Jump to content

ஷாகோஸ் தீவுக்கூட்டத்தை காலனித்துவமய நீக்கம் செய்வதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்கு


Recommended Posts

ஐக்கிய இராச்சியம் இந்துசமுத்திரத்தில் ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான அதன் ' காலனித்துவ நிருவாகத்தை மொரீசியஸ் நாட்டுக்கு அனுகூலமான முறையில் 6 மாதகாலத்திற்குள்  வாபஸ் பெறவேண்டும் ' என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் ( 193 உறுப்புநாடுகளில் 116 நாடுகள் ஆதரவாக ) கடந்த மாதம் நிறைவேற்றியது. டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க இராணுவத்தளம் அமைந்திருப்பதால் ஷாகோஸ் தீவுக்கூட்டம் நன்கு பிரபல்யமானதாக விளங்குகிறது. பொதுச்சபையின் தீர்மானம் கட்டுப்படுத்துகின்ற ஒன்று அல்ல என்றபோதிலும், அது ஐக்கிய இராச்சியத்துக்கு சினத்தை ஏற்படுத்தக்கூடியதேயாகும்.

methode_times_prod_web_bin_21f707ea-3949

 

கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள்

அமெரிக்காவுடன் கூட்டாக டியாகோ கார்சியாவில்  இராணுவத்தளத்தை அமைப்பதற்காக அந்த தீவை ஷாகோஸின் ஏனைய தீவுகளில் இருந்து தனியாக வேறுபடுத்துவதற்கு 1965 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானத்தையடுத்து ஷாகோஸ் தீவுக்கூட்டம் பல தசாப்தங்களாக மொரீசியஸுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான தகராறுக்கு காரணமாக விளங்கிவருகிறது. பிரிட்டனின் ஒரு காலனி நாடாக இருந்த மொரீசீயஸ் 1968 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தது.ஆனால், ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான இறையாண்மை தனக்கே இருக்கிறது என்று உரிமைகோரி அதைத்  திருப்பிக் கையளிக்க ஐக்கிய இராச்சியம் மறுத்தது.

இராணுவத்தளத்தை நிர்மாணிப்பதற்கு வசதியாக டியாகோ கார்சியாவில் வாழ்ந்த மக்கள் அனைவரையும் வெளியேற்றிய ஐக்கிய இராச்சியம் மொரீசியஸுக்கு இழப்பீடாக வெறுமனே 40 இலட்சம் பவுண்களை கொடுத்தது. சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு முரணாக  1967 -- 1973 காலகட்டத்தில் சுமார் 1500 ஷாகோஸ்வாசிகளை ஐக்கிய இராச்சியம் மொரீசியஸுக்கும் சீஷெல்ஸுக்கும் பலவந்தமாக அனுப்பியது ;  தங்கள் வீடுவாசல்களுக்கு திரும்பிச்செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பல தசாப்தங்களாக தகராறு நீடிக்கிறது.மொரீசியஸ் அதன் அரசியலமைப்பின் பிரகாரம்  ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாட்டுக்கு சவால்விடுத்து ஷாகோஸ் தீவுக்கூட்டம் மீதான இறையாண்மைக்கு நியாயமானமுறையில் உரிமைகோரியது.

தீவுக்கூட்டத்திலிருந்து  டியாகோ கார்சியாவை ' சட்டவிரோதமாக ' வேறாக்கி தீவுகளை ஐக்கிய இராச்சியம் பிளவுபடுத்திவிட்டதாக சர்வதேச நீதிமன்றம் இவ்வருடம் பெப்ரவரியில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பும் கட்டுப்படுத்துகின்ற ஒன்று அல்ல என்றபோதிலும், ஷாகோஸின் காலனித்துவமய நீக்கம் அரைகுறையானது என்றும் காலனித்துவமய நீக்கச் செயன்முறையை முழுமையாக்கவேண்டிய கடப்பாடு ஐக்கிய இராச்சியத்துக்கு இருக்கிறது என்றும் சர்வதேச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியது. மொரீசியஸுக்கும் தனக்கும் இடையிலான தகராறு ஒரு இருதரப்பு பிரச்சினை என்றும் அதுவிடயத்தில் சர்வதேச நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் கிடையாது என்றும் ஐக்கிய இராச்சியம் வாதிட்டது.அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

