Jump to content

முள்ளிவாய்க்காலின் அழகிய இயற்கை தோற்றம் - கடற்கரை பிரதேசத்தின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
முள்ளிவாய்க்கால்படத்தின் காப்புரிமை Getty Images

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடம்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல லட்சக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்ட ஒரு இடமாக முள்ளிவாய்க்கால் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் என்றாலே அங்கு இரத்த கறைகள் மாத்திரமே மக்கள் மத்தியில் நினைவுக்கு வருகின்றது.

கறுப்பு சரித்திரமாக பதிவாகியுள்ள முள்ளிவாய்க்காலின் இன்றும் பெரும்பாலானோர் அறியாத அழகிய இடங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் கடற்கரையை அண்மித்த ஓர் அழகிய கிராமமாகும்.

கறுப்பு சரித்திரம் படைத்த முள்ளிவாய்க்காலில் மறைந்திருக்கும் அழகிய இயற்கை தோற்றம்

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அந்த பகுதி இன்றும், ஆள்; நடமாட்டமற்ற பகுதியாகவே காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கடற்கரையை நோக்கி செல்லும் மணல் வீதி... தூரத்தில் இரு மருங்கிலும் பனை மரங்கள்... பனை மரங்களுக்கு இடை நடுவில் கடற்கரை தென்படும் அழகிய காட்சி.

கடற்கரையை நோக்கி சென்றால், அங்கு ஆள் நடமாட்டம் என்பதை எம்மால் காண முடியவில்லை.

சிறிய ரக மீன்பிடி படகுகள் மாத்திரம் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், கடற்றொழிலாளர்களையும் எம்மால் காண முடியவில்லை.

கறுப்பு சரித்திரம் படைத்த முள்ளிவாய்க்காலில் மறைந்திருக்கும் அழகிய இயற்கை தோற்றம்

எந்தவித அசுத்தமும் இன்றி, மிகவும் சுத்தமாக இந்த கடற்கரை காணப்படுவதை பார்த்த எமக்கு ஆச்சரியம் ஏற்பட்டது

பல கிலோமீற்றர் தொலைவிற்கு நேரான கடற்கரையை கொண்ட இந்த அழகிய முள்ளிவாய்க்கால் கடற்கரை, இன்றும் எந்தவொரு அதிகாரியின் கவனத்திற்கும் செல்லவில்லை.

குறிப்பாக சுற்றுலாத்துறையை இலங்கை பெயர் பெற்றுள்ள பின்னணியில், இவ்வாறான கடற்கரைகளை பிரசித்திப்படுத்துவதன் ஊடாக மேலும் சுற்றுலாத்துறையை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.

கறுப்பு சரித்திரம் படைத்த முள்ளிவாய்க்காலில் மறைந்திருக்கும் அழகிய இயற்கை தோற்றம்

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியோ என்னவோ, அரசாங்கம் இந்த அழகிய கடற்கரையை வெளிகொணராது இருக்கின்றது.

முல்லைத்தீவு இலங்கையின் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுகின்ற பின்னணியில், குறித்த கடற்கரை சுற்றுலாத்துறைக்கான திறக்கப்படும் பட்சத்தில், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னோற்றுவதற்கான இயலுமை கிடைக்கும் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியை மக்கள் பாவனைக்கு வழங்க முன்பாக, அந்த பகுதியில் பாதுகாப்பு பிரிவினரால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை தீர்க்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48697130

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆகஸ்டில் எழுதிய கதை இது. 2019 இல்.. அதில் எழுதியதை பிபிசி தமிழ் நிஜமாக்கியுள்ளது. மனிதர்களின் இழப்பு.. உரிமை பற்றி கவலை இல்லை. மண்ணை அடுத்தவன் ஆளவிட்டு.. சொந்த மக்களை அழிக்கவிட்டு.. எப்படி.. அதில் ஆதாயம் தேடுவது என்று வழிகாட்டும்.. பிபிசி தமிழனை என்னென்பது..??!

