Jump to content

மொழியிழந்த முகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                    மொழியிழந்த முகம்

                                              -சுப.சோமசுந்தரம்

                 களையிழந்த முகம் அல்லது ஒளியிழந்த முகம், புரிகிறது. அது என்ன மொழியிழந்த முகம்? முன்னது தானே சரியாகலாம் அல்லது எளிதில் சரி செய்யலாம். பின்னது கிட்டத்தட்ட உயிரிழந்த உடல் போல. இதயத் துடிப்பு நின்றபின் சிறிய கால அவகாசத்தில் உயிர்ப்பிப்பது போல் குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய முயலலாம் என்பது நம் எண்ணம். சரி, கதைக்கு வருவோம்.

                  நமது பரிதாபத்துக்குரிய கதாநாயகன் சுஷாந்த். அப்படித்தான் இவன் அப்பனும் ஆத்தாளும் பெயர் வைத்தார்கள். ஸ,ஷ,ஹ,ஜ இல்லாத பெயருக்குப் பரலோகத்தில் இடமில்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள். பெயர் முடிவில் sudden brake வேறு (ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்). பெரிய மனது பண்ணி இவனை ‘ஷா’வோடு விட்டார்கள். பயலுக்குத் திரிசங்கு சொர்க்கம்தான். நம்மில் நிறைய பேருக்கு அப்படித்தான்.

                  பால காண்டம் ஆரம்பம். உரிய பருவத்திற்கு முன்பே பள்ளியில் சேர்த்தார்கள். இப்போது அதுதான் உரிய பருவமாம். இவன் பிறக்கும் முன்பே ஆண் குழந்தை பெயரிலொன்றும் பெண் குழந்தை பெயரிலொன்றுமாக அம்மேதகு பள்ளியில் இடம் பிடித்து வைத்திருந்தார்கள் போலும். நன்றாகத்தான் படித்தான். நல்ல பிள்ளைகள் அப்படித்தான் செய்வார்களாம். ஆகையால் பெற்றோர், ஆசிரியர் கொடுமையிலிருந்து இவனது இளமைப்பருவம் ஓரளவு தப்பியது. ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதோ செத்துப் போன மொழியைப் படித்தான்; இல்லை,அவ்வாறாக விதிக்கப்பட்டான். தாய்மொழியை விடுத்துப் பிற மொழிகள் கற்றதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பயன்பாட்டில் இல்லாத மொழியைப் படிப்பதில் உள்ள (அ)நியாயமும் நமக்குப் புரியவில்லை. உயிரற்ற உடலாய் ஆக உயிரற்ற மொழிதான் பொருத்தமோ?

                    ஒரே பாட்டில் ஏழைக் கதாநாயகன் பணக்காரன் ஆவதைப் போல், ஒரே மூச்சில் நமது நாயகனின் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை முடித்து விடுவோமா? இன்றைக்கு உள்ள அலங்கோலத்தில், பாடல் பெற    பள்ளி வாழ்க்கையெல்லாம் காவியங்களா என்ன? கடிவாளம் போட்டு வளர்ந்த குதிரைக்கு, கிரேக்க புராணங்களில் உள்ளது போல் இறக்கை முளைத்தது; கற்பனைக் குதிரை தானே! நாயகன் பிறவிப்பயன் அடைய அமெரிக்கா சென்றான். அங்கு அலுவலகத்திலும், அதன் காரணமாக வாழிடத்திலும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினருடன் வாழ, பழக நேர்ந்தது இவனது அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் எல்லாம். ஏனெனில் அவர்கள் மொழியைத் தொலைக்கவில்லை அல்லது அவர்களிலும் மொழியைத் தொலைத்தவர்களை இவன் சந்திக்கவில்லை. இவனைப் பொறுத்தமட்டில் தொன்மையான தமிழ் வெறும் பேச்சு மொழி மட்டுமே. மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமா என்ன? அதற்கு உயிர் உண்டு;உணர்வு உண்டு. இதனை வெளியுலகம் பார்த்தே தெரிந்து கொண்டான். மாற்றம் ஒன்றே மாறாதது என்று சிறு குழந்தையே சொல்கிறது. சக்கரம் சுழலத்தானே வேண்டும்? சுழன்று விட்டது. தாய்மொழி தெரியாது என்று தமிழன் மார்தட்டிய காலம் இருண்ட காலமானது. மனிதன் எத்துணைக் காலம் தான் உணர்வற்ற உயிராக அல்லது உயிரற்ற உடலாக இருப்பான்? தாய்த் தமிழகத்திலேயே இருந்த வரை உறைக்கவில்லை. வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும் போது, ‘உன் மொழி என்ன?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தமிழ் என்றதும், “அப்படியா! எங்கே, என் பெயரை உன் மொழியில் எழுதிக் காட்டு!” என்பது போன்ற ஆர்வக் கோளாறு நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. அந்த நேரத்தில் இவனது முழி இருக்கிறதே! ‘இந்த வெள்ளையரும் நம்மைக் கேவலமாய்ப் பார்க்கிறார்களோ!’ என்ற பிரமை வேறு ஏற்பட்டுத் தொலைக்கிறது. அவர்களில் சிலர் தமிழின் சிறப்புகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகையில் தன் மானம் கண் காணாத் தேசத்திற்குக் கப்பலேறுவதைப் போன்ற உணர்வு. இவன் ஆங்கிலம், இந்தி, தேவ பாடை (பாடை கட்டி தேவலோகத்திற்கு எடுத்துச் சென்றதுதான் பெயர்க் காரணமோ!) என்று படித்துத் (படிப்பைத்) தொலைத்தவன். வெளி மாநிலத்தில் வாழ்ந்திருந்தால் பரவயில்லை; இவனோ தமிழ் நிலத்திலேயே வளர்ந்து தமிழைத் தொலைத்தானே! மாமரத்தில் கூடு கட்டி மாங்கனியைச் சுவைக்காத புள்ளினம் நம் நாயகன் சுஷாந்த்! இவனது தாய்மொழியின் அழகான ‘ழ’வை இவன் பார்த்ததில்லை. தன் மொ’ழி’யில் இவனுக்கு அ’ழ’த் தெரியும். விழத் தெரியும். எழத் தெரியாது; எழுத்தும் தெரியாது. இவனது இலங்கைத் தமிழ் நண்பர்கள் சிலருக்கு சங்க இலக்கியமும் சங்கம் மருவிய இலக்கியமும் பேசத் தெரியும். அதைக் கேட்டு இவனுக்கு ஏக்க பெருமூச்செறியத் தெரியும். இவையனைத்திலும் தன் தவறேதும் இல்லை என்பதால், தாய்-தந்தை உட்பட முந்தைய தலைமுறைச் சமூகத்தை மரியாதையாய் வசவு பாடச் சொல்கிறது இவன் மனம். நம் தலைமுறை தம் சந்ததியிடம் இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக வாங்கிக் கட்டுவதைப் பார்த்தால், என்னவொரு அளப்பரிய ஆனந்தம்!