பிரிட்டிஷ் இந்துசமுத்திர நிலப்பரப்பு என்ற புதியதொரு வகையைக் கண்டுபிடித்த ஐக்கிய இராச்சியம்  ஷாகோஸ் மீது தனக்கு இறையாண்மை இருக்கிறது என்று சர்வதேச நீதிமன்றத்தில் வாதிட்டது. பயங்கரவாதம், திட்டமிட்டமுறையிலான குற்றச்செயல்கள் மற்றும் கடற்கொள்ளை ஆகியவற்றுக்கு எதிரான கடல்சார் பாதுகாப்பை வழங்குவதற்கு டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவத்தளம் அவசியமானது என்றும் கூறி ஐக்கிய இராச்சியம் ஷாகோஸ் தொடர்பான தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக வாதாடியது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப  ஐக்கிய இராச்சியம் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.அதனால், இந்த தகராறை ஐ.நா.வுக்கு கொண்டுசெல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது. ஷாகோஸ் தீவுக்கூட்டம் முழுவதன் மீதும் மொரீசியஸுக்கு இருக்கும் இறையாண்மையை இப்போது ஐ.நா.ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த தகராறில் ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஐ.நா.பொதுச்சபையின் தீர்மானமும் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. 

டியாகோ கார்சியாவில் இருந்து சகல மக்களையும் வெளியேற்றுவதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் மனித உரிமை மீறல்களுக்கு படுமோசமான ஒரு உதாரணமாகும்.ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் வளர்முக நாடுகளை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அடிக்கடி கண்டனம் செய்கின்றன. இப்போது அவ்விரு நாடுகளுமே் ஐ.நா.வில் அதே குற்வாளிக்கூண்டில் நிற்கின்றன.

மொரீசியஸ் இயல்பாகவே மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்திருக்கிறது.ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்தை பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் வரவேற்றிருக்கிறார்.மொரீசியஸை உச்சபட்சத்துக்கு ஆதரித்து நிற்குமம் ஆபிரிக்க ஒன்றியம் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட ஆபிரிக்காவின் பகுதிகள் இன்னமும் காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று கூறியிருக்கிறது.

இந்த முழு விவகாரத்திலும் பகிரங்கத்தில் பெரிதாக தெரியாத முறையில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்திருக்கிறது.மொரீசியஸுடனான இந்தியாவின் உறவுகள் தனித்துவமானவை. காலனித்துவமய நீக்கத்தில் இந்தியாவின் இந்தியா ஆற்றிவந்திருக்கும் சுறுசுறுப்பான பங்கை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் ஷாகோஸ் தீவுகள் மீதான மொரீசியஸின் உரிமைகோரலை இந்தியா உறுதியாக ஆதரிக்கும் என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. மொரீசியஸை கட்டுப்படுத்த இந்தியாமீது செல்வாக்குச் செலுத்த அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முயற்சித்தன.பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவைப்படும்வரை ஷாகோஸை திருப்பி கையளிக்கமுடியாது என்று இரு நாடுகளும் மொரீசியஸுக்கு கூறிவிட்டன. எதுவும் மாறப்போவதில்லை, ஆனால் சில வகையான இசைவுபடுத்தலை அல்லது இணக்கப்பாட்டை செய்துகொள்ள முடியும். ஒரு தற்காலிக சமரச ஏற்பாடொன்றைச் செய்துகொள்வதில் இந்தியாவினால் கணிசமான பாத்திரம் ஒன்றை வகிப்பது சாத்தியமாயிருக்கும்.