 

ஒரு கவிஞனின் டயறி.

 

 

mika_sand.jpg

இத்தாலிய சியாமா செட்டி குண்டு வீச்சு விமானங்கள் குத்தியடிச்சு குண்டு போட்ட காலமெல்லாம்.. போய் ரஷ்சிய மிக்-27 லேசர் வழி பாதை காட்ட உயர இருந்தபடி குண்டு வீசும் காலமெல்லாம் கண்ட அந்தக் கவிஞனின் ரங்குப்பெட்டியும் முள்ளிவாய்க்கால் மணல்களிடை அநாதை பிணங்களோடு பிணமாய்க் கிடந்திருக்க வேண்டும். அதற்குச் சாட்சியாய் இரத்தக் கறைகளோடு கறள் கட்டி இருந்தது அது.

காலில் தட்டுப்பட்டதற்காய் அதன் கவனம் என்னைக் கவர... திறந்து பார்த்தேன்.. செக் குடியரசின் மல்ரி பரல்கள் வீசிய எரிகுண்டுகளின் கந்தக வாசம் மூக்கை எரித்தது. இத்தாலிய தயாரிப்பில் ராஜீவின் ஊழலில் கிடைத்த போர்பஸ் பீரங்கிகள் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் வெடித்துத் தள்ளிய எறிகணைகளின் சிதறல்கள் பட்டு ஏற்பட்டிருந்த துவாரங்கள் வழி மாலைச் சூரியக் கதிர் பட்டுத் தெறித்தன அந்த DIARY என்ற பொன் எழுத்துக்கள். 

தூசி மண்டிக் கிடந்த அதனை எடுத்து தொடையில் தட்டிவிட்டு பக்கங்களைப் புரட்டிய படி முள்ளிவாய்க்காலின் அந்த இறுதி நிமிடங்களின் ரணங்களை எண்ணியபடி வெறும் வெண்மணற் தரையில் அமர முற்பட்ட எனக்கு.. குருதி உறைந்த சிறுமி ஒருத்தியின் சட்டை ஒன்று பகுதி மணலில் புதைந்து.. காற்றி பறந்தபடி இருந்தது கண்ணில் பட்டது. அதனைப் பிடிங்கி எடுத்து..தரையில் விரித்துக் கொண்டே அமர்ந்தேன்.

அப்படி என்ன தான் எழுதி இருப்பான்.. இறுதி விநாடிகளில் ஏதேனும் செய்தி எழுதி இருப்பானோ என்ற ஏக்கம் உருப்பெற டயரின் பக்கங்களை கடற்காற்று முட்டித்தள்ளி அகதியாய் ஓடிய என் மக்களை சிங்கள இராணுவம் விடாமல் குண்டு போட்டு விரட்டியது போல.. விரட்டப் பார்க்க அதனை விரல்களால் கட்டுப்படுத்திக் கொண்டு.. சரி முதலில் இருந்தே போவோமே என்று ஆரம்ப பக்கத்தைப் புரட்டி படிக்க ஆரம்பித்தேன்..!

டயறியின் முதற் பக்கம்.. சொல்கிறது..

1948.. யாழ்ப்பாணத்தில் இருந்து போயிலைச் சிற்பத்தோடு (புகையிலையை சொல்கிறார் போல) கொழும்பு கறுவாத்தோட்டம் போனேன்.

காலி முகத்திடலில்.. பல்லக்கில் சேர் பொன்கள் பவனி வரக் கண்டேன்.

1952.. ரயர் புகை மண்ட.. மயிரிழையில் தப்பினேன். சிங்களக் கும்பல் ஒன்று விரோதத்தில் பத்த வைத்தது போயிலைச் சிற்பங்களை. கொழும்பில் கடை வைத்திருந்த.. தமிழர்களின் சிந்தனையையும் தான்.

