, அரசாங்கத்தின் கருத்துப்படி, அமைச்சர் ரிஷாட் தொடர்பான விடயங்களை ஆராய, சபாநாயகர், இந்தத் தெரிவுக் குழுவை நியமித்தார். பின்னர் அந்தத் தெரிவுக்குழு, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் தெரிவுக்குழுவாக மாறியது. 

தெரிவுக்குழு, ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் குழுவாக மாற்றப்பட்டபோதே, அது, ஜனாதிபதிக்கு எதிரான தெரிவுக்குழுவாக மாறும் என்ற  கருத்துப் பரவியது. ஏனெனில், ஜனாதிபதி, தாக்குதலை முன்னரே அறிந்திருந்தும், அவர், கவனயீனமாக இருந்தமையாலேயே தாக்குதல் இடம்பெற்றது என்றதொரு கருத்து, அப்போது நிலவியது. எனவே, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே நிலவிவரும் பனிப்போர்  காரணமாக, அந்தக் குழு ஜனாதிபதியைக் குறிவைத்தே நியமிக்கப்பட்டது என்ற கருத்துப் பரவியது. 

அந்த நோக்கம், அப்போதைய அரசாங்கத்தின் தலைவர்களிடம் இருந்ததோ இல்லையோ, இப்போது அதுதான் நடைபெற்று வருகிறது. 

தாக்குதல் நடைபெற்றபோது, பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்ணான்டோவும் தாக்குதல் காரணமாகத் தற்போது ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் தெரிவுக்குழுவின் முன் அளித்த சாட்சியங்கள் மூலமாக, ஜனாதிபதியின் அசமந்தப் போக்கும் அவருக்கும் பிரதமருக்கும் இடையிலான பனிப்போரும், தாக்குதலுக்குச் சாதகமாக அமைந்தன என்றதொரு கருத்துப் பரவியிருக்கிறது.

தெரிவுக்குழுவை, மஹிந்த அணியினர் ஆரம்பத்திலிருந்தே விரும்பவில்லை. ஆனால், தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெறும்வரை, அவர்கள், அக்குழுவால் அரச உளவுத்துறையினரின் விவரங்கள் அம்பலமாகுமெனக் கூறவில்லை. 

உண்மையிலேயே, உளவுத்துறையின் உயர் அதிகாரிகள், எவருக்கும் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள், எதை வெளியில் கூறலாம், எதை கூறக்கூடாது என்பதை நன்கறிந்தவர்கள். அமெரிக்காவிலும் எப்.பி.ஐ, சி.ஐ.ஏ அதிகாரிகள், அமெரிக்க கொங்கிரஸ் குழுக்கள் முன் சாட்சியளிப்பது சர்வ சாதாரணமான விடயம் ஆகும். 

ஆனால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினதும் பொலிஸ் மா அதிபரினதும் சாட்சியங்களை அடுத்து, ஜனாதிபதி இவ்வளவு கடுமையாக, தெரிவுக்குழுவை எதிர்ப்பதை விளங்கிக்கொள்ளலாம். 

தெரிவுக்குழு, உண்மையிலேயே என்ன நோக்கத்துடன் இயங்குகிறது என்ற கேள்வி, சிலவேளைகளில் எழுகிறதுதான். ஆனால், அதன் மூலம், அரச உயர் மட்டத்தில், பாதுகாப்பு விடயத்தில் நிலவிய குழப்பமான நிலைமையும் அதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற எவ்வாறு வாய்ப்புகள் ஏற்பட்டன என்பதையும் மக்கள் அறிய முடிந்தது என்பதையும் புறக்கணிக்க முடியாது. 

தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு, ஜனாதிபதி கூறி வருவது சட்டபூர்வமானது அல்ல. ஏனெனில், மக்களின் இறைமையைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்றத்துக்குக் கட்டளைப் பிறப்பிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இல்லை. ஆனால்,  மற்றொரு காரணத்தால், தெரிவுக்குழு தொடர்ந்து இயங்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. 

அதாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக, நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக, தற்போது வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் ஒரு விடயத்தை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றால், விசாரிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. விசாரிக்க முடியுமாக இருந்தாலும், அக்குழு, பெரிதாக எதையும் சாதித்துவிடும் என்று, நாட்டில் எவரும் நம்புவதாகவும் தெரியவில்லை. 