பனிப்போர் காலத்தில் இந்துசமுத்திரத்தில் இராணுவத்தளங்கள் இருப்பதை இந்தியா கடுமையாக எதிர்த்தது. கடந்த மூன்று தசாப்தங்களில் இடம்பெற்றிருக்கும் புவிசார் -- மூலோபாய மாற்றங்கள் புதிய சவால்களைத் தோற்றுவித்திருக்கின்றன ; இந்துசமுத்திரத்தில்  ஊடுருவல்களைச் செய்திருக்கும் சீனா, தெனசீனக்கடலில் சட்டவிரோதமாக தீவுகளை ஆக்கிரமித்திருக்கிறது. கடல்பரப்பில் சீனாவின் தடம்பதிப்பு அதிகரித்துவருவதால் அதற்கு எதிரீடான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை மற்றைய நாடுகளுக்கு ஏற்படுகிறது.அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உளளடக்கிய தளர்வான ஒரு கூட்டணி இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது ; அமெரிக்காவின் பசுபிக் கட்டளை மையம்  இந்தோ -- பசுபிக் கட்டளை மையம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

 திட்டமிடல், ஒழுங்கமைப்பு பரிமாற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து இந்திய -- அமெரிக்க பாதுகாப்பு உறவுகளும் கணிசமானளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கின்றன. அந்த உடன்படிக்கை இரு நாடுகளும் பரஸ்பரம் பரஸ்பரம் அவற்றின் குறிப்பிட்ட சில இராணுவ வசதிகளுக்கு செல்வதற்கான நுழைவுரிமையைக் கொடுக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த மற்றைய இருதரப்பு உடன்படிக்கை என்றால் அது தகவல் பரிமாற்ற ஒருங்கமைவு மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கையாகும்.அது இரு நாடுகளினதும் இராணுவங்களுக்கும் இடையே குறியீட்டு முறையிலான தகவல் பரிமாற்றத்துக்கு வசதி செய்கிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் டியாகோ கார்சியா தொடர்பிலும் அங்கு அமைந்திருக்கும் இராணுவத்தளம் தொடர்பிலும் இந்தியாவின் நயநுட்பமான அணுகுமுறையில் செல்வாக்கைச் செலுத்துகின்றன.

இறுதியில், இறைமை தொடர்பான பிரச்சினைக்கு  ஷாகோஸ் தீவுக்கூட்டங்கள் மீதான இறைமையை மொரீசியஸ் கொண்டிருக்க அனுமதிக்கின்றதும் டியாகோ கார்சியாவில் இராணுவத்தளம் தொடருவதை அனுமதிக்கின்றதுமான உடன்படிக்கைகளின் மூலமாகவே சாதுரியமாகத் தீர்வொன்றைக் காணவேண்டும்.இராணுவத்தளத்தை வைத்திருப்பதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நீண்டகாலத்துக்கு தீவை குத்தகைக்கு கொடுக்க மொரீசியஸ் இணங்கும்.சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஐ.நா.பொதுச்சபையின் தீர்மானத்தையும் அடுத்து ஐக்கிய இராச்சியத்தின் பாத்திரம் கூடுதலானளவுக்கு  பிரச்சினைக்குரியதாகிவிட்டது.  சற்று நிதானமாகச் சிந்தித்து  மொரீசியஸுக்கு இறைமையைக் கையளித்துவிட்டு அதேவேளை குத்தகை தொடர்பில் அமெரிக்காவுடன் ஏற்பாடொன்றைச்  செய்துகொள்வதே லண்டனுக்கு நல்லதாக அமையும்.அத்தகையதொரு ஏற்பாட்டை சாத்தியமாக்குவதில் இந்தியா முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும்.

  ( சக்கரவர்த்தி  முன்னாள் இந்தியத் தூதுவரும் வெளியுறவு அமைச்சில் செயலாளருமாவார் ) 

( இந்து )

https://www.virakesari.lk/article/58590

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் விடேல்லது, நல்ல கதை.

நாங்கள் பிரிட்டிஷ் காரர்கள். எங்களை, உலகாண்ட சிங்கத்தை கடுப்பேத்த வேண்டாம் என்று, ஐநாவுக்கு எச்சரிக்கை செய்கிறோம். 😡

