Jump to content

ஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு


Recommended Posts

ஐக்கிய இராச்சியம் இந்துசமுத்திரத்தில் ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான அதன் ' காலனித்துவ நிருவாகத்தை மொரீசியஸ் நாட்டுக்கு அனுகூலமான முறையில் 6 மாதகாலத்திற்குள்  வாபஸ் பெறவேண்டும் ' என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் ( 193 உறுப்புநாடுகளில் 116 நாடுகள் ஆதரவாக ) கடந்த மாதம் நிறைவேற்றியது. டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க இராணுவத்தளம் அமைந்திருப்பதால் ஷாகோஸ் தீவுக்கூட்டம் நன்கு பிரபல்யமானதாக விளங்குகிறது. பொதுச்சபையின் தீர்மானம் கட்டுப்படுத்துகின்ற ஒன்று அல்ல என்றபோதிலும், அது ஐக்கிய இராச்சியத்துக்கு சினத்தை ஏற்படுத்தக்கூடியதேயாகும்.

methode_times_prod_web_bin_21f707ea-3949

 

கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள்

அமெரிக்காவுடன் கூட்டாக டியாகோ கார்சியாவில்  இராணுவத்தளத்தை அமைப்பதற்காக அந்த தீவை ஷாகோஸின் ஏனைய தீவுகளில் இருந்து தனியாக வேறுபடுத்துவதற்கு 1965 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானத்தையடுத்து ஷாகோஸ் தீவுக்கூட்டம் பல தசாப்தங்களாக மொரீசியஸுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான தகராறுக்கு காரணமாக விளங்கிவருகிறது. பிரிட்டனின் ஒரு காலனி நாடாக இருந்த மொரீசீயஸ் 1968 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தது.ஆனால், ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான இறையாண்மை தனக்கே இருக்கிறது என்று உரிமைகோரி அதைத்  திருப்பிக் கையளிக்க ஐக்கிய இராச்சியம் மறுத்தது.

இராணுவத்தளத்தை நிர்மாணிப்பதற்கு வசதியாக டியாகோ கார்சியாவில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் வெளியேற்றிய ஐக்கிய இராச்சியம் மொரீசியஸுக்கு இழப்பீடாக வெறுமனே 40 இலட்சம் பவுண்களை கொடுத்தது. சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு முரணாக  1967 -- 1973 காலகட்டத்தில் சுமார் 1500 ஷாகோஸ்வாசிகளை ஐக்கிய இராச்சியம் மொரீசியஸுக்கும் சீஷெல்ஸுக்கும் பலவந்தமாக அனுப்பியது ;  தங்கள் வீடுவாசல்களுக்கு திரும்பிச்செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பல தசாப்தங்களாக தகராறு நீடிக்கிறது.மொரீசியஸ் அதன் அரசியலமைப்பின் பிரகாரம்  ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாட்டுக்கு சவால்விடுத்து ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான இறையாண்மைக்கு நியாயமானமுறையில் உரிமைகோரியது.

தீவுக்கூட்டத்திலிருந்து  டியாகோ கார்சியாவை ' சட்டவிரோதமாக ' வேறாக்கி தீவுகளை ஐக்கிய இராச்சியம் பிளவுபடுத்திவிட்டதாக சர்வதேச நீதிமன்றம் இவ்வருடம் பெப்ரவரியில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பும் கட்டுப்படுத்துகின்ற ஒன்று அல்ல என்றபோதிலும், ஷாகோஸின் காலனித்துவமய நீக்கம் அரைகுறையானது என்றும் காலனித்துவமய நீக்கச் செயன்முறையை முழுமையாக்கவேண்டிய கடப்பாடு ஐக்கிய இராச்சியத்துக்கு இருக்கிறது என்றும் சர்வதேச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியது. மொரீசியஸுக்கும் தனக்கும் இடையிலான தகராறு ஒரு இருதரப்பு பிரச்சினை என்றும் அதுவிடயத்தில் சர்வதேச நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் கிடையாது என்றும் ஐக்கிய இராச்சியம் வாதிட்டது.அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