                      ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை இவன் பார்க்க நேர்ந்தது. அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் மாணவப் பருவக் கவிஞர்களை வைத்து வெள்ளை மாளிகையில் அன்றைய அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அன்று அந்நிகழ்ச்சியில் அமெரிக்கர்களைக் கவர்ந்த பதினேழு வயது மாணவி மாயா ஈஸ்வரன், தனது பாலக்காட்டு வேர்களை அமெரிக்காவில் தொலைத்த புலம் பெயர்ந்த தமிழச்சி. தன் கவிதையை உணர்வு பொங்க வாசித்தாள். அதில் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். அனைவரையும் கவர்ந்த வரிகள், “எனது அடையாளம் உதிர ஆரம்பித்தது - முடி உதிர்வதைப் போல. கூந்தலை முழுவதும் இழந்து போகும் பீதி என் மனதில்.” கவிதையைக் கேட்டு மிச்சேல் ஒபாமாவே உணர்ச்சி வசப்பட்டார். தாமும் அந்த ரகம் தான் என நினைத்திருப்பாரோ? கவிதையைக் கேட்ட சுஷாந்த் வாயடைத்துப் போனான். இவன் விழியின் ஓரம் நீர்த்துளி பேசியது. அக்கண்ணீர்த் துளிக்கான காரணம் அக்கவிதையா? கவிதை சொன்ன அப்பெண்ணா? மிச்சேல் ஒபாமாவா? இவனது பெற்றோரா? பெற்றோரின் மனவோட்டத்தை இயக்கும் சமூகமா?

                        இவன் நிலையில் எல்லோரும் ஏங்குவதில்லை. மாயாவைப் போல் இவன் ஏங்கினான். நம் தலைவனாயிற்றே! இவனது ஏக்கத்தைப் புரிந்த தமிழ் நண்பனொருவன் சொன்னான், “நண்பா! At any point in life, it’s never too late. வார விடுமுறையில் ஒரு மணிநேரம் சொல்லித் தருகிறேன். இவ்வளவு ஆர்வமும் ஏக்கமும் உள்ள உன்னைத் தமிழும் தேடுகிறது என நினைக்கிறேன்.” முதல் வகுப்பில் நம் தலைவன் ஒரு தட்டில் அரிசி பரப்பி (அவன் பாட்டி சொல்லித் தந்த சடங்கியல்) எழுதினான் ‘அ’. உடனே அம்மா,அப்பா.......என்றெல்லாம் எழுதி, “அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி!.......” என்று பாடவில்லை. ‘அ’ வுக்குப் பின் ‘ஆ’ தான் எழுதினான். இப்போது ‘சுபம்’ என்று நிறைவுத் திரை போட்டால் சரியாக இருக்கும்.                            

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.