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றி, விசாரணை செய்வதற்காகத் தாக்குதல் இடம்பெற்ற அன்றே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையில் மூவர் கொண்ட ஒரு குழுவை நியமித்தார். அக்குழு, அதன் இறுதி அறிக்கையை கடந்த 10ஆம் திகதியன்று, ஜனாதிபதியிடம் கையளித்தது. ஆனால், நாட்டில் எவரும் அதைப்பற்றி அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. 

அந்தக் குழுவின் அறிக்கையை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாகச் சில செய்திகள் கூறின. ஆனால், திட்டவட்டமாகத் தாக்குதலை நடத்துவோர், அவர்களது இலக்குகள், எவ்வாறான தாக்குதலை நடத்த இருக்கிறார்கள் என்ற விவரங்களையெல்லாம், உளவுத்துறையினர் வழங்கியிருந்தும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தொடர்பில், நடவடிக்கை எடுப்பதற்கும், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. 

அதாவது, அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டால், ஜனாதிபதி குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ, அல்லது நாடாளுமன்றம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ, எவரும் வாதிட முடியாது. ஆனால், ஜனாதிபதிக்கு அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் தேவையோ, அவசரமோ இருப்பதாகவும் தெரியவில்லை. 

சிலவேளை, அந்த அறிக்கையை ஜனாதிபதித் தேர்தல் வரை கிடப்பில் போட்டுவிட்டு, தேர்தலின் போது, அறிக்கையின் சில பகுதிகளை, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பாவிக்க, அவர் காத்திருக்கிறாரோ தெரியாது. ஆனால், அது அவ்வளவு பயன் தராது. ஏனெனில், பாதுகாப்புத் துறைக்கு மட்டுமல்லாது சட்டம் ஒழுங்குத் துறைக்கும் ஜனாதிபதியே பொறுப்பாக இருக்கிறார். எனவே, அவர்தான் தாக்குதலுக்குப் பொறுப்பை ஏற்க வேண்டும். எல்லாவற்றையும் விட, இவ்வளவு பாரதூரமான தாக்குதல் ஒன்றைப் பற்றிய துல்லியமான தகவல்கள் கிடைத்தும், அதை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், பொலிஸார் அறிவிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும். 

“ஜனாதிபதியைச் சந்திக்க முடியாது” எனத் தாக்குதல் நடந்தபோது, பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கும் போது கூறியிருந்தார். ஆனால், இது போன்றதொரு தகவலை, தொழில் பறிபோனாலும் பரவாயில்லை என்று, மரபுகளை மீறிக்கூட அவர், ஜனாதிபதியைச் சந்தித்து, அவரிடம் கூறியிருக்க வேண்டும்.

மறுபுறத்தில், தெரிவுக்குழு மூலம், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியின் அசமந்தப் போக்கையும் திறமை இன்மையையும் தான் தாக்குதலுக்குக் காரணம் என்றதொரு கருத்தை உருவாக்கி, அதன் மூலம், எதிர்வரும் தேர்தலின் போது, ஐ.தே.க அரசியல் இலாபம் அடையப் போகிறதோ தெரியாது. ஆனால், இந்த அரசியல் பந்து விளையாட்டுகளால், நாட்டு மக்களோ அல்லது தாக்குதலால் உறவுகளை இழந்த மற்றும் அங்கங்களை இழந்த மக்களோ, எவ்விதப் பயனும் அடையப் போவதில்லை.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் ஈச்சமரத்துக்கும் என்ன சம்பந்தம்?

  உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றி, விசாரித்து வரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அணியினர், கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

அக்குழுவின் மூலம், உளவுத்துறையின் இரகசியங்கள் வெளியாகின்றன என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது.   

ஆனால், இதுவரை தெரிவுக்குழுவின் முன் தெரிவிக்கப்பட்ட பாரதூரமான கருத்துகளை, அவர்கள் கருத்திற்கொள்ளவே இல்லைப் போல் தான் தெரிகிறது. 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் கட்டாய லீவில் அனுப்பப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் பாதுகாப்புத்துறையில் நிலவும், மிக மோசமான நிலைமையை அம்பலப்படுத்தினர். 

அது, எவ்வளவு பாரதூரமான நிலைமையாக இருந்த போதும், மஹிந்த அணியினர் அதைப் பெரிதாகக் கருத்தில் கொள்ளவில்லை.

அதேவேளை, தெரிவுக்குழு உறுப்பினர்கள் சாட்சியாளர்களிடம் கேட்கும் கேள்விகளின் நோக்கத்தைச் சாதாரண மக்களால், விளங்கிக் கொள்ளவும் முடியாமல் இருக்கிறது. 