பிரிட்டிஷ் இந்துசமுத்திர நிலப்பரப்பு என்ற புதியதொரு வகையைக் கண்டுபிடித்த ஐக்கிய இராச்சியம்  ஷாகோஸ் மீது தனக்கு இறையாண்மை இருக்கிறது என்று சர்வதேச நீதிமன்றத்தில் வாதிட்டது. பயங்கரவாதம், திட்டமிட்டமுறையிலான குற்றச்செயல்கள் மற்றும் கடற்கொள்ளை ஆகியவற்றுக்கு எதிரான கடல்சார் பாதுகாப்பை வழங்குவதற்கு டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவத்தளம் அவசியமானது என்றும் கூறி ஐக்கிய இராச்சியம் ஷாகோஸ் தொடர்பான தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக வாதாடியது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப  ஐக்கிய இராச்சியம் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.அதனால், இந்த தகராறை ஐ.நா.வுக்கு கொண்டுசெல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது. ஷாகோஸ் தீவுக்கூட்டம் முழுவதன் மீதும் மொரீசியஸுக்கு இருக்கும் இறையாண்மையை இப்போது ஐ.நா.ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த தகராறில் ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஐ.நா.பொதுச்சபையின் தீர்மானமும் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. 

டியாகோ கார்சியாவில் இருந்து சகல மக்களையும் வெளியேற்றுவதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் மனித உரிமை மீறல்களுக்கு படுமோசமான ஒரு உதாரணமாகும்.ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் வளர்முக நாடுகளை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அடிக்கடி கண்டனம் செய்கின்றன. இப்போது அவ்விரு நாடுகளுமே் ஐ.நா.வில் அதே குற்வாளிக்கூண்டில் நிற்கின்றன.

மொரீசியஸ் இயல்பாகவே மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்திருக்கிறது.ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்தை பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் வரவேற்றிருக்கிறார்.மொரீசியஸை உச்சபட்சத்துக்கு ஆதரித்து நிற்குமம் ஆபிரிக்க ஒன்றியம் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட ஆபிரிக்காவின் பகுதிகள் இன்னமும் காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று கூறியிருக்கிறது.

இந்த முழு விவகாரத்திலும் பகிரங்கத்தில் பெரிதாக தெரியாத முறையில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்திருக்கிறது.மொரீசியஸுடனான இந்தியாவின் உறவுகள் தனித்துவமானவை. காலனித்துவமய நீக்கத்தில் இந்தியாவின் இந்தியா ஆற்றிவந்திருக்கும் சுறுசுறுப்பான பங்கை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் ஷாகோஸ் தீவுகள் மீதான மொரீசியஸின் உரிமைகோரலை இந்தியா உறுதியாக ஆதரிக்கும் என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. மொரீசியஸை கட்டுப்படுத்த இந்தியாமீது செல்வாக்குச் செலுத்த அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முயற்சித்தன.பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவைப்படும்வரை ஷாகோஸை திருப்பி கையளிக்கமுடியாது என்று இரு நாடுகளும் மொரீசியஸுக்கு கூறிவிட்டன. எதுவும் மாறப்போவதில்லை, ஆனால் சில வகையான இசைவுபடுத்தலை அல்லது இணக்கப்பாட்டை செய்துகொள்ள முடியும். ஒரு தற்காலிக சமரச ஏற்பாடொன்றைச் செய்துகொள்வதில் இந்தியாவினால் கணிசமான பாத்திரம் ஒன்றை வகிப்பது சாத்தியமாயிருக்கும்.

