Jump to content

கூட்டமைப்பினரை வெளுத்து விளாசிய அனந்தி சசிதரன் !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ANANTHI-670x372.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரங்களிலும்; தாமாகவே ஒவ்வொன்றைக்; கூறி மக்களை ஏமாற்றும் வகையில் கண்கட்டி வித்தை நடாத்தி மக்களை ஏமாற்றி வருவதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை அமைச்சருமான அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

நாட்டில் ஆளும்; கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. அதே நேரம் பிரதமராக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர்களாக அக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இருக்கின்றனர். ஆக இந்த அரசிற்கு முண்டு கொடுத்து காப்பாற்றி வருவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். ஆகவே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் கூட்டமைப்பினர் பேசாமல் ஊடகங்கள் முன்னிலையில் தற்போது பேசுகின்றனர். அவ்வாறாயின் எதுவுமே செய்யாத அரசிற்கு ஏன் ஆதரவை வழங்கி வருகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

ஏனெனில் மிக முக்கியமாக இனப்பிரச்சனைக்கான தீர்வை நோக்கிய இலக்கை அடைந்தே தீருவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகின்றார். அதே நேரத்தில் இனப்பிரச்சனைக்கான தீர:வு வராது என்றும் அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கூறுகின்றார். மேலும் படுக்கை அறைவரை ஆக்கிரமிப்பு வந்தள்ளதாக பாரர்ளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்திருக்கின்றார்.

ஆக மொத்தத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி தமது எண்ணங்களின்பிரகாரம் ஊடகங்களுக்கு கருத்தக்களை வெளியிட்டிருக்கின்றனர். உண்மையில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனையாக இருக்கட்டும், நில ஆக்கிரமிப்பாக இருக்கட்டும் இத்தகைய பிரச்சனைகள் எல்லாத்தையும் தீர்த்து வைப்போம் என்று கூறிய இதே பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது வெவ்வேறு கருத்துக்களைக் கூறத் தலைப்பட்டுள்ளனர்.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தது தாமே என்றும் அரசுடன் இதயங்களால் இணைந்துள்ளோம் என்றும் இந்த அரசிற்கு முண்டு கொடுத்து வருகின்றோம் என்றும் வெளிப்படையாக கூறிய வந்த கூட்டமைப்பினர் தமழ் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்விற்கு உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் வெறுமனே அரசைப் பாதுகாத்து வருகின்றதை செயற்பாட்டை தான் செய்து வருகின்றனர். 

இதே வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கமும் சரி அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து பேசவேண்டிய கூட்டமைப்பும்; சரி இந்த விடயத்தில் அக்கறையற்ற போக்குடனேயே செயற்படுகின்றனர். உண்மையில் இந்தப் பிரச்சனை பாரதூரமான பிரச்சனை அல்ல. இதனைப் பேசித் தீர்த்திருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யாததாலேயே தற்போது அந்தப் பிரதேசத்தில் இனமுரண்பாடு ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் இப்பொது அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சரைவைப்பத்திரம் ஊடாக இதனைச் செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் தமிழ் மக்கள் விடயத்தில் பலவற்றைச் செய்வதாக பல சந்தர்ப்பங்களிலும் பல்வெறு வாக்குறுதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியிரக்கின்ற போதும் உண்மையில் அவை எவையும் நிறைவேற்றப்படாத நிலையே இருக்கின்றது.

ஆகவே இனியும் பிரதமரை அல்லது அமைச்சர்களை வெறுமனே நம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.ஆகையினால் அவர்கள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அழுத்துங்களைக் கொடுத்து அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கைகளை கூட்டமைப்பினர் எடுப்பதுடன் தமிழ் மக்களது நலன்களுக்காக இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.இதே வேளை எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராச.சம்மந்தன் முன்னர் பதவி வகித்த போது அவருக்கு வழங்கிய வீடு மற்றும் வாகனத்தை இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

உண்மையில் கட்சித் தலைவர் மட்டுமல்லாது அவர்கள் அனைவருமே தமது சுயநலன்களை முதன்மைப்படுத்தியே செயற்பட்டு வருகின்றனர். அவர்களிடத்தே ஒரு போதும் பொது நலன் இருந்ததில்லை என்றார். மேலும் தேசிய தலைவர் இந்த மண்ணில் இருக்கும் வரை வளங்கள் பாதுகாக்கப்பட்டது. அதே போன்று தமிழீழத்தினதும், இலங்கையினதும் இறைமை பாதுகாக்கப்பட்டது ஆனால் இன்றைக்கு தமது நலன்களுக்காக வெளிநாட்டச் சக்திகள் இந்த மண்ணில் காலூன்றுகின்றனர் அதிலும் நீயா நானா என்ற போட்டியில் அவர்கள் உள்ளனர். உண்மையில் அவர்கள் தங்கள் தங்கள் தேவைகளுக்காக தங்கள் ஆதிக்கத்தை இங்கு கொண்டு வந்துள்ளனர் ஆனால் அந்த ஆதிக்கம் என்பது உண்மையில் எங்கள் மக்களுக்காக அல்ல என்றார்.  

https://thinaseithy.com/கூட்டமைப்பினரை-வெளுத்து/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.