Jump to content

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை


Recommended Posts

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவ மோகன் கூறியுள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஓர் உண்மையைக் கூறியமைக்கு அவரைப் பாரா ட்ட முடியும்.  முடியாததை முடியாது என்றும் நடை பெறாததை நடக்காதென்றும் கூறுவதுதான் பண்புடமை.

 
அந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இனிமேல் சாத்தியமாகாது என்ற உண் மையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
 
இவ்வாறு அவர் கூறியதன் மூலம் இது காறும் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக் களை ஏமாற்றி வந்துள்ளது என்ற உண்மையை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள் ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்  கூறியதுபோல் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இனிமேல் சாத்தியப்படப் போவதில்லை என்பதே நிதர்சனமானது. இருந்தும் அந்த உண்மையைக் கூறுவதற்குக் கூட நம் பாராளுமன்ற உறுப்பினர்களுக் குத் துணிவு இல்லை.
 
அதே சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசை ஆதரிப்பதற்கான கார ணம் என்ன என்பதற்கு விளக்கம் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்;
தமிழ் மக்களுக்கு அநியாயமும் அராஜகமும் செய்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காகவே தற்போதைய அரசை கூட்டமைப்பு ஆதரிப்பதாகக் கருத்துரைத்துள்ளார்.
 
உண்மையில் அவரின் இந்தக் கருத்து அடிப்படை நியாயமற்றது. அதாவது தமிழ் மக் களுக்கு அநியாயமும் அராஜகமும் செய்தவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது என்றால், இப்போதிருக்கின்ற அரசு முன்பெல்லாம் தமிழ் மக்களைக் காப்பாற்றியது என்ப தாகப் பொருள்படும். தவிர, சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழ் மக்களின் விடயத்தில் பேரின வாதப் போக்குடனேயே செயற்பட்டுள்ளனர்.
 
இதற்கு இப்போதைய அரசும் விதிவிலக் கல்ல.நிலைமை இதுவாக இருக்கையில், தற் போதைய அரசுக்கான கூட்டமைப்பின் ஆதரவு என்பதற்குப்  பின்னணியில் மிகப் பெரிய சமாச் சாரங்கள் உள்ளன என்பது பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை.
 
எது எவ்வாறாயினும் தற்போது நாட்டில் நடந்து முடிந்த இஸ்லாமியத் தீவிரவாதத்தின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருக்கக்கூடிய ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் தற்போதைய அரசு இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.
 
இவ்வாறாக நிலைமை இருக்கின்றபோது, அரசுக்கான கூட்டமைப்பின் ஆதரவை நியா யப்படுத்தும் வேலையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் செய்யாமல், யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் நம் தயவான கோரிக்கை.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவ மோகன் கூறியுள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஓர் உண்மையைக் கூறியமைக்கு அவரைப் பாரா ட்ட முடியும்.  முடியாததை முடியாது என்றும் நடை பெறாததை நடக்காதென்றும் கூறுவதுதான் பண்புடமை.

 
அந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இனிமேல் சாத்தியமாகாது என்ற உண் மையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
 
இவ்வாறு அவர் கூறியதன் மூலம் இது காறும் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக் களை ஏமாற்றி வந்துள்ளது என்ற உண்மையை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள் ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்  கூறியதுபோல் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இனிமேல் சாத்தியப்படப் போவதில்லை என்பதே நிதர்சனமானது. இருந்தும் அந்த உண்மையைக் கூறுவதற்குக் கூட நம் பாராளுமன்ற உறுப்பினர்களுக் குத் துணிவு இல்லை.
 
அதே சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசை ஆதரிப்பதற்கான கார ணம் என்ன என்பதற்கு விளக்கம் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்;
தமிழ் மக்களுக்கு அநியாயமும் அராஜகமும் செய்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காகவே தற்போதைய அரசை கூட்டமைப்பு ஆதரிப்பதாகக் கருத்துரைத்துள்ளார்.
 
