Jump to content

தடுப்பூசிகளுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் என்னென்ன?


Recommended Posts

தடுப்பூசிகள் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றுகின்றன. இப்படித்தான் இவை வந்தன. இதனால் தான் இது மிகவும் முக்கியமானதாகிறது.

 

கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் "தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்" போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள் இனங்கண்டுள்ளனர்.

தடுப்பூசிகள்

உலக சுகாதார நிறுவனம் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பத்து சுகாதார அச்சுறுத்தல்களில் இதையும் பட்டியலிட்டுள்ளது.

 

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

தடுப்பூசிகள் தோன்றுவதற்கு முன், நோய்களால் உலகம் மிகவும் அபாயகரமான இடமாக இருந்தது. இன்றைய அளவில் தடுக்கப்படக் கூடிய நோய்கள் காரணமாக ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் மரணமடைந்து வந்தனர்.

சீனர்கள்தான் முதன்முறையாக தடுப்பூசிகளின் முதலாவது வடிவமான அம்மை குத்துதலை கண்டுபிடித்தனர். இதன்படி, ஆரோக்கியமான நபருக்கு நோய்வாய்ப்பட்ட திசுவை புகுத்தி அவருக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே இந்த நுட்பம்.

எட்டு நூற்றாண்டுகள் கழித்து பிரிட்டிஷ் டாக்டர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், பால் கறந்து விநியோகம் செய்யும் பெண்களுக்கு லேசான பசுஅம்மை நோய் தாக்குதல் ஏற்படுவதையும் அவர்களுக்கு மிகவும் அரிதாகவே பெரியம்மை தாக்குவதையு கண்டார்.

பெரியம்மை மிகவும் கொடுமையான தொற்றுநோய். இந்த நோய் தாக்கியவர்களில் 30 சதவீதத்தினர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தோர் பெரும்பாலும் உடல் நிறைய தழும்புகளைக் கொண்டிருந்தனர். அல்லது பார்வையிழந்திருந்தனர்.

1796ஆம் ஆண்டு ஜென்னர், எட்டு வயது நிரம்பிய ஜேம்ஸ் பிப்ஸ் மீது சோதனையை மேற்கொண்டார்.

பசு அம்மையின் புண்ணில் இருந்து சீழினை அந்த சிறுவனிடம் செலுத்தினார். அவன் உடலில் உடனடியாக அறிகுறிகள் தென்பட்டன.

இதனால் கிடைத்த வெற்றி என்ன?

பிப்ஸ் குணமடைந்ததும், அவன் மீது பெரியம்மை கிருமியை செலுத்தினார். ஆனால் அவன் ஆரோக்கியமாக இருந்தான். பசு அம்மை அவனை பெரியம்மை நோயின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியது.

1798ஆம் ஆண்டு இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இருந்துதான் வேக்சின் (VACCINE) என்ற சொல் உருவானது. Vacca என்ற சொல் லத்தீன் மொழியில் பசு என்று பொருள். அந்த சொல்லிலிருந்துதான் வேக்சின் என்ற சொல் உருவாக்கப்பட்டது.

இதனால் கிடைத்த வெற்றி என்ன?

கடந்த நூற்றாண்டில் பல நோய்களின் தாக்கத்தை வெகுவாக குறைக்க இந்த தடுப்பூசிகள் உதவின. 1960களில் முதன் முறையாக தட்டம்மை நோய்கு எதிரான தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பு வரை, சுமார். 26 லட்சம் பேர் ஆண்டு தோறும் தட்டம்மையால் உயிரிழந்து வந்தனர்.

தடுப்பூசிகள் காரணமாக 2000 முதல் 2017 வரை 80 சதவீத தட்டம்மை நோய் மரணங்கள் குறைந்தன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

தடுப்பூசிகள் எப்படி வேலை செய்கின்றன

சில பத்தாண்டுகள் முன்னர் வரை, போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு முடக்குவாதம் அல்லது மரணம் ஏற்பட்டு வந்தது மிகவும் கவலையளித்த ஒன்றாக அமைந்தது. இப்போது போலியோ நோயே இல்லாமல் போய்விட்டது.

சிலர் ஏன் தடுப்பூசி வேண்டாம் என்கிறார்கள்?

தடுப்பூசிகள் குறித்த சந்தேகம் நவீன ஊசி மருந்துகள் மீதான சந்தேகம் போன்றே இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு மத ரீதியான காரணங்களால் பயந்து இருந்தனர். தடுப்பூசிகள் சுத்தமில்லாதவை என்றும், அவர்கள் கருதினார்கள். தடுப்பூசி போட வேண்டுமா வேண்டாமா என்ற தங்கள் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்ட சந்தேகமாக இது அமைந்தது.

