Jump to content

இலங்கைத் தமிழர்கள் 65 பேர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைச் சேர்ந்த ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வம்சாவளியைச் சேர்ந்த 65 தமிழர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு செய்திருந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடியாகத் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு குடியுரிமை விண்ணப்பத்தை அனுப்பி வைக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார்.

மத்திய அரசு இதன் மீது 16 வாரங்களில் முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். அதாவது மனுதாரர்கள் இருக்கும் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறும்போது, “நான் இது தொடர்பாக ரிட் மனுதாரர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஒரு நேர்மறையான உத்தரவை வழங்கவியலாது. காரணம், இது மத்திய அரசின் செயலுரிமைப் பகுதியில் உள்ள விஷயமாகும்.

மனுதாரர்களுக்காக என் இதயம் ரத்தம் சிந்தலாம் ஆனால், நீதியதிகாரத்தின் வரம்பு எனும் லஷ்மண ரேகை குறித்து நான் கவனமேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. இந்த லஷ்மண ரேகை எனும் வரம்பைக் கடந்து செல்வது ஆக்கிரமிப்பாகும். ஆக்கிரமிப்பு எந்த வடிவத்திலிருந்தாலும் அது மோசமானதே. ஆகவே நீதித்துறை அரசின் செயலுரிமை தளத்துக்குள் தலையிடுவதும் ஆக்கிரமிப்பு என்பதிலிருந்து விதிவிலக்காக முடியாது. சிலர் இதனை ஆட்சேபிக்கலாம்” என்றார்.

இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இருதரப்பினரும் மனுதாரர்கள் முறையான அனுமதி பெற்று இவர்கள் இந்தியாவுக்குள் வரவில்லை என்றும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்பதால் இந்தியக் குடியுரிமைச் சட்டாம் 1955-ன் பிரிவுகளின்படி இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு தகுதியற்றவர்களாகிறார்கள் என்று வாதிட்டது.

ஆனால், மனுதாரர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் 21-ம் பிரிவை அழைக்கலாம். இது குடிமக்கள், குடிமக்கள் அல்லாதோர் அனைவருக்கும் பொருந்துவதே என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.  மனுதாரர்கள் வம்சாவழியாக இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் நம் மொழியைப் பேசுகின்றனர். நம் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவை தங்கள் நிரந்தர நாடாக்கிக் கொள்ள தயாராக இருப்பவர்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசும் முன்னதாக இவர்களை இலங்கைக்கு வலுக்கட்டாயமாக அனுப்ப மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 35 ஆண்டுகளாக முகாம்களில் இருந்து வந்துள்ளனர்.

மனுதாரர்களின் பெரும்பாலானோர் திருச்சி கொட்டப்பட்டு முகாமில் தற்போது தங்கியுள்ளனர்.  காலனியாதிக்க காலகட்டங்களில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக இலங்கையில் செட்டில் ஆனவர்களின் வம்சாவளியினர் என்று மனுதாரர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

மேலும் இவர்கள் தங்களை வடக்கு, கிழக்கு மாகாண இலங்கைத் தமிழர்களாகக் கருதக் கூடாது என்றும் தாங்கள் இந்தியாவிலிருந்து சென்று காலனியாதிக்க காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த இந்திய வம்சாவளியினர். எனவே தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தங்கள் மனுக்களில் கோரியுள்ளன

 

https://tamil.thehindu.com/tamilnadu/article28085774.ece?utm_source=HP&utm_medium=hp-epick

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.