பனிப்போர் காலத்தில் இந்துசமுத்திரத்தில் இராணுவத்தளங்கள் இருப்பதை இந்தியா கடுமையாக எதிர்த்தது. கடந்த மூன்று தசாப்தங்களில் இடம்பெற்றிருக்கும் புவிசார் -- மூலோபாய மாற்றங்கள் புதிய சவால்களைத் தோற்றுவித்திருக்கின்றன ; இந்துசமுத்திரத்தில்  ஊடுருவல்களைச் செய்திருக்கும் சீனா, தெனசீனக்கடலில் சட்டவிரோதமாக தீவுகளை ஆக்கிரமித்திருக்கிறது. கடல்பரப்பில் சீனாவின் தடம்பதிப்பு அதிகரித்துவருவதால் அதற்கு எதிரீடான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை மற்றைய நாடுகளுக்கு ஏற்படுகிறது.அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உளளடக்கிய தளர்வான ஒரு கூட்டணி இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது ; அமெரிக்காவின் பசுபிக் கட்டளை மையம்  இந்தோ -- பசுபிக் கட்டளை மையம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

 திட்டமிடல், ஒழுங்கமைப்பு பரிமாற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து இந்திய -- அமெரிக்க பாதுகாப்பு உறவுகளும் கணிசமானளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றன. அந்த உடன்படிக்கை இரு நாடுகளும் பரஸ்பரம் பரஸ்பரம் அவற்றின் குறிப்பிட்ட சில இராணுவ வசதிகளுக்கு செல்வதற்கான நுழைவுரிமையைக் கொடுக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த மற்றைய இருதரப்பு உடன்படிக்கை என்றால் அது தகவல் பரிமாற்ற ஒருங்கமைவு மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கையாகும்.அது இரு நாடுகளினதும் இராணுவங்களுக்கும் இடையே குறியீட்டு முறையிலான தகவல் பரிமாற்றத்துக்கு வசதி செய்கிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் டியாகோ கார்சியா தொடர்பிலும் அங்கு அமைந்திருக்கும் இராணுவத்தளம் தொடர்பிலும் இந்தியாவின் நயநுட்பமான அணுகுமுறையில் செல்வாக்கைச் செலுத்துகின்றன.

இறுதியில், இறைமை தொடர்பான பிரச்சினைக்கு  ஷாகோஸ் தீவுக்கூட்டங்கள் மீதான இறைமையை மொரீசியஸ் கொண்டிருக்க அனுமதிக்கின்றதும் டியாகோ கார்சியாவில் இராணுவத்தளம் தொடருவதை அனுமதிக்கின்றதுமான உடன்படிக்கைகளின் மூலமாகவே சாதுரியமாகத் தீர்வொன்றைக் காணவேண்டும்.இராணுவத்தளத்தை வைத்திருப்பதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நீண்டகாலத்துக்கு தீவை குத்தகைக்கு கொடுக்க மொரீசியஸ் இணங்கும்.சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஐ.நா.பொதுச்சபையின் தீர்மானத்தையும் அடுத்து ஐக்கிய இராச்சியத்தின் பாத்திரம் கூடுதலானளவுக்கு  பிரச்சினைக்குரியதாகிவிட்டது.  சற்று நிதானமாகச் சிந்தித்து  மொரீசியஸுக்கு இறைமையைக் கையளித்துவிட்டு அதேவேளை குத்தகை தொடர்பில் அமெரிக்காவுடன் ஏற்பாடொன்றைச்  செய்துகொள்வதே லண்டனுக்கு நல்லதாக அமையும்.அத்தகையதொரு ஏற்பாட்டை சாத்தியமாக்குவதில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும்.

  ( சக்கரவர்த்தி  முன்னாள் இந்தியத் தூதுவரும் வெளியுறவு அமைச்சில் செயலாளருமாவார் ) 

( இந்து )

https://www.virakesari.lk/article/58590

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் விடேல்லது, நல்ல கதை.

நாங்கள் பிரிட்டிஷ் காரர்கள். எங்களை, உலகாண்ட சிங்கத்தை கடுப்பேத்த வேண்டாம் என்று, ஐநாவுக்கு எச்சரிக்கை செய்கிறோம். 😡