உண்மையில் அவரின் இந்தக் கருத்து அடிப்படை நியாயமற்றது. அதாவது தமிழ் மக் களுக்கு அநியாயமும் அராஜகமும் செய்தவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது என்றால், இப்போதிருக்கின்ற அரசு முன்பெல்லாம் தமிழ் மக்களைக் காப்பாற்றியது என்ப தாகப் பொருள்படும். தவிர, சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழ் மக்களின் விடயத்தில் பேரின வாதப் போக்குடனேயே செயற்பட்டுள்ளனர்.
 
இதற்கு இப்போதைய அரசும் விதிவிலக் கல்ல.நிலைமை இதுவாக இருக்கையில், தற் போதைய அரசுக்கான கூட்டமைப்பின் ஆதரவு என்பதற்குப்  பின்னணியில் மிகப் பெரிய சமாச் சாரங்கள் உள்ளன என்பது பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை.
 
எது எவ்வாறாயினும் தற்போது நாட்டில் நடந்து முடிந்த இஸ்லாமியத் தீவிரவாதத்தின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருக்கக்கூடிய ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் தற்போதைய அரசு இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.
 
இவ்வாறாக நிலைமை இருக்கின்றபோது, அரசுக்கான கூட்டமைப்பின் ஆதரவை நியா யப்படுத்தும் வேலையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் செய்யாமல், யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் நம் தயவான கோரிக்கை.
 

சும்மா, சிங்களவன் தீர்வு தருவான் எண்டு 71 வருசம் வெள்ளி பார்த்தாச்சு. போதும்.

இப்ப நல்லா பார்த்தியல், எண்டால், அமெரிக்காகாரன் முழுத்தீவையும் மடக்க நிக்கிறான். சீனாக்காரன் விடான்.

சீனாக்காரன் தெற்கை மடக்கினால், அமெரிக்காக்காரன் வடக்கை (கிழக்கோட) மடக்குவான். 

இந்தியக்காரன், அங்கினையும், இங்கினையும், நாய்க்குட்டி மாதிரி ஓடி, ஓடி கத்தி ஓய்ந்து போவார்.

ஐஸ் பிரச்சனையினால, முஸ்லீம் தனி அலகு, தனி மாகாணம் கதை இனி எடுபடாது. தமிழ் பேசும் மக்களாக சேர்ந்தால், வடக்கே வாழலாம் என்கிற நிலை வரும்.

அதோட உந்த இனப்பிரச்சனைக்கு தீர்வு வரும்.

Link to comment
Share on other sites

10 hours ago, Nathamuni said:

இப்ப நல்லா பார்த்தியல், எண்டால், அமெரிக்காகாரன் முழுத்தீவையும் மடக்க நிக்கிறான். சீனாக்காரன் விடான்.

சீனாக்காரன் தெற்கை மடக்கினால், அமெரிக்காக்காரன் வடக்கை (கிழக்கோட) மடக்குவான். 

அமெரிக்க போர்க்கப்பல்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருவதும் தரித்து நிற்பதும் செல்வதுமாக உள்ளன. SOFA ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டால் அமெரிக்காவுக்கு இன்னும் வசதி.

Link to comment
Share on other sites

9 hours ago, Nathamuni said:

ந்தியக்காரன், அங்கினையும், இங்கினையும், நாய்க்குட்டி மாதிரி ஓடி, ஓடி கத்தி ஓய்ந்து போவார்.

இந்தியாக்காரனுக்கு என்ன குறை? இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் கடற்படையினர் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டார்களே. 😎

இவ்வருட இறுதியில் இந்திய அமெரிக்க முப்படையும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாகவும் கதை.

