Jump to content

பிஸிநெஸ் ஐடியா


Recommended Posts

"பெரிய கம்பனிகளின் சி.ஈ..ஓக்களுடன் பேசவேண்டும் என்றால் காலை ஏழரை முதல் எட்டு மணிக்குள் அவர்கள் ஆபிசுக்கு போனை போடுவேன். கம்பனிகளுக்கு வரும் முதல் ஆள் சி.ஈ.ஓ தான். அவர்களின் செக்ரட்டரியே கூட லேட்டாக தான் வருவார். அதனால் போனை போட்டால் நேராக அவரிடமே பேசிவிடலாம்.

ஒரு முறை எனக்கு வேலை போய்விட்டது. ஒரு கம்பனி துவக்கலாம் என நினைத்தேன். பணம் இல்லை. காலையில் ஆறரை மணிக்கு ஒரு காபிகடைக்கு போனேன். பிளாஸ்க் நிறைய காபி, இன்னொரு பிளாஸ்கில் டீ வாங்கினேன். அதன்பின் வால் ஸ்ட்ரீட் போய் ஒவ்வொரு கம்பனியாக நுழைந்தேன்.

அதிகாலையில் முக்கியமான ஆட்கள் மட்டும் தான் கம்பனியில் இருப்பார்கள் என நினைத்தேன். போய் கம்பனியில் அந்நேரத்துக்கு யார் உட்கார்ந்து இருந்தாலும் "காப்பி வாங்கிட்டு வந்திருக்கேன். வாங்க சாப்பிட்டுட்டே பேசலாம். ஒரு நல்ல பிசினஸ் ஐடியா இருக்கு" என்றேன். ஆறரை மணிக்கு ஒருவன் காபியுடன் வந்து அழைத்தால் யார் மறுப்பார்கள்?

ஒரு பெரிய டிரேடிங் கம்பனியின் பார்டன்ருடன் பேசியதில் ஐடியா பிடித்துபோய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் தான் தெரிந்தது..அவரிடம் அப்பாயிண்மெண்ட் வாங்கிக்கொன்டு போய் சந்தித்திருந்தால் ஆறு மாதத்துக்கு அபாயிண்மெண்ட் கிடைத்திருக்காது என. முதலில் அவரது செக்ரட்டரியின் அபாயிண்மெண்டே எனக்கு கிடைத்திருக்காது. ஆறரை மணிக்கு காபியுடன் போனதால் அவரை வளைத்து பிடித்தேன். 

முதலில் அவர் "எனக்கு காபி பிடிக்காது, டீ தான் பிடிக்கும்" என்றார். "இந்த பிளாஸ்கில் டீ இருக்கு" என்றேன். "பால் சேர்த்த டீ தான் வேண்டும்" என்றார். க்ரீமரை பாக்கட்டில் இருந்து எடுத்து காட்டினேன்.."தயாராக தான் வந்திருக்கிறாய்" என சிரித்தபடி என்னுடன் உட்கார்ந்து பேசினார். பணம் கிடைத்தது.கம்பனி துவக்கினேன்..$20 பில்லியன் சம்பாதித்தேன்..இன்று நான் உலக கோடீஸ்வரர்களில் ஒருவன். காரணம் அதிகாலையில் காபி பிளாஸ்குடன் கம்பனி, கம்பனியாக ஏறி முன், பின் தெரியாதவர்களுடன் பேச நான் கூச்சபடாமல் இருந்ததுதான்"

-> தொழிலதிபர் ப்ளூம்பெர்க்

நியான்டர்செல்வன்

Link to comment
Share on other sites

On 6/19/2019 at 11:04 PM, அபராஜிதன் said:

ஒரு பெரிய டிரேடிங் கம்பனியின் பார்டன்ருடன் பேசியதில் ஐடியா பிடித்துபோய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் தான் தெரிந்தது..அவரிடம் அப்பாயிண்மெண்ட் வாங்கிக்கொன்டு போய் சந்தித்திருந்தால் ஆறு மாதத்துக்கு அபாயிண்மெண்ட் கிடைத்திருக்காது என. முதலில் அவரது செக்ரட்டரியின் அபாயிண்மெண்டே எனக்கு கிடைத்திருக்காது. ஆறரை மணிக்கு காபியுடன் போனதால் அவரை வளைத்து பிடித்தேன். 

முதலில் அவர் "எனக்கு காபி பிடிக்காது, டீ தான் பிடிக்கும்" என்றார். "இந்த பிளாஸ்கில் டீ இருக்கு" என்றேன். "பால் சேர்த்த டீ தான் வேண்டும்" என்றார். க்ரீமரை பாக்கட்டில் இருந்து எடுத்து காட்டினேன்.."தயாராக தான் வந்திருக்கிறாய்" என சிரித்தபடி என்னுடன் உட்கார்ந்து பேசினார். பணம் கிடைத்தது.கம்பனி துவக்கினேன்..$20 பில்லியன் சம்பாதித்தேன்..இன்று நான் உலக கோடீஸ்வரர்களில் ஒருவன். காரணம் அதிகாலையில் காபி பிளாஸ்குடன் கம்பனி, கம்பனியாக ஏறி முன், பின் தெரியாதவர்களுடன் பேச நான் கூச்சபடாமல் இருந்ததுதான்"

-> தொழிலதிபர் ப்ளூம்பெர்க்

நியான்டர்செல்வன்

இந்த கதையில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. தொழிலதிபர் ப்ளூம்பெர்க் அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களான ஜோன் ஹொப் கின்ஸ்சில் மின்சார பொறியியலாளராகவும் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்ற பின்னர் முதலீட்டு வங்கித்துறையில் வேலை செய்ய ஆரம்பித்தார். கடும் உழைப்பாளியான இவர் அந்த வங்கியிலேயே பங்காளரானார். அந்த வங்கி விற்கப்பட்டதனால் வேலையை இழந்து தனது சொந்த நிறுவனத்தை தனது சொந்த பணத்தில்  ஆரம்பித்தார்.

 

https://www.encyclopedia.com/people/history/us-history-biographies/michael-bloomberg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.