1800களில் தடுப்பூசிகள் எதிர்ப்பு அணிகள் பிரிட்டன் முழுவதும் தோன்றின, இதன் காரணமாக தடுப்பூசிகளுக்க மாற்றாக மாற்று மருந்துகளை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். நோயாளியை தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

1870களில் முதலாவது தடுப்பூசி எதிர்ப்பு குழு அமெரிக்காவில் பிரிட்டிஷ் தடுப்பூசி எதிர்ப்பாளர் வில்லிம் டெப் என்பவரால் தொடங்கப்பட்டது.

சமீபத்திய வரலாற்றில் தடுப்பூசியை எதிர்த்த முக்கியமான நபர்களில் ஒருவர் ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட்

1998ல் லண்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எம்.எம்.ஆர். தடுப்பூசியுடன் ஆட்டிசம் மற்றும் குடல் நோய்க்கு வழிவகுக்கிறது என்று தவறான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தடுப்பூசி என்றால் என்ன

எம்.எம்.ஆர். என்பது இளம் குழந்தைகளுக்கு தட்டம்மை, தாளம்மை மற்றும் ரூபெல்லா அல்லது ஜெர்மனி தட்டம்மையின் தாக்குதலுக்கு எதிராக செலுத்தப்படுகிறது.

அவரது ஆய்வறிக்கை புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வேக்ஃபீல்ட்டின் பெயர் இங்கிலாந்தின் மருத்துவர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டாலும், இங்கிலாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

2004ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்தில் 10000 குழந்தைகள் எம்.எம்.ஆர். தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவில்லை. இதன் காரணமாக தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தடுப்பூசிப் பிரச்சினை பெரும்பாலும் அரசியல் படுத்தப்பட்டு வருகிறது.

இத்தாலியின் உள்துறை அமைச்சர் மேட்டியோ சால்வினி, தடுப்பூசி எதிர்ப்பு குழுக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எவ்வித ஆதாரமும் இன்றி, தடுப்பூசிகளை ஆட்டிசம் நோயுடன் இணைத்தார். ஆனால் மிக சமீபத்தில் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிகள் மீதான மனப்போக்கு தொடர்பான சர்வதேச ஆய்வு ஒன்று, தடுப்பூசிகள் மீதான மக்களின் நமபிக்கை பொதுவாக நன்றாக உள்ளதாக தெரியவந்தாலும், ஐரோப்பாவின் பகுதிகளில் இந்த நம்பிக்கை மிகவும் கீழே உள்ளதும், பிரான்சில் இந்த நம்பிக்கை மிகவும் குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

ஆபத்துகள் என்ன?

மக்களில் அதிக அளவிலானோருக்கு தடுப்பூசி போடப்படும்போது இந்த நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த நோய் பாதிக்கக்கூடிய ஆபத்து உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு திறன் மேம்படாமல் இருப்பவர்களுக்கும் இந்த நோய் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.

ஆபத்துகள் என்ன?

இதற்கு மந்தை நோய் எதிர்ப்புத்திறன் என்று பெயர். இது உடையும் போது மக்கள் தொகையில் பலருக்கும் இந்த நோய் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது.

இந்த இனக்குழு / மந்தை நோய் எதிர்ப்புத்திறனை பராமரிக்க, மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க விகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது நோய்க்கு நோய் மாறுபடுகிறது. தட்டம்மைக்கு இது 90% ஆக இருக்கும் நிலையில் குறைந்த தொற்றுத் தன்மை கொண்ட போலியோவிற்கு 80% ஆகும்.

அமெரிக்காவில் புரூக்ளினில் பழமைவாத யூதர் சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு தடுப்பூசிகளுக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறும் தவறான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன..

இதே சமூகத்தினரிடையே தான் அமெரிக்காவில் தட்டம்மை பெரிய அளவில் பரவும் மையமாக கடந்த பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.

தடுப்பூசிகளுக்கு எதிரான பொய் பிரசாரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பெருமளவு பரப்பப்பட்டு மக்கள் முட்டாளாக்கப்படுவதாக இங்கிலாந்தின் மிகவும் மூத்த மருத்துவர் கடந்த ஆண்டு எச்சரித்து இருந்தார். அமெரிக்க ஆய்வாளர்களும், தடுப்பூசிகளுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை ரஷ்யர்கள் போலியாக இயக்கும் சமூகவலைத்தள கணக்குகள் மூலம் பரப்பப்படுவதை கண்டறிந்தனர்.