ஓ... நீங்கள் இன்னும் இந்தியாவும் அமெரிக்காவும் எதிரெதிர் நாடு என்று நினைக்கிறீர்களோ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

ஓ... நீங்கள் இன்னும் இந்தியாவும் அமெரிக்காவும் எதிரெதிர் நாடு என்று நினைக்கிறீர்களோ? 😀

இல்லை, இந்தியா, ஓரமாக உக்கார வேண்டியவாறு, அமேரிக்க, சீன போட்டியிருக்கும்.

Link to comment
Share on other sites

Just now, Nathamuni said:

இல்லை, இந்தியா, ஓரமாக உக்கார வேண்டியவாறு, அமேரிக்க, சீன போட்டியிருக்கும்.

இந்தியா அமெரிக்கா பக்கம் என்று நான் சொல்ல வந்தன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Lara said:

இந்தியா அமெரிக்கா பக்கம் என்று நான் சொல்ல வந்தன். 😊

இந்தியாவிடம் உருப்படியாக ....எதுவுமே இல்லை...!

அமெரிக்கனின் முதுகில்....இலவசமாகச் சவாரி செய்யப் பார்க்கிறது....!

சீனாக்காரன்.....சும்மா தும்மின்னாலே.....செங்கோட்டை அதிரும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

இந்தியாவிடம் உருப்படியாக ....எதுவுமே இல்லை...!

அமெரிக்கனின் முதுகில்....இலவசமாகச் சவாரி செய்யப் பார்க்கிறது....!

சீனாக்காரன்.....சும்மா தும்மின்னாலே.....செங்கோட்டை அதிரும்...!

இந்தியாவையும் நாம் குறைத்து எடை போட முடியாது.....சகுனி வேலை பார்த்து கால்பதிப்பார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

இந்தியாவையும் நாம் குறைத்து எடை போட முடியாது.....சகுனி வேலை பார்த்து கால்பதிப்பார்கள்...

சகுனி  வேலை  சீனர்களிடம்  எடுபடாது

அவர்கள்உழைப்பில்  செயலில்  நம்பிக்கை  வைக்கும் அரசைக்கொண்டவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

சகுனி  வேலை  சீனர்களிடம்  எடுபடாது

அவர்கள்உழைப்பில்  செயலில்  நம்பிக்கை  வைக்கும் அரசைக்கொண்டவர்கள்

சிங்கள அரசாங்கத்திடம் சகுனி வேலை சாத்தியப்படும் ......சாத்தியப்பட்டுமுள்ளது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, putthan said:

சிங்கள அரசாங்கத்திடம் சகுனி வேலை சாத்தியப்படும் ......சாத்தியப்பட்டுமுள்ளது....

இந்தியாவை  பொறுத்தவரை

நாலு  சறம்   கட்டிய பொடியள்

நடந்தது  வரலாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வெகு தூரத்தில்...

உலகின் இரண்டாவது பொருளாதார பலம் மிக்க, அணு வல்லரசு சீனா, இந்தியாவின் அயல் நாடு. வாய்க்கால், வரப்புச் சண்டை. அருணாசலப்பிரதேசத்தினூடு, உள்ளே வர முடியும்.

பாகிஸ்தான் ஊடாக, காஸ்மீரினுள்ளும் வர முடியும்.

சீனாவும், அமெரிக்காவும், விளையாடும் மைதானமாக இலங்கை, இந்தியா வெறும் பார்வையாளராக இருக்கும் நிலைக்கு காரணம்,  இத்தாலிய சோனியா குடும்பம், தனது பழிவாங்கும் நடவடிக்கையாக, புலிகளை அழிக்கப் போய், சீனாவும், அமெரிக்காவும், சிங்களத்துக்கு தோல் கொடுக்க, கிழே இருந்த பாதுகாப்பும் போய், இப்போது முஸ்லீம் பயங்கரவாதம் வேறு.

இந்தியாவின் தெளிவில்லாத வெளியுறவு கொள்கை. பெரும் ஊழல் மிக்க டெல்லி ஆட்சி பீடம்.....  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.