Link to comment
Share on other sites

US, not UK, most threatened by Chagos row

  • Sri Lanka is a gold mine for the US and China among other regional powers because of its highly strategic location.
  • An SOFA in essence prevents US defense personnel from being prosecuted in a foreign jurisdiction where they are being hosted by party to the agreement. Such agreements are dangerous in the sense that they provide a wide range of immunities and exemptions to US personnel.
  • Now in a power tussle with the increasing influence of China in the Indian Ocean Region, the US is even more dependent on this island to contain the rise of the dragon. The US Defense Intelligence Agency has warned many times that China could deploy aircraft carriers into the IOR. Lately, China has developed its own aircraft carrier, the Shandong. With the development of this gigantic carrier, the DIA warned the US administration that China could use it primarily for regional defense missions.
  • A report by the US Defense Department, “Military and Security Developments Involving the People’s Republic of China, 2019” suggested that the People’s Liberation Army Navy (PLAN) continued submarine deployments to the Indian Ocean, demonstrating its increasing familiarity with operating in that region and underscoring China’s interest in protecting sea lines of communication (SLOCs) beyond the South China Sea. This report raised serious concerns in the Pentagon.

https://www.asiatimes.com/2019/06/opinion/pros-and-cons-of-us-sri-lanka-defense-plans/

Link to comment
Share on other sites

2016 செய்தி

இந்திய பெருங்கடல் பகுதியில் ஏராளமான சிறு தீவுகள் உள்ளன. இவற்றை ஷாகோஸ் ஆர்க்கிபெலாகோ மண்டலம் என்று அழைக்கின்றனர். இந்த மண்டலத்தில் மிகப்பெரிய தீவாக டிகோ கார்சியா தீவு விளங்குகிறது.
பவளப்பாறைகள் நிறைந்த இந்த தீவின் மொத்த பரப்பு 30 சதுர கிலோ மீட்டர் ஆகும். பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த தீவு பின்னர் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தின் பகுதியாக மாறியது. 1968ல் தீவுவாசிகள் அனைவரும் மொரீஷியஸ் தீவுக்கு மாற்றப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர். இது தொடர்பாக பிரச்னைகளும் இருந்து வருகிறது.அதன் பிறகுதான் யுஎஸ் ராணுவ மையம் இங்கு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ தளமாக டிகோ கார்சியா தீவு விளங்குகிறது.

தமிழக பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகுகள்தான் அதிகம் டிகோகார்சியா தீவு பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றன. ஆனால் இவை கேரள மாநிலம் கொச்சி, தோப்பும்படி, முனம்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடி துறைமுக பகுதிகளில் இருந்து புறப்படுகின்றன. மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ள டிகோர் கார்சியா தீவு பகுதியில் அதிக மீன்வளம் இருப்பதும், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்ற நிலையே இம்மீனவர்கள் அடிக்கடி டிகோ கார்சியா தீவு பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல காரணமாக இருந்து வருகிறது. இப்போது பிரிட்டனின் திட்டவட்ட அறிவிப்பு காரணமாக இனிவரும் காலங்களில் டிகோ கார்சியா தீவு பகுதியில் மீன்பிடிக்க சென்றால் குமரி மாவட்டம் மற்றும் கேரள மீனவர்கள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=593108

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

அதெல்லாம் விடேல்லது, நல்ல கதை.

நாங்கள் பிரிட்டிஷ் காரர்கள். எங்களை, உலகாண்ட சிங்கத்தை கடுப்பேத்த வேண்டாம் என்று, ஐநாவுக்கு எச்சரிக்கை செய்கிறோம். 😡

உலகாண்ட சிங்கத்துக்குப் பல்லுப் போனாலும்....இன்னும் சொல்லுப் போகவில்லை..போலத் தெரிகின்றது!

பரவாயில்லை.....ஐ.நாவுக்குப்  பல்லுமில்லை....சொல்லுமில்லை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/20/2019 at 3:10 AM, புங்கையூரன் said:

உலகாண்ட சிங்கத்துக்குப் பல்லுப் போனாலும்....இன்னும் சொல்லுப் போகவில்லை..போலத் தெரிகின்றது!

பரவாயில்லை.....ஐ.நாவுக்குப்  பல்லுமில்லை....சொல்லுமில்லை...!

இண்டைக்கு உலகத்தில, முன்னம் நிக்கிற நாடுகள் எல்லாம், இந்த சிங்கத்தின்ரை தானே....

அமேரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நீயுசீலாந்து....

ஆப்கோஸ்...

பிரிட்டன்... இந்தியா...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.