உதாரணமாக, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் அவர்கள், “காத்தான்குடியில் உள்ள பெயர்ப் பலகைகளில், அரபு எழுத்துகள் எதற்காக” என்றும் “அங்கு வீதிகளில் ஈச்ச மரங்கள் நடப்பட்டு இருப்பது எதற்காக” என்றும் கேட்டனர். 

தெரிவுக்குழு, ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பாகவே விசாரித்து வருகிறது. ஈஸ்டர் தினத் தாக்குதலுக்கும் ஈச்ச மரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பது விளங்கவில்லை. 

அதேபோல், ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் பெயர்ப் பலகைகளில் உள்ள அரபு எழுத்துகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது. 

நாட்டில், சிறுபான்மை இனமான முஸ்லிம்கள், செறிவாக வாழும் ஒரு பிரதேசத்தில், அரேபிய கலாசாரத்தோடு மிக நெருங்கிய தொடர்புள்ள ஈச்ச மரங்கள் மட்டும் காணப்படுமானால், அது ஏனைய சமூக மக்களை அச்சப்படுத்தாது. அரபு மொழியிலான பெயர்ப் பலகைகள் மட்டும் இருந்தால், அதுவும் பிரச்சினையாகாது. 

ஆனால், ஏனைய பகுதிகளிலும் பிரச்சினையாகியுள்ள அபாயா, புர்க்கா, நிக்காப், ஜூப்பா போன்ற உடைகளோடு, இந்த ஈச்ச மரங்களும் அரபுப் பெயர்ப் பலகைகளும் சேர்ந்த போது, அது மற்றொரு நாட்டின் பிரதேசம் போல், முஸ்லிம் அல்லாதோரின் கண்களில் தோற்றமளிப்பதைத் தவிர்க்க முடியாது. 
இது, இன நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடியது என்பது உண்மை தான். அதேவேளை, அவற்றைப் பற்றி, ஹிஸ்புல்லாஹ் தெரிவுக்குழுவிடம் தெரிவித்த விளக்கமும் அக்குழுவின் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. 

ஆனால், அவற்றுக்கும் ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவற்றைப் பற்றி ஏன், தெரிவுக்குழுவின் அமர்வின் போது கேள்வி எழுப்ப வேண்டும் என்பது தான், விளங்காத விடயமாக இருக்கிறது.

பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியிடம், தெரிவுக்குழு அமர்வின் போது, அரச அலுவலகங்களில் கடமையாற்றும் பெண்களின் உடைகளைப் பற்றியே விசாரிக்கப்பட்டது. இது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, சில பாடசாலைகளிலும் சில அரச நிறுவனங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவுக்கு எதிராகக் கிளம்பிய எதிர்ப்பின் விளைவு என்றே தெரிகிறது. 

இந்த எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு என்பது தெளிவானதாகும். ஆனால், அந்த விடயத்துக்கும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதே, இங்கு எழும் கேள்வியாகும்.

தெரிவுக்குழு உறுப்பினர்கள் இவற்றுக்கும் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இடையே, ஏதாவது தொடர்பைக் கண்டார்களோ தெரியாது. எனவே, அவர்களது விசாரணை முடியும் வரை, அதைப் பற்றித் திட்டவட்டமாக எதையும் கூற முடியாது.

ஆனால், அக்குழுவுக்கு வெளியே பலர், இனவாதக் கண்ணோட்டத்திலேயே இவற்றைப் பயங்கரவாதத் தாக்குதலோடு தொடர்புபடுத்துகிறார்கள். அரபு மொழி, புர்க்கா, நிக்காப், அபாயா, ஜூப்பா, மத்தரஸா பள்ளிக்கூடங்கள் போன்றவை, சாதாரண முஸ்லிம்கள் மத்தியில் உள்ளவையாகும். அவை, தேவையா, இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, பொதுவாக முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதற்காகவே, பலர் இவற்றைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

அதன் மூலம், இப்போது நாட்டில் பொது மக்களின் கவனம், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதிலிருந்து வேறு திசையில் மாறியிருக்கிறது. 

தகவல் கிடைத்தும், பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததைப் பற்றிக் கேள்வி எழுப்புவதை விடுத்து, இப்போது பலர் அபாயாவையும் மத்ரஸாவையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பயங்கரவாதத்-தாக்குதல்-பற்றிய-விசாரணைகள்-தேர்தலுக்காகவா/91-234359

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.