1954.. என் திருமணம். சிங்களப் பெண்ணான அவள்... சிந்தனையில் களங்கமில்லாதவள் என்பதற்காய் திருமணம் செய்தேன்.

1956.. தனி.. 

ஏதோ..எழுத ஆரம்பித்துவிட்டு முடிக்காமலே விட்டிருக்கிறார். அப்போதும்.. பிரச்சனைக்குப் பயந்து சிங்களப் பொண்டாட்டியையும் கூட்டிக் கொண்டு.. ஓடி இருப்பாரோ.. என்று எண்ணிய படியே பக்கங்களைப் புரட்டுகிறேன்.. ஆனால் அதற்கு அப்பால்.. சில பக்கங்களை தனித் தனியே.. பிரிக்க முடியவில்லை. குருதி உறைந்து மழைத் தண்ணி பட்டு குழைந்து.. பக்கங்கள் ஒட்டிப் போய் இருந்தன. கஸ்டப்பட்டு ஒவ்வொன்றாய்.. பக்கங்களைப் பிரிக்கப் பார்த்தேன்..

அப்போதே சொன்னார் தந்தை செல்வா.. தனியப் போங்கடா.. இவங்களோட சிங்களக் காடைகளோட சகவாசம் வேண்டாம் என்று.. என்ற வார்த்தைகளைத் தவிர என்னால் வேறு எதனையும் படிக்க முடியவில்லை.

கொத்தாக.. ஒட்டி இருந்த அந்த சில பழைய கதை பேசும் பக்கங்களை.. ஒரேயடியாகப் புரட்டித்தள்ளிவிட்டு.. மிகுதியை தனித்தனியே பிரித்துப் படிக்க முயன்றேன். அப்போது.. குட்டிக் கரப்பான் பூச்சி ஒன்று.. அகதியாகி செல்லட்டிக்குப் பயந்து பங்கருக்குள் ஒளித்திருந்துவிட்டு வெளியே வருவது போல.. தாள்கள் இடையில் பதுங்கி இருந்து விட்டு.. வெளிச்சத்தில் விடியலைக் கண்ட மகிழ்ச்சியோ என்னவோ.. ஓடி மடியில் விழ கைகளால் தட்டி அந்தச் சிற்றுயிரை.. சுடுமணலில் தள்ளிவிடக் கூடாது என்பதற்காக அதனை அதன் வழி போக அனுமதித்து விட்டு பக்கங்களைப் புரட்டுவதில் மீண்டும் கவனத்தை திருப்பினேன். 

சில பக்கங்கள் தாண்டியதும்.. மீண்டும் படிக்கக் கூடிய தெளிவோடு இருந்த வரிகள் கண்டு.. படிக்க ஆரம்பித்தேன்..

1972.. சிறிமா.. பிறிமா மாவுக்கு கியுவில் கிடக்கவிட்டார்.

1977.. தமிழீழமே இறுதி முடிவு. என் கைகளை பிளேட்டால் கிழித்து இரத்தத் திலகமிட்டு சத்தியம் செய்தேன். என் மனைவியோடு மீண்டும் யாழ்ப்பாணம் வந்த முதற் தடவையும் அது தான். "சிங்களத்தியை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான்" என்று திட்டிய திட்டுக்களையும் காதில் வாங்காமல் இருக்கவில்லை அப்போது. இருந்தாலும் என்னோடு சேர்ந்து அவளும் இரத்தத் திலகமிட்டாள். தமிழீழமே தமிழருக்கும் தமிழனோடு வாழும் தனக்கும் தீர்வு என்பது போல.

1981.. மீண்டும் ரயர்.. தீ

1983.. கொழும்பை விட்டு ஒரேயடியா மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு கப்பலில் காங்கேசந்துறை வந்து சேர்ந்தேன். மனைவியால் உயிர் பிழைத்தேன்.

