Jump to content

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்

June 19, 2019

 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது. நாளை(20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில்  குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் போராட்டமானது பொதுப்போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவசரகால சட்ட விதிகளுக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் என காவல்துறையிடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை மேலும் வலுவடைந்துள்ள இப்போராட்டமானது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அரசை கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் 17 ஆம் திகதி கல்முனையில் ஆரம்பமாகிநடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#கல்முனை #உண்ணாவிரதப்போராட்டம் #முறைப்பாடு #பிரதேச செயலகத்தை

(பாறுக் ஷிஹான்)

 

http://globaltamilnews.net/2019/124697/

தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் சத்தியாகிரகம் போராட்டம்….

June 20, 2019

k01.jpg?resize=800%2C600

தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இன்று(20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று கூடிய அப்பிரதிநிதிகள் இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி சத்தியாகிரகம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தை அரச சார்பற்ற பல்வேறு அமைப்புகளுடன் மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக கல்முனை வர்த்தக சமூகம் பங்கெடுத்துள்ளது.#சத்தியாகிரகப்போராட்டம் #முஸ்லிம்பிரதிநிதிகள் #கல்முனை #தமிழ்பிரதேசசெயலகம்

k05.jpg?resize=800%2C480k04.jpg?resize=800%2C600k02.jpg?resize=800%2C600

பாறுக் ஷிஹான்

 

http://globaltamilnews.net/2019/124742/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கும் இடத்தை மேம்படுத்து என ஒருவன் போராடுகிறான்.

  அந்த இடத்தை  மேம்படுத்தாதே என பக்கத்திலிருப்பவன் உண்ணாவிரதம் இருக்கிறான் .

அல்ஹம்துலில்லாஹ் , மாசா அல்லா , யா அல்லா ,  அஸ்லாமு அலைக்கும் வரைக்காத்துஹு   ( எனக்குத்  தெரிந்த சில அரபித் தமிழ் ) 

என்னப்பா நடக்குது இங்கே  !!

அதி மேதாவி யாரிடமாவது தான் இதனை விட வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு அடி விழுந்த போது பரிந்து பேச வந்த தமிழர்கள் யாரையும் இங்கு காணோமே அவர்களின் முஸ்லிம் சகோதரர்களிடம் ஆதரவு கோரி ஒரு அறிக்கை விட.

கல்முனை நகர் உட்பட பல பகுதிகள் தமிழ் மக்களின் வாழ்விடங்களாக இருந்தன. 

கடந்த காலங்களில் தொடர் முஸ்லிம் பயங்கரவாதத்தால்.. படுகொலை செய்யப்பட்டும்.. விரட்டி அடிக்கப்பட்டும்.. தமிழர்கள் அற்ற பிரதேசமாக்கப்பட்டு.. இன்று மிஞ்சி இருக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு விடிவும் வரக்கூடாது என்று எண்ணும்.. இந்தக் கொடியவர்களை என்னென்பது.

ஒரு நிலத்தொடர்பும் அற்று குறிச்சிகளாக வாழும்.. முஸ்லிம்கள் மட்டும் கிழக்கில்.. தனி அலகுக்கு என்ன தகுதி பெற்றுள்ளனர். காத்தான்குடி என்ன.. அரபிக்கடலுடன் இணைந்தா இருக்கிறது. 

ஆக.. காணி பறிப்பு.. தமிழ் மக்கள் விரட்டி அடிப்பு..என்பவை எல்லாம்.. தமிழ் மக்களை நிரந்தர.. நிலத்தொடர்பற்றவர்களாக மாற்ற திட்டமிட்டு இந்த முஸ்லிம் பயங்கரவாதத்தால் செயற்படுத்தப்படும் ஒரு விடயமாகும். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் மதவாதப் பயங்கரவாதிகளால். 

இது இன்று கிழக்கில் இருந்து வடக்கு நோக்கியும் விரைந்து செயற்படுத்தப்படுவதும்.. வடக்கு யாழ் பல்கலைக்கழகம்.. கிழக்குப் பல்கலைக்கழகங்கள் முஸ்லிம்.. மற்றும் சிங்கள மயமாக்கப்படுவதும்.. தமிழ் மக்கள் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளதையே இனங்காட்டுகிறது. ஆனால்.. தமிழ் அரசியல்வியாதிகள்.. பேசாமடைந்தைகளாக உலா வருகின்றனர்.

எனி தமிழ் மக்கள் தான் விழித்தாக வேண்டும். இன்றேல்.. இலங்கைத் தீவில் அவர்களின் இருப்பு மிக விரைவில் காலி செய்யப்பட்டு விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201712

அரசியல்வாதியள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.