Jump to content

6 மாதங்களுக்குப் பிறகு நனைந்தது சென்னை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

6 மாதங்களுக்குப் பிறகு நனைந்தது சென்னை

74.jpg

சென்னையில் கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று மழை பெய்து குளிர்வித்துள்ளது. #chennairains என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகம் போதிய மழை இல்லாத காரணத்தால், கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மக்கள் தண்ணீருக்காக இரவு பகலாக காலி குடங்களுடன் காத்திருக்கும் அவலம் அன்றாடம் நிகழ்கிறது. வெப்ப சலனம் காரணமாகவும் பொதுமக்கள் யாரும் மதியம் 11 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று (ஜூன் 20) சென்னை பெருங்குடி, வேளச்சேரி, கிண்டி, அடையாறு, செம்மஞ்சேரி, தரமணி, போரூர், பூந்தமல்லி, தாம்பரம் பல்லாவரம் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. வெப்பம் சற்று தணிந்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 6 மாதங்களுக்கு பிறகு மழை பெய்ததால் பலரும் மழையைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் #chennairains ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில், “வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், சென்னை உட்பட வட மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலையைக் கணித்துச் சொல்லும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை தொடருமா என்பது தொடர்பாகத் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “சென்னையில் தற்போது பெய்து வரும் மழை 6 நாட்களுக்குத் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திற்கு குட் பை” என பதிவிட்டுள்ளார்.

 

https://minnambalam.com/k/2019/06/20/74

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டியை,கிட்டியை கட்டி இந்த நீரை சேமிக்கலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரதி said:

தொட்டியை,கிட்டியை கட்டி இந்த நீரை சேமிக்கலாமே!

இதுக்குதான் தங்கச்சி! ஒழுங்கான அரசியலைமைப்பு அரசியல் தலைவர்கள் வேணும் எண்டுறது.

சீமானையும் ஒருக்கால் மேடையேத்தி பாக்கலாமே :cool:

Link to comment
Share on other sites

சென்னைக்கு அடுத்தாண்டு முதல் நிலத்தடி நீர் கிடைக்காது

TamilNews_Jun18_2019__523525416851044.jpg

சென்னை, பெங்களூரு உட்பட 21 நகரங்களில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் இருக்காது. கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்று நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்  தெரிவித்துள்ளது.தமிழகம் முழுக்க தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அல்லல்படுகின்றனர். குடிநீர் வழங்கும் ்ஏரிகள் வறண்டு விட்டன. இந்த நிலையில், நிதி ஆயோக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் பல பகுதிகளிலும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. 2020ம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் சுத்தமாக இருக்காது. வறண்டு போய்விடும். 10 கோடி மக்கள் இதனால்  பாதிக்கப்படுவார்கள். சென்னையில் 3 ஆறுகள், குடிநீர் வழங்கும் 4 முக்கிய ஏரிகள், 6 காடுகள் உள்ளன. மற்ற மெட்ரோ நகரங்களில் கூட இந்த அளவுக்கு மழை மற்றும் தண்ணீர் ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் சென்னையில் கடும் வறட்சி காணப்படும். 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504290

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இதுக்குதான் தங்கச்சி! ஒழுங்கான அரசியலைமைப்பு அரசியல் தலைவர்கள் வேணும் எண்டுறது.

சீமானையும் ஒருக்கால் மேடையேத்தி பாக்கலாமே :cool:

அதுக்கு என்னத்துக்கு சீமான்?...இயலுமானவர்கள் தங்கள் வீடுகளில் தொட்டி கட்டலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

அதுக்கு என்னத்துக்கு சீமான்?...இயலுமானவர்கள் தங்கள் வீடுகளில் தொட்டி கட்டலாம் 

ரதி... தண்ணீர் பிரச்சினையை, ஒருவர் தனது வீட்டில் மட்டும், தொட்டி கட்டி தீர்க்க முடியாது.
இந்தப் பிரச்சினையை  அணுகுவதற்கு.. மாநில அரசாங்கம், மாநகரசபை என, 
அரச அலுவலங்களின்  ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை.  

சீமான்...  இப்போது, கட்சி தலைவர் மட்டுமே...
அவரால்.. செய்ய வேண்டிய திட் டங்களை, மட்டுமே சொல்ல முடியும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அதுக்கு என்னத்துக்கு சீமான்?...இயலுமானவர்கள் தங்கள் வீடுகளில் தொட்டி கட்டலாம் 

அரசியல் அரசமைப்பு என்னத்துக்கு வேண்டும் என நீங்கள் உணர்கின்றீர்கள் தாயே?

Link to comment
Share on other sites

சென்னையின் வறட்சி நிலை குறித்து கவலைப்படும் டைட்டானிக் பட ஹீரோ லியனார்டோ டிகாப்ரியோ!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.