1985.. சிங்களத்தியை கலியாணம் கட்டி இருக்கிறீர் கவனமா இரும். நாங்கள் தமிழீழம் பெற போராட வெளிக்கிட்டிருக்கும் ஆயுதம் தாங்கிய இளைஞர்கள். சரியே. மிரட்டல் வந்த நேரம் பயந்து போனேன். மீண்டும் கொழும்புக்கு ஓடுவமோ என்று நினைச்சனான். மனிசி தான் தடுத்தவள். என்ர உடன்பிறப்புகளான சிங்கள ஆக்களை விட இந்தப் பொடியள் பறுவாயில்லை இங்கையே இருப்பம் என்றவள் அவள் தான்.

1987.. இந்திய அமைதிப் படைக்கு பூமாலை போட்டேன். கைலாகு கொடுத்தேன். அப்ப மணத்த சப்பாத்தி எண்ணெய் இப்பவும் மணக்குது.

1989.. இந்தியப் படை சுட்டு தோள்பட்டையில் காயப்பட்டு 6 மாதம் ஆஸ்பத்தியில் கிடந்தேன்.

1990.. மீண்டும் புலிகள் வந்தார்கள். எனது மனைவியிடம் சிங்களம் கற்றார்கள். அன்பாகப் பிள்ளைகள் போல பழகினார்கள். அவர்களோடு பழகிய பின்.. தனக்கு பிள்ளைகளில்லாத குறையை இப்போது தான் உணரவில்லை என்று என் மனைவி சொன்னது இப்பவும் ஞாபகத்தில் நிற்கிறது.

1995.. யாழ்ப்பாணத்தை விட்டு அனுரத்த ரத்வத்தையால் அடித்து விரட்டப்பட்டோம். வன்னியில் அடைக்கலம் தேடினோம். கிளாலியூடு கடற்புலிகள் பாதுகாப்பு வழங்க பயமின்றி இருந்தது அந்தப் பயணம். ஆனையிறவு செல்லுக்குத் தவிர எனக்கு வேறு எந்தப் பயமும் இல்லை என்றாள் என் மனைவி அப்போது.

1996.. முல்லைத்தீவுத் தாக்குதல். விடிய விடிய கேட்ட முழக்கத்தோடு ஒரு விடியல் பொழுதின் உதயம் ஆரம்பமானது. இருந்தாலும்.. மனதில் சில கேள்விகள்.. இரு பக்கமும் மாண்டது மனிதர்கள் தானே. ஏனுந்த யுத்தம். பேசி தீர்க்கலாம் தானே.

1998.. புலிகளோடு பேச்சுக்கே இடமில்லை. ஆயுதங்களை கைவிட்டால் மட்டுமே பேச்சு. கதிர்காமர் முழங்கித்தள்ள.. மனசுக்குள் சலனம் இன்றி ஒரு தெளிவு பிறந்தது.

1999.. ஓயாத அலைகளில்.. பின் களப் பணி தேசிய துணைப்படை வீரனாய்.. நானும் வீராங்கணையாய் என் மனைவியும்.. செயற்பட்டோம்.

2001.. வன்னி எங்கும் சமாதானம் என்று வெள்ளைப் புறாக்கள் பறந்தடித்தன. சந்தோசத்தோடு சந்தேகமும் கூடவே இருந்தது.

2004.. துரோகத்தின் புதிய அத்தியாயத்தைப் படித்தோம்.

2005.. சுனாமி தந்த வடுக்களை சுமந்தோம்.

2006.. மீண்டும்.. முழக்கங்கள். நாங்களும் தயாரானோம். இறுதியில் இரண்டில் ஒன்றிற்காய்.

2008.. ஒப்புக்கு சர்வதேச மத்தியஸ்தம் என்ற பெயரில் போட்ட சதி வலை எம்மைச் சூழ்ந்து பிடிக்க.. ஒப்பந்தம் கிழிந்து காற்றில் பறந்தது.. வழமை போலவே.