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் விகிதாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக 85 சதவீதத்திலேயே மாறாமல் இருந்தது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆண்டுதோறும் தடுப்பூசிகள் காரணமாக உலகெங்கும் இருபது முதல் முப்பது லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

தடுப்பூசிகளுக்கு மிகப்பெரிய சவால்களை வழங்கும் நாடுகள் மற்றும் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வோரின் குறைந்த விகிதமும் உள்ள நாடுகள் வரிசையில், போர் மற்றும் குறைந்த சுகாதார பேணல் முறை உள்ள நாடுகள் இடம்பெறுவது தெரியவந்துள்ளது. இது ஆப்கானிஸ்தான், அங்கோலா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு போன்ற நாடுகளாகும்.

ஆனால், வளர்ந்த நாடுகளில் முக்கிய பிரச்சினை அவை தன்னிறைவு உணர்வுடன் இருப்பதுதான் என்று உலக சுகாதார நிறுவனம் இனம் கண்டுள்ளது. இன்னும் தெளிவாக சொன்னால், மக்கள் ஒரு நோய் என்ன தீங்கினை விளைவிக்கும் என்பதை மறந்துவிட்டதுதான்.

https://www.bbc.com/tamil/science-48688583

 

Measles vaccine fears cost me my children

As cases of measles soar globally, the Philippines is facing a major outbreak.

Since a controversy over a dengue fever vaccine, confidence has fallen in the country's immunisation programmes.

Arlyn B. Calos told the BBC that misinformation on television and social media led her to ignore government advice to have her children vaccinated against measles, a decision she hopes no other parents make.

https://www.bbc.com/news/av/world-asia-48644136/measles-vaccine-fears-cost-me-my-children

Link to comment
Share on other sites

 

 

ஏன் தடுப்பூசி போட வேண்டும்? - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து 140 விநாடிகளில் விளக்குகிறது இந்த காணொளி. தடுப்பூசி குறித்து நிச்சயம் இதுவொரு புரிதலை வழங்கும்.

https://www.bbc.com/tamil/global-48697635

Link to comment
Share on other sites

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்

தடுப்பூசிகள் மீதான உலகின் பிற்போக்குத்தனமான செயல்பட்டால், நோய் கிருமிகளின் மூலம் பரப்பப்படும் உயிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களை தடுக்க வாய்ப்பிருந்தும் முறியடிக்க முடிவதில்லை என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய்த்தடுப்பு ஊசிகள் குறித்த மக்களின் மனப்பான்மையை அறிவதற்காக நடத்தப்பட்ட உலகளவிலான ஆய்வில் பல பிராந்தியங்கள் மிகவும் குறைவான நம்பகத்தன்மையை பதிவு செய்துள்ளன.

உலகிலுள்ள 140க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1,40,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பு மேற்கொண்டது.

உலகளவில் சுகாதாரத்துறைக்கு இருக்கும் முக்கியமான 10 அச்சுறுத்தல்களாக ஐநாவின் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள பட்டியலில், தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் இருக்கும் தயக்கமும் இடம்பெற்றுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் சிறிதளவு நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் பாதுகாப்பானதா என்று கேட்டபோது,

  • 79% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்புவதாக தெரிவித்தனர்.
  • 7% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்பவில்லை
  • 17% பேர் தெளிவுற பதிலளிக்கவில்லை.

தடுப்பூசிகள் வேலை செய்ததாக நம்பினார்களா என்று கேட்டபோது,

  • 84% பேர் சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நம்புவதாக தெரிவித்தனர்.
  • 5% சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நிராகரித்தனர்.
  • 12% பேர் தெளிவுற பதிலளிக்கவில்லை.

இது ஏன் முக்கியமானது?

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தட்டம்மை போன்ற கொடிய மற்றும் பலவீனப்படுத்தும் தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பூசி சிறந்த பாதுகாப்பாகும் என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்றுகள் உள்ளன.

தடுப்பூசிகள் உலகெங்கிலும் உள்ள பில்லியன்கணக்கான மக்களைப் பாதுகாக்கின்றன. பெரியம்மை எனும் நோயிலிருந்து உலகம் முற்றிலுமாக விடுபட்டுள்ளதுடன், போலியோ போன்றவற்றை உலகிலிருந்து முற்றிலுமாக நீக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளது.

ஆனால்,பயம் மற்றும் தவறான தகவல்களால் மக்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதை தவிர்ப்பதால் அம்மை போன்ற வேறு சில நோய்கள் மீண்டும் எழுச்சி பெறுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலைமை தீவிரமாக உள்ளதாக கூறுகிறார் ஐநாவின் உலக சுகாதார மையத்தின் நோய்த்தடுப்பு நிபுணர் டாக்டர் ஆன் லிண்ட்ஸ்ட்ராண்ட்.

