Jump to content

எந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்துவது தொடர்பான இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எந்தவித  தீர்வின்றி நிறைவடைந்துள்ளது.

687a2a47-5add-4db3-8ce7-3931a8cc47de.jpg

கல்முனை வடக்கு தமிழ்பிரிவு  பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக நான்காம் நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் போது இன்று அத்துரலிய ரத்தின தேரரும் அவருடன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் சென்றிறுந்தனர்.

மேற்படி பிரதேச செயலகம் தரம் உயர்த்து தொடர்பில்  இருக்கின்ற சிக்கல் நிலை தொடர்பிலும், சமரசமான முறையில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகளைக் கண்டறியும் நோக்கிலும், உண்ணாவிரதிகள் சார்பான குழுவொன்றும் கல்முனை முஸ்லிம் மக்கள் சார்பான குழுவொன்றுக்குமிடையில்  பேச்சுவார்த்தை ஒன்று கல்முனை நகர சபை மண்டபத்தில் வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் ரத்தின தேரர் அகியொரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.

இதன் போது இருதரப்பு நியாங்களும் முன்வைக்கப்பட்டது அந்தவகையில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பிப்பிலான குழுவினர் தங்களது நியாங்களை முன்வைக்கையில் இந்த பிரதேச செயலகமானது தரமுயர்த்துவதில் எங்களுக்கு எவ்வித அட்சேபனையும் இல்லை. அனால் இதில் சில சிக்கல் நிலை நிலவுகின்றது.

 அதாவது நிலத்தொடர்பற்று காணப்படுதல், மற்றும் கடைத்தொகுதிகள் பாதிக்கப்படுதல், எல்லை நிர்ணயம் முரண்பாடாக காணப்படுதல், மற்றும் இனத்துவேசத்தினை உண்டுபண்ணுவதாக அமைதல் போன்ற விடயங்களை இதன் போது தங்கள் தரப்பு நியாயங்களாக முன்வைத்திருந்தனர்.

மேற்படி தெரிவிக்கப்பட்ட விடயங்களை செவிமடுத்த  உண்ணாவிரதாரிகள் சார்பாக சென்ற கல்முனை தமிழ் மன்றக் குழுவினர் இவ்விடயங்கள்  தொடர்பில் தங்கள் தரப்பு நியாயம் சார்ந்த வகையிலான கருத்துக்களை முன்வைத்தனர். இவ்வாறாக ஒரு மணித்தியாலத்திற்க்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது

இதனை செவிமடுத்திருந்த ரத்தின தேரர் மிகவும் விரைவாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை கண்டுபிடியுங்கள் உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு  பேச்சுவார்த்தையானது எந்த தீர்வின்றி இழுபறியில் முடிவடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

https://www.virakesari.lk/article/58686

Link to comment
Share on other sites

 

‘தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க கூட்டுச் சதி' - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்

கே: கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரமும், இன்று பூதாகரமாகியுள்ளது. இதுபற்றிய, உங்கள் தரப்பு நியாயம் என்ன?

நிர்வாக ரீதியான எல்லை நிர்ணயம் என்பது, ஒரு தனி இனம் சார்ந்த விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், எல்லைகளை வரையறுக்கும்போது, நிலத்தொடர்பற்ற முறையிலான அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படக் கூடாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்படுகின்ற பிரசாரங்கள், அடிப்படை நியதிகளுக்கு மாறானவையாகும். குறிப்பாக, வளங்கள், வளப்பங்கீடு, அரச காணிகளுடைய தேவைப்பாடு என்ற விவகாரங்களிலும், சமநிலை பேணப்பட வேண்டும்.   

நிர்வாக அலகுகள் எல்லாவற்றையும் தனி ஓர் இனம் சார்ந்த அலகாக மாத்திரம் அமைவதற்கு எதிரான சில நியதிகளும் இருக்கின்றன. இதிலிருக்கின்ற முரண்பாடுகளைக் களைவதற்கும் எல்லை நிர்ணயத்தில் காணப்படும் சில சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதற்கும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ஏற்பட்டிருக்கின்ற பெரும்பான்மை சமன்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்ற பேரம் பேசும் சக்தி, இந்த அரசாங்கத்துக்கு எதிராக, இந்தக் கட்டத்தில் பிரயோகிக்கப்பட வேண்டுமென்று, ஒருசில எம்.பிக்கள் விரும்பலாம்.   

எவ்வாறாயினும், நாங்கள் எங்களுக்குள்ளேயே பேசி, இதுபற்றி உடன்பாட்டைக் காணவேண்டும். பேரின சக்திகள் நுழைந்து, இந்த விடயத்தில் குளிர் காய்வதற்கு இடமளிக்கக் கூடாது. அதனால், சில ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கு, நாங்கள் தயாராக வேண்டும். அது, எந்தத் தீர்வாக இருந்தாலும், நாம் சார்ந்த சமூகத்தில் சந்தைப்படுத்தக்கூடிய தீர்வாக அமைய வேண்டும். இல்லாவிடின், இலகுவில் இந்தப் பிரச்சினைக்கு விடை காண்பதென்பது கடினமாகிவிடும்.   

அதனால், ஆரோக்கியமான கலந்துரையாடல்களையும் எல்லை நிர்ணயத்தையும் செய்வதற்கு, ஒன்றுகூடிப் பேசி முடிவெடுப்பதற்காக, குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை விடுத்து, தேரர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பதால் தீர்த்துவிட முடியாது.  இதன்போது, யார் யாரோடு கூட்டுச் சேர்கிறார்கள் என்ற விடயத்தில், நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். இதற்குப் பின்னால், ஓர் அரசியல் நோக்கம் காணப்படுகின்றது. அதை உணர வேண்டும். தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையைக் குலைப்பதற்கு, இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்திகளுக்கு பலியாகிவிடாமல், நிதானமாக இந்த விடயத்தைக் கையாள வேண்டும்.  

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/தமிழ்-முஸ்லிம்-உறவை-சீர்குலைக்க-கூட்டுச்-சதி/150-234424

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.