2009 ஜனவரி.. இறுதி நகரையும் இழந்தோம். நம்பிக்கை இருக்கிறது. விடுதலைக்கு வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையோடு பின் தள்ளிப் போனோம்.

2009 மார்ச்.. நம்பினோர் எல்லாம் கைவிட அனாதைகளாய்.. பிணங்களாய் சரிய ஆரம்பித்தோம். அப்போதும் இறுதி வரை போராட வேண்டும் என்ற துணிவை இழக்கவில்லை.

2009 ஏப்ரல்.. ஆட்லறி செல்லுக்கு என் மனைவி இரையானாள். வாழ்க்கையில் நான் சந்தித்த கடும் சோகம். இருந்தும் தேசிய துணைப்படை வீரனாய் என் பணி தொடர்ந்தது.

2009 மே.. முடிவை நெருங்கி விட்டோம் என்பதை உணர்ந்தேன். ஆனால் விடிவின் கனவை இழக்கவில்லை. என் மனைவியின் பாதையில்.. பயணிக்க காத்திருக்கிறேன். நிச்சயமா சரணடைய மாட்டேன். இங்கு இறந்து கிடக்கும் பிஞ்சுகளின் நடுவே இருந்து இந்த கடைசி வரிகளை எழுதுகிறேன். எனி இந்த டயரியில் எழுத எனக்கும் தெம்பில்லை.. பக்கமும் இல்லை. சுருங்க என் சுயசரிதையை எழுத வேண்டும் என்பதற்காக இதனை எழுதி வைத்துவிட்டுச் செல்கிறேன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

... இப்படியாய் எழுதி முடிக்கப்படிருந்த அந்த டயறியின் வரிகளைப் படிக்கப்படிக்க.. என் கண்களில் இருந்து பெருகிய கண்ணீர் துளிகள் வடிந்து வீழ்ந்து பக்கங்களைக் கனதிப்படுத்தி இருந்தன. அதன் ஈரலிப்பை என் கரங்களும் உணரச் செய்தன. எல்லாம் முடிய.. இறுதில் ஒரு மூலையில்.. கண்டேன்.

"நான்.. ஒரு கவிஞன்.. என்று வாழ ஆசைப்பட்டேன். என் கவிதை என்பது.. தமிழீழ தேசிய கீதமாய் அமைய வேண்டும் என்று விரும்பினேன்.." என்ற அந்த டயறிக்குரியவரின் கடைக்குறிப்புக்களை. அந்தக் கடைக்குறிப்புக்கள் என் மனதில் ஆதிக்கம் செய்ய ஆரம்பிக்க.. அவற்றைக் கொண்டே அந்த டயறிக்கு "ஒரு கவிஞனின் டயறி" என்று பெயரிட்டு, அதனை என் மன அறையில் பக்குவப்படுத்திக் கொண்டு முள்ளிவாய்க்கால் மணற்தரையில் இருந்து விடை பெற ஆரம்பித்தேன்.

அப்போது.. நான் அமர்ந்திருந்த அந்தக் இரத்தக் கறை படிந்திருந்த சட்டையும் என் உடல் பாரத்தால் ஒட்டிக் கொண்டோ என்னவோ அதுவும்.. என் கூடவே வந்தது. அதற்கும் என்னோடு உறவாட ஆசை போலும்.. அதன் சொந்தக்காரியின் சோகங்களைப் பரிமாறுவான் என்ற நோக்கம் போலும். அதனையும் டயறியோடு காவியபடி.. இறுதியாய் ஒரு தடவை.. முள்ளிவாய்க்காலை சுற்றும் முற்றும் திருப்பிப் பார்த்தேன்..!

அப்போ.. நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தூரே இரண்டு வெள்ளைச் சோடிகளும் ஒரு இந்தியச் சோடியும்.. தமக்குள் பேசிக் கொள்கின்றனர்.. இதுதான் புலிகளை அழித்த முள்ளிவாய்கால். கவாய் போல.. மெரீனா போல... அழகான பீச்சா இருக்கே. அடுத்த முறையும் விடுமுறைக்கு இங்கேயே வரலாம். பயங்கரவாதிகள் இங்கு நல்லாத்தான் என்ஜோய் பண்ணி இருப்பார்கள் போல.

இதைக் கேட்ட எனக்கு.. பெரு மூச்செறிவதை விட.. வேறெதனையும்.. செய்ய முடியவில்லை. முழத்துக்கு முழம்.. துப்பாக்கிகளோடு சிங்களச் சிப்பாய்களும்.. முள்ளிவாய்க்காலின்.. கடற்காற்றில் உப்புக் குடித்தபடி.. எதையோ காப்பதாய் கற்பனை செய்தபடி.. காதலிகளின் நினைவுகளோடு.. அங்கு காய்ந்து கொண்டு இருந்தனர். அவர்களை கடக்க... மெளனமே பாதுகாப்பான பாஸ்போட் என்பதால் மெளனத்தை முதன்மைப்படுத்தி.. விடை பெற்றேன்.

http://kundumani.blogspot.com/2009/08/blog-post_30.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:
 
முள்ளிவாய்க்கால்படத்தின் காப்புரிமை Getty Images

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடம்.

 

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல லட்சக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்ட ஒரு இடமாக முள்ளிவாய்க்கால் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் என்றாலே அங்கு இரத்த கறைகள் மாத்திரமே மக்கள் மத்தியில் நினைவுக்கு வருகின்றது.

 

கறுப்பு சரித்திரமாக பதிவாகியுள்ள முள்ளிவாய்க்காலின் இன்றும் பெரும்பாலானோர் அறியாத அழகிய இடங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் கடற்கரையை அண்மித்த ஓர் அழகிய கிராமமாகும்.

கறுப்பு சரித்திரம் படைத்த முள்ளிவாய்க்காலில் மறைந்திருக்கும் அழகிய இயற்கை தோற்றம்

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அந்த பகுதி இன்றும், ஆள்; நடமாட்டமற்ற பகுதியாகவே காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கடற்கரையை நோக்கி செல்லும் மணல் வீதி... தூரத்தில் இரு மருங்கிலும் பனை மரங்கள்... பனை மரங்களுக்கு இடை நடுவில் கடற்கரை தென்படும் அழகிய காட்சி.

கடற்கரையை நோக்கி சென்றால், அங்கு ஆள் நடமாட்டம் என்பதை எம்மால் காண முடியவில்லை.

சிறிய ரக மீன்பிடி படகுகள் மாத்திரம் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், கடற்றொழிலாளர்களையும் எம்மால் காண முடியவில்லை.

கறுப்பு சரித்திரம் படைத்த முள்ளிவாய்க்காலில் மறைந்திருக்கும் அழகிய இயற்கை தோற்றம்

எந்தவித அசுத்தமும் இன்றி, மிகவும் சுத்தமாக இந்த கடற்கரை காணப்படுவதை பார்த்த எமக்கு ஆச்சரியம் ஏற்பட்டது

பல கிலோமீற்றர் தொலைவிற்கு நேரான கடற்கரையை கொண்ட இந்த அழகிய முள்ளிவாய்க்கால் கடற்கரை, இன்றும் எந்தவொரு அதிகாரியின் கவனத்திற்கும் செல்லவில்லை.

குறிப்பாக சுற்றுலாத்துறையை இலங்கை பெயர் பெற்றுள்ள பின்னணியில், இவ்வாறான கடற்கரைகளை பிரசித்திப்படுத்துவதன் ஊடாக மேலும் சுற்றுலாத்துறையை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.

கறுப்பு சரித்திரம் படைத்த முள்ளிவாய்க்காலில் மறைந்திருக்கும் அழகிய இயற்கை தோற்றம்

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியோ என்னவோ, அரசாங்கம் இந்த அழகிய கடற்கரையை வெளிகொணராது இருக்கின்றது.