"தடுப்பூசியின் மூலம் தடுக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்துவதில் உலகம் கண்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றத்தை, தடுப்பூசியை போட்டுக்கொள்வதிலுள்ள தயக்கம் மட்டுப்படுத்துகிறது" என்று அவர் கூறுகிறார்.

"உலகிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கும் சில நோய்கள் மீண்டும் தலைத்தூக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத பின்னடைவு."

தட்டமையின் நிலவரம் என்ன?

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தட்டமையை முற்றிலுமாக நீக்கும் நிலையை நெருங்கிய பல நாடுகளில் திடீர் பின்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும் தடுப்பூசி போடுவதை தவிர்க்க நினைத்தால் அது அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும்.

தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட மக்களின் எண்ணிக்கை பெரும்பான்மையை தொட்டுவிட்டால், அது மேலும் பரவுவதை தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த பகுதியில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது?

அதிக வருமானத்தை கொண்டவர்கள் வசிக்கும் பிராந்தியங்கள் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே குறைந்த நம்பகத்தன்மை நிலவி வருகிறது.

எடுத்துக்காட்டாக, இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் ஒரு பிரான்ஸ் நாட்டு மக்கள் தாங்கள் தடுப்பூசியை நம்புவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, தடுப்பூசிகள் மீதான குறைந்த நம்பகத்தன்மையில் பிரான்ஸ்தான் முதலிடம் வகிக்கிறது.

இதன் காரணமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து எட்டாக அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதே போன்று, பிரான்ஸுக்கு அருகிலுள்ள நாடான இத்தாலியில் நோய்த்தாக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளியில் படிப்பதை தடைசெய்யும் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தடை விதிக்கம் சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. இத்தாலியில் 76 சதவீத மக்கள் தடுப்பூசிகளை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு, 2019ஆம் ஆண்டின் முதல் பாதிப் பகுதி வரை, அமெரிக்காவின் 26 மாநிலங்களில் 980 தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவிலும், வட மற்றும் தென் ஐரோப்பாவிலும் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் தடுப்பூசியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்கு ஐரோப்பாவில் 59% மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 50% பேர்தான் நம்பகத்தன்மை தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு ஐரோப்பியாவிலேயே அதிகமாக 53,218 தட்டம்மை பாதிப்புகளை பதிவு செய்திருந்த உக்ரைன் மக்கள் தடுப்பூசிகள் மேல் 50 சதவீத நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நம்பகத்தன்மை மிக்க பகுதிகள்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று இந்த கருத்துக்கணிப்பின்போது தெரிவித்துள்ளனர். அதாவது, உலகிலேயே அதிகபட்சமாக தெற்காசியாவை சேர்ந்த 95 சதவீத மக்கள், அதற்கடுத்த இடத்தை 92 சதவீதத்துடன் கிழக்கு ஆப்ஃரிக்காவும் பெற்றுள்ளது.

வங்கதேசமும் ருவாண்டாவும் மக்களுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் பல சவால்கள் இருந்தபோதிலும் மிக உயர்ந்த நோய்த்தடுப்பு விகிதங்களை அடைந்துள்ளன.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றான ருவாண்டா இளம்பெண்களை கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசியை நாடு முழுவதும் வழங்கியதில் உலகின் முதல் நாடாக உருவெடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையின் நிலவரம்

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதே கருத்துக்கணிப்பு இந்தியா மற்றும் இலங்கையிலும் நடத்தப்பட்டது.

95 சதவீத இந்தியர்கள் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 98 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 91 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரை, 95 சதவீத்தினர் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 95 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 95 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களை அச்சமடைய வைப்பது எது?

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைARUN SANKAR

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் குறித்த நேர்மறையான பார்வையை கொண்டுள்ளதாக இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே குறைந்த நம்பகத்தன்மை உள்ளது தொடர்பாக குறிப்பிட்ட எந்த ஒரு காரணமும் இந்த கருத்துக்கணிப்பில் வாயிலாக அறியப்படவில்லை.

அனைத்து விதமான மருந்துகளும் பக்கவிளைவுகளை கொண்டுள்ளன. ஆனால், தடுப்பூசிகள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.

ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் குறித்து இணையதளம் வாயிலாக பரப்பப்பட்ட போலிச் செய்திகள் மக்களிடையே அதுகுறித்த எதிர்மறையான எண்ணவோட்டத்தை ஏற்படுத்தியதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

"தடுப்பூசிகள் குறித்த மக்களிடையேயான தயக்கத்தையும், அச்சத்தையும் போக்குவதற்கு மக்களின் அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதிலளிக்க தெரிந்த மருத்துவ பணியாளர்களே மிகவும் அவசியம்" என்று மருத்துவர் லிண்ட்ஸ்ட்ராண்ட்.

https://www.bbc.com/tamil/science-48710011

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.