Link to comment
Share on other sites

US, not UK, most threatened by Chagos row

  • Sri Lanka is a gold mine for the US and China among other regional powers because of its highly strategic location.
  • An SOFA in essence prevents US defense personnel from being prosecuted in a foreign jurisdiction where they are being hosted by party to the agreement. Such agreements are dangerous in the sense that they provide a wide range of immunities and exemptions to US personnel.
  • Now in a power tussle with the increasing influence of China in the Indian Ocean Region, the US is even more dependent on this island to contain the rise of the dragon. The US Defense Intelligence Agency has warned many times that China could deploy aircraft carriers into the IOR. Lately, China has developed its own aircraft carrier, the Shandong. With the development of this gigantic carrier, the DIA warned the US administration that China could use it primarily for regional defense missions.
  • A report by the US Defense Department, “Military and Security Developments Involving the People’s Republic of China, 2019” suggested that the People’s Liberation Army Navy (PLAN) continued submarine deployments to the Indian Ocean, demonstrating its increasing familiarity with operating in that region and underscoring China’s interest in protecting sea lines of communication (SLOCs) beyond the South China Sea. This report raised serious concerns in the Pentagon.

https://www.asiatimes.com/2019/06/opinion/pros-and-cons-of-us-sri-lanka-defense-plans/

Link to comment
Share on other sites

2016 செய்தி

இந்திய பெருங்கடல் பகுதியில் ஏராளமான சிறு தீவுகள் உள்ளன. இவற்றை ஷாகோஸ் ஆர்க்கிபெலாகோ மண்டலம் என்று அழைக்கின்றனர். இந்த மண்டலத்தில் மிகப்பெரிய தீவாக டிகோ கார்சியா தீவு விளங்குகிறது.
பவளப்பாறைகள் நிறைந்த இந்த தீவின் மொத்த பரப்பு 30 சதுர கிலோ மீட்டர் ஆகும். பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த தீவு பின்னர் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தின் பகுதியாக மாறியது. 1968ல் தீவுவாசிகள் அனைவரும் மொரீஷியஸ் தீவுக்கு மாற்றப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர். இது தொடர்பாக பிரச்னைகளும் இருந்து வருகிறது.அதன் பிறகுதான் யுஎஸ் ராணுவ மையம் இங்கு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ தளமாக டிகோ கார்சியா தீவு விளங்குகிறது.

தமிழக பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகுகள்தான் அதிகம் டிகோகார்சியா தீவு பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றன. ஆனால் இவை கேரள மாநிலம் கொச்சி, தோப்பும்படி, முனம்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடி துறைமுக பகுதிகளில் இருந்து புறப்படுகின்றன. மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ள டிகோர் கார்சியா தீவு பகுதியில் அதிக மீன்வளம் இருப்பதும், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்ற நிலையே இம்மீனவர்கள் அடிக்கடி டிகோ கார்சியா தீவு பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல காரணமாக இருந்து வருகிறது. இப்போது பிரிட்டனின் திட்டவட்ட அறிவிப்பு காரணமாக இனிவரும் காலங்களில் டிகோ கார்சியா தீவு பகுதியில் மீன்பிடிக்க சென்றால் குமரி மாவட்டம் மற்றும் கேரள மீனவர்கள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=593108

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

அதெல்லாம் விடேல்லது, நல்ல கதை.

நாங்கள் பிரிட்டிஷ் காரர்கள். எங்களை, உலகாண்ட சிங்கத்தை கடுப்பேத்த வேண்டாம் என்று, ஐநாவுக்கு எச்சரிக்கை செய்கிறோம். 😡

உலகாண்ட சிங்கத்துக்குப் பல்லுப் போனாலும்....இன்னும் சொல்லுப் போகவில்லை..போலத் தெரிகின்றது!

பரவாயில்லை.....ஐ.நாவுக்குப்  பல்லுமில்லை....சொல்லுமில்லை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/20/2019 at 3:10 AM, புங்கையூரன் said:

உலகாண்ட சிங்கத்துக்குப் பல்லுப் போனாலும்....இன்னும் சொல்லுப் போகவில்லை..போலத் தெரிகின்றது!

பரவாயில்லை.....ஐ.நாவுக்குப்  பல்லுமில்லை....சொல்லுமில்லை...!

இண்டைக்கு உலகத்தில, முன்னம் நிக்கிற நாடுகள் எல்லாம், இந்த சிங்கத்தின்ரை தானே....

அமேரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நீயுசீலாந்து....

ஆப்கோஸ்...

பிரிட்டன்... இந்தியா...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.