முல்லைத்தீவு இலங்கையின் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுகின்ற பின்னணியில், குறித்த கடற்கரை சுற்றுலாத்துறைக்கான திறக்கப்படும் பட்சத்தில், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னோற்றுவதற்கான இயலுமை கிடைக்கும் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியை மக்கள் பாவனைக்கு வழங்க முன்பாக, அந்த பகுதியில் பாதுகாப்பு பிரிவினரால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை தீர்க்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48697130

இலங்கையில் முதலீடு செய்ய விரும்பியவர்கள் கூட, இந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்புக்கு பின்னர் பின் வாங்கி விட்டனர்.

முதலீட்டாளர்கள் பல ரிஸ்குகளை (இடர்களை ) கருத்தில் எடுப்பார்கள்.

அதனில் முக்கியமானது political risk.

உதாரணமாக, தமிழ் நாட்டில், பணத்தினைவீசி, எந்த வித அரசியல் எதிர்பினையும் முறியடிக்கமுடியும் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதால், நம்மவர்கள் கூட, அங்கே முதலிடுகிறார்கள்.

இலங்கையில், religiuos dominancy இருப்பதால், அதன் மூலமான political risk அதிகமானது. 

6 வருசம் உள்ள அனுப்பப்பட்ட ஒரு தேரர், 6 மாதத்தில் வெளிய வரவும், இன்னோரு MP தேரர், உண்ணாவிரதம் இருந்தே, ஒரு சமூகத்து முழு MP களை பதவி இழக்க வைக்க முடியுமாயின்..... இந்த வகை political risk அதிகமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடற்கரை எவ்வளவு சுத்தமாய் இருக்கிறது...உல்லாச பயணிகள் போக தொடங்கினால் இடம் பிலாஸ்ட்டிக் குப்பைகளால் நிறைந்திடும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இலங்கையில் முதலீடு செய்ய விரும்பியவர்கள் கூட, இந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்புக்கு பின்னர் பின் வாங்கி விட்டனர்.

முதலீட்டாளர்கள் பல ரிஸ்குகளை (இடர்களை ) கருத்தில் எடுப்பார்கள்.

அதனில் முக்கியமானது political risk.

உதாரணமாக, தமிழ் நாட்டில், பணத்தினைவீசி, எந்த வித அரசியல் எதிர்பினையும் முறியடிக்கமுடியும் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதால், நம்மவர்கள் கூட, அங்கே முதலிடுகிறார்கள்.

இலங்கையில், religiuos dominancy இருப்பதால், அதன் மூலமான political risk அதிகமானது. 

6 வருசம் உள்ள அனுப்பப்பட்ட ஒரு தேரர், 6 மாதத்தில் வெளிய வரவும், இன்னோரு MP தேரர், உண்ணாவிரதம் இருந்தே, ஒரு சமூகத்து முழு MP களை பதவி இழக்க வைக்க முடியுமாயின்..... இந்த வகை political risk அதிகமானது.

இப்போது யூரியூப் போன்ற பொது தளங்களில் தமிழருக்கெதிரான துவேச பதிவுகள் நீக்கப்பட்டு வருகின்றன. அதே போல் ஆதி தமிழினம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளும் அது சம்பந்தப்பட்ட ஒளிப்பதிவுகளும் காணாமலே போகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இப்போது யூரியூப் போன்ற பொது தளங்களில் தமிழருக்கெதிரான துவேச பதிவுகள் நீக்கப்பட்டு வருகின்றன. அதே போல் ஆதி தமிழினம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளும் அது சம்பந்தப்பட்ட ஒளிப்பதிவுகளும் காணாமலே போகின்றன.

பதிலாக, முஸ்லிம்களுக்கு எதிராக பதிவுகள